Wednesday 26 November 2014

முன்மாதிரி முஸ்லிம்




இஸ்லாமிய உலகம் உருவாக்கிய மகத்தான மாமனிதர்களில் முதன்மையானவர் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்கள்.
நபி மூஸா அலை அவர்களை முதன்மையான முஃமின் என்று அல்குர்ஆன் கூறுகிறது.


قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ


(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.

நபி இப்ராஹீம் அலை அவர்களை சரியான முஸ்லிம் என்று அல்லாஹ் தன் திருமறையில் பதிவு செய்தான்.


مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَـٰكِن كَانَ حَنِيفًا مُّسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ


இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
நபி ஸல் அவர்களை முதன்மையான முஸ்லிம் என்று பெருமையோடு பேசுகிறது அல்குர்ஆன்.


لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ 


அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

அந்த வரிசையில் முன்மாதிரி முஸ்லிம் என்று இஸ்லாம் முன்னிலைப்படுத்தும் மகத்துவமிக்க வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஸய்யிதுனா அபூபக்கர் ரலி அவர்கள்.


இந்த உம்மத்துக்கும் அவர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.காரணம் நெருக்கடியான காலக்கட்டங்களில் இந்த உம்மத்துக்கு தோள்கொடுத்தவர். குறிப்பாக நுபுவ்வத்,மிஃராஜ்,ஹிஜ்ரத்,வஃபாத் போன்ற தருனங்களில் அவர்களின் பங்களிப்பும் சேவையும் மறுக்க முடியாத உண்மை.

அவர்களின் ஈமானுக்குச்சான்று

சூரியன் உதயமாகும் போது அதன் ஒளி முதலாவதாவதாக உயரமான இடத்தின் மீது படும்.அப்படி நுபுவ்வத் எனும் சூரியன் உதித்தபோது முதலாவ தாக பட்ட அந்த உயர்ந்த மாமனிதர் சித்தீக் ரலி அவர்கள்.
நான் யாருக்கு முன்னால் ஈமானை எடுத்துரைத்தபோதும் ஒரு சின்ன தடுமாற்றத்திற்கு பின்னரே அதை ஏற்க முன்வந்தனர்.
ஹழ்ரத் அலி ரலி அவர்கள் ஆலோசனை செய்ய அவகாசம் கேட்டார்கள். ஹழ்ரத் உமர் ரலி அவர்களை நான் பிடித்த கடுமையான பிடி அவர்களுக்கு தெளிவை தருகிறது.ஆனால் என் அபூபக்கர் எந்த தடுமாற்றமுமின்றி நுபுவ்வத்தை ஏற்றார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவர்களின் பெயரை கூட முதன்மைக்கு சான்றாக அல்லாஹ் தேர்வு செய்கின்றான்.
அபூ பக்ரில் உள்ள பா, காஃப், ரா, ب ك رஆகிய மூன்று எழுத்து எங்கு வந்தாலும் அது முதன்மையை காட்டும்.
உதாரணமாக புக்ரத் எனும் அரபுச்சொல்லுக்கு அதிகாலை என்று பொருள்.புகூர் எனும் அரபுச்சொல்லுக்கு ஒவ்வொரு பழத்தின் சீசனிலும் முதலாவது காய்க்கும் பழத்துக்கு பெயர்.பாகிரா எனும் அரபுச்சொல்லுக்கு முதலாவதாக திருமணமாகும் கன்னிப்பெண்ணுக்கு சொல்லப்படும்.அந்த பொருளில் அல்லா ஹ்வின் அழைப்புக்கு முதலாவதாக பதில் சொன்னார் என்பதை கவனத்தில்  கொண்டே நபி ஸல் அவர்கள் அந்த பெயரை அவர்களுக்கு சூட்டிமகிழ்ந்தார்கள்.

முதன்மையானவர்

ஆண்களில் இஸ்லாத்தை ஏற்றதில் முதலாமவர்.திருக்குர்ஆனுக்கு முஸ்ஹஃப் என்று பெயர் சூட்டியதில் முதலாமவர்.நபித்துவத்துக்கு பின் கிலாபத்தை ஏற்றதில் முதலாமவர்.ஸித்தீக் எனும்  பட்டம் பெற்றதில் முதலாமவர்.திருக்குர்ஆனை ஒன்றுசேர்த்ததில் முதலாமவர்.தன் தந்தை ஹயாத்தாக வாழும்போதே கிலாபத் பெற்றவரில் முதலாமவர்.பைத்துல் மாலை நிறுவியதில் முதலாமவர்.இப்படி முழு முதலுக்கும் சொந்தக்காரர் அவர்.இந்த முதல் போய் முடியும் இடத்தையும் அண்ணல் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
என் உம்மத்தில் எல்லோருக்கும் முதலாவதாக சுவனம் செல்பவர் சித்தீக் ரலிஅவர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்களின் தஃவாவுக்குச்சான்று

தான் முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றார் மாத்திரமல்ல,பல நூற்றுக்கணக்காவர்களை இந்த தீனுக்கு சொந்தமாக்கினார்கள்.

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் முன் மக்காவில் மட்டும் அவர்களின் கரத்தால் இஸ்லாத்தை தழுவியவர்கள் முப்பதை தாண்டுகிறது   அவர்களில் ஆறுபேர் சுவனத்தைக்கொண்டு சுபச்செய்தி சொல்லப்பட்ட பத்து பேர்களில் உள்ளவர்கள்.குறிப்பாக ஹழ்ரத் உஸ்மான் ரலி அவர்களும் உள்ளடக்கம்.நபி ஸல் அவர்களின் துஆவுக்கு ஹழ்ரத் உமர் ரலி கிடைத்தார்கள்.அபூபக்கர் ரலி அவர்களின் தியாகத்துகு ஹம்ஸா ரலி கிடைத்தார்கள் என்று ஒரு வரலாற்றாசிரியர் கூறுகின்றார்.

ஹழ்ரத் அபூபக்கர் அவர்களின் இந்த அந்தஸ்துக்கு காரணம் தொழுகையொ நோன்போ அல்ல,மாறாக அவர்களின் உள்ளத்தில் எப்போதும் இந்த தீனின் வளர்ச்சிப்பற்றிய கவலை இருந்துகொண்டே இருக்குமென அவர்களின் மனைவி கூறுகின்றார்கள்.

ஸாஹாபிகளில் நான்கு தலைமுறை ஈமானுக்குச்சொந்தக்காரர். ஆம்!  ஹழ்ரத் அபூபக்கர் ரலி,அவர்களின் தந்தை அபூ குஹாஃபா ரலி,அபூபக்கர் ரலி அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் ரலி.அபூபக்கர் ரலி அவர்களின் பேரன் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் ரலி.ஆகிய நான்குபேரும் ஸஹாபிகள்.
அவர்களின் சிறப்புக்களை பற்றி பேசும் ஹதீஸ்கள் சுமார் 181 உண்டு.
அந்த ஹதீஸ்களில் முழு உம்மத்தின் ஈமானை அபூபக்கர் ரலி அவர்களின் ஈமானுடன் நிறுத்தால் அவர்களின் ஈமானே ஜெயிக்கும்  என்று பைஹகியில் அறிவிப்பு உள்ளது.

அவர்களின் அமல்களுக்கான சான்று:

ஒரு தடவை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பார்வை வானத்தின் நட்சத்திரங்களின் பக்கம் திரும்பியது.அப்போது வானத்தின் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அளவுக்கு யாரேனும் அமல் செய்திருப்பார்களா?என்ற எண்ணம் தோன்றியது.
அந்த கேள்வியை நபி ஸல் அவர்களிடம் கேட்டுவிட்டார்கள்.அதற்கு நபி சல் அவர்கள் ஆம்!என் தோழர்களில் உமர் அவ்வளவு நன்மைக்கு சொந்தம் என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து அன்னயவர்கள் அப்படியானால் என் தந்தை அபூபக்கர் பற்றி உங்களின் அபிப்ராயம்?என வினவ,தவ்ர் குகையில் அபூபக்கர் என்னுடன் ஒரு இரவு தங்கிய நன்மை நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விடவும் அதிக மானது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


- في مسلم :" من أصبح منكم اليوم صائما ؟" قال أبو بكر رضي الله عنه: أنا. قال "فمن تبع منكم اليوم جنازة." قال أبو بكر رضي الله عنه: انا. قال فمن أطعم منكم اليوم مسكينا ؟" قال أبو بكر رضي الله عنه. أنا. قال "فمن عاد منكم اليوم مريضا." قال أبو بكر رضي الله عنه: أنا. فقال رسول الله صلى الله عليه وسلم: "ما اجتمعن في أمريء، إلا دخل الجنة " . 


உங்களில் யாராவது இன்று நோன்பு நோற்றுள்ளீர்களா? என நபி ஸல் அவர்கள் ஒரு தடவை வினவினார்கள்.ஆம் நான் நோன்பு நோற்றுள்ளேன் என அபூபக்கர் ரலி அவர்கள் கூறினார்கள்.
பின்னர் கொஞ்சம் நேரம் கழித்து, உங்களில் யாரேனும் இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டீர்களா?என நபி ஸல் அவர்கள் மீண்டும் வினவியபோது அதற்கும் ஸித்தீக் ரகி அவர்கள் ஆம் நான் கலந்துகொண்டேன் என்றார்கள்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து உங்களில் யாரேனும் இன்று மிஸ்கீன்களுக்கு உணவளித்தீர்களா?என மூன்றாவதாக வினவினார்கள்.அதற்கும் நான் இன்று உணவளித்தேன் என்று அபூபக்கர் ரலி அவர்கள் பதில் கூறினார்கள்.பிறகு நான்காவது முறையாக நபி ஸல் அவர்கள் உங்களில் யாரேனும் இன்று நோயாளியை நலம் விசாரித்தீரா?என வினவ அதற்கும் நான் நோயாளியை சந்தித்தேன் என்று அபூபக்கர் அவர்களே கூறினார்கள்.இவ்வாறு நான்கு தடவையும் அவர்களெழுந்து பதில் கூறியபோது இந்த தன்மைகள் எவரிடம் உள்ளதோ அவர் சுவர்க்கவாதி என்று நபி ஸல் அவர்கள் சுபச்செய்தி கூறினார்கள்.
இந்த ஹதீஸின் மூலம் அந்த நான்கு அமல்கள் அவர்கள் மட்டுமே செய்தார்கள் மற்றவர்கள் செய்யவில்லை என்று புரிந்துகொள்ளக்கூடாது.  ஒட்டு மொத்த ஸஹாபாக்களின் சார்பாக அபூபக்கர் ரலி பதில் சொல்ல மற்ற ஸஹாபிகள் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள்.
எப்படி அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒட்டுமொத்த ஸஹாபாக்களின் அங்கீகார மாக சித்தீக் ரலி அவர்களை ஸஹாபி தேர்வு செய்தானோ அதைப்போல அவர்களும் தேர்வு செய்தார்கள்.

ஹிஜ்ரத்தில் அவர்களின் பங்களிப்பு

வரலாற்றுச்சிறப்பு மிக்க அந்த பயணத்தில் அபூபக்கர் ரலி மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தார்களின் பங்களிப்பை இந்த மறக்க கூடாது.
அபூபக்கர் ரலி அவர்களின் ஒட்டகம்,அவர்களின் மகள் அஸ்மா,அவர்களின் மகன் அப்துர்ரஹ்மான் ,அவர்கள் அடிமை ஆமிர் அத்துனைபேர்களும் இதற்கு பயன்படுத்தப்பட்டார்கள்.
இந்த பயணத்தின் இடையில் நபி ஸல் அவர்கள் நடக்க சிரமப்பட்டபோது ஹழ்ரத் அபூபக்கர் அவர்கள் தங்களின் முதுகில் நபியை சுமந்து செல்கிறார் கள்.நபித்துவத்தின் கனத்தை உன்னால் சுமக்கமுடியாது என நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் அலி ரலி அவர்களைப்பார்த்து கூறியதை இங்கு ஞாபகப் படுத்துவது பொருத்தமாகும்.
நபியை பாதுகாக்க முன்னால்,பின்னால்,வலது,இடது என நாலாபக்கமும் ஓடுகின்ற காட்சியை கண்ட நபி ஸல் அவர்கள் அபூபக்கரே!எனக்காக உயிரையும் கொடுப்பீரோ?என கேட்க ஆம்!நாயகமே என் மரணம் ஒரு முஸ்லி மின் மரணம்.உங்களின் மரணம் இந்த உம்மத்தின் மரணம் என்றார்கள்.
இந்த உம்மத்தின் அமானிதமான அந்த பூமானை பாதுகாத்து கொண்டுவந்து அந்த மதீனா மக்களிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த இடத்தை ஒப்பிட்டு பேசும் சில கவிஞர்கள் இப்படி சொன்னார்கள்.
மிஃராஜ் பயணமும் ஹிஜ்ரத் பயணமு சில உடன்பாடுகளும் சில முரண்பாடு களும் கொண்டது.இரு பயணத்திலும் வாகனம் உண்டு,இரண்டிலும் பயண தோழர் உண்டு.மிஃராஜில் இமாமுல் மலாயிகா,ஹிஜ்ரத்தில் இமாமுஸ்ஸ  ஹாபா.மிஃராஜின் பயண தோழர் இடையில் நின்று விட்டார் (ஸித்ரதுல் முந்த ஹாவுடன்)ஹிஜ்ரத் தோழர் இறுதிவரை உடன் இருந்தார்.அதற்கு அல்லாஹ் வழங்கிய சன்மானம் மரணத்திலும் அவர்களை ஒன்றுசேர்த்தான்.இன்னொரு வித்யாசமும் உண்டு.மிஃராஜ் தோழர் நபியின் இல்லம் தேடி வந்தார்.ஆனால் ஹிஜ்ரத்தில் நபி ஸல் அவர்களின் பயண தோழரின் இல்லம் தேடிச்செல்கி றார்.
பிந்தங்கிய ஹலீமா ஸஃதியாவின் ஒட்டகம் அண்ணலை ஏற்றியபோது அனைத்தை விடவும் முன்னுக்கு வருகின்றது.அவ்வாறு நபியின் ஹிஜ்ரத் பயணத்தில் ஸித்தீக் ரலி கலந்தபோது அனைத்து ஸஹாபாக்களையும் முந்துகிறார்.

நபி ஸல் அவர்களின் வஃபாத்தில் ஸித்தீக் ரலி பங்கு

நபி ஸல் அவர்களின் வஃபாத்தில் இந்த உம்மத் எவ்வளவு பெரிய நெருக்கடி யை சந்திக்கிறது.இனி இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லை என்று சந்தோஷ ப்பட்ட முனாபிகீன்கள் ஒரு புறம்.நபி ஸல் அவர்களை யார் குளிப்பாட்டுவது? எங்கு அடக்கம் செய்வது?எப்படி தொழவைப்பது?என்பது ஒருபுறம் என்றால்
நபியின் மரணத்தை ஜீரணிக்க முடியாத ஸஹாபாக்களின் கூட்டம்மறுபுறம், அடுத்த கலீபா யார்?எனும் விடையை நோக்கி இன்னொரு கூட்டம்,ஜகாத்தை மறுக்கும் கூட்டம்.மதம் மாறிய கூட்டம் என பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் துவண்டுபோய் இருந்த இஸ்லாமிய உலகத்தை மீட்டெடுத்த பெருமை ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களையேச்சாரும்.
நபி ஸல் அவர்களின் வஃபாத்துக்கு பின்னர் சுமார் இரணடரை ஆண்டுகாலம் மிக அற்புதமான ஆட்சியை நிறுவி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத் துகின்றார்கள்.








Tuesday 25 November 2014

வபாத் அறிவிப்பு

                             அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உஸ்மானிகள் ஆன்லைன் இணையதள வாசகர்களுக்கு.....
எங்கள் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியின் ஆற்றல்மிக்கசெயலாளரும், பந்நூற்றுக்கணக்கான  உஸ்மானி உலமாக்கள் உருவாக காரணமான
வரும்,  ஊர் போற்றும் நல்லாசிரியருமான அல்ஹாஜ் அ.மீ. செய்யத் முஹம்மத் ஸாஹிப் அவர்கள் இன்றைய தினம் மேலப்பாளையத்தில் வைத்து வபாத்தாகி விட்டார்கள்.
அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து,அவர்களின் நல்லமல்களையும் சேவைகளையும் ஏற்று, மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக.ஆமீன்
                                                          இப்படிக்கு
                                         உஸ்மானிகள் பேரவை

Wednesday 19 November 2014

அகப்பார்வை



அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அறிவு மிகப்பெரிய பொக்கிஷமாகும்.அதில் இருவகை உண்டு.புறம் சார்ந்த அறிவு,மற்றொன்று அகம் சார்ந்த அறிவு.அதில் இரண்டாம் வகை அறிவை பெறுவதற்கு கல்பின் ஒளியை மெருகேற்ற வேண்டும்.

எப்படி கண் குருடர்களால் வெளி உலகை காண முடியாதோ அவ்வாறே கல்புக்குருடர்களால் அக அறிவை பெற்றுக்கொள்ள முடியாது.
பஸீரத் எனப்படும் அகத்தின் அறிவை பெற்றவர்கள் அல்லாஹ்வின் நேர் வழியை சொந்தமாக்கிக்கொண்டவர்கள்.மாத்திரமல்ல எந்த விஷயத்திலும் தெளிவாகவும் குழப்பமின்றியும் அவர்களால் முடிவெடுக்க முடியும்.

யா அல்லாஹ்! என் கல்பில் ஒளியேற்றுவாயாக என நபி ஸல் அவர்கள் துஆக்கேட்டது இந்த பஸீரத் எனும் தொலைநோக்குப்பார்வையை பெறுவதற்கன்றி வேறு எதற்கு?

காய்ந்த பூமிக்கு தண்ணீர் எப்படி பசுமையை வழங்குமோ அதைப்போல இருண்ட இதயத்திற்கு பஸீரத் வெளிச்சத்தை தரும்.

அந்த உயர்வான தொலைநோக்கு சிந்தனையை பெற்றவர் உண்மையை உண்மையாகவும் நன்மையை நன்மையாகவும் பார்ப்பார்.
எந்த காரியத்தை சொல்லும்போதும் செய்யும்போதும் தொலைநோக்கான பார்வையுடன் சொல்வதும் செய்வதும் நபிமார்களின் பண்பு என அல்குர் ஆன் முன்வைக்கிறது.

قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين 


(நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.


அண்ணலாரின் தொலைநோக்குப்பார்வை

لما جاء أعرابي إلى النبي عليه الصلاة والسلام يشتكي يقول: إن امرأتي ولدت غلاماً أسود، أنا أبيض وهي بيضاء، قال: وإني أنكرته، فقال له رسول الله صلى الله عليه وسلم: (هل لك من إبل؟)، وهذا شيء يعرفه الأعراب، قال: نعم، قال: (فما ألوانها؟)قال: حمر، قال: (هل فيها من أورق؟)الذي فيه سواد ليس بصافٍ، قال: إن فيها لورقاً، فعلاً، قال: (فأنى ترى ذلك جاءها؟)قال: يا رسول الله عرق نزعها، قال:(ولعل هذا عرق نزعه).رواه البخاري ومسلم


நபி ஸல் அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து நானும் என் மனைவியும் வெள்ளைநிறத்தவர்கள்.ஆனால் எங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை கருப்பாக உள்ளது.அது எவ்வாறு சாத்தியம்?என் மனைவி மீது எனக்கு சந்தேகம் உள்ளது, அதனால் அவளை நான் வெறுக்கின்றேன் என முறையிட்டார்.
அப்போது நபி ஸல் அவர்கள், அந்த கிராமவாசியிடம், உன்னிடம் ஒட்டகம் உள்ளதா?என வினவினார்.அதற்கு அவரோ ஆம் என்றார்.அதன் நிறம் என்னவென்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீண்டும் வினவிய போது அதன் நிறம் சிவப்பு என்றார் அவர்.

அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?" என்று நபியவர்கள் கேட்க, அவர் "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.



எதையும் தூரநோக்காக சிந்திக்க சொன்ன அண்ணலார் ஸல் அவர்கள்:


وقد بعث النبي صلى الله عليه وسلم علياً قاضياً على اليمن فماذا أوصاه؟ قال له لما سأله علي: تبعثني إلى قوم وأنا حدث السن ولا علم لي بالقضاء؟ قال له: (ثبتك الله وسددك، إذا جاءك الخصمان فلا تقضي للأول حتى تسمع من الآخر فإنه أجدر أن يبين لك القضاء).رواه أحمد وأبو داود وهو حديث صحيح


நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் அலி ரலி அவர்களை எமன் தேசத்துக்கு நீதிபதியாக்கி அனுப்பிவைத்தார்கள்.அச்சமயம் ஹழ்ரத் அலி ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னை நீதிபதியாக்கி அனுப்பிவைக்கிறீ ர்கள்.எனக்கோ சின்ன வயது,மாத்திரமல்ல தீர்ப்பு பற்றிய அவ்வளவு பெரிய அறிவுஞானம் எனக்கில்லை.என்றபோது-

அல்ல்லாஹ் உன்னை நிலையாக்குவான்.சரியாக்குவான்.நீதித்துறையில் வாதி,பிரதிவாதியின் கருத்தை முழுமையாக கேட்காமல் தீர்ப்புச்செய்து விடவேண்டாம் என நபி ஸல் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் தூரநோக்குப்பார்வை:

شهد رجل عند عمر رضي الله عنه، فقال له عمر: إني لست أعرفك ولا يضرك أني لا أعرفك، فأتني بمن يعرفك، يزكيك، فقال رجل: أنا أعرفه يا أمير المؤمنين، قال: بأي شيء تعرفه؟ قال: بالعدالة، عدل ثقة، قال: هو جارك الأدنى تعرف ليله ونهاره ومدخله ومخرجه؟ قال: لا، قال: فعاملك بالدرهم والدينار الذي يستدل بهما على الورع؟ قال: لا، ما باع ولا اشترى معي ولا استأجر، قال: فصاحَبَك في السفر الذي يستدل به على مكارم الأخلاق؟ قال: لا، قال: فلست تعرفه، ثم قال للرجل: ائتني بمن يعرفك.


ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒரு மனிதர் சாட்சியாக கொண்டுவரப்பட் டார்.அவரிடம் ஜனாதிபதி உமர் ரலி அவர்கள், நீ யார் என்று எனக்கு தெரியாது.உன்னை பற்றி தெரியாமல் உன்னை சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.அதனால் உன்னைப்பற்றி நன்கு அறிந்த ஒருவரை சாட்சியாக கொண்டு வாரும் என உத்தரவிட்டார்கள்.

அப்போது அவருக்கு சாட்சி கூறுவதற்கு இன்னொருவர் வந்தார்.அவரை பற்றி உமக்கு என்ன தெரியும்? என உமர் ரலி அவர்கள் அந்த மனிதரிடம் விசாரித்தபோது- அவர் நீதமானவர்.நம்பகமானவர் என்று கூறினார்.
அப்போது ஹழ்ரத் உமர் ரலி அவர்கள், அவர் உன் பக்கத்து வீட்டுக்காரரா? அப்படியானால் இரவு பகல் என எல்லா காலமும் அவரை நீர் காணும் வாய்ப்பு அமையலாம் என வினவினார்கள்.அதற்கு அவரோ இல்லை என மறுத்துவிட்டார்.
அப்படியானால் அவரிடம் கொடுக்கல் வாங்கள் ஏதேனும் வைத்து அவரின் பேனுதலை தெரிந்துகொண்டீரா?என வினவியபோது,அதற்கும் அம்மனிதர் இல்லை என்று கூறிவிட்டார்.
அப்படியானால் அவரின் நற்குணத்தை அறிந்துகொள்ள அவருடன் பயணம் செய்துள்ளீரா? என வினவினார்கள்.அதற்கும் அந்த மனிதர் உறுதியாக மறுத்துவிட்டார்.

அப்படியானால் அவரைப்பற்றி சாட்சி கூறுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை.ஏனெனில் அவரைப்பற்றி முழுமையாக நீ தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள்.

ஒரு மனிதரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள மூன்றுவழிகள் உண்டு.பக்கத்து வீட்டில் வசிப்பது.கொடுக்கல் வாங்கள்,அவருடன் பயணம் செய்வது ஆகியவையாகும் என்று உமர் ரலி சொன்ன வார்த்தை எத்துனை தூரநோக்கான சிந்தனைக்குச்சொந்தமானது.


يِا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إَن تَتَّقُواْ اللّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَاناً سورة الأنفال29، الفرقان هو البصيرة،

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்.அந்த நேர்வழிக்கே பஸீரத் என்று சொல்லப்படும் என தப்ஸீர் விரிவுரையா ளர்கள் கூறுகின்றனர்.
قال ابن مسعود رضي الله عنه: أفرس الناس ثلاثة: ابنة شعيب لما قالت لأبيها في موسى اسْتَأْجِرْهُ
سورة القصص26، وأبو بكر في عمر حين استخلفه، وامرأة فرعون حين قالت: قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ
سورة القصص9
மக்களில் மூன்று நபர்கள் மிகவும் அகப்பார்வை உடைவர்கள் என ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.
முதலாவது:ஹழ்ரத் ஷுஐப் அலை அவர்களின் மகள்.அறிமுகமில்லாத நபி மூஸா அலை அவர்களை கண்டு,அவரை கூலியாளாக சேர்த்துகொள் ளாம் என தம் தந்தையிடம் கூறினாள்.
قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ

அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்இரண்டாவது:ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள். ஹழ்ரத் உமர் ரலி அவர்களை தனக்கு அடுத்த கலீபாக மிகவும் தூரநோக்குடன் தேர்வு செய்தார்.
فقال أبو بكر : لئن سألني الله لأقولن : استخلفت عليهم خيرهم في نفسي 
ஹழ்ரத் உமர் ரலி அவர்களை தனக்குப்பின்னர் கலீபாவாக தேர்வு செய்த போது சிலர் அதை விமர்சனம் செய்தனர்.அவர்களுக்கு பதிலாக ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறிய வார்த்தையே இவை:
அல்லாஹ் என்னிடம் அதுகுறித்துகேட்டால் எனக்கு தெரிந்தவரை மக்களில் மிகவும் சிறந்தவரிடமே கிலாபத்தை ஒப்படைத்துள்ளேன் என்று என் ரப்பிடம் கூறுவேன் என்று கூறினார்கள்
மூன்றாவது:பிர்அவ்னின் மனைவி ஆஸியா.இந்த குழந்தையை கொலை செய்ய வேண்டாம்.நாமே எடுத்து வளர்ப்போம் என்று பிர்அவ்னிடம் ஆஸியா கூறினார்கள்.
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ
இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.


كما جاء لمالك رحمه الله رجل قال: الوضوء مرة مرة يغني؟ فعلاً الوضوء مرة يغني، لكن السنة ثلاث، نظر مالك للرجل فرأى أنه من العامة الذين حالهم ليس من الذين يحسنون العبادات، فقال مالك: لا، لا يغني؛ لأنه خشي أن هذا الرجل إذا ذهب يعمل بها، أنه لا يسبغ الوضوء ولا يحسن الوضوء ويبقى أجزاء من الجلد ما مسها الماء، فمالك قال: لا. ليس لأنه في الأصل لا يجوز، بل يجوز، ولكن لأن هذا الرجل لا يناسبه هذا القول، حاله لا يناسب هذا القول

இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து ஒழுவில் உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் போதும்தானே என்று கேட்டார்.சட்டரீதியாக அது கூடும்,ஆனால் மூன்று தடவை கழுவுவது சுன்னத்தாகும்.ஆனால் இமாம் அவர்கள் அம்மனிதரிடம் அதைக்கூறாமல் உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் கூடாது என்றார்கள்.ஏனெனில் அவரோ வணக்கவழிபாடுகளில் மிகவும் பொடுபோக்கானவர்.அவரிடம் அவ்வாறு கூறினால் முழு உறுப்பிலும் தண்ணீர் படுவதில் கவனக்குறைவாக இருந்துவிடுவார்.என்ப தை அறிந்துகொண்ட இமாம் மாலிக் ரஹ் அவர்கள் தூரநோக்காக தீர்ப்பு கூறினார்கள். 


فقد ذكر الإمام الذهبي في السير ( عن أم سلمة أن أبا عبيدة لما أصيب، استخلف معاذ بن جبل، يعني في طاعون عمواس، اشتد الوجع، فصرخ الناس إلى معاذ: ادع الله أن يرفع عنا هذا الرجز، قال: إنه ليس برجز ولكن دعوة نبيكم، وموت الصالحين قبلكم، وشهادة يخص الله [ بها ] من يشاء منكم، أيها الناس ! أربع خلال من استطاع أن لا تدركه، قالوا: ما هي ؟ قال: يأتي زمان يظهر فيه الباطل. ويأتي زمان يقول الرجل: والله ما أدري ما أنا، لا يعيش على بصيرة، ولا يموت على بصيرة



ஹழ்ரத் அபூ உபைதா ரலி அவர்கள் அம்வாஸ் நகரத்தின் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டபோது ஹழ்ரத் முஆத் ரலி அவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்கிறார்கள்.நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமானபோது மக்கள் ஹழ்ரத் முஆத் ரலி அவர்களிடம் வந்து-

எங்களை விட்டும் இந்த நஜீஸை நீக்குவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என வேண்டிக்கொண்டனர்,அதை செவியுற்ற ஹழ்ரத் முஆத் ரலி அவர்கள் இது நஜீஸ் அல்ல மாறாக நபிமார்களின் துஆ.உங்களுக்கு முன் வாழ்ந்த ஸாலிஹீன்களின் மரணம்,உங்களில் அல்லாஹ் யாருக்கு நாடுகின்றானோ அவரை இந்த நோய்மூலம் ஷஹீதாக்குவான் என்று கூறிவிட்டு-

மக்களே!நான்கு வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

1.அசத்தியம் நிறைந்த காலம்  2:தன்னை அறியாதவன் வாழும்  காலம்  3:தூரநோக்கு சிந்தனை இல்லாமல் வாழ்வது  4:அதேநிலையில் மரணிப்பது  என்று கூறினார்கள்

Thursday 13 November 2014

மனமே கலங்காதே

அல்லாஹுத்தஆலா மனிதனை பளஹீனமாக படைத்துள்ளான்.அவசரம், நோய்,பசி,தாகம்,தூக்கம் ஆசை என மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய பளஹீனங்களின்  வரிசையில் துக்கமும் ஒன்று.கவலை இல்லாத மனிதன் யார்?

இவ்வுலக வாழ்வில் கவலை,துக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை.கவலைக்கான காரணங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடலாமே தவிர கவலை இல்லா மனிதன் இங்கே கிடையாது
சிலருக்கு பணம் கவலையை தரலாம்.வேறு சிலருக்கு பணமின்மை கவலையை தரலாம்.சிலருக்கு கூட்டு வாழ்க்கை சிரமத்தை தரலாம்.அதே சமயம் வேறு சிலருக்கு தனி வாழ்க்கை வெறுப்பை தரலாம்.நோய்,ரிஸ்க், மனைவி,மக்கள்,தொழில் என மனிதனை கவலைகொள்ளச்செய்யும் விஷயங்கள் இங்கே ஆயிரம் உண்டு.

இந்த துன்யாவில் மனிதன் எட்டு அத்தியாயங்களை கடந்தாக வேண்டும்.  இன்பம்,துன்பம்,கூடுதல்,பிரிதல்,இலேசு,கஷ்டம்.ஆரோக்கியம்,நோய் ஆகிய வைகள் என ஒரு அரபிக்கவிஞன் கூறினான்.

துக்கமே இல்லாத உலகம் அது சுவனலோகம் மட்டுமே.இதை பின் வரும்  இறைவசனம் அற்புதமாக சுட்டிக்காட்டுகின்றது

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ) [فاطر:34]

எங்களை விட்டும் துக்கத்தை போக்கிவைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்,நிச்சயமாக எங்களின் ரப்பு மிக்க மன்னிப்பவன் நன்றியுள்ள வன் என்று சுவனத்தில் நுழைந்தவுடன் சுவனவாசிகள் கூறுவார்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த ஆயத்தை அடிப்படையாக கொண்டு அல்லாமா இப்ராஹீம் அத்தைமி ரஹ் அவர்கள் கூறும்போது- அல்லாஹ் எவருக்கு துக்கத்தை வழங்கவில் லையோ அவர் நரகத்தை அஞ்சட்டும்,ஏனெனில் கவலை சுவனவாசிகளின் அடையாளமாகும் என்று கூறுகிறார்கள்.

மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட அனுப்பப்பட்ட நபிமார்கள் தங்களின் வாழ்வில் எத்துனையோ சோதனைகளையும் கஷ்டங் களையும் சந்தித்துள்ளனர்.நபிமார்களும் ஸாலிஹீன்களும் கவலைப்பட்ட தருனங்கள் உண்டு.கவலை நல்லவர்களின் கேடயம் என்று சொல்வது பொருத்தமாகும்.

நபி யஃகூப் அலை அவர்கள் தங்களின் பிரியமான மகன் யூஸுப் அலை அவர்கள் பிரிந்த போது துக்கத்தால் துவண்டுபோனார்கள்.

كما قال تعالى عن يعقوب -عليه السلام- في فَقدِ ابنه يوسف -عليه السلام-: (وَقَالَ يَا أَسَفَى عَلَى يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ) [يوسف:84]

யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (கவலைப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.


ما فعل النبي -صلى الله عليه وسلم- حينما مات ولده إبراهيم فقال: "إن العينَ لتدمع، وإنّ القلب ليحزن، ولا نقول إلا ما يرضِي الربَّ، وإنّا على فراقك -يا إبراهيم- لمحزونون". رواه البخاري ومسلم.

நபி ஸல் அவர்களின் மகனார் இப்ராஹீம் ரலி அவர்கள் இறந்த்போது-
கண் கண்ணீர் வடிக்கிறது.கல்பு கவலை கொள்கிறது.இப்ராஹீமே! உன் பிரிவால் நாம் துக்கத்தில் வாடுகின்றோம்.ஆனாலும் அல்லாஹ் பொருந்தாத எந்த வார்த்தையையும் நாம் சொல்லமாட்டோம் என்று கூறினார்கள்




كما في قصّة أبي الدرداء -رضي الله عنه- حينما بكى وحزن وقد رأى دولةَ الأكاسرة تهوي تحتَ 

أقدام المسلمين، وقد قال له رجل: يا أبا الدرداء: تبكي في يومٍ أعزّ الله الإسلامَ وأهله؟! فقال أبو

 الدرداء -رضي الله تعالى عنه-: "ويحك يا هذا، ما أهونَ الخلق على الله إذا أضاعوا أمرَه، بينما هي أمة قاهرة ظاهرةٌ ترَكوا أمرَ الله فصاروا إلى ما ترى".

பாரசீகம் வெற்றிக்கொள்ளப்பட்டு அதன் கருவூலங்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபோது இஸ்லாமிய உலகமே கொண்டாடியது, ஆனால் அந்த நேரத்தில் அபுத்தர்தா ரலி அவர்கள் அழுது கவலைப்பட்டார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர்-
அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்திய இன்றைய தினத்தில் ஏன் கவலைகொள்கிறீர்?என கேட்டார்,
அதற்கு ஹழ்ரத் அபுத்தர்தா ரலி அவர்கள் -எத்துனை பெரும் பலமிக்க சமுதாயமாக இருந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்தால் அவர்களை கேவலப்படுத்து  வான் என்பதற்கு பரசீகர்களின் வரலாறு ஒரு பாடமாகும் என்று கூறினார்கள்.

துன்யாவுக்காக ஏன் கவலை?

مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟

ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் கவலயுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அப்போது அந்தரிடம், உன்னிடம் மூன்று கேல்விகளை கேட்கின்றேன்.அதற்கு நீ பதில் சொல்.முதலாவது அல்லாஹ் நாடாமல் இவ்வுலகில் ஏதாவது நடக்குமா? இரண்டாவது அவன் உனக்கு நிர்ணயம் செய்த ரிஸ்கிலிருந்து குறையுமா?மூன்றாவது அல்லாஹ் உனக்கு நிர்ணயம் செய்த ஆயுளிலிருந்து ஒரு நொடி குறையுமா? என கேட்டபோது அந்த மனிதர் இல்லை என்று பதில் கூறினார். அப்படியானால் நீ கவலப்பட்டு என்ன ஆகப்போகிறது?என்று அறிவுரை வழங்கினார்கள்


ذكره علي بن أبي طالب -رضي الله عنه- حينما سئل: "من أشد جند الله؟ فقال: الجبال، والجبال يقطعها الحديد؛ فالحديد أقوى، والنار تذيب الحديد؛ فالنار أقوى، والماء يطفئ النار؛ فالماء أقوى، والسحاب يحمل الماء؛ فالسحاب أقوى؛ والريح تعبث بالسحاب؛ فالريح أقوى، والإنسان يتكفأ الريح بيده وثوبه؛ فالإنسان أقوى، والنوم يغلب الإنسان؛ فالنوم أقوى، والهم يغلب النوم؛ فأقوى جند الله هو الهم يسلطه الله على من يشاء من عباده"

அல்லாஹ்வின் படைகளில் பலமிக்கது எது என ஹழ்ரத் அலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது-
மலைகள் பலமிக்கவை.ஆனால் அந்த மலைகளை இரும்பு தகர்த்து விடும்,எனவே இரும்பு பலமிக்கவை,ஆனால் அந்த இரும்பை நெருப்பு உருக்கிவிடும் எனவே நெருப்பு பலமிக்கவை,ஆனால் அந்த நெருப்பை தண்ணீர் அணைத்துவிடும் எனவே தண்ணீர் பலமிக்கவை,ஆனால் அந்த தண்ணீரை மேகம் சுமக்கும்.எனவே மேகமே பலமிக்கவை ஆனால் அந்த மேகத்தை காற்று ஓட்டிச்செல்லும் எனவே காற்றே பலமிக்கவை ஆனால் அந்த காற்றை மனிதன் வசப்படுத்துவான்.எனவே மனிதனே பலமிக்கவன்.ஆனால் அந்த மனிதனை தூக்கம் மிகைத்துவிடும்.எனவே தூக்கமே பலமிக்கது.ஆனால் அந்த தூக்கத்தை மிகைக்கும் ஒரு பொருள் உண்டு அதுதான் துக்கம்.துக்கம் இருந்தால் தூக்கமும் பறந்துபோகும்.எனவே துக்கம் அதிபலமிக்கவை என்று கூறினார்கள்.

கவலை நீங்குவதற்கான வழிமுறைகள்

وقال -صلى الله عليه وسلم-: "مَنْ قال إذا أصبحَ وإذا أمْسى: حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم سبع مرات، كفاه الله ما أهمه" رواه أبو داود.

எவர் காலையும் மாலையும் 
 حَسبِي الله لا إلَه إلا هو عليه توكلتُ وهو ربُّ العرشِ العظيم  என்று 7 தடவை ஓதுவாரோ அவருடைய கவலைக்கு அல்லாஹ் போதுமானவன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "مَنْ لزِم الاستغفارَ جعلَ الله له من كلِّ ضيقٍ مخرجَا، ومنْ كلِّ همٍّ فرَجا، ورزقَه من حيث لا يحتسب" رواه أبو داود والنسائي.
எவர் பாவமன்னிப்பை பற்றிப்பிடிப்பாரோ அல்லாஹ் அவருக்கு நெருக்கடியான வாழ்வை விட்டும்விசாலத்தை வழங்குவான்.கவலையை விட்டும் மகிழ்ச்சியை வழங்குவான்.கணக்கின்றி ர்ஸ்கை வழங்குவான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


دخل رسول الله -صلى الله عليه وسلم- المسجد ذات يوم، فإذا هو برجل من الأنصار يقال له أبو أمامة، فقال: "يا أبا أمامة مالي أراك جالساً في المسجد في غير وقت الصلاة؟ قال: هموم لزمتني وديون يا رسول الله، قال: أفلا أعلِّمك كلاماً إذا قلته أذهب الله همك وقضى عنك دينك؟ قال: بلى يارسول الله، قال: قل إذا أصبحت وإذا أمسيت: اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال، قال أبو أمامة: ففعلت ذلك، فأذهب الله همي، وقضى عني ديني" رواه أبو داود.

ஒருநாள் நபி ஸல் அவர்கள் மஸ்ஜித் நபவிக்குள் நுழைந்தபோது ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்களை கண்டார்கள்.
அபூ உமாமா! தொழுகைநேரம் இல்லாத இப்போது பள்ளியில் அமர்ந்திருக்க காரணம் என்ன? என வினவினார்கள்.
அதற்கு அபூ உமாமா ரலி அவர்கள்.அல்லாஹ்வின் தூதர் அவர்களே!கடனும்  கவலை யும் என்னை இங்கே வரவைத்தது என்று பதில் கூறினார்கள்.உன் கவலை போகவும் கடன் அடையவும் ஒரு கலிமாவை நான் கற்றுத்தரவா?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது அவசியம் கூறுங்கள் என்று அந்த நபித்தோழர் கூறினார்.
அதற்கு நபி ஸல் அவர்கள், நீ காலையிலும் மாலையிலும்

اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من الجبن والبخل، وأعوذ بك من غلَبة الدين وقهر الرجال

 என்று ஓதிவருவீராக என்று கூறினார்கள்.நானும் அவ்வாறு ஓதிவந்தேன்.அதன் பொருட்டால் அல்லாஹ் என் கடனையும் அடைத்தான்.கவலையையும் போக்கினான்.  என அபூஉமாமா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.



قَالَ أُبَيِّ بْنُ كَعْبٍ كما في الحديث الحسن: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ: إِنِّي أُكْثِرُ الصَّلاةَ عَلَيْكَ، فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلاتِي؟! فَقَالَ: "مَا شِئْتَ"، قَالَ: قُلْتُ: الرُّبُعَ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قُلْتُ: النِّصْفَ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قَالَ: قُلْتُ: فَالثُّلُثَيْنِ؟! قَالَ: "مَا شِئْتَ، فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ"، قُلْتُ: أَجْعَلُ لَكَ صَلاتِي كُلَّهَا؟! قَالَ: "إِذاً تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ".

ஹழ்ரத் உபை இப்னு கஃப் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் உங்கள் மீது ஸலவாத் அதிகமாக ஓதிவருகின்றேன்,ஒருநாளைக்கு எவ்வளவு ஸலவாத் ஓதட்டும் என நான் நபி ஸல் அவர்களிடம் வினவியபோது நீ விரும்பிய அளவு என்று பதில் கூறினார்கள்.
ஒருநாளில் நான்கில் ஒரு பகுதியை ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
ஒருநாளில் பாதியை  ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
ஒருநாளில் மூன்றில் இரண்டு பகுதியை ஸலவாத்திற்கு ஒதுக்கவா?என கேட்டபோது நீ விரும்பிய அளவு நீ அதிகமாக்கினால் அது உனக்கு நல்லது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அப்படியானால் என்நாள் முழுவதும் உங்கள் மீது ஸலவாத் ஓத துக்குகின்றேன் என்று நான் கூறியபோது அப்படியானால் உன் கவலையை அது போக்கும் உன் பாவமும் மன்னிக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


جاء عن أنس -رضي الله عنه- أن رسولنا -صلى الله عليه وسلم- كان إذا حَزَبه أمر -يعني أقلقه وأفزعه أمر- قال: "يا حيُّ يا قيُّومُ، برحمتِكَ أستغيثُ".

அல்லாஹ்நபி ஸல் அவர்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் கவலையை தருமானால்
يا حيُّ يا قيُّومُ، برحمتِكَ أستغيثُ".  என்று ஓதுவார்கள்.


ومن ذلك ما ورد عن أسماء بنت عميس -رضي الله عنها- قالت: قال لي رسول الله -صلى الله عليه وسلم-: "ألا أعلمكِ كلمات تقولينهن عند الكرب -أو في الكرب-: اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا" رواه أبو داود وصححه الألباني.
கஷ்டமான நேரத்தில்  اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا   என்று ஓதச்சொல்லி நபி ஸல் அவர்கள் எனக்கு கற்றுத்தந்தார்கள் என அஸ்மா ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.

Thursday 6 November 2014

ஆன்மாவை அழகுபடுத்துவோம்


மனித வாழ்க்கையில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சனைகள் இழப்புகள் இவற்றுக்கான அடிப்படை காரணம் என்னவெனில் மனிதன் தன்னுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதை அறியாமல் வாழ்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் நமது உண்மையான எதிரிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் நாம் நடக்கின்ற போது சரிகிவிடாமல் இறைவனின் தொடர்பில் நிலைக்க வேண்டுமானால் நிச்சயமாக நமது எதிரியை வென்றாக வேண்டும்.

நமது எதிரிகள் யார்?

திருமறையும் திரு நபி(ஸல்) அவர்களும் மனிதனுடைய மிகப்பெரிய எதிரிகளாக இரண்டு பேரை அடையாளம் காட்டுகின்றார்கள். 

1) ஒருவன் – ஷைத்தான்

2) இரண்டு - மனிதனை தீமையின் பக்கம் கொண்டு செல்லும் அவனுடைய நப்ஸ்

தாஹா நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

أعدى عدوك نفسك التي بين جنبيك

உன்னுடைய இரண்டு விலா பகுதிகளுக்கும் இடையில் இருக்கின்ற உன்னுடைய நப்ஸ் தான் உனது  மிகப்பெரியவிரோதியாகும்
                   
நூல் :  நூல் : இஹ்யாஉலூமுத்தீன் 

மிகப்பெரிய பலசாலி யார் ?

حدثنا علي بن عبد الحميد الغضائري قال : سمعت السري يقول : « أقوى القوة غلبتك نفسك ومن عجز عن أدب نفسه كان عن أدب غيره أعجز »

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் சொல்ல 'தான் கேட்டதாக அலி பின் அப்துல் ஹமீது (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் உனது நப்ஸை நீ ஜெயிப்பது தான் மிகப் பெரிய வலிமையாகும் 'யார் தனது நப்ஸை நல்வழிபடுத்துவதை விட்டும் இயலாமையில் ஆகிவிட்டானோ அவன் பிறமனிதர்களை நல் வழிப்படுத்த  ஒருபோதும்சக்திபெறமாட்டான்' என்றார்கள் 

நூல் : (அஸ்சுஹ்து லில்பைஹகீ) 

சீர்க்கெட்ட உள்ளத்தை செம்மைப்படுத்த நாம் செய்யவேண்டியவை  எவை 

உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் இந்த விஷயத்தில் மனிதன் கவனமும் தொடர் முயர்ச்சியும் மேற்கொண்டால் அவனுடைய வாழ்க்கையின் எல்லாப்  பகுதியும்சீராகவும்சிறப்பாகவும்அமையும் இதயத்தைபண்படுத்தும்இந்ததுறையில்சொல்லப்படவேண்டியசெய்திகள்கடல்போன்றுவிசாலமானதுஎன்றாலும்இங்கு 3 வழி முறைகள் சொல்லப்படுகிறது 

1) தினமும் நமது நப்ஸோடு நாம் பேசுவதற்கும் அன்று நாம் செய்த நன்மை தீமைகளை நமக்கு நாமே கணக்கு கேட்டு கொள்வதற்கும்  ஒருநேரத்தைஒதுக்குவது

அருள் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்

أن النبي قال : ' من حاسب نفسه في الدنيا هون الله عليه الحساب في 
الآخرة

யார் இந்த உலகில் தனக்கு தானே கேள்வி கேட்டு தன்னை சரியாக்கி கொண்டானோ அவனுக்கு அல்லாஹ் மறுமையின் விசாரனைய இலகுவாக்கி  வைப்பான் நூல் தப்சீர் சம்ஹானி 

நப்ஸுடன் பேசிய  நல்லவர்கள் 
وقد حكي عن كهمس «1» أنه كان يصلي كل يوم وليلة ألف ركعة ، وكان يسلم بين كل ركعتين ، ثم يقول لنفسه : قومي يا مأوى كل شر ما رضيت عنك

கஹ்மஸ் (ரஹ்) அவர்கள் தினமும் ஆயிரம்  

ரக்அத்துக்கள் நபில்தொழுவார்கள்ஒவ்வொருஇரண்டுரக்அத்திற்குபிறகும்தனதுநப்ஸைபார்த்துசொல்வார்கள்தீமையின் ஒதுங்கும்  இடமாகஇருக்கின்ற நப்ஸேமீண்டும்நின்றுவணங்கு!  உன்னைநான்பொருந்திக்கொள்ளவில்லைஎன்றுசொல்வார்கள் .    

நூல் (தப்சீர்தஸ்துரீ)   

وكان يزيد الرقاشي يقول لنفسه ويحك يا يزيد من ذا الذي يصلي عنك بعد الموت من ذا الذي يصوم عنك بعد الموت من ذا الذي يرضي عنك ربك بعد الموت

அல்லாமா  யஸீதுர்ரக்காஷி (ரஹ்) அவர்கள்அதிகமாகஇவ்வாறுதன்நப்ஸைபார்த்துசொல்வார்கள்யஸீதேஉன்மரணத்திற்குபின்உனக்காகயார்தொழப்போகிறார்உனக்காகயார்நோன்புநோற்க்கப்போகிறார்உன்மரணத்திற்குப்பின்உனக்காகயார்இறைவனைதிருப்திபடுத்தபோகிறார். இவற்றையெல்லாம் வாழும் போதே உனக்கு நீ செய்து கொள்ள வேண்டும் 

وعن عمر رضى الله عنه انه كان يضرب قدميه بالدره إذا جنه الليل ويقول لنفسه ماذا عملت اليوم

உமர் (ரலி ) அவர்கள் இரவின் இருள் வந்து விட்டால் தனது சாட்டையால் தன் பாதத்தில் அடித்து கொள்வார்கள். அப்போது தனது நப்ஸை பார்த்து கேட்பார்கள் இன்று நீ என்ன காரியம் செய்தாய் என்று கேட்பார்கள் 

وروى عن عائشة رضى الله تعالى عنها أن أبا بكر رضوان الله عليه قال لها عند الموت ما أحد من الناس أحب إلي من عمر ثم قال لها كيف قلت فأعادت عليه ما قال فقال لا أحد أعز على من عمر

அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது மரண நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்னார்கள் மக்களில் எனக்கு உமரை விடவும் பிரியமானவரும் கண்ணியமானவரும் இல்லை அதற்கு காரணம் இது தான். அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் பேசிய பிறகு தனது நப்ஸை பார்த்து கேட்ப்பார்கள் நீ என்ன பேசினாய் எப்படி பேசினாய் என்று இவ்வாறு கேட்டு வார்த்தையை சரியாக்கி கொள்வார்கள் இது தான் காரணம் என்றார்கள்       
 நூல் : இஹ்யா உலூமுத்தீன் 

நப்ஸை சீராக்க அவசியப்படும் இரண்டாவது  விஷயம்நப்ஸைபழிவாங்குவது

நமது மனது ஒரு தீமையை செய்து விட்டாலோ அல்லது ஒரு நன்மையை விட்டு விட்டாலோ அதை பழி வாங்குவதற்காக பல நன்மையான காரியங்களில் அதை ஈடுபடுத்த வேண்டும் 

ويحكى عن تميم الداري أنه نام ليلة لم يقم فيها يتهجد فقام سنة لم ينم فيها عقوبة للذي صنع

தமீமுத் தாரி (ரலி) அவர்கள் ஒரு நாள் தஹஜ்ஜத் தொழாமல் உறங்கி விட்டார்கள் அதற்காக தனது நப்ஸை தண்டிக்கும் நோக்கத்தில் ஒரு வருட முழுவதும் இரவில் நின்று வணங்கினார்கள்            

  (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)

فقد عاقب عمر بن الخطاب نفسه حين فاتته صلاة العصر في جماعة بأن تصدق بأرض كانت له قيمتها مائتا ألف درهم
உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு முறை அஸர் ஜமாஅத் தப்பி போனது எனவே அதற்காக தனது நப்ஸை தண்டித்தார்கள் தண்டனையாக தன்னுடைய ஒரு இடத்தை விற்றார்கள் அதனுடைய மதிப்பு இரண்டு லட்சம் திர்ஹமாகும்       (நூல் : இஹ்யாஉலூமுத்தீன்)

நப்சை சீராக்க தேவையான 3 வது விஷயம் 

நபித் தோழர்களின் வரலாறை படிப்பதின் மூலம் இஸ்லாத்திற்காக போர்களத்திலும் மற்ற நிலைகளிலும் அவர்கள் புரிந்த ஈடு இணையற்ற தியாகத்தை அறிந்து நம்முடைய நப்சிடம் எடுத்து சொல்லி இவ்வாறு கேட்க வேண்டும். மறுமையில் அந்த சஹாபாக்கள் இறைவா! நான் உனக்கு உயிரை கொடுத்தேன் போரில் உறுப்புகளை இழந்தேன் என் கணவரை நான் போரில் இழந்து விதவை ஆனேன் உனக்காக என் பிள்ளைகள் அநாதை ஆனார்கள் என்று சொல்லி பெருமைபடுகின்ற போது உன்னிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லையே. தண்டனையையும்.  இழிவையும்பெற்றுத்தரும்பாவங்கள் தானே இருக்கின்றது என்று நப்ஸிடம் சொல்லவேண்டும். 

கண்ணை தியாகம் செய்த கண்ணிய மிக்க சஹாபி
وأخرج ابن عساكر عن سعيد بن عبيد الثقفي رضي الله عنه قال: رأيت أبا سفيان بن حرب رضي الله عنه يوم الطائف قاعداً في حائط أبي يعلى يأكل، فرميته فأصيبت عينه. فأتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله، هذه عيني أصيبت في سبيل الله. فقال النبي صلى الله عليه وسلم "إن شئت دعوتُ الله فرُدّت عليك، وإن شئت فالجنة

ஸஈத்பின் உபைத் (ரலி) சொல்கின்றார்கள் (நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே இவர் பிறகு இஸ்லாத்தை ஏற்றார்) தாயிபின் நாளில் நடந்த போரில் நான் அபூ சுப்யானைப் பார்த்தேன் அவர் அபூ யஹ்லா என்பவரின் தோட்டத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார் நான் அம்பு எறிந்தேன். அது அவர் கண்ணில் பட்டு கண் பரிக்கப்பட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நாயகமே இதோ எனது கண் அல்லாஹ்வின் பாதையில் தாக்கப்பட்டது என்று சொன்னார். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் கண்ணை நாடினால் நான் துஆ செய்கிறேன் கண் மீண்டும் முன் போன்று உங்களுக்கு கிடைத்து விடும். நீங்கள் நாடினால் இதே நிலையில் பொறுமையை மேற்கொள்ளுங்கள் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்  என்றார்கள்அவர்சொர்க்கம்போதும்என்றுகூறி விட்டார். 

நூல் : ஹயாத்து ஸஹாபா  

மவ்த்தை அழைத்து வந்து மூத்தா போர் 

لما اصيب القوم قال رسول الله صلى الله عليه وسلم - فيما بلغني - : " أخذ زيد بن حارثة الراية فقاتل بها حتى قتل شهيداً، ثم أخذها جعفر بن أبي طالب فقاتل حتى قتل شهيداً " . ثم صمت رسول الله صلى الله عليه وسلم حتى تغيّرت وجوه الأنصار، وظنوا أنه قد كان في عبد الله بن رواحة ما يكرهون، فقال: ثم أخذه عبد الله بن رواحة فقاتل حتى قتل شهيداً، ثم لقد رفعوا لي في الجنة " فيما يرى النائم " على سرر من ذهب فرأيت في سرير عبد الله بن رواحة ازوراراً عن سريري صاحبيه، فقلت: عم هذا؟ فقيل لي: مضياً، وتردد عبد الله بعض التردد، ثم مضى فقتل

மூத்தா போரில் சஹாபாக்கள் தாக்கப்பட்ட போது மதீனாவில் இருந்த தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இப்போது ஸைது பின் ஹாரிஸா இஸ்லாமிய கொடியை எடுத்தார் சண்டையிட்டார் அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு ஜஃபர் பின் அபீ தாலிப் கொடியை எடுத்தார் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். இத்துடன் நபி (ஸல்) அவர்கள் மெளனமாகி விட்டார்கள் இதனால் அன்சாரிகளின் முகம் சோகமாக மாறியது 3-ம் தளபதி அப்துல்லாஹ் பின் ரவாஹா விஷயத்தில் வெறுக்கும்  படியானஏதேனும் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிடுவார்களோ என்று எண்ணினார்கள். அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு இப்னு ரவாஹா கொடியை எடுத்து யுத்தம் செய்கிறார் அவரும் கொல்லப்பட்டார் இப்போது அந்த 3 பேரின் புனித ஆன்மாவும் தங்க கட்டிலில் வைத்து சுவனத்தின் பக்கம் எடுத்து செல்லப்படுகிறது அதில் இப்னு ரவாஹா அவர்களின் கட்டிலின் கால் கொஞ்சம் வலைந்திருப்பதை கண்டேன் காரணம் என்னவெனில் ஸைது, ஜஃபர் இருவரும் நான் சொன்னவுடன் தாமதிக்காமல் போருக்கு போனார்கள் ஆனால் இப்னு ரவாஹா அவர்கள் கொஞ்சம் தாமதித்து சென்றார்கள்          

 நூல் : உஸ்துல்கஃபா 


நபி (ஸல்) அவர்கள்  

இவர்கள்மூன்றுபேரையும்போருக்குதளபதிகளாகஅனுப்பும்போதுஇந்த3 தளபதிகளும் கொல்லப்பட்டால் நான்காவது உங்களில் ஒருவரை தளபதியாக நியமித்து கொள்ளுங்கள் என்று சொன்ன போதே அந்த மூன்று பேருக்கு தெரியும் நமக்கு இந்த போர் தான் கடைசி நாம் இதில் நிச்சயம் கொல்லப்படுவோம் இவ்வாறு உயிர் போகும் என்று தெரிந்தே போனது பெரிய தியாகமாகும்.  

பரிசுத்தம் பெற்ற உள்ளத்தின் அடையாளம் 

فقال رجل : وما زكى (2) المرء نفسه يا رسول الله ؟ قال : « يعلم أن
 الله عز وجل معه حيث كان »


ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் நாயகமே மனிதன் உள்ளத்தை பரிசுத்தப் படுத்துவது என்றால் என்ன? என்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நாம் எங்கு இருந்தாலும் நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று விளங்குவதாகும் என்றார்கள்.      

 நூல் : முஹ்ஜமுஸ்ஸஹாபா

உள்ளத்தின் நோயை போக்கும் மருந்து

وعن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء " . قيل يا رسول الله وما جلاؤها ؟ قال : " كثرة ذكر الموت وتلاوة القرآن "


பெருமானார் சொன்னார்கள் தண்ணீர் பட்டு இரும்பு துருபிடிப்பது போல் உள்ளமும், துரு பிடித்து அழுக்கு படிந்து காணப்படுகிறது.  துருவைபோக்கும்வழிஅதிகமாகமரணத்தைநினைப்பதும்குர்ஆன்ஓதுவதுமாகும்என்றார்கள்      
நூல் : மிஷ்காத