Wednesday, 16 January 2013

அண்ணலார்-ஒரு அழகிய உபகாரி


ரபீஉல் அவ்வல் மாதம்-மனித சமூகம் மறக்க முடியாத மாதம்.
இதுவரை உலக வரலாறு சந்தித்திராத ஒருமனிதரை சந்தித்தது.ஆம்  அவரின் பிறப்பின் ஓசையில் ரோம் பேரரசும்,பாரசீக வல்லரசும் சப்தமின்றி சரிந்து போனது.
விரல் வைத்து எண்ணிக்கொண்டிருந்த அந்த அரேபிய கூட்டத்தை மூக்கில் விரல் வைத்து உலகமே பேசியது அவரின் மகத்தான சாத  னையாகும்.
மிகப்பெரும் வரலாற்றுக்குச் சொந்தாக்காரரான அவர் –வாழ்கையின் அத்துனை துறைகளுக்கும் வழிகாட்டிச்சென்றார்.
கல்வி,பொருளாதாரம்,அரசியல்,இலக்கியம்,தத்துவம் என அவர் பேசாத எந்த துறையியும் இல்லை என்று கூறுமளவு நிறைவாக வாழ்ந்துவிட்டுச்சென்றார்.
ஹாதமின் கொடையை வரலாறு பார்த்திருக்கிறது,லபீதின் இலக்கியத்தை பார்த்திருக்கிறது,கைஸின் பொருமையை பார்த்திரு  க்கிறது,அந்தராவின் வீரத்தை பார்த்திருக்கிறது,இவை அனைத்தும் ஒருங்கே அமையைப்பெற்ற மாமனிதராக அண்ணல் எம்பெருமான் கண்மணி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமே பார்த்தது.
அவர் பிறக்கும் வரை அவரின் பெயரும் கூட அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டது.
அவர் விரும்பியபடி அவர் பிறந்தார்.அவரின் விருப்பத்தின் படியே மரணிக்கவும் செய்தார்.
அவரைப்பற்றி பேசிய அனைத்தும் தனித்துறையானது,தனிக்கலை  யானது.
நாயகம் ஸல் அவர்களின் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றி எத்தைனையோ நூட்கள் எழுதப்பட்டு விட்டன,அது அஸ்மாஉர் ரிஜால் எனும் தனிக்கலை அந்தஸ்து பெற்றது.இந்த துறையில் மட்டும் சுமார் ஐந்து இலட்சம் அறிவிப்பாளர்கள் உள்ளனர்.
குறைந்த சொல்லும் நிறைந்த பொருளும் கொண்ட அவரின் ஹதீஸ்களுக்கு விளக்கம் எழுதுவதில் பல்லாயிரக்கணக்கான முஹத்திஸீன்கள் தம்முடைய முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தும் கூட யாரும் முழுமையாக விளக்கத்தை எழுதி முடிக்கவில்லை.
அவ்வாறே,நாயகத்தின் சொல்லிலிருந்து பல சட்டங்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்த பல்லாயிரம் இமாம்கள் இதுவரை முடிவு காணவி  ல்லை.
70 ஹதீஸ்களையே மனனம் வைத்திருக்கும் இமாம் அபூஹனீபா ரஹ் ஆறு லட்சம் மார்க்கச்சட்டங்களை இந்த உம்மத்துக்கு தந்திருக்  கிறார்களென்றால் அண்ணலாரின் ஆளமான வரிகளின் விசாலத்த  ன்மையை புரிந்துகொள்ளமுடியும்.
அவரைப்பற்றிய அத்துனை கோனமும் அலசப்பட்டது,அவரின் அங்க அடையாளங்கள் பற்றிய துல்லியமான பதிவும் கூட அவரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு சான்றாகும்.
உலகில் எந்த தலைவரின் வாழ்வும் இவ்வளவு திறந்த புத்தகமாக பார்க்க முடியாது
அவருக்கும் அல்குர்ஆனுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் நெருக்கமா  னது.
ஆதனால் தான் அன்னாரைப்பற்றி அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது –அண்ணலாரின் குணம் குர்ஆன் என ஒற்றைவரியில் பதில் சொன்னார்கள்.அதாவது குர்ஆன் கூறும் அனைத்து தன்மைகளையும் உங்கள் நாயகம் ஒருங்கே பெற்று இருந்தார்கள்.
கடலை விட ஆளமான அவர்களின் வாழ்விலிருந்து பண்பாடுகள் எனும் பாட்த்தின் கீழ் ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த பண்புகள் குறித்து அல்லாஹ் பல்வேறு இடங்களில் புகழ்ந்து கூறுகிறான்.
உச்சகட்டமாக/நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின்மீது இருக்கிறீர் என்றான்.
நபித்துவத்தின் முதல் ஆதாரமாக தன் குணத்தையே முன் வைக்கிறார்கள்.ஆம்!
இதற்கு முன் 40 ஆண்டுகாலம் உங்களுடன் தானே வாழ்ந்தேன் என் நடத்தையில் ஏதேனும் குறை கண்டீர்களா?என கேட்டார்கள்.
அபூ ஜஹ்லும் கூட –முஹம்மதே!நீர் பொய்யர் என்று நான் சொல்ல மாட்டேன்,உம் கொள்கை எனக்கு ஒத்துவரவில்லை என்று தான் கூறினான்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்த அபூசுப்யான்=சிரியா சென்றபோது ரோமின் ஹிர்கல் மன்னர் சபையில் நாயகம் குறித்து
، ولما سأل هرقل أبا سفيان عن النبي عليه الصلاة والسلام -وقد كان حينها عدوه- أثنى عليه أبو سفيان بجميل الصفات، وعظيم الخلال، وقال معللا ذلك:(وأيم الله لَوْلَا مَخَافَةُ أَنْ يُؤْثَرَ عَلَيَّ الْكَذِبُ لَكَذَبْتُ) رواه الشيخان.
அவரின் நற்குணம் குறித்து புகழ்ந்து கூறினார்கள்,அதற்கு அவர் காரணமும் சொன்னார்-அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவரைப்பற்றி பொய் பேசினால் அது எனக்கு எதேனும் ஆபத்தை கொண்டுவந்துவிடும் என்ற பயம் இல்லாவிட்டால் தைரியமாக நான் பொய் சொல்லியிருப்பேன் என்கிறார்கள்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த நற்பண்புகளில் –இஹ்சான் எனும் ஒரு பண்பு உண்டு.
கan style="font-family: 'Times வது போல,
நபி ஸல் அவர்கள் தம் வாழ்நாளில் யாருக்கு கடமை பட்டாலும் அதற்கு பரிகாரம் செய்து விடுவார்கள்.
ஒரு சின்ன உதவி யார் செய்தாலும் அதற்கும் பதில் உதவி செய்து விடுவது அண்ணலாரின் மகத்தான குணமாகும்.
அல்லாஹ் தன் திருமறையில்-உபகாரத்திற்கு பதில் உபகாரமே கூலி என்று கூறுவது போல அண்ணாரின் வாழ்வு அமைந்தது.
நான் யாருக்கும் கடன்படவில்லை,கடமைப்பட்டவனில்லை என்று உலகில் யாரும் சொல்ல முடியாது.
மக்காவின் நெருக்கடியான கால கட்டத்தில் நபி ஸல் அவர்களுக்கு மிகவும் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருந்த மூன்று நபர்கள்-அபூதாலிப்-முத்இம் இப்னு அதி-அன்னை கதீஜா ரலி.
இவர்கள் செய்த உபகாரத்திற்கு நாயகம் எப்படி பதில் உபகாரம் செய்தார்கள்?
ومن وفائه عليه الصلاة والسلام لعمه أبي طالب أنه شفع فيه عند الله تعالى حتى خفف عنه العذاب؛ كما قال العباس رضي الله عنه: "يا رَسُولَ الله، هل نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ فإنه كان يَحُوطُكَ وَيَغْضَبُ لك؟ قال: نعم، هو في ضَحْضَاحٍ من نَارٍ لَوْلَا أنا لَكَانَ في الدَّرَكِ الْأَسْفَلِ من النَّارِ" متفق عليه، وفي رواية لمسلم قال صلى الله عليه وسلم: "وَجَدْتُهُ في غَمَرَاتٍ من النَّارِ فَأَخْرَجْتُهُ إلى ضَحْضَاحٍ".
அபூதாலிப் அவர்களுக்கு ஷபாஅத் மூலம் வேதனையை குறைத்தார்கள்
அல்லாஹ்வின் தூதரே!உங்களுங்கு பாதுகாப்பு வழங்கிய,உங்களுக்காக கோப்ப்படும் அபூதாலிப் அவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் உபகாரம் செய்தீர்கள்?என அப்பாஸ் ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்ட போது-ஆம் அவர் நரகத்தின் மேல் புறத்தில் வேதனைசெய்யப்படுகிறார்,நான் மட்டும் இல்லையென்றால் நரகத்தின் அடிபாகத்தில் இருப்பார் என பதில் கூறினார்கள்.
கதீஜா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு எவ்வளவு பெரும் உபகாரம் செய்தார்கள் என்பதை நாமறிவோம்,அன்னாருக்கு நபி ஸல் அவர்களின் பதில் உபகாரம் இப்படி அமைந்தது.

أما في حياتها فلم يتزوج عليها؛ وفاء لها، واعترافا بجميلها، وحفظا لحقها، قالت عَائِشَةَ رضي الله عنها: "لم يَتَزَوَّجْ النبي صلى الله عليه وسلم على خَدِيجَةَ حتى مَاتَتْ" رواه مسلم.
அவர்கள் உயிருடன் இருந்தவரை இன்னொரு திருமணம் நபி ஸல் அவர்கள் செய்யவில்லை.என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்

وأما بعد وفاتها رضي الله عنها فكان يذكرها، ويتعاهد بالهدايا صواحبها؛ حتى غارت عائشة رضي الله عنها منها
அவர்களின் மரணத்திற்கு பின்பு அவர்களை பற்றி அதிகமாக நினைவு கூறிக்கொண்டே இருப்பார்கள்,கதீஜா ரலி அவர்களின் தோழிகளுக்கு அன்பளிப்புக்களை அனுப்பி வைப்பார்கள்.
இன்னொரு அறிவிப்பில்,ஆடு அறுத்தால் முதலில் கதீஜாவின் தோழிகளுக்கு கொடுத்தனுப்புங்கள் என்று கூறுவார்கள் என்று வருகிறது.

كان المطعم بن عدي من سادة قريش ولما حُصرت بنو هاشم في الشعب كان يحنو عليهم ويصلهم في السر، وشارك في نقض صحيفة المقاطعة، ولما أوذي النبي صلى الله عليه وسلم في الطائف وعاد منها إلى مكة أجاره المطعم، وذبَّ عنه المشركين، فما نسي النبي صلى الله عليه وسلم له ذلك؛ إذ قال في أُسَارَى بَدْرٍ: (لو كان الْمُطْعِمُ بن عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي في هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ له) رواه البخاري.
முத்யிம் இப்னு அதிய் இவர் குறைஷி தலைவர்களில் ஒருவர்.நபி ஸல் அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவாசிகளால் வஞ்சிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு,ஒரு கனவாயில் தங்கினர்.
யாருடைய ஆதரவும் இல்லாத அந்த கால கட்ட்த்தில்-இந்த முத்யிம் இரகசியமாக நபியின் குடும்பத்திற்கு உதவி செய்தார்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சட்டத்தை உடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
மேலும் தாயிபில் நபி ஸல் அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டு கவலையுடன் மக்கா திரும்பிய சமயம்-மக்காவில் நுழைவதற்கும் தடை விதித்தனர்,இந்த நெருக்கடியான கால கட்டத்தில் முத்யிம் தன் பாதுகாப்பில் நபி ஸல் அவர்களை மக்காவுக்கு உள்ளே அழைத்து வந்தார்கள்.
இந்த உபகாரத்தை மறக்காத பெருமானார் ஸல் அவர்கள்-
பத்ரின் கைதிகளை பார்த்து இப்போது முத்யிம் உயிருடன் இருந்து,இந்த கைதிகள் விஷயத்தில் என்னிடம் பேசினால்-இவர்களிடம் எந்த ஈட்டுத்தொகையும் பெறாமல் விடுதலை செய்துவிடுவேன் என்றார்கள்
ஒரு சின்ன உதவியானாலும் அதை திருப்பிச்செய்வதில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார்கள்.
روى الطبراني في معجمه أن النبي -صلى الله عليه وسلم- رجع مرة من بعض أسفاره فنزل على أعربي في الصحراء فأكرم النبي -عليه الصلاة والسلام-، فقال له النبي -صلوات ربي وسلامي عليه-: "إذا جئت المدينة فأْتِنا".

فلم تمض أيام حتى أقبل ذلك الأعرابي إلى المدينة فنزل على رسول الله -صلى الله عليه وسلم-، فلما أراد أن ينصرف قال له النبي -صلى الله عليه وسلم-: "سَلْني"، يعني اطلب مني حاجة، فقال الرجل في هذا المقام الذي يسأله النبي -صلى الله عليه وسلم- أن يسأله حاجة، وكان حرياً به أن يسأله الجنة أو الشهادة في سبيل الله أو أن يكون مستجاب الدعوة، فإذا بذلك الرجل يقول: "أسألك دابة أركبها"، فوهب النبي -صلى الله عليه وسلم- دابة.

ثم قال له النبي -صلى الله عليه وسلم-: "سلني"، فقال الرجل: وأسألك كلباً يحرس غنمي، فأمر النبي -صلى الله عليه وسلم- أن يوهب إليه كلب يحرس غنمه؛ ثم قال له -صلى الله عليه وسلم-: "سلني"، فقال: وأسألك جارية تخدم أهلي، فوهب له جارية.

ثم سكت الرجل، فقال النبي -عليه الصلاة والسلام- للرجل لائما معنفا على قصور همته وعلى عدم علوها، قال له: "أعَجزتَ أن تكون كعجوز بني إسرائيل؟!"، فقال الصحابة -رضي الله عنهم- يارسول الله! وما عجوز بني إسرائيل؟.

فقال -عليه الصلاة والسلام-: إن موسى لما أراد أن يرتحل بقومه قال له قومه: إن يوسف -عليه السلام- (يعنون النبي الذي قبله) أمرنا ألا نجاوز المكان، وألا نرحل منه حتى نحمله معنا، قال لهم: فأين قبر يوسف -عليه السلام-؟ قالوا لا يعرفه منها أحد إلا عجوز منا. فجيء إليه بهذه العجوز، فإذا عجوز قد كبر سنها، ورق عظمها، وتقدم بها السن، حتى هي تترقب الموت وتودع الحياة، فقال لها موسى -عليه السلام-: أين قبر يوسف -عليه السلام-؟ قالت المرأة: والله لا أدلك عليه حتى تعطيني سؤلي! قال لها: وما سُؤلك؟ قالت: أن أرافقك في الجنة.
நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது ஒரு பாலைவனத்தில் வசித்த ஒரு கிராமவாசியின் இல்லத்தில் தங்கினார்க ள்,அந்த கிராமவாசி நாயகத்தை கண்னியப்படுத்தி உணவளித்தார்.அவரி  டமிருந்து விடைபெறும்போது நீங்கள் மதீனா வந்தால் நம்மிடம் வாருங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.
சிலநாட்கள் கழித்து அந்த கிராமவாசி மதீனா வந்தார்.அண்ணலாரை சந்தித்தபோது அவரை கண்ணியப்படுத்தி உணவளித்தார்கள்.
பின்பு எதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்,அவர் சுவனத்தை கேட்டிருக்கலாம்,அல்லது ஷஹாதத்தை கேட்டிருக்கலாம்,அல்லது மக்பூலான துஆவை கேட்டிருக்கலாம் ஆனால் அவரோ-எனக்கு வாகனம் வேண்டும் என்றார்.
அவருக்கு வாகனம் கொடுங்கள் என நாயகம் உத்தரவிட்டார்கள்,
மீண்டும் வேறு ஏதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்.
அவரோ-என் ஆடுகளை பாதுகாக்க நாய் வேண்டும் என்றார் அதையும் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.
அந்த கிராமவாசியோ-என் குடும்பத்திற்கு பணிவிடை செய்ய வேலைப்பெண் வேண்டும் என்றார்கள்,
அதை கொடுக்க உத்தரவிட்ட நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி,பனீஇஸ்ராயீலின் கிழவியை விட நீர் இயலாமல் ஆகிவிட்டீர் என்றார்கள்.
அது என்ன கிழவி? என ஸஹாபாக்கள் விளக்கம் கேட்டபோது,யூசுப் நபியின் கப்ர் தெரிந்த ஒரேபெண்ணான அவளிடம் அதை அறிவித்து தரும்படி நபி மூஸா அலை அவர்கள் கேட்க-அதை அறிவிக்கவேண்டு மானால் நான் கேட்பதை கொடுக்க வேந்தும் என்றாள்.
என்ன வேண்டும்?என்றபோது உங்களுடன் சுவனத்தில் இருக்க வேண்டும் என்றாள்,இறுதியில் அவளின் ஆசை நிறைவேரியது என்று நபி ஸல் அவர்கள் கூரினார்கள்.

روى البخاري في صحيحه : عن أنس :
أن غلاما يهوديا كان يضع للنبي صلى الله عليه وسلم وضوءه ويناوله نعليه فمرض فاتاه النبي صلى الله عليه وسلم فدخل عليه وأبوه قاعد عند رأسه فقال له النبي صلى الله عليه وسلم يا فلان قل لا إله الا الله فنظر إلى أبيه فسكت أبوه فأعاد عليه النبي صلى الله عليه وسلم فنظر إلى أبيه فقال أبوه : أطع أبا القاسم فقال الغلام أشهد ان لا إله الا الله وانك رسول الله فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أخرجه بي من النار.
நபி ஸல் அவர்களுக்கு ஒழுச்செய்ய தண்ணீர் வைத்தல்,அவர்களின் செருப்பை பராமரித்தல் போன்ற பணிகளை செய்து வந்த ஒரு யூத சிறுவர் நோய்வாய்பட்டபோது-அவரை நலம் விசாரிக்கச்சென்ற நபி ஸல் அவர்கள்,அச்சிறுவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்த்தர்கள்.அச்சி    றுவனோ தன் தலைமாட்டில் இருந்த தன் தந்தையை பார்த்தார்-நபி ஸல் அவர்கள் மீண்டும் கலிமா சொல்லிக்கொடுக்க அச்சிறுவனோ தன் தந்தையை மீண்டும் பார்த்தார்-
அப்போது அவனின் தந்தை –முஹம்மதுக்கு (ஸல்) கட்டுப்படு என்றார்.
உடனே அச்சிறுவன் கலிமாசொல்ல உயிரும் பிரிந்தது.
என் காரணத்தால் அச்சிறுவனை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று புகழ்ந்தார்கள்.


في تهذيب الكمال وفي تهذيب التهذيب لابن حجر في ترجمة أبي سفيان عن جعفر بن سليمان الضبعي عن ثابت البناني أنه قال: إنما قال النبي صلى الله عليه وسلم: "من دخل دار أبي سفيان فهو آمن"، لأنه أوذي في الجاهلية فدخل داره
மக்கா வெற்றியில் அபூ ஸுப்யான் வீட்டில் நுழந்தவர் பாதுகாப்பு பெற்றார் என நாயகம் சொன்னதற்கு காரணம்-ஆரம்ப நாட்களில் மக்காவில் தான் துன்புறுத்தப்பட்டபோது அவரின் வீடு அடைக்கலம் தந்ததின் நன்றிகடனாக தான் இவ்வாறு அறிவிப்புச்செய்த்தாக அல்லாமா ஸாபிதுல் பன்னானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

مَن صَنَعَ إِليكُم مَعرُوفًا فَكَافِئُوه ، فَإِن لَم تَجِدُوا مَا تُكَافِئُوا بِهِ فَادعُوا لَهُ حَتَّى تَرَوا أَنَّكُم قَد كَافَأتُمُوهُ ) رواه أبو داود (1672) وصححه الألباني .
உங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு பதில் உபகாரம் செய்யுங்கள்.
முடியாவிட்டால் அவருக்காக துஆ செய்யுங்கள்.












Tuesday, 8 January 2013

அமைதி மார்க்கம் இஸ்லாம்



உலக மதங்களில் இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கமாகும்.

 இஸ்லாம் என்ற சொல் سلم     எனும் மூலச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது அது அமைதியை நோக்கமாக கொண்ட மார்க்கம் என்பதற்குச்சான்றாகும்.

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது,ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக அடுத்தவர்களுக்கு தீங்கிழப்ப  திலிருந்து தன்னை முழுமையாக தடுத்தாகவேண்டும்.

சக மனிதனின் உயிர்,பொருள்,உடமை.மானம் இவைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தராத எந்த முஃமினின் ஈமானும் மறுபரிசிலனை
க்குறியது.

இஸ்லாம் ஒரு முஸ்லிமை சாந்தமான வாழ்க்கை வாழ்வதற்கான எல்லா வழிமுறைகளையும் அமைத்து கொடுத்தி
ருக்கிறது.

வன்முறையின்மீதும்,தீவிரவாதத்தின்மீதும்  இஸ்லாத்திற்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை,காரணம் வன்முறையால் நிலங்களை ஆக்கிரமிக்க முடியும்-வளங்களை கொள்ளையடிக்க முடியும்-ஆட்சியை கைப்பற்ற முடியும்,நிச்சயமாக மனித மனங்களை ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

இஸ்லாம் மக்களின் மனங்களை வென்றெடுத்த மார்க்கம்,அதனால் தான் அது தோன்றிய காலத்தைவிட பின்னாட்களில் தான்  வேகமாக வளர்ச்சியை சந்தித்தது.

அண்ணல் நபி ஸல் அவர்களின் மிகவும் மிருதுவான அனுகுமுறையே இஸ்லாத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றதாக அல்குர்ஆன் கூறுகிறது.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّـهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்
அல் குர்ஆன் (3:159)

இஸ்லாத்தின் முதல் வெற்றி நகரமாகவும்,அதன் தலைநகரமாகவும் அறியப்படும் மதீனா நகரத்தின் வெற்றி குறித்து- அருமை நபித்தோழர்கள் இப்படிக்கூறுகின்றனர்.

மதீனா மாநகரம் நற்குணத்தால் வெற்றிக்கொள்ளப்பட்டது என ஸஹாபாக்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாம் கடந்துவந்த பாதைகளில் அதிகமான போர்க்களங்களை சந்தித்திருக்கலாம்,அது மட்டுமே இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்கான அளவு கோளல்ல,அதற்கு சில நியாயமான காரணங்கள் உண்டு.

இஸ்லாம் நடத்திய யுத்தங்கள் யாவும் தினிக்கப்பட்டவையே தவிர தீர்மாணிக்கப்பட்
டதல்ல,
தற்காப்பு யுத்தங்கள் தானே தவிர விரும்பி நடத்தியதல்ல.இந்த உண்மையை புரிந்துகொள்ள நடுநிலையான பார்வை தேவை.

இதை அடுக்கடுக்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும்.

1.ஒரு உயிரின் மதிப்பு என்ன?என்பதில் இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்

أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்
(அல் குர்ஆன் 5:32)

மனிதன் மட்டுமல்ல,தேவையின்றி ஒரு சிறிய உயிரினத்தை கொலை செய்வதை கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.அது சிட்டுக்குருவியாக இருந்தாலும் சரி.

من قتل عصفورا فما فوقها بغير حقها سأل الله عز وجل عنها يوم القيامة
سنن النسائي

முறையின்றி எவர் ஒரு சிட்டுக்குருவியை கொலைசெய்வாரோ அவர் அதுபற்றி அல்லாஹ்வின் விசாரனைக்கு உட்படுத்தப்படுவார் என கருணை நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் தால் அல்லாஹ் தடைசெய்த செத்தவை,இரத்தம்,பன்றியின் இறைச்சி,மது போன்ற ஹராமான பொருட்களும்,அவ்வளவு ஏன்?இணைவைப்பும் கூட உயிரை காப்பாற்றும் நிர்பந்தம் ஏற்படுகிறபோது இஸ்லாம் அனுமதிக்கிறது.

2.போர்க்குணங்களையும் வன்முறையான நடவடிக்கைகளையும் இஸ்லாம் வெறுக்கிறது.

ويقول النبي صلى الله عليه وسلم فيما رواه عنه عبد الله بن أبي أوفى: "لا تتمنوا لقاء العدو، وسلوا الله العافية

أخرجه البخاري ومسلم

எதிகளை சந்திப்பதில் ஆசைப்படாதீர்கள்,அல்லாஹ்விடம் ஆரோக்கியத்  தையே கேளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சாதாரணமாக போர் எனும் வார்த்தையை கேட்பதையும் கூட பல நேரங்களில் அண்ணல் எம்பெருமான் ஸல் அவர்கள் வெறுத்துள்ளதை ஹதீஸ் நூட்களில் பார்க்க முடிகிறது.

அன்றைய அரபியர்களிடம் போர் எனும் பொருள் தரும் பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டிக்கொள்வதை பெருமையாக நினைத்து வந்தனர்.இதை கண்டிக்கும் விதமாக நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்

أحب الأسماء إلى الله: عبد الله وعبد الرحمن، وأصدق الأسماء: حارث وهمام، وأقبح الأسماء: حرب ومرة

رواه أحمد في المسند

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது அப்துல்லாஹ்,அப்துர்ரஹ்மான் எனும் பெயராகும்,பெயர்களில் உண்மையான பெயர் ஹாரிஸ், ஹம்மாம்-பெயர்களில் அல்லாஹ்வுக்கு வெறுப்பான பெயர் ஹர்ப்,முர்ரா.ஹர்ப் என்றால் போர்-முர்ரா என்றால் கசப்பு-

وروى الإمام مالك في (الموطأ) عن يحيى بن سعيد –مرسلا- أن رسول الله قال لِلَقْحَةٍ[7] (ناقة) تُحلب: "مَن يحلب هذه؟". فقام رجل فقال: "ما اسمك؟". قال: مرّة، قال: "اجلس". ثم قال: "مَن يحلب هذه؟". فقام رجل، فقال: "ما اسمك؟". قال: حرب. قال: "اجلس". ثم قال: "مَن يحلب هذه؟". فقام رجل، فقال: "ما اسمك؟". قال: يعيش! فقال له رسول الله صلى الله عليه وسلم: "احلب

நபி ஸல் அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் பால் கறக்கும் பொருப்பை யார் ஏற்கிறீர்கள்?என வினவியபோது-ஒருவர் எழுந்தார்.உம் பெயர் என்ன?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது-என் பெயர் முர்ரா (கசப்பு)  என அம்மனிதர் கூறினார்-உடனே அவரை நாயகம் உட்காரச்சொன்னா  ர்கள்.

யார் ஒட்டகத்தில் பால் கறக்கிறீர்கள்?என மீண்டும் கேட்க-மற்றொருவர் எழுந்தார்,அவரிடம் உம் பெயர் என்னவென அண்ணலார் கேட்ட  போது-அவர் ஹர்ப் (போர்) என்று கூறினார்-அவரையும் நாயகம் உட்காரச்சொன்னார்கள்.

மூன்றாவது முறையாக கேட்டபோது-இப்போது ஒருவர் எழுந்தார்,அவரின் பெயரை கேட்டபோது-யஈஷ் என்றார்.அப்போது நபி ஸல் அவர்கள் அவரை அப்பணிக்கு நியமித்தார்கள்.

பெயருக்கு கூட வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்துவதை அல்லாஹ்வும் ரஸூலும் விரும்புவதில்லை.

ஹழ்ரத் அலி ரலி அவர்கள் இறைவனுக்காக போர்புரிவதில் அளவுகடந்த பேராசை கொண்டிருந்தார்கள்,அதன் உச்சகட்டமாக தங்களின் பிள்ளைகளுக்கு ஹர்ப் என்று பெயர் வைப்பதையும் அதன் மூலம் ஹர்பின் தந்தை எனும் புனைப்பெயரால் தான் அழைக்கப்படுவ  தையும் விரும்பினார்கள்.

இதை இவ்வாறு கூறினார்கள்.

أن عليا قال: كنت أحب أن أكتنى بـ(أبي حرب

والطبراني في الكبير



وروى الإمام أحمد في مسنده، وروى البخاري في الأدب المفرد، وغيرهما عن على رضي الله عنه قال: لما ولد الحسن سمَّيتُه حربا، فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سمَّيتموه؟". قال: قلت: حربا. قال: "بل هو حسن". فلما ولد الحسين سمَّيتُه حربا، فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سميتموه؟". قال: قلت: حربا. قال: "بل هو حسين". فلما ولد الثالث سمَّيتُه حربا، فجاء النبي صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سميتموه؟". قلت: حربا. قال: "بل هو محسن

ஹழ்ரத் அலி ரலி அவர்களுக்கு ஹஸன் ரலி பிறந்தபோது ஹர்ப் என்றே பெயர் வைத்தார்கள்.

பேரக்குழந்தையை பார்க்க வந்த பெருமானார் ஸல் அவர்கள்-என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?என கேட்டார்கள்.

ஹர்ப் என்று பெயர்வைத்துள்ளேன் என்றார்கள்.உடனே நபி ஸல் அவர்கள்-இல்லை ஹஸன் என்று பெயர் மாற்றுங்கள் என்றார்கள்.
பின்னர் ஹுஸைன் ரலி அவர்கள் பிறந்தபோதும் அதே ஹர்ப் என்ற பெயரை சூட்டினார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்கள்-ஹுஸைன் என்று மாற்றுங்கள் என்றார்கள்.

மூன்றாவது குழந்தை அலி ரலி அவர்களுக்கு பிறந்தபோது குழந்தையை பார்த்து பெயர் என்ன வைத்தீர்கள்?என நபி ஸல் அவர்கள் கேட்க ஹர்ப் என்று கூறினார்கள்,அதைகேட்ட பெருமானார்-முஹ்ஸின் என்று மாற்றச்சொன்னார்கள்.

3.கட்டாயமான மதமாற்றம் இஸ்லாத்தில் செல்லாது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.

(அல் குர்ஆன் 2:256)

அவ்வாறே,இன்னொரு வசனத்தில் ஈமானுக்காக கட்டயப்படுத்துவது பற்றி தெளிவாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்

أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ) [يونس:99]،

அவர்கள் ஈமான் கொள்ளவேண்டுமென நீர் மக்களை நிர்பந்திப்பீர்களா? என கேட்கிறான்.
அல் குர்ஆன்

لم يقبل إيمان فرعون ساعة الغرق، (حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرائيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ) [يونس:90]، فكان الجواب الإلهي عليه: (آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ) [يونس:91].

கடலில் மூழ்கடிக்கப்படும் நேரத்தில் பிர்அவ்ன் ஈமான் கொண்டபோது-அவனின்  ஈமான் ஏற்றுக்கொளளப்படவில்லை,காரணம் வேதனையை கண்ணால் பார்த்து,இனி தப்பிக்க வழியில்லை எனும் நிர்பந்தச்சூழலில் ஒருவர் ஈமான் கொண்டால் அது இஸ்லாத்தில் செல்லாது.

அதனால் தான் அல்லாஹ் இப்படி பதில் சொன்னான்

இப்போது தான் உனக்கு ஈமான் ஞாபகம் வந்ததா?என கேட்டான்.


وقال عن قوم مكذبين نزل عليهم عذاب الله: (فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ * فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا سُنَّتَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ هُنَالِكَ الْكَافِرُونَ) [غافر:84،85].

இறை மறுப்பில் மூழ்கிக்கிடந்த கூட்டத்தினர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கும்போது அவர்கள் ஈமான் கொள்ளவே செய்தனர் ஆனால் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவி
ல்லை.

எனவே அவர்கள் நம் வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்.

ஆயினும், வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை
.
4.எந்த நியதிக்கும் கட்டுப்படாத போர்க்களங்களில் கூட இஸ்லாம் மனித நேயத்தையும் கட்டுப்பாட்டையும் போதிக்கிறது.

முஸ்லிம்களின் ஈமானிய வாழ்வுக்கும்,இருப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி-எல்லாவகையான அநியாயங்களையும் கட்டவிழ்த்துவிட்டு-சொந்த ஊர் சோதனைக்களமாகியபோது-சிறுபான்மையினரான முஸ்லிம்கள் சொந்த ஊரை துறந்து அந்நியபூமியில் அகதிகளாக வாழ்கிறார்கள்.ஆனாலும் அவர்கள் அங்கும் நிம்மதியாக வாழவிடாமல் மக்கத்து காபிர்கள் எடுத்த போர்நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களி   ன் தற்காப்பு நடவடிக்கையே இஸ்லாம் சந்தித்த போர்களங்கள்.

ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டு என்ற கிருஸ்துவ தத்துவம் வார்த்தைக்கு அழகு தரலாம்,வாழ்கைக்கு அது ஒத்துவராது.

ஒரு கையை வெட்டினால் மறு கையை வெட்டச்சொல்வார்களா?  100 ரூபாய் திருடியவனுக்கு 1000 ரூபாயை அன்பளிப்பாக தருவார்களா?

இஸ்லாம் சந்தித்த எந்த போர்க்களங்களிலும் மறவாமல் முஸ்லிம்களுக்கு பெருமானார் செய்யும் மனித நேய உபதேசங்கள்.

உங்களால் ஒருவருக்கு நேர்வழி காட்ட முடியுமானால் அதுவே உங்களுக்கு உலகமே கிடைப்பதைவிடவும் சிறந்தது.

உங்களிடம் போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே போர்செய்ய வேண்டும்.

பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-வயோதிகர்களை கொலை செய்யக்கூடாது.

மதகுருமார்களை-வியாபாரிகளை-விவசாயிகளை கொலைசெய்யக்கூடாது.

பிறமத ஆலயங்களை சேதப்படுத்தக்கூடாது.

தேவையின்றி மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது.

நபி ஸல் அவர்களின் காலத்தில் நடைபெற்ற மொத்தப்போர்களிலும் ஏற்பட்ட உயிர்சேதம் 1062 ஐ தாண்டவில்லை என்பதை சிந்தித்தாலே இஸ்லாத்தை சரியான கோனத்தில் புரிந்து கொள்ள முடியும்.

5.போர்க்களங்களை சந்திக்கும் முன் உடன்பாடு ஏற்படுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் நபி ஸல் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.

وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا

அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக  (அல் குர்ஆன் 8:61)

ஹுதைபிய்யா உடன்படிக்கையில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை குறித்து அல்குர்ஆன் மகத்தான வெற்றி என்று புகழ்கிறது.ஆனால் வெளித்தோற்றத்தில் அது ஒருதலைபட்சமாக (காபிர்களுக்கு சாதகமாக) எழுதப்பட்ட உடன்பாடு.

وتنزل في ذلك سورة تسمى سورة (الفتح) تبدأ بقوله تعالى: (إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحاً مُبِيناً)[الفتح:1]، ويسأل أحد الصحابة رسول الله صلى الله عليه وسلم: أفتح هو يا رسول الله؟ فيقول: "نعم هو فتح"استبعدوا أن يكون فتح بغير حرب، ولكن الله تعالى سمَّاه فتحا، بل فتحا مبينا، وامتنَّ به على رسوله صلى الله عليه وسلم).

அந்த சமாதான உடன்படிக்கைபற்றி பேசிய சூராவுக்கு வெற்றி என பெயரிடப்பட்டது-
போர் நடைபெறாமல் இது எப்படி வெற்றி ?என ஒரு ஸஹாபி நாயகத்திடம் கேட்டபோது-ஆம்.அது மகத்தான வெற்றிதான் என்றார்கள்.
காரணம் இந்த உடன்பாடுக்கு பின்னரே இஸ்லாமிய தஃவாவுக்கு விசாலமான சுதந்திரம் கிடைத்தது.

في الحديث المتفق عليه، عن أسامة بن زيد قال: بعثنا رسول الله -صلى الله عليه وسلم- في سرية فصبحنا الحرقات من جهينة، فأدركت رجلاً، فقال: لا إله إلا الله، فطعنته، فوقع في نفسي من ذلك، فذكرته للنبي -صلى الله عليه وسلم- فقال رسول الله -صلى الله عليه وسلم- :" أقال لا إله إلا الله وقتلته ؟! " قال: قلت يا رسول الله إنما قالها خوفاً من السلاح، قال:" أشققت عن قلبه حتى تعلم أقالها أم لا " فما زال يكررها علي حتى تمنيت أني أسلمت يومئذٍ

ஹழ்ரத் உஸாமா ரலி அவர்கள் ஒரு போரில் எதிரி ஒருவரை துரத்தி பிடித்தபோது-அந்த மனிதர் கலிமா சொல்லி சமாதானத்திற்கு முன் வருகிறார்.ஆனாலும் அவரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத உஸாமா ரலி அவர்கள் அவரை கொலை செய்து விடுகிறார்கள்.

இந்த நிகழ்வை குறித்து பெருமானாரிடம் கூறியபோது-அவர் கலிமா சொல்லியுமா கொன்றுவிட்டீர்?என கேட்க ஆம் அவர் ஆயுதத்திற்கு பயந்து கலிமா சொன்னார் என உஸாமா ரலி கூறினார்கள்-அதை கேட்டதும் கடும் கோபமுற்ற நாயகம்-அவரின் உள்ளத்தை பிளந்தா பார்த்தீர் என கடுமையாக கண்டித்தார்கள்.

போர்க்களத்தில் சமாதானத்திற்கான சூழல் உருவாகும்போது அதுவே ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்கவேண்டுமென உணர்த்தினார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாமிய எதிரிகளால் இஸ்லாத்தின் மீது வன்முறைச்சாயம் பூசப்படுகிறது,தீவிரவாத முத்திரை குத்தப்படு கிறது. இன்றைய ஊடகங்களில்-ஒரு தனிமனிதன் செய்யும் தவறில் அவன் சார்ந்திருக்கும் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்படு  மானால் அது இஸ்லாம் மட்டும் தான்.

இஸ்லாம் வாளால் பரவியதா?

இஸ்லாத்தைப்பற்றிய புரிதலில்,அல்லது புரிய வைப்பதில் ஒரு பெரிய் வரலாற்றுத்தவறு நடந்திருக்கிறது.அதை அடையாளம் கண்டு கொள்வதும்,அதன் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிக்கூறுவதும் இன்றைய முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.

இதைச்செய்ய தவறினால் தெருக்கூத்தாடிகளின் துப்பாக்கிகள் மூலமும் விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களின் விஸ்வரூபங்கள் மூலமும் இஸ்லாம் சிதைக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

உண்மையில் இஸ்லாத்தின் அபாரமான வளர்ச்சியை ஜீரனிக்கமுடியாத சில அறிவீனர்கள்-இஸ்லாம் படையெடுப்பின் மூலம் பரவியது எனவும் வாளால் வளர்ச்சியடைந்த மார்க்கம் எனவும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இஸ்லாத்தின் படைஎடுப்புக்கள் அனைத்தும் தஃவாவுக்கான படையெடுப்பேயன்றி மண்ணை,பொண்னை,ஆட்சியை,அதிகாரத்தை நோக்கமாக கொண்டதல்ல.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய படைகள் நுழையாத மலேசியா.இந்தோனேசியா,பிலிப்பைன் போன்ற நாடுகளில் இஸ்லாம் எப்படி பரவியது?முஸ்லிம் வியாபாரிகளின் நேர்மையாலும் ஒழுக்கத்   தாலுமே இஸ்லாத்தின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இஸ்லாம் கூறும் சூபித்துவதால் ஈர்க்கப்பட்டு அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்றனர்.

ومَن ينظر بعمق في تاريخ الإسلام ودعوته وانتشاره: يجد أن البلاد التي فتحها المسلمون، لم ينتشر فيها الإسلام إلا بعد مدة من الزمن
وانظر إلى بلد كمصر، وقد فُتحت في عهد أمير المؤمنين الفاروق عمر بن الخطاب، ولكن ظلَّ الناس على دينهم النصراني عشرات السنين، لا يدخل فيه إلا الواحد بعد الواحد

இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது -முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நாடுகளில் மிகநீண்ட காலத்திற்குபின்னரே இஸ்லாம் அங்கு பரவியது என்றும்,மிஸ்ர் போன்ற நாடுகள் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் வெற்றிக்கொள்ளப்பட்டாலும் அங்குள்ள மக்கள் பல வருடங்கள் தங்களின் கிருஸ்துவ மார்க்கத்தில் தான் தொடர்ந்து இருந்தனர்.இஸ்லாத்தின் நேர்மையான சமத்துவமான சட்டங்களுமே அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை தழுவ காரணமானது என சர்வதேச அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்ளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

இஸ்லாம் அது அமைதி மார்க்கம்,அதன் வணக்கங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் ஸலாமையே நோக்கமாக கொண்டிருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக ஒரு முஸ்லிமின் இலட்ச்சியமான அந்த சுவனபதிக்கு அமைதி இல்லம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அல்லாஹ் அமைதி இல்லத்தின் பக்கம் அழைக்கிறான். (அல் குர்ஆன் 10:25)
                                


 










Wednesday, 2 January 2013

மாற்றம் வேண்டும்



(தவிர்க்க முடியா காரணத்தால் தாமிதமாகிவிட்டது.)


அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் தன்னிறைவு பெற்ற மார்க்கமாகும்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அத்துனை வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய முழுமையாக நிறைவு பெற்ற மார்க்கம் இஸ்லாம்.

கொள்கைகள்,வணக்கங்கள்,குடும்பவிவகாரங்கள்,கொடுக்கல் வாங்கல்தனி மனித ஒழுக்கங்கள் என இஸ்லாம் பேசாத எந்த வாழ்க்கை நெறியுமில்லை என்றுகூறுமளவிற்குபூரணத்துவம் பெற்ற தீனையே நாம் பெற்றுள்ளோம்.

இதை அல்குர்ஆன் இப்படி விவரிக்கிறது,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்

இதை இந்த உம்மத்திற்கு புரியவைக்கவே நபி ஸல் அவர்கள்- நபி மூஸா அலை அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் இந்த தீனை தான் பின்பற்றுவார் எனவும்,இறுதிநாளின் நெருக்கத்தில் வருகின்ற நபி ஈஸா அலை அவர்கள் என் உம்மத்தில் ஒருவராகவும்,என் ஷரீஅத்தை பாதுகாப்பவராகவே வாழ்வார் எனவும் கூறினார்கள்.

இந்த ஷரீஅத் மற்ற எல்லா ஷரீஅத்தையும் மாற்றும் தன்மைகொண்டது.
அதனால் தான் தவ்ராத்தின் பிரதி ஒன்று உமர் ரலி அவர்களுக்கு கிடைத்தபோது,அதை நபி ஸல் அவர்களின் சபைக்கு கொண்டு வந்து-வாசித்தபோது,நபி சல் அவர்கள் கடுமையாக கோபம் கொண்டார்கள்.காரணம் நிறைவான மார்க்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கும் போது நீங்கள் மற்றவேதங்களின் பக்கம் தேவையாக வேண்டாம்
எனவே நபி ஸல் அவர்களின் ஷரீஅத் தான்
 இறுதியானது,முடிவானதுமாகும்.

எனவே இந்த ஷரீஅத்தின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

உங்களுக்கு நாம் வழங்கிய ஷரீஅத்தை பின் பற்றுங்கள்,அறிவீனர்களின் மனோஇச்சைகளை பின்பற்றக்கூடாது என குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது.

ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

அப்படி இஸ்லாம் அல்லாத தீனை தேடினால் அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படாது.

உலகில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்தன்மைகளும்  தனி அடையாளங்களும் இருப்பது போலவே,இஸ்லாத்திற்கும் சில தனி அடையாளங்களும்,தனித்துவங்களும் உண்டு.

மொழியில்,உணவுமுறையில்,உடையில்,வணக்கங்களில்,வாழ்வின் அத்துனை விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் தனித்து செயல்படுவதையே இஸ்லாம் விரும்புகிறது.

ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எந்த சூழலிலும் பிறமத கலாச்சாரங்களை கையிலெடுப்பதை நாயகம் விரும்பவில்லை,அதனால் தான்

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ منهم" رواه أبو داود

 மற்ற மதங்களின் செயல்பாட்டுக்கு ஒப்பான காரியத்தை செய்பவன் அவர்களைச்சார்ந்தவன்.என கண்டிப்புடன் கூறிவிட்டார்கள்

لتتبعن سَنَن من قبلكم شبرًا بشبر وذراعًا بذراع، حتى لو سلكوا جحر ضب لسلكتموه". قلنا: "يا رسول الله: اليهود والنصارى؟!"، قال النبي -صلى الله عليه وسلم-: "فمن؟!". متفق عليه من حديث أبي سعيد الخدري -رضي الله عنه-.

உங்களின் முன்னோர்களின் வழிமுறைகளை ஜான் ஜானாக,முழம் முழமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறியபோது,  முன்னோர்கள் வழிமுறை என்பது யூத,கிருஸ்துவ கலாச்சாரமா? என ஸஹாபாக்கள் வினவியபோது-வேறு யார்?அவர்கள்தான் என்று பதில் கூறினார்கள்

வணக்கங்களில் மாற்றம்:

لما قدم المدينة مهاجرًا، ورأى اليهود يصومون عاشوراء، أمر المسلمين بصيام يوم قبله أو بعده مخالفة لهم؛ بل حتى تحول القبلة من بيت المقدس إلى الكعبة هو مخالفة لهم في قبلتهم: (وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ المَسْجِدِ الحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ) [البقرة: 150].

மதீனாவுக்கு நபி ஸல் அவர்கள் வந்தபோது முக்கியமான மூன்று மாற்றங்களை கொண்டு வந்தார்கள்-

1.யூதர்களின் ஆஷுரா தின நோன்பிற்கு மாற்றமாக ஒருநாள் சேர்த்து வைத்து அவர்களுக்கு மாற்றம் செய்யச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

2.பைத்துல் முகத்தஸிலிருந்து கஃபாவாக கிப்லா மாற்றப்பட்டது,காரணம் அன்றைய தினத்தில் யூதர்கள் தங்களின் கிப்லாவாக பைத்துல் முகத்தஸையே ஆக்கிக்கொண்டனர்.


قال جمع من السلف: "معناه: لئلا يحتج اليهودُ عليكم بالموافقة في القبلة فيقولون: قد وافقونا في قبلتنا فيوشك أن يوافقونا في ديننا، فقطع الله بمخالفتهم في القبلة هذه الحجة".

ஸலபிய்யீன்களில் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர்
யூதர்களின் கிப்லாவுக்கு முஸ்லிம்கள் ஒத்துவருகிறபோது-எங்களின் தீனுக்கும் முஸ்லிம்கள் மாறிவிடுவர் என யூதர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.எனவே இந்த வாதத்தை பொய்யாக்கவே கிப்லா திருப்பப்பட்டது.

3.பெருநாட்களில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.

روى أنس -رضي الله عنه- فقال: قدم رسول الله -صلى الله عليه وسلم- المدينة، ولهم يومان يلعبون فيهما، فقال: "ما هذان اليومان؟!"، قالوا: كنا نلعب فيهما في الجاهلية، فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إن الله قد أبدلكم بهما خيرًا منهما؛ يوم الأضحى ويوم الفطر". رواه أبو داود.

நபி ஸல் அவர்கள் மதீனா வந்தபோது அங்குள்ள மக்கள் இரு தினங்களை பெருநாட்களாக கொண்டாடினர்,அதைப்பற்றி நபி ஸல் அவர்கள் வினவியபோது-இந்த இரு தினங்கள் அறியாமை காலம் முதல் நாங்கள் கொண்டாடி வருகின்றோம் என்றனர்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அல்லாஹுத்தஆலா உங்களுக்கு இதை விட சிறந்த இரு தினங்களை மாற்றமாக தந்துவிட்டான்,ஈதுல் பித்ர்-ஈதுல் அழ்ஹா.என்றார்கள்


சூரியனை வணக்கம் செய்யும் கூட்டத்தை கவனத்தில் கொண்டே சூரிய உதயம்,அஸ்தமம்,அதன் உச்சி பொழுது ஆகிய நேரங்கள் வணக்கம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

வணக்கமானாலும் வாழ்கையானாலும் மற்ற சமயங்களின் சாயல் வரக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

உம்ராவில் மாற்றம்:

ففي العمرة كان المشركون يحرمون العمرة في أشهر الحج، والنبي صلى الله عليه وسلم اعتمر أربع مرات كلهن في ذي القعدة وهو من أشهر الحج، بل في حجته عليه الصلاة والسلام أمر الناس أن يحولوا نسكهم إلى عمرة، ثم يحرمون بالحج بعد ذلك؛ كما روى مسلم عن ابن عباس رضي الله عنهما قال: "كانوا يرون أن العمرة في أشهر الحج من
 أفجر الفجور في الأرض 
மக்காவில் வாழ்ந்த இணைவைப்போரின் வழமை –அவர்கள் ஹஜ்ஜுடைய காலங்களில் ஹஜ்மட்டுமே செய்ய வேண்டும் உம்ரா செய்வது ஹராம்,பெரும்ப்பவம் என்று நம்பி வந்தனர்.
ஆனால் நபி ஸல் அவர்கள் –முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்யவேண்டுமென்றே –தங்களின் வாழ்நாளில் செய்த நான்கு உம்ராவையும் ஹஜ்ஜுடைய காலமான துல்கஃதா மாதத்தில் தான் நிறைவேற்றினார்கள்.

மேலும் தங்களின் ஹஜ்ஜில் தங்களின் தோழர்களை உம்ரா செய்யச்சொல்லி உத்த்ரவிட்டார்கள்

ஹஜ்ஜில் மாற்றம்:


وخالفهم عليه الصلاة والسلام في النفرة من عرفة، وفي الدفع من مزدلفة؛ إذ كانوا ينفرون من عرفة قبل الغروب، ويدفعون من مزدلفة بعد الشروق؛ فنفر النبي صلى الله عليه وسلم من عرفة بعد الغروب، ودفع من مزدلفة قبيل الشروق؛ كما روى المسور ابن مخرمة رضي الله عنه فقال: "خطبنا رسول الله صلى الله عليه وسلم بعرفة فحمد الله وأثنى عليه ثم قال: "أما بعد: فإن أهل الشرك والأوثان كانوا يدفعون من هاهنا عند غروب الشمس حين تكون الشمس على رؤوس الجبال مثلَ عمائم الرجال على رؤوسها، فهدينا مخالف لهديهم، وكانوا يدفعون من المشعر الحرام عند طلوع الشمس على رؤوس الجبال مثل عمائم الرجال على رؤوسها فهدينا مخالف لهديهم" رواه الحاكم وقال: صحيح على شرط الشيخين.

இணைவைப்போரின் ஹஜ் அமல்களில்-அரபா தினத்தில் மாலை சூரியன் மறையும் முன் அரபாவிலிருந்து புறப்படும் பழக்கமும்,முஸ்த லிபாவில் சூரியன் உதயமாகும் முன் புறப்படும் பழக்கமும் இருந்தது.

நபி ஸல் அவகள்-அதற்கு மாற்றம் செய்தார்கள்.
ஹழ்ரத் மிஸ்வர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அரபா தினத்தில் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு குத்பா பிரசங்கம் செய்யும்போது-அல்லாஹ்வைப்புகழ்துவிட்டு பின்னர் கூறினார்கள்.

இணைவைப்போர் இங்கிருந்து சுரியன் மறையும் போது -மலை உச்சியில் ஆண்களின் தலைப்பாகைகள் போல் தெரியும் நேரத்தில் கிளம்பிவிடுவர்,எனவே அவர்களின் செயலுக்கு நாம் மாற்றம் செய்தாகவேண்டும்,அவ்வாறு முஸ்தலிபாவிலிருந்து சூரியன் உதயமாகும்போது- மலை உச்சியில் ஆண்களின் தலைப்பாகைகள் போல் தெரியும் நேரத்தில் கிளம்பிவிடுவர்,எனவே அவர்களின் செயலுக்கு நாம் மாற்றம் செய்தாகவேண்டும்.


وروى عمرو بن ميمون رضي الله عنه فقال: "شهدت عمر رضي الله عنه صلى بجمع الصبح ثم وقف فقال: إن المشركين كانوا لا يفيضون حتى تطلع الشمس ويقولون: أشرق ثبير، وإن النبي صلى الله عليه وسلم خالفهم ثم أفاض قبل أن تطلع الشمس" رواه البخاري.

ஹஜ்ஜில் 9 ம் நாள் காலை சுபுஹ் தொழுகையை ஹழ்ரத் உமர் ரலி அவர்களுடன் நிறைவேற்றியபோது-இணைவைப்பவர்கள் சூரியன் உதயமாகும் வரைமுஸ்தலிபாவிலிருந்து புறப்படமாட்டார்கள்,சூரியன் உதயமாகிவிட்டால்-ஸபீர் மலையில் சூரியன் தோன்றிவிட்டது என்று கூறி புறப்படுவர்.ஆனால் நபி ஸல்.அவர்கள்- அவர்களுக்கு மாற்றம் செய்து-சூரிய உதயத்திற்கு முன் புறப்பட்டு விடுவார்கள் என அம்ர் இப்னு மைமூன் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நோன்பில் மாற்றம்:

ومن الدقائق في هذا المجـال: ما استنبطه العلمـاء من أن صيامَ المسلمين وإفطارهم وأعيادَهم إنما مبناها على رؤية الهلال، وذلك مخالف لما عليه الكفـار؛ إذ يثبتون ذلك بالحساب، وجاءت السنة بتعجيل الفطور وتأخير السحور مخالفة لهم،

முஸ்லிம்கள் நோன்பு வைப்பதும்,திறப்பதும்,ஈதை முடிவுசெய்வதும் பிறையை அடிப்பையாக கொண்டு என ஷரீஅத் வலியுறுத்தியது- காலக்கணக்கை வைத்து நோன்பு வைத்துவந்த மாற்றுமதத்தவர்களுக்கு மாற்றம் செய்யும் நோக்கமே அன்றி வேறில்லை.

அவ்வாறே-நோன்பு திறப்பதை தீவிரமாகவும்,சஹரை தாமிதப்படுத்துவதும் வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்யும் நோக்கம் உள்ளே மறைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.


 وجاء النهي عن الجلوس كما يجلسون، ورد عن ابن عمر -رضي الله عنهما- أنه رأى رجلاً يتكئ على يده اليسرى وهو قاعد في الصلاة فقال له: "لا تجلس هكذا؛ فإن هكذا يجلس الذين يعذبون". وفي رواية "تلك صلاةُ المغضوب عليهم". أخرجه أبو داود

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள்-தொழுகையில் ஒருவர் தன் இட்து காலின் மீது சாந்தவராக உட்காரக்கண்டார்கள்,உடனே அம்மனிதரிடம்-இப்படி உட்கார வேண்டாம்,காரணம் இவ்வாறு உட்காருவது இறைவனின் தண்டனையை பெற்ற கூட்டத்தினர் பழக்கம் என்றார்கள்.

ஆடையில் மாற்றம்:

أن عبد الله بن عمرو بن العاص أخبره قال : رأى رسول الله صلى الله عليه وسلم علي ثوبين معصفرين ، فقال : إن هذه من ثياب الكفار فلا تلبسها
مسلم

மஞ்சல் நிறத்தால் சாயம் பூசப்பட்ட இரு ஆடைகளை அணிந்த நிலையில் ஒருவரை கண்ட நபி ஸல் அவர்கள்-இது இறைமறுப்பாளர் களின் ஆடைகள் இதை அணிய வேண்டாம் என்றார்கள்.

தாடியில்:

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)

முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்து-தாடிய வளருங்கள்,மீசையை கத்திரியுங்கள்.

 عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)

கப்பாப் ரலி அவர்களிடம் அபூமஃமர் ரஹ் அவர்கள்-ழுஹர் அஸர் தொழுகைகளில் நாயகம் கிராத் ஓதுவார்களா?என கேட்க-ஆம் என கப்பாப் ரலி அவர்கள் பதில் கூறியபோது-
நீங்கள் எப்படி அதை தெரிந்துகொண்டீர்கள்?என கேட்க-தாடியின் அசைவை வைத்து என கூறினார்கள்.

தலையிலும் தாடியிலும் மருதானி இடுவதில் மாற்றம்:

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ (بخاري)

யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் மாற்றம் செய்து சாயம் பூசுங்கள்.


عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ(والد ابي بكر)يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ(مسلم

மக்கா வெற்றியின் போது தன் தலையும்,தாடியும் நரைத்த நிலையில் அபூபக்கர் ரலி அவர்களின் தந்தை அபூகுஹாபா நாயகத்திடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வந்தபோது-இந்த நரையை மாற்றுங்கள்,கருப்பு சாயத்தை தவித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

முடியை அழகு படுத்துவதில் மாற்றம்:

وعنه رَضِيَ اللَّهُ عَنْهُ قال: رأى رَسُول اللَّهِ  صبياً قد حلق بعض رأسه وترك بعضه فنهاهم عن ذلك وقال: (احلقوه كله أو اتركوه كله) رَوَاهُ أبُو دَاوُدَ بإسناد صحيح على شرط البخاري ومسلم.

தலையில் பாதி முடியை நீக்கி மீதியை அப்படியே விட்ட நிலையில் ஒரு சிறுவனை கண்ட பெருமானார் ஸல் அவர்கள்-ஒன்று முழுமையாக முடியை மழித்துவிடுங்கள்,அல்லது முழுமையாக விட்டுவிடுங்கள் என்றார்கள் என்று கூறியதாக இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே மாற்றார்களுக்கு மாற்றம் செய்து மார்க்கத்தை பின்பற்றிநடப்போமாக.