Friday 27 September 2013



அல்ஹம்து லில்லாஹ்!  
சென்னை, பாலவாக்கத்தில் உஸ்மானிகள் பேரவை சார்பாக ஒருநாள் ஷரீஅத் மாநாடு கடந்த 22.09.13 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தந்த ஆலிம் பெருந்தகைகளுக்கு நினைவுப்பரிசும்,அம்மாநாட்டில் வெளியிடப்பட்ட மிம்பரில் பூத்த மலர்கள் நூலும் வழங்கி 
கெளரவிக்கப்பட்டது











Thursday 26 September 2013

கண்ணியமிக்க கஃபா



إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

மனிதர்களுக்காக உலகில் அமைக்கப்பட்ட முதல் இல்லம் பக்காவாகும்.

கஃபதுல்லாஹ்வின் இன்னொரு பெயர் பக்கா.அந்த நகரத்தின் பெயர் மக்கா.
கஃபா எனும் வார்த்தை திருக்குர்ஆனில் இரு இடங்களில் இடம் பெறுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقْتُلُواْ الصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ وَمَن قَتَلَهُ مِنكُم مُّتَعَمِّدًا فَجَزَاء مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَو عَدْلُ ذَلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللّهُ عَمَّا سَلَف وَمَنْ عَادَ فَيَنتَقِمُ اللّهُ مِنْهُ وَاللّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ  [2] (سورة المائدة، الآية 95).
 جَعَلَ اللّهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ قِيَامًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْيَ وَالْقَلاَئِدَ (سورة المائدة، الآية 97).

இதை தவிர கஃபாவுக்கு திருக்குர்ஆன் பலசிறப்பு பெயர்களை கூறுகிறது. பைத்துல் அதீக், அவ்வல பைத் மஸ்ஜித் ஹராம் போன்ற பல சிறப்பு பெயர்களை கூறுகிறது

அல்லாஹுத்தஆலா அந்த கஃபாவை பூமியின் மையப்பகுதியில் அமைத்திருப்  பதாக ஹதீஸில் வருகிறது.
கஃபா கட்டப்பட்ட வரலாறு
கஃபா 6 தடவை கட்டப்பட்டுள்ளது
1.ஆதம் அலை அவர்கள் படைக்கப்படும் முன் அல்லாஹ் அவனது வானவர்க ளின் கரத்தால் கட்டவைத்தான்.
2. ஹழ்ரத் ஆதம் அலை அவர்கள் கட்டினார்கள்
3.நபி இப்ராஹீம் அலை,இஸ்மாஈல்லை அவர்கள் கட்டினார்கள்.
இந்த நிகழ்வு குறித்து அல்குர்ஆன் கூறுகிறது.
4.நபி ஸல் அவர்களின் இளமைப்பருவத்தில் மக்கா காபிர்கள் கட்டினார்கள்.  இந்த நிகழ்வின்போது நபி ஸல் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை எடுத்து அந்த கஃபாவில் பதித்தார்கள்.
குறைஷியர் காபாவைக் கட்டியது.நபித்துவ வாழ்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனித காபாவைக் குறைஷியர்கள் புதுப்பித்துக் கட்டுவதற்கு ஏகமனதாக முன் வந்தனர். இதன் காரணம்: காபா நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்து மேல் முகடு இல்லாமல் ஒன்பது முழங்கள் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. காபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. இந்நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. காபாவின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக குரைஷியர் அதைப் புதுப்பிக்கும் நிலைக்கு ஆளாயினர்.

குறைஷிக் குலத்தாரே! காபாவின் கட்டுமானப் பணிக்காக உங்கள் வருமானத்தில் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஈடுபடுத்தாதீர்கள். விபச்சாரத்தின் வருமானமோ, வட்டிப் பணமோ, மக்கள் எவரிடமிருந்தாவது அக்கிரமமாகப் பெறப்பட்ட பொருளோ சேரக்கூடாதுஎன்று சொல்லிக்கொண்டு, குறைஷியர் ஒவ்வொரு குலத்தாரும் தங்களுக்கிடையே அந்தப் பணியைப் பிரித்துக் கொண்டனர்.இறுதியாக அப்பணியை செய்துமுடித்தனர்.
5.நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் ஹழ்ரத் அப்துல்லா இப்னு ஸுபைர் ரலி அவர்கள் கட்டினார்கள்.
குரைஷிகள் பணப்பற்றாக்குறையின் காரணத்தினால் ஹதீமை கஃபாவுடன் சேர்த்து கட்டாமல் விட்டுவிட்டனர்.ஹழ்ரத் இப்னு ஸுபைர் ரலி அவர்கள் அதை தங்களின் ஆட்சியில் சேர்த்து கட்டினார்கள்.
6.அவர்களுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் கட்டினார்.
அவர் தன் காலத்தில் மீண்டும் பழையபடியே ஹதீமை கஃபாவுடன் சேர்க்காமல் தனியாக விட்டு கட்டினார்.

அதற்குப்பின்னர் வாழ்ந்த புகஹாக்கள் இனி எந்த ஆட்சியாளரும் இந்த அமைப்பை மாற்றக்கூடாது என பத்வா வழங்கிவிட்டார்கள்.அன்றிலிருந்து இன்றுவரை அதே அமைப்பே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த இல்லத்தை அல்லாஹ்வின் இல்லம் என்று அல்லாஹ் கூறுகிறான்.  காரணம் அல்லாஹ்வின் அர்ஷிலிருந்து வெளிப்படும் நூர் நேரடியாக அந்த இல்லத்தில் இறங்குவதால் அவ்வாறு கூறப்படுகிறது.

நான்கு பொருட்களை மனிதன் எத்தனை தடவை  அதை பயன்படுத்தினா
லும் அவனது உள்ளத்தின் ஆசை தீராது என உலமாக்கள் கூறுகிறார்கள்.
முதலாவது:வானம்- அதன் நிறம்,அதில் தோன்றும் சூரியன் சந்திரன் நட்சத்தி  ரம் போன்றவைகளை எத்தனை தடவை பார்த்தாலும் ஆசை தீராது,மாத்திரம  ல்ல ஒவ்வொரு தடவை காணும்போதும் புதிய தோற்றம் தரும்.
2.தண்ணீர்.  ஆயுள் பூராவும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறோம் ஆனாலும் கடும் தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்கும் போது அதன் சுகமே தனிதான்.
மூன்றாவது:கஃபதுல்லாஹ்வை பார்ப்பது-எத்தனை தடவை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.மேலும் ஒவ்வொரு தடவையும் ஒரு புது தோற்றம் தரும்.
அல்லாஹ் மனிதனுக்கு பார்வையை வழங்கியதின் பயன் அந்த இல்லத்தை பார்க்கும் போதே பூர்த்தியாகிறது என ஒரு கவிஞன் கூறுகிறான்.
இந்த பூமியின் மையத்தில் புள்ளி வைக்கவேண்டுமானால் அது கஃபாவின் மீது வைக்கவேண்டும் என்று காரி தய்யிப் ரஹ் கூறுகிறார்கள்.
ஹரம் எல்லைகள் அமைக்கப்பட்ட வரலாறு
ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கஃபாவை கட்டிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ் ஒரு மேகத்தை அனுப்பினான். அந்த மேகம் அவர்களுக்கு நிழல் கொடுத்தது.
அப்போது அல்லாஹ் தஆலா-  இப்ராஹீமே! எந்த இடம் வரை இந்த மேகம் நிழல் கொடுக்கிறதோ அதுவே என் ஹரம் பூமியாகும் என கூறினான்.
அந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளை கண்ணியப்படுத்தவேண்டும்.இந்த இடங்களில் நபிமார்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.அதனால்தான் ஒவ்வொரு முஃமினின் உள்ளமும் அந்த இல்லத்தை நாடுகிறது.
அந்த புனித இடத்தில் நின்று இப்ராஹீம் அலை அவர்கள் ஹஜ்ஜுக்காக அழைப்பு கொடுத்தபோது அந்த சப்தத்தை அல்லாஹ் தஆலா அனைத்து ரூஹ்களுக்கும் கேட்கச்செய்தான்.எத்தனை தடவை பதில் சொன்னார்களோ அத்தனை தடவை ஹஜ் நஸீப் பெற்றார்கள்

கஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் மிகவும் உன்னதமானதும், உயர்வானதுமாகும். இதன் உயரம் 53 அடியாகும். கிழக்கில் 49 அடி நீளமும், வடக்கில் 31 அடி நீளமும், மேற்கில் 45 அடி நீளமும், தெற்கில் 31 அடி நீளமும் உள்ளது. தென்கிழக்கு மூலை "ருக்னுல் ஹிந்த்" என்றும்வடகிழக்கு மூலை "ருக்னுல் இராக்கி" என்றும்,வடமேற்கு மூலை "ருக்னுல் ஷாமி" என்றும்தென்மேற்கு மூலை "ருக்னுல் யமானி" என்றும் அழைக்கப்படுகிறது.கஃபாவின் தென்கிழக்கு மூலையில் (ருக்னுல் ஹிந்த்) வெள்ளி வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்" உள்ளது. -
رواه الترمذي وأحمد وغيرهما، "نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضاً من اللبن فسودته خطايا بني آدم
 "இது சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறக்கப்பட்டது என்றும், மனிதர்களின் பாவங்கள் அதனை கருப்பாக்கிவிட்டது" என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ருல் அஸ்வத்துக்கு அருகில் கஃபாவின் வாசல் உள்ளது. ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் கஃபாவின் வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி "முல்தஜிம்" ஆகும். கஃபத்துல்லாஹ "கிஸ்வா" என்னும் கருப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டுத்துணியில் திருக்குர்ஆன் வசனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் எழுதப்பட்டுள்ளன. ஓவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் பிறை 10 இல் புதிய போர்வை போர்த்தப்படுகிறது. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது. "மக்கா முகர்ரமாவின் மஸ்ஜிதுல் ஹராமில் (கஃபா அமைந்திருக்கும் பள்ளி) தொழுதால் 1 லட்சம் தொழுகையின் நன்மை கிடைக்கும் என்றும், அல்லாஹ்வின் 120 ரஹ்மத்துகள் தினமும் இவ்வீட்டின் மீது இறங்குகின்றன. 60 ரஹ்மத்துகள் ஃதவாபு செய்பவர்கள் மீதும், 40 ரஹ்மத்துகள் அங்கு தொழுபவர்கள் மீதும் இன்னும் 20 ரஹ்மத்துகள் கஃபாவை பார்ப்பவர்கள் மீதும் இறங்குகின்றன" என்று நபிகளார் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி  அவர்கள் அறிவிக்கிறார்கள்
கஃபா ஆண்டுக்கு மூன்று முறை திறக்கப்பட்டு ஸம்ஸமால் கழுகி சுத்தம் செய்யப்படும்
ஆண்டுக்கு ஒரு தடவை கஃபாவின் மீது ஏறி ஆடை போர்த்தப்படும்.
ஒரு படை காபாவின் மீது படையெடுக்கும், அப்படையை பூமி விழுங்கிவிடும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) காபாவை வன்முறையால் அழிக்கவருபவர்களை இறைவன் அழித்து விடுவான் என்பதை மேற்காணும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் காபாவை எவராலும் இடித்து அழித்துவிட முடியாதா? என்றால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை!

அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் காபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

”(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபாவை இடித்து அழிக்க வருபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று கூறும் இஸ்லாம், காபாவை வளைந்த, மெலிந்த கால்களையுடையர்கள் உடைத்து பாழ்படுத்தி விடுவார்கள் என்றும் கூறுகிறது. ஒரு காலகட்டம் வரை காபாவை எவராலும் அழிக்க முடியாது. ஒரு காலத்தில் காபாவை இடித்துப் பாழ்படுத்தி விடுவார்கள். முஸ்லிம்களாலும் அவர்களைத் தடுக்க இயலாமல் போகலாம். அப்போது காபாவை இடித்துப் பாழ்படுத்துபவர்களை இறைவனும் தடுக்கமாட்டான். (இது இறுதி நாளுக்கு நெருக்கமாக நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும், உம்ராவும் செய்யப்படும்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

யாஃஜூஜ், மாஃஜூஜ் கூட்டத்தாரின் வருகைக்குப் பிறகும் காபா ஆலயம் இருக்கும் என்பது நபியின் வாக்கு!


நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:
நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித makkaவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.
அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.
அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை makkaவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.
காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் யானை 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன், 105:001-005)









Thursday 19 September 2013

மாண்புமிகு மதீனா


ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளின் உள்ளம் இறையில்லமான கஃபா தரிசித்த பின்னர் இறைத்தூதர் கண்மணி முஹம்மத் ஸல் அவர்களின் புனித உடலை தாங்கி நிற்கும் மதீனாவையே நாடும்.

மதீனா மாநபியின் மாநகரம்.இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நெருக்கடி  கள் சூழ்ந்தபோது அரவணைத்த பூமி மதீனா பூமியாகும்.

இஸ்லாமிய ஆட்சிக்கான தலை நகரம்.இந்த ஊருக்கும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.
உண்மை நகரம் என்று மதீனாவை திருக்குர்ஆன் புகழாரம் சூட்டுகிறது.
மதீனாவுக்கு பல சிறப்பு பெயர்கள் உண்டு. 

அவைகளில் சில:
الْمَدِيْنَةُ ، وَطَيْبَةُ ، وَطَابَةُ ، وَالدِّرعُ الْحَصِيْنَة ، وَأَرْضُ الْهِجْرَة ، وَالدَّارُ ، وَدَارُ الإِيْمَان ، وَدَارُ الْهِجْرَة ، وَدَارُ السُّنَّة ، وَدَارُ السَّلاَمَة ، وَقُبَّةُ الإِسْلاَم .
இவைகளில் தாபா,தைபா போன்றதை நபி ஸல் அவர்கள் விரும்பினார்கள்.
أخرج مسلم في صحيحه من حديث جابر بن سمرة قال صلى الله عليه وسلم: «إن الله سمى المدينة طابة
அல்லாஹ் மதீனாவுக்கு தாபா (மணமிக்கது) என்று பெயர் சூட்டியுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும். இது தாபா!’ (நலம் மிக்கது!)என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த பூமியில் ஆரம்பமாக வசித்த யூதர்கள் அதற்கு யஸ்ரிப் என்று பெயர் வைத்தனர்.ஆனால் அந்த பெயரை அல்லாஹ்வும் ரஸூலும் விரும்பாமல் மதீனா என்றே அழைத்தனர்,
مَنْ سَمَّى الْمَدِينَةَ يَثْرِب ، فَلْيَسْتَغْفِرْ اللهَ عز وجل ، هِيَ طَابَةُ ، هِيَ طَابَة
மதீனாவை எஸ்ரிப் என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடட்டும்.அது தாபா என்றார்கள்.
أخرج البخاري ومسلم من حديث أبي هريرة قال صلى الله عليه وسلم: «أُمرت بقرية تأكل القرى يقولون لها يثرب، وهي المدينة
நகரங்களை மிகைத்துநிற்கும் ஊருக்கு குடிபோகச்சொல்லி அல்லாஹ் எனக்கு ஏவுகிறான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அதுதான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மதீனாவின் தனித்தன்மைகள்
1.நபி ஸல் அவர்கள் நேசித்த பூமி
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ فَأَبْصَرَ جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ (أَيْ أَسْرَعَ) وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا مِنْ حُبِّهَا .
நபி ஸல் அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள்.ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம்.
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدّ )).
யா அல்லாஹ்.மக்காவை நாங்கள் நேசிப்பது போல மதினாவை எங்களுக்கு நேசமாக்குவாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தார்கள்
2.குழப்பமான காலத்திலும் கியாமத் நெருக்கத்திலும் அடைக்கமாகுவதற்கு மதீனாவே சிறந்தது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “யமன் வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ஷாம்வெற்றி கொள்ளப்படும். உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, ‘தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?’ என சுப்யான்(ரலி) அறிவித்தார்

3.மதீனா நபி ஸல் அவர்களால் ஹறமாக்கப்பட்ட பூமி
كما أخرج البخاري مسلم من حديث علي بن أبي طالب قال النبي صلى الله عليه وسلم: «المدينة حرم ما بين عير إلى ثور، فمن أحدث فيها حدثًا أو آوى محدثًا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل الله منه يوم القيامة صرفًا ولا عدلاً
 ஆயிர் என்ற மலையிலிருந்து ஸவ்ர் மலை வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின்சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வின்.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை!என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4.தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்பட்ட பூமியாகும்
كما أخرج البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم: «على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال
மதீனாவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள்.அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), ‘நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்!என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்!என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். தஜ்ஜால் பற்றி நபி(ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
5.கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்
யிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர்(ரலி), பிலால்(ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூ பக்ர்(ரலி) தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, ‘மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால்(ரலி) காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, ‘இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘மஜின்னாஎனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரண்டு மலைகள் (அல்லது இரண்டு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா?’ என்ற கவிதையைக் கூறுவார்கள். மேலும், பிலால்(ரலி) இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக!என்று கூறுவார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை ஜுஹ்ஃபாஎனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்!என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) புத்ஹான்எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!

6. ஷபாஅத் பூமி

وَقَالَ صلى الله عليه وسلم : (( مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன்.
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :
( اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )
رواه البخاري (رقم/1890)
யா அல்லாஹ்.உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் ரலி அவர்கள் துஆ செய்தார்கள்.
وقد علق عليه الإمام النووي رحمه الله بقوله :
" يستحب طلب الموت في بلد شريف " انتهى.
" المجموع " (5/106)
சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி ரஹ் அவர்கள் கூறுவார்கள்
குறிப்பு:உஸ்மானிகள் பேரவை சார்பாக வரும் 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை சென்னை பாலவாக்கம் மஸ்ஜித் மஹ்மூதில் வைத்து ஷரீஅத் மாநாடு நடைபெற உள்ளது.தாங்கள் அவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு இதன்மூல  ம் கேட்டுக்கொள்கிறோம்.
மாநாடு பணிகள் காரணமாக ஜும்ஆ உரைகள் நிறைவாகவும் விரைவாகவும் தர முடியவில்லை.இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் முதல் அந்த குறையை சரி செய்யப்படும்,