Thursday, 12 June 2014

இறைநேசத்தை பெற முயற்சி செய்வோம்.



 மனிதன் பிறப்பில் இருந்து இறப்புவரை எத்தனையோ விஷயங்களை ஆசைபடுகிறான். முயற்சி செய்து அதையும் பெற்றுக்கொள்கின்றான். சிறுவனாக இருந்தபோது வாலிபத்தை ஆசைக்கொண்டான் பிறகு தொடர்ந்து திருமணம் குழந்தைபேறு சொத்து சுகம் பட்டம் பதவி  இது போன்ற பல விஷயங்களை விரும்புகின்றான் அவன் விரும்பிய அனைத்தையும் ஓரளவு அடைந்து கொண்டான் அதில் மனநிறைவையும்  கொண்டான்.
ஆனால் வேதனை என்னவென்றால் ஒரு விஷயத்தை மட்டும் அவன் ஆசை கொள்ளவும் இல்லை அதை தேடவும் இல்லை அதில் மாத்திரம் அவன் எந்த வளர்ச்சியும் இன்றி ஒரே இடத்தில் ஒரே தரத்தில் நின்று கொண்டு இருக்கின்றான் அது தான் அல்லாஹ்வின் தொடர்பையும் அன்பையும் பெறுகிற விஷயம்.

 இதில் பெரும்பாலான மனிதர்கள் எந்த வளர்ச்சியும் காணவில்லை அதற்காக எந்த ஒரு உபரியான அமலை அதிகப்படுத்துவம் இல்லை பாவத்தை விட்டும் விலக முயற்சிப்பதும் இல்லை.

அல்லாஹ்வின் அன்பை நாடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..

முதலில் அல்லாஹ்வின் அன்பையும் அவனுடைய தொடர்பையும் பெற்று தரும் அமல்களையும் அப்படிப்பட்ட வாழ்வையும் ஆசைப்படுவது..

أنس قال : كان رسول الله صلى الله عليه وسلم يدخل على أم حرام بنت ملحان وكانت تحت عبادة بن الصامت فدخل عليها يوما فأطعمته ثم جلست تفلي رأسه فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك قالت : فقلت : ما يضحكك يا رسول الله ؟ قال : " ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله يركبون ثبج هذا البحر ملوكا على الأسرة أو مثل الملوك على الأسرة " . فقلت : يا رسول الله ادع الله أن يجعلني منهم فدعا لها ثم وضع رأسه فنام ثم استيقظ وهو يضحك فقلت : يا رسول الله ما يضحكك ؟ قال : " ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله " . كما قال في الأولى . فقلت : يا رسول الله ادع الله أن يجعلني منهم . قال : " أنت من الأولين " . فركبت أم حرام البحر في زمن معاوية فصرعت عن دابتها حين خرجت من البحر فهلكت . متفق عليه


அனஸ்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்..
 நாயகம்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்கு சில சமயம் செல்பவர்களாக இருந்தார்கள் (அவர் உபாதா(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார் நபிக்கு மஹ்ரமான உறவாகவும் இருந்தார்) ஒரு நாள் நபி அவர்களின் வீட்டில் நுழைந்தார்கள் அவர்கள் நபிக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 இந்த நிலையில் (ஸல்) அவர்கள் தூங்கி விட்டார்கள் பின்பு சற்று நேரத்தில் சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள் நபி இடம் உம்மு ஹராம் சிரிப்பிற்கான காரணத்தைக் கேட்டார்கள் நாயகம் சொன்னார்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்கு செல்கின்ற என் உம்மத்தில் சிலர் எனக்கு கனவில் எடுத்துக் காட்டப்பட்டார்கள் அவர்கள் சிம்மாசனத்தில் அரசர்கள் அமர்ந்திருப்பதைப் போன்று அமர்ந்து கொண்டு உற்சாகத்துடன் கடலில் நடுவில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் உம்மு ஹாராம் சொல்கின்றார்கள் இதை கேட்ட நான் நபி இடம் அந்த கூட்டத்தில் அல்லாஹ் என்னை சேர்க்க துஆ செய்யுங்கள் என்றேன் உடனே அவர்களுக்காக நபியும் துஆ செய்தார்கள். மீண்டும் நபி உறங்கி சிரித்துக் கொண்டே கண் விழித்து அதே போன்று இன்னொரு கனவை கண்டதாக சொன்னார்கள்.

 அப்போதும் நான் மீண்டும் நபி இடம் இந்த கூட்டத்தில் அல்லாஹ் என்னை சேர்க்க துஆ செய்யுங்கள் என்றேன் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீ முதல் கூட்டத்தை சேர்ந்தவனாக இருக்கின்றாய்.

 உம்மு ஹராம்  (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) ஆட்சியில் அவர்கள் கடலில் இருந்து வெளியேறி வாகனத்தில் அமர்ந்த பொழுது கீழே விழுந்து மரணித்து விட்டார்கள்..
  
 நூல். மிஷ்காத். புகாரி.

அல்லாஹ்வை அடையும் விஷயத்தில் உம்மு ஹராமுக்கு இருந்ததைப் போன்ற ஆசை நமக்கும் இருக்க வேண்டும்..

இந்த தொடர்பு பெற இரண்டாவது விஷயம் அல்லாஹ்விடம் உயர் அந்தஸ்தை பெறுவதற்கான வழிகளை தேடிக் கொண்டே இருக்க வேண்டும்..

وقال شقيق البلخي طلبنا خمسا فوجدناها في خمس طلبنا النور في القبر فوجدناه في قيام الليل وطلبنا جواب منكر ونكير فوجدناه في قراءة القرآن وطلبنا الجواز على الصراط فوجدناه في الصدقة وطلبنا الري يوم القيامة فوجدناه في صيام النهار وطلبنا البركة في الرزق فوجدناه في صلاة الضحى

ஷகீகுல் பல்கீ (ரஹ்சொன்னார்கள்
   
நாங்கள்  5  காரியங்களுக்கான பரிகாரத்தை தேடினோம் அதை நாங்கள்   5ல்  பெற்றுக் கொண்டோம். உணவின் பரக்கத்தை தேடினோம். அதை லுஹா தொழுகையில் பெற்றுக் கொண்டோம். கப்ரின் ஒளியை தேடினோம் .அதை இரவுத் தொழுகையில் பெற்றுக் கொண்டோம். முன்கர் நகீர் கேள்விகளுக்கு பதிலை தேடினோம். அதை குர்ஆன் ஓதுவதில் பெற்றுக் கொண்டோம். ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடக்க வழி தேடினோம். அதை நோன்பிலும் தர்மத்திலும் பெற்றுக் கொண்டோம். கியாமத்தின் நிழலை தேடினோம். அதை உலகத்தை விட்டும் விலகி தனித்து வாழ்வதில் பெற்றுக் கொண்டோம்.உணவில் பரகத்தை தேடினோம் அதை லுஹா தொழுகையில் பெற்றுக்கொண்டோம்..

3 வது.. அதற்காக முயற்சி சிரமம் மேற்கொள்வது

உயிருடன் திரும்புவது நிச்சயமில்லை என்று தெரிந்தும் ஸஹாபாக்கள் போருக்குச் சென்றார்கள் தாங்கள் விதவை ஆனாலும் பரவாயில்லை இஸ்லாம் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்து நபித் தோழியர்கள் தங்கள் கணவன்மார்களை போருக்கு அனுப்பியது தங்களை பராமரிக்க வேறு பிள்ளைகள் இல்லாத நிலையிலும் சஹாபாக்கள் தங்கள் மக்களை போருக்கு அனுப்பியது இஸ்லாத்தின் உயர்வுக்காக இறைத் தொடர்பை பெறுவதற்காக அவர்கள் தங்களையும் தங்களை சார்ந்த எல்லாவற்றையும் இழந்தது இவை அனைத்தும் அல்லாவின் அன்பை பெறுவதில் அவர்கள் மேற்கொண்ட முயற்ச்சியின் வெளிப்பாடுகளாகும்.

மன்னவனிடம் மாண்பு பெற மண்ணில் புரண்ட ஸஹாபி..

 عن طلحة قال : انطلق رجل ذات يوم فنزع ثيابه ، وتمرغ في الرمضاء ، ويقول لنفسه ذوقي نار جهنم ، أجيفة بالليل وبطالة بالنهار ؟ قال فبينا هو كذلك إذ أبصر النبي صلى الله عليه وسلم في ظل شجرة ، فاتاه فقال : غلبتني نفسي ، فقال له النبي صلى الله عليه وسلم : أما لقد فتحت لك أبواب السماء ، ولقد باهى الله بك الملائكة ، ثم قال لاصحابه : تزودوا من أخيكم ، فجعل الرجل يقول : يا فلان ادع لي ، فقال له النبي صلى الله عليه وسلم عمهم ، فقال : اللهم اجعل التقوى زادهم ، واجمع على الهدى أمرهم ، فجعل النبي صلى الله عليه وسلم يقول : اللهم سدده ، فقال : واجعل الجنة مآبهم).

தல்ஹா பின் உபைதுல்லா (ரலி) சொல்கின்றார்கள்
 ஒருநாள் பகல் நேரத்தில் ஒரு ஸஹாபி வீட்டில் இருந்து வெளியேறினார் அவர் தனது மேலாடையை கழற்றி விட்டு சுடு மணலில் தரையில் புரண்டார்.  அவர் தனது நப்சுடன் இவ்வாறு பேசினார் நரகத்தின் நெருப்பை போன்ற இந்த உஷ்ணத்தை நீ நன்றாக சுவைத்து கொள் நீ இரவில் எந்த அமலும் செய்யாமல் பிணத்தை போன்று கிடக்கின்றாய் பகலையும் வீணாக்கிக் கொண்டு இருக்கின்றாய் என்று சொன்னார் அவர் இந்த நிலையில் மர நிழலில்  நபியை கண்டு அவர்களிடம் வந்து நாயகமே என் மனம் என்னை மீறி செயல்படுகிறது எனவே தான் இவ்வாறு செய்தேன் என்று கூறிய போது நபி அந்த தோழரிடம் இப்பொழுது வானத்தின் எல்லா வாசல்களிலும் உனக்காக திறக்கப்பட்டது அல்லாஹ் உன்னை குறித்து மலக்குகளிடம் பெருமை பாராட்டி பேசினான் என்றார்கள் பிறகு தோழர்களிடம் உங்களுடைய இந்த சகோதரரிடத்தில் உங்களுக்கு வேண்டியதை தேடிக் கொள்ளுங்கள் என்றார்கள் உடனே ஒரு மனிதர் அவரிடம் எனக்கு துஆ செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவரிடம் எல்லோருக்கும் துஆ செய்யுங்கள் என்றார்கள் இறைவா இவர்களின் உணவாக தக்வாவை நீ ஆக்கு இவர்களின் காரியங்கள் அனைத்தையும் நேர்வழியின் மீது ஒன்றினைத்து விடு என்று அவர் துஆ செய்தார் இதை கேட்ட நாயகம் யா அல்லாஹ் இவரை நேரான பாதையில் நிலைத்திருக்க செய்துவிடு இவர்கள் அனைவரின் தங்குமிடமாக சொர்க்கத்தை ஆக்கிவிடு என துஆ செய்தார்கள்.

நூல். ஹயாதுஸ்ஸஹாபா. பாகம். 4.

இறைத்தொடர்பை பெறும் விஷயத்தில் ஏற்படும் தடைகளும் அதை தகர்க்கும் வழிகளும்.

முதல் தடை நப்ஸாகும்.

நப்ஸை கட்டுப்படுத்த அதன் மீது சுமையான அமல்களில் அதை ஈடுபடுத்த வேண்டும். மேலும் அது சீராக அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்.

இரண்டாவது தடை ஷைத்தான்.
 
இவனை வீழ்த்த ஒரே வழி எல்லா நேரமும் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டே இருக்கவேண்டும்.


وَفِي حَدِيثِ أَنَسٍ { إنَّ الشَّيْطَانَ وَاضِعٌ خُرْطُومَهُ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ فَإِنْ ذَكَرَ اللَّهَ خَنَسَ وَإِنْ نَسِيَ الْتَقَمَ قَلْبَهُ


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக ஷைத்தான் தனது மூக்கை (ஆதிக்கத்தை) மனிதனுடைய உள்ளத்தின் மீது வைத்திருக்கின்றான் அவன் அல்லாஹ்வை திக்ரு செய்யும்போது அவன் பலகீனமாகிவிடுகின்றான். அவன் அல்லாஹ்வை மறந்தால் அந்த உள்ளத்தில் தங்கிவிடுகின்றான்.

நூல். தர்கீப்.தர்ஹீப்.

மூன்றாவது தடை பாவங்கள். அதனால் ஏற்படும் பின்னடைவுகள்..

இதற்கு தீர்வு என்னவென்றால் பாவம் செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். பாவம் செய்துவிட்டால் உடனே செய்த பாவத்தை வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிவிட வேண்டும்.

عن نافع عن ابن عمر رضي الله عنهما أن عثمان رضي الله عنه أصبح فحدث الناس فقال إني رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام فقال يا عثمان أفطر عندنا فأصبح صائماً وقتل من يومه.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் எதிரிகளால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது ஒரு நாள் காலையில் மக்களிடம் கூறினார்கள் நேற்று இரவு கனவில் நபியை கண்டேன்  நபி என்னிடம் கூறினார்கள் உஸ்மானே நீ நம்மிடத்தில் நோன்பு திறக்க வந்துவிடு என்று கூறினார்கள். என சொன்ன உஸ்மான் (ரலி) அவர்கள் அன்று நோன்பு வைத்திருந்தார்கள் அன்று மாலைக்குள் கொல்லப்பட்டார்கள்

நூல். அல்பிதாயா வந்நிஹாயா.

سعيد بن عبد العزيز قال: قال بلال حين حضرته الوفاة: " من الهزج "
غداً نلقى الأحبه ... محمداً وحزبه
قال: تقول امرأته: واويلاه! قال: يقول هو: وافرحاه!.

ஸயீத் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பிலால் (ரலி) அவர்களுக்கு மரண நேரம் வந்த போது அவர்கள் கூறினார்கள். நாளை நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும்  அவர்களின் தோழர்களையும்  சந்திப்போம் என்றார்கள். அவரின் மனைவி எங்களி ன் கைசேதமே என்றார். பிலால் (ரலி) அவர்களோ  சந்தோஷமே என்றுகூறி சந்தோஷத்துடன் மரணத்தை ஏற்றார்கள்.

நூல். ஹுல்யதுல் அவ்லியா.




Thursday, 5 June 2014

ஆலிம்களின் நிகரில்லாத சேவைகள்.





இந்த உலகில் எண்ணற்ற பல முஸ்லிம் சகோதரர்கள் சேவையாற்றுகின்றார்கள். ஆலிம்களும் சேவை செய்கின்றனர். ஆனாலும் சேவையில் உச்சநிலையை பெற்றவர்கள் ஆலிம்கள்தான். ஏனெனில் மற்ற எல்லா நண்பர்களும் சேவைமாத்திரம்தான் செய்கின்றனர். ஆனால் ஆலிம்கள்தான் சேவையும்செய்கின்றனர். சேவையாளர்களையும் உருவாக்குகின்றனர். இந்த சமுதாயத்தில் யாரெல்லாம் சேவைசெய்கின்றார்களோ அவர்கள்  ஏதேனும் ஒரு ஆலிமுடைய பேச்சில். எழுத்தில். நட்பில்தான் பெற்றிருப்பார். சேவையை வாழ்க்கையில் ஒரு பகுதியாக ஏற்படுத்திக்கொண்டு வாழும் இவ்வுலகில் சேவை செய்வதையே வாழ்க்கையாக ஆக்கிகொண்ட சமுதாயம்தான் ஆலிம்கள்.   ஆலிம்களின் உலகில் முன்னோடி சேவையாளர்கள் திருக்குர் ஆனை நூல் வடிவில் தந்த நபித்தோழர் ஸைத் பின் ஸாபித்தும் (ரலி). நபியின் ஹதீஸ்களை வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்த அபூஹீரைரா (ரலி) அவர்களும்.அந்த ஹதீஸ்களை கிதாப் வடிவில் இஸ்லாமிய உலகிற்கு தந்த இமாம் புகாரி (ரஹ்) போன்ற ஹதீஸ் கலையின் தியாகிகலும் எவ்வித தேடலும் சிரமமும் இன்றி மார்க்கத்தின் பிக்ஹூ சட்டங்களை அறிந்து இஸ்லாமிய கடமைகளை சீராக நிறைவேற்ற வழி வகுத்த அறிவுக் கொடை வள்ளல்கலான மத்பின் நான்கு இமாம்களும் இவர்கள் அனைவரும் ஆலிம்களின் முன்மாதிரி சேவையாளர்கள்..

ولما نزل العذاب بقوم يونس عليه السلام لجأوا الى عالم فيهم كان عنده من العلم شىء وكان يونس ذهب مغاضبا فقال لهم قولوا يا حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت فقالوها فكشف عنهم العذاب

யூனுஸ் நபியின் கூட்டத்தாரை இறைவனின் வேதனை சூழ்ந்த போது அந்த நேரத்தில் யூனுஸ் நபி தன் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருந்தார்கள். அவர்களில் ஒரு ஆலிம் இருந்தார் அவரிடம் மக்கள் ஒதுங்கினார்கள் அவர் மக்களிடம்

حى حين لا حى يا حى محيى الموتى يا حى لا اله الا أنت 

 இந்த திக்ரை சொல்லுங்கள் என்றார் அவர்கள் அதை சொன்னார்கள் எனவே அவர்களை விட்டும் அல்லாஹ் வேதனையை நீக்கினான் அவர்களும் ஈமான் கொண்டார்கள்.

நூல். ரூஹுல் பயான்.

கோடிகளையும் லட்சங்களையும் நோக்கமாகக் கொண்டு கல்வியை தேடும் இவ்வுலகில் தியாகத்திற்கும் அர்பணிப்பிற்கும் ஏழ்மைக்கும் பெயர் போன இந்த மார்க்கக் கல்வியை அல்லாஹ் ரஸூலை நோக்கமாகக் கொண்டு தேடும் சமுதாயம் தான் இந்த ஆலிம்கள் இவர்களின் இந்த நிலைக்கு காரணம் இவர்களின் கல்வி வழி காட்டியான ஜ்ரத் அலி(ரலி) அவர்களின் வாழ்க்கை தான்.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ واله وَسَلَّمَ: "يَا أَبَا حَسَنٍ أَيَّمَا أحب إليك خمسمائة شَاةٍ وَرِعَاؤُهَا أَوْ خَمْسُ كَلِمَاتٍ أُعَلِّمُكُهُنَّ تَدْعُو بِهِنَّ؟ ".
قَالَ عَلِيٌّ: أَمَّا مَنْ يُرِيدُ الآخَرَةَ فَلْيُرِدِ الْكَلِمَاتِ وَأَمَّا مَنْ يُرِيدُ الدُّنْيَا فيريد خمسمائة شاة ورعاؤها قَالَ: "فَمَا تُرِيدُ يَا أَبَا حَسَنٍ؟ " قَالَ: أُرِيدُ الْكَلِمَاتِ قَالَ: "تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَطَيِّبْ لِي كَسْبِي وَوَسِّعْ لِي فِي خُلُقِي وَقَنِّعْنِي بِمَا قَضَيْتُ لِي وَلا تُذْهِبْ نَفْسِي إِلَى شَيْءٍ صَرَفْتَهُ عَنِّي".

அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடம்   ஒருநாள் 500 ஆடுகளை தருவேன் அல்லது 5 வார்த்தைகளை கற்றுத் தருவேன் அதில் உனது தீனுக்கும் உலகிற்கும் ஈடேற்றம் இருக்கின்றது. இரண்டில் எது வேண்டும் என்று கேட்ட பொழுது  நான் சொன்னேன் 500 ஆடுகள் அதிகம் தான் என்றாலும் தாங்கள் எனக்கு 5 வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள் என்று கேட்டேன் அப்பொழுது அவர்கள் இந்த துஆவை சொன்னார்கள்.

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَطَيِّبْ لِي كَسْبِي وَوَسِّعْ لِي فِي خُلُقِي وَقَنِّعْنِي بِمَا قَضَيْتُ لِي وَلا تُذْهِبْ نَفْسِي إِلَى شَيْءٍ صَرَفْتَهُ عَنِّي".

நூல்;ஹயாதுஸ் ஸஹாபா


சத்தியத்தை நிலை நாட்ட உயிர் நீத்த சர்தார் நபியின் வாரிசுகள்..

ஹிஜ்ரி 700ல் ஹிராத் என்ற பகுதியில் வாழ்ந்த சுல்தான் முயிஸ்ஸூத்தீன் ஹூஸைன்  அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிஜாமுத்தீன் அப்துர் ரஹீம் என்ற பெயர் கொண்ட இமாம். அரசர் அவரின் மார்க்க தீர்ப்பை ஏற்றுக் கொள்பவராக இருந்தார் இந்த நிலையில் ஹிராத்திற்கு அருகில் வாழ்ந்த நாடோடிகளான ஒரு பெரிய கூட்டத்தார் பல அநீதிகள் செய்து மார்க்கத்தின் பல சட்டங்களையும் மறுத்தார்கள் எனவே நிஜாமுத்தின் அவர்கள் அந்த மக்களை காபிர் என்று சொல்லி மார்க்க தீர்ப்பு வழங்கினார்கள் இதனால் கடும் கோபம் கொண்ட நாடோடிகள் ஒன்று திரண்டு போர் செய்ய அந்த இமாமின் ஊரான ஹிராத்திற்கு வந்தார்கள்   ந்த நேரத்தில் அவர்களை எதிர்த்து போர் செய்யும் வலிமையை சுல்தான் ஹூஸைன் பெற்றிருக்கவில்லை எனவே அவர் கோட்டையில் ஒளிந்து கொண்டார் இந்நிலையில் எதிரிகள் சார்பில் அரசரை சந்தித்த ஒருவர் சொன்னர் எங்களை நோக்கி காபிர் என்று தீர்ப்பளித்த நிஜாமுத்தீனை கொள்வது தான் எனவே நீங்கள் உங்கள் ஊரையும் மக்களையும் பாதுகாக்க வேண்டுமானால் அவரை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றார் இதை கேட்டு முடிவு எடுக்க தடுமாரிய அரசர் இறுதியில் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க சிறிய ஆபத்து ஏற்பது கூடும் என்ற அடிப்படையில் இமாமை எதிரிகளிடம் ஒப்படைக்க வந்தார்கள் இந்த முடிவை இமாம் நிஜாமுத்தீன் ஏற்றுக் கொண்டார்கள் அந்த தீயவர்களுக்கு எதிரான தனது தீர்ப்பில் இருந்து பின் வாங்கவில்லை பிறகு அந்த இமாம் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது மார்க்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக குளித்து புத்தாடை உடுத்தி தலைப்பாகை அணிந்து சொர்க்கம் தரும் அந்த மரண அழைப்பை ஏற்று ஊரிலிருந்து வெளியேறினார்கள் எதிரிகள் அவரை கொன்றார்கள் ஹிஜ்ரி 738ல் அவர் ஷஹீதானார்கள் 
.
நூல். ஷரஹுல் விகாயா.

மக்களுக்கான ஆலிம்களின் சேவை அவர்களின் பிறப்பிற்கு முன்பே துவங்கி விட்டது அவர்களின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து. அவர்களின் பின்பும் அது தொடர்கிறது
தாயின் கருவரையில் மனிதன் வாழும் போதே அவன் பூரண சுகத்துடன் பிறக்க வேண்டும் என்று ஆலிம் துஆ செய்கின்றார் அவன் பிறந்த பிறகு அவனுக்கு பெயர் சூட்டல் கல்வி போதித்தல் திருமணம் செய்து வைத்தல் குழந்தை பேறு கிடைக்க துஆ செய்தல் அவனுக்கு நோய் வந்தால் ஓதி பார்த்தல் அவனுடைய வியாபாரம் செழிக்க பிரார்த்தித்தல் இப்படி அவனுடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் இறைவனுக்காக பங்கெடுக்கும் ஆலிம்கள் அந்த மனிதனுக்கு மரணத்திற்கு பின்னும் எல்லோரும் அவனை மறந்த பிறகும் கூட தினமும் காலை அல்லது தொழுகைக்குப் பின் தொழுகையாளிகளை தன்னுடன் நிறுத்தி கொண்டு கப்ரு ஜியாரத்தின் வழியாக இறந்த சகோதரருக்காக துஆ செய்கின்றார்.

மறுமையிலும். சொர்க்கத்திலும். தொடரும் ஆலிம்களின் சேவை.

وقال رسول الله صلى الله عليه وسلم " إذا كان يوم القيامة يقول الله سبحانه للعابدين والمجاهدين: ادخلوا الجنة، فيقول العلماء بفضل علمنا تعبدوا وجاهدوا، فيقول الله عز وجل: أنتم عندي كبعض ملائكتي اشفعوا تشفعوا فيشفعون ثم يدخلون الجنة "

நபி அவர்கள் சொன்னார்கள் கியாமத்தில் அல்லாஹ் வணக்கசாலிகளையும் போரில் கலந்த போராளிகளையும் பார்த்து நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்பான் அப்பொழுது உலமாக்கள் இறைவா அவர்கள் எங்கள் இல்மை கேட்டு தான் வணங்கினார்கள் போரிட்டார்கள் அப்படி இருக்கின்ற பொழுது நீ எங்களுக்கு முந்தி அவர்களை சொர்க்கம் அனுப்புகின்றாயே ஏன் என்று கேட்பார்கள் அல்லாஹ் நீங்கள் என்னிடம் எனது சில மலக்குகளின் அந்தஸ்தில் உள்ளீர்கள் எனவே நீங்கள் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவான் அந்த உலமாக்கள் மக்களுக்கு ஷபாஅத் செய்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவார்கள் அதற்குப் பின் அவர்கள் சொர்க்கம் செல்வார்கள்,

நூல். இஹ்யா.

وقال يحيى بن معاذ: العلماء أرحم بأمة محمد صلى الله عليه وسلم من آبائهم وأمهاتهم. قيل: وكيف ذلك؟ قال لأن آباءهم وأمهاتهم يحفظونهم من نار الدنيا وهم يحفظونهم من نار الآخرة

எஹ்யா பின் முஆது (ரஹ்) சொன்னார்கள்.  உலமாக்கள் நபியின் உம்மத்தாருக்கு அவர்களின் தந்தை . தாயை விடவும் அதிகம் கருணை காட்டுகின்றார்கள் ஏனெனில் அவர்களின் பெற்றோர் அம்மக்களை உலகத்தின் நெருப்பை விட்டும் தான் பாதுகாக்கின்றார்கள் ஆலிம்களோ மறுமையின் நெருப்பை விட்டும் பாதுகாக்கின்றார்கள்.

நூல். இஹ்யா.