Tuesday 18 December 2012

மாயர்களும் மறைக்கப்பட்ட கியாமத்தும்


21.12.2012 உலக அழிவிற்கு மாயர்கள் குறித்திருக்கும் நாள்.

மீடியாக்கள்,மற்றும் இணையதளங்கள் வழியே இச்செய்தி மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.அப்பாவி பொதுமக்களும்-
நடுத்தரவர்க்கத்தினரும் மட்டுமல்ல படித்தவர்களும் கூட இது உண்மையாக இருக்குமோ எனும் அச்சத்தில் இருக்கின்றனர்.

யார் இந்த மாயர்கள்?இவர்கள் எப்படி உலக அழிவை கணித்தனர்? இவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தனர்?எங்கு வசித்தனர்?போன்ற கேள்விகளைப்பற்றிய தேடலே இன்றய இணையதளங்களின் சூடான செய்தியாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன் எனும் இனத்தவர்களால் கணிக்கப்பட்ட காலண்டர் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவு பெறுகிறது.இதுவே பாமர மக்களின் அச்சத்திற்கு காரணமாகும்.

இதுகுறித்து தெளிவுபடுத்தவேண்டிய மதங்கள் வாய்திறக்க மறுக்கிறதுமாயர்களின் கணிப்பு தவறு என்று உரக்கச்சொல்ல கடமைப்பட்ட அறிவியல் உலகம்- மாயர்கள் வானவியலில் வல்லவர்கள்,கணிதத்தில் தேர்ச்சிபெற்றவர்கள்,கட்டிடக்கலையில் ஜாம்பவான்கள் என்று மாயர்களின் புகழ்பாடி மாயர்களின் மாயவலையில் மக்களை சிக்கவைக்கப்  பார்க்கின்றனர்.

உண்மையில் மாயர்கள் மந்திரத்தையும்,ஜோதிடத்தையும் பின்னனியாக கொண்டவர்கள்.இதே மாயர்கள் வாழ்ந்த பகுதியான தென்னமெரிக்காவில்தான் ஒருகாலத்தில் அதிகமாக நரபலிகள் அரங்கேறியது.சூரியன் தொடர்ந்து உதிக்கவேண்டுமானால் வீட்டுக்கு ஒருவரை நரபலி கொடுப்பது அவசியம் என நம்பிக்கைகொண்டு அதை செய்தும் வந்தனர்
   
அறிவியல் சரித்திரத்தில் இதுபோன்ற கோமாளித்தனத்தை செய்தவர்கள் எப்படி உலக ஆயுளை கணிக்க முடியும்?

பூமி இன்று அழியும் என்று சொன்ன மாயர்களால் அது எப்போது தோன்றியது?என்பதை கணிக்கமுடியவில்லை.அவர்கள் தயாரித்த காலண்டர் கி.மு 3113 ம் ஆண்டிலிருந்தே துவக்கமாகிறது.

இந்த உலகத்திற்கு அவர்கள் கணித்திருக்கும் ஆயுட்காலம் 5125 ஆண்டுகாலம்.

பூமியை சூரியன் சுற்றுகிறது என நம்பிக்கொண்டிருந்த காலத்தில்-கிரகங்கள்பற்றிய சரியான அறிவு இல்லாத காலத்தில்- வாழ்ந்த ஒரு கூட்டம் சொல்லிய மூடத்தனமான கருத்தை மில்லேனியத்தில் வாழும் மனிதர்கள் நம்புவது அறியாமையா?பலகீனமா?

இதை ஜோதிடம் என்று கூறுங்கள் விட்டுவிடலாம்.அறிவு தளத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு இதை பெரிதுபடுத்த வேண்டுமா?இதுவே இப்போது நம்முன் தோன்றும் கேள்வியாகும்.


முக்காலத்திற்கும் தீர்வு சொல்லும் இஸ்லாம் என்ன கூறுகிறது?

மாயர்களின் கருத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு விஷயத்தில் மட்டுமே ஒத்துவருகிறது.இந்த உலகத்திற்கு ஒருநாள் அழிவு உண்டு,அந்த ஒருநாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்பதை தவிர்த்து வேறு எதுவும் உண்மை இல்லை.

وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا

நிச்சயமாக கியாமத் வரும்,அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ولا تقوم الساعة إلا يوم الجمعة ) رواه مسلم

கியாமத் வெள்ளிக்கிழமைதான் வரும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கியாமத் விஷயத்தில் சில நிலைபாடுகள் உண்டு.

முதலாவது:கியாமத்தின் அழிவு குறித்து அல்குர்ஆன் அதிகமான இடங்களில் பேசுகிறது.

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

மலைகள் பெயர்க்கப்படும் போது-

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

வானம் அகற்றப்படும் போது-

கப்றுகள் திறக்கப்படும் போது,

இவை போன்று உலக அழிவுநாளில் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து ஏராளமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அழிவை சந்திக்கும் அந்த நாள் எது?என்பதை மட்டும் அல்லாஹ் தன் இரகசிய அறிவில் மறைத்து வைத்துள்ளான்.மரணிக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் இன்பம் இருக்காது எனும் நலன் கருதியே அல்லாஹ் மறைத்தான்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடம் 13 கேள்விகள் கேட்டுள்ளனர்.   அந்த 13 கேள்விகளையும் அதற்கான பதிலையும் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அதில் கியாமத் நாளைப்பற்றிய ஒரு கேள்வி உண்டு.

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّـهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடீரென அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.

உலகின் முடிவு நாள் குறித்து அல்லாஹ்வை தவிர வேறு யாரும் சொல்லிவிடமுடியாது.முடிவில்லாதவனால் மட்டும் தான் முடிவு பற்றி பேசமுடியும்.

இதில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

உலக அழிவுகள் வேறு,அதன் அடையாளங்கள் வேறு.இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

உலக அழிவின்போது இந்த உலகம் சந்திக்கும் ஆபத்துக்களை குறித்து குர்ஆன் தெளிவாக கூறுவது போன்று-அதன் முன் அடையாளங்களைப்பற்றி முழுமையாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு நாள் நபி ஸல் அவர்கள் காலை பஜ்ர் தொழுகை முடித்து தன் தோழர்களுக்கு-உலக அழிவு நாள் வரை இந்த உம்மத் சந்திக்கும் சோதனைகள் குறித்து அனைத்தையும் தெளிவுபடுத்தினார்கள்.  மஃரிப் வரை (சுமார் பத்துமணி நேரம்) பிரசங்கம் செய்ததாகவும்,   அதில் எதையும் விட்டுவிடவில்லை என்றும்,எங்களில் அறிவில் தேர்ச்சிபெற்றவர்கள் அதை மனனம் செய்து கொண்டனடனர் என  ஹழ்ரத் இர்பாத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

உலக அழிவின் முன் அடையாளங்கள் குறித்து இஸ்லாம் பேசிய அளவிற்கு வேறு எந்த மதமும் பேசவில்லை,அறிவியல் உலகமும் பேசவில்லை.

தனிமனித வாழ்வில்-குடும்பத்தில்-சமூகத்தில்-அரபுலகத்தில்-இஸ்லா  மிய உம்மத்தில்-இயற்கையில் நிகழும் மாற்றங்கள் பற்றி தீர்க்கதரிசனமாக இஸ்லாம் சொன்னதில் என்றைக்கும் பொய்த்துப்போனதில்லை.

இஸ்லாம் கியாமத்தின் அடையாளங்களை இரண்டாக பிரிக்கிறது.     1.சிறிய அடயாளங்கள்.2.பெரிய அடையாளங்கள்.

ஸஹீஹான ஹதீஸ் நூட்களிலிருந்து ஆய்வு செய்த முஹத்திஸீன் கள்-சுமார் 131 சிறிய அடையாளங்களை நபி ஸல் அவர்கள் முன் அறிவிப்புச்செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதில் நிகழ்ந்துவிட்டவை-தொடர்ந்து கொண்டிருப்பவை-இனிமேல் நடக்கவிருப்பவை என மூன்றுவகையாக பிரித்துள்ளனர்.

நடந்து முடிந்தவை:

நபி ஸல் அவர்கள் தங்களின் வருகையை கியாமத்தின் முதல் அடையாளமாக அறிவிக்கிறார்கள்.

عن أنس-رضي الله عنه- قال: قال رسول الله-صلى الله عليه وسلم- « بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى
مسلم

நபி ஸல் அவர்கள் தங்களின் ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்துவைத்து-நானும் கியாமத்தும் இப்படி அனுப்பப்பட்டிருக்கிறோ  ம் என கூறினார்கள்.

கியாமத்தின் அடையாளங்களுடன் இவ்வளவு நெருக்கமாக கூறப்பட்ட நாயகத்தின் வருகை ஏற்பட்டு 1400 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் ஆயளை கவனித்து பார்க்கும்போது கியாமத் நெருங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.ஏனெனில் உலகம் படைக்கப்பட்டு சுமார் லட்சக்கணக்காண ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர்

இவ்வாறே சந்திரன் பிளவும் கியாமத்தின் நெருக்கத்தின் அடையாளம் என அல்லாஹ் கூறுகிறான்.

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ

கியாமத் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.

ஆனால் அந்த நிகழ்வு ஏற்பட்டது நபி ஸல் அவர்களின் காலத்தில் தான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

عن ابن مسعود رضي الله عنه قال: ( انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين، فرقة فوق الجبل وفرقة دونه، فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا ) متفق عليه

நபி ஸல் அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து அதில் ஒரு பாகம் மலைக்கு மேல் பகுதியிலும்,மற்றொரு பாகம் மலைக்கு கீழும் விழுந்து,என் நுபுவ்வத்துக்கு நீங்கள் சாட்சியாயிருங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அரபுலகத்தின் செல்வச்செழிப்பு கியாமத்தின் அடையாளம்.

وفي رواية للإمام أحمد قال عليه الصلاة والسلام: "ورأيتَ أصحاب الشاء تطاولوا بالبنيان

ஆடு மேய்ப்பவர்களான அரபியர்கள் கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவதை நீங்கள் காண்பீர்கள்.

இதைச்சொன்ன காலத்தில் அரபுலகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் பசியும் பட்டினியும்தான்.

كما روى البيهقي عن عمر بن أسيد رحمه الله تعالى قال: "إنما ولي عمر بن عبد العزيز ثلاثين شهرا، ألا والله ما مات حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول: اجعلوا هذا حيث ترون في الفقراء؛ فما يبرح حتى يرجع بماله يتذكر من يضعه فيه فلا يجده، قد أغنى عمر الناس

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் ஆட்சி செய்தது முப்பது மாதங்கள் தான். ஆனால் அவர்கள் மரணிக்கிறபோது எங்களில் ஒவ்வொருவரும் மிகப்பெறும் செல்வத்துக்கு சொந்தக்கார்ர்களாக இருந்  தோம்.ஏழைகளே பார்க்க முடியாது.தர்மம் செய்ய பணத்துடன் வருபவர்கள் யாசகர்களை பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.அந்தளவு மக்களை செல்வந்தர்களாக மாற்றினார்கள்.என உமர் இப்னு உஸைத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அரபியர்களின் இன்றைய நிலை என்ன?

மக்கள் பொருளுக்கும் அருளுக்கும் அந்த பூமியைதான் நாடிச்செல்கின்றனர்.

காலில் செருப்பில்லாமல் நடந்த கூட்டம் இன்று பென்ஸ்கார்களில் பவனிவருகிறார்கள்.

உலகில் மிகவும் உயரமான கட்டிடம் எங்கே இருக்கிறது?இந்த கேள்வியின் விடையில் கியாமத் ஜொலிக்கிறது.

அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ இல்லை,அரபுநாடுகளில் தான் உள்ளது. உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.இதன் உயரம் 828 மீட்டர்.அதாவது இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ (KM). ஐந்தாண்டு காலமாக கட்டப்பட்ட இந்த கட்டிடம்- கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
இது ஆச்சரியமல்ல,உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று சவூதி களம் இறங்கியிருக்கிறது.உலகில் மிக உயரமான கட்டிடம் சவூதியில் உள்ள ஜித்தாவில் தயாராகி வருகிறது.நீ 828 மீட்டர் உயரத்தில் கட்டினால் நான் 1000 மீட்டர் உயரத்தில் கட்டுகிறேன்,6,330 கோடி செலவில் 63 மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கொஞ்சம் மேல் ஹதீஸை உற்றுநோக்கி கவனியுங்கள்.உயரமான கட்டிடங்களை கட்டுவார்கள் என்று சொல்லவில்லை,மாறாக அதில் போட்டிபோடுவார்கள்.அல்லாஹு அக்பர்.எங்கள் நாயத்தின் வார்த்தைகளில் எங்களுக்கு ஈமான் அதிகமாகிறது.

அதேநேரம் ஈராக் தேசத்தின் வறுமையும் கியாமத்தின் அடையாளம்:


روى مسلم في صحيحه بسنده :
( عن أبي نضرة رضي الله عنه قال : كنا عند جابر بن عبد الله رضي عنه فقال : يوشك أهل العراق ألا يجبى إليهم قفيز و لا درهم .
قلنا : من أين ذلك ؟ .
قال : العجم يمنعون ذلك

இராக் வாசிகளுக்கு பணமும் உணவும் தடுக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது-அதை யார் தடுப்பார்கள் என நாங்கள் கேட்க-அந்நியர்கள் அதை தடுப்பார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

1991 ம் ஆண்டு சாத்தானின் சதிகாரன் அமெரிக்காவால் இராக் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு,2003 ல் நாட்டையே சுடுகாடாக மாற்றிய காட்சியை நம் காலத்தில் கண்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

கொத்து கொத்தான திடீர் மரணங்கள் கியாமத்தின் அடையாளம்:

ثم موتان يأخذ فيكم كعقاص الغنم
البخاري

ஆடுகளை தாக்கும் நோயைபோல ஒரு நோய் உங்களை தாக்கி அதிக உயிர் சேதங்களை உண்டாக்கும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் பைத்துல்முகத்தஸ் வெற்றிக்கு பின்பு ஹிஜ்ரி 18 ல் சிரியாவில் பரவிய நோயால் கூட்டம் கூட்டமாக மரணித்துப்போனார்கள்.

அந்த நோயால் 25,000 முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகி இறந்துபோனார்  கள்.அந்த நோயினால் ஸஹாபிகளில் ஒரு ஜமாஅத் மவ்த்தானார்கள்.

அதில் ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் ரலி,அபூ உபைதா ரலி ,பழ்ல் இப்னு அப்பாஸ் ரலி போன்ற ஸஹாபாக்கள் அடக்கம்.

அதிகமான கொலைகள் நடைபெறுவது கியாமத்தின் அடையாளம்.

எந்தளவென்றால் கொலை செய்யப்பட்டவன் தான் ஏன் கொலைசெய்யப்படுகிறான் என்பதை அறிந்து கொள்ளமாட்டான்.

عنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ ، فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ ؟ قَالَ : الْهَرْجُ)
رواه مسلم


மக்கள் இப்படி ஒருநாளை சந்திக்கும் வரை கியாமத் வராது,அதில் கொலை செய்பவன் ஏன் கொலை செய்கிறான்,கொலை செய்யப்படுபவன் ஏன் கொல்லப்படுகிறான் என்பதை அரிந்துகொள்ளமாட்டான்.

அது எப்படி என ஸஹாபாக்கள் கேட்டபோது-ஹர்ஜ் அதிகமாகும் என பதில் கூறினார்கள்.

ويكثر الهرج.. قيل: وما الهرج ؟ قال : القتل " رواه أحمد والبخاري

ஹர்ஜ் என்றால் என்ன ஸஹாபாக்கள் கேட்க அதிகமான கொலை என பதில் கூறினார்கள்.

முதல் உலக போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:15 லட்சம்.
இரண்டாம் உலக போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:55 லட்சம்.
வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:3 லட்சம்.
ரஷ்யப்புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம்
ஸ்பெயின் புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சம்
இராக் ஈரான் வலைகுடாபோரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சம்:
இராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் பல லட்சம் மக்கள் மாண்டனர்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடையாளங்கள்:

وعن حذيفة -رضي الله عنه- قال : قال رسول الله -صلى الله عليه وسلم-: " من اقتراب الساعة اثنتان وسبعون خصلة : إذا رأيتم الناس أماتوا الصلاة، وأضاعوا الأمانة، وأكلوا الربا، واستحلوا الكذب، واستخفوا بالدماء، واشتغلوا بالبناء، وباعوا الدين بالدنيا، وتقطعت الأرحام، ويكون الحكم ضعفاً والكذب صدقاً والحرير لباساً، وظهر الجور، وكثر الطلاق، وموت الفجأة، وائتمن الخائن وخوَّن الأمين وصدق الكاذب وكذب الصادق، وكثر القذف، وكان المطر قيظاً والولد غيظاً، وفاض اللئام فيضاً وغاض الكرام غيضاً، وتشبه الرجال بالنساء والنساء بالرجال، وحلف بغير الله وشهد المرء من غير أن يستشهد، وسلم للمعرفة وتفقه لغير الدين، وطلبت الدنيا بعمل الآخرة، ويقل الأمر بالمعروف، وشربت الخمور، وعق الرجل أباه وبر صديقه وجفا أمه وأطاع امرأته.. الحديث " رواه أبو نعيم في الحلية

நபி ஸல் அவர்களின் இரகசிய தோழர் ஹுதைபா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.கியாமத்தின் நெருக்கத்தில் 72 விஷயங்கள் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மக்கள் தொழுகையை வீணாக்குவார்கள்,அமானிதத்தை வீணடிப்பார்கள்-வட்டியை சாப்பிடுவர்-பொய் பேசுவதை ஹலாலாக்குவர்-கொலை செய்வதை சாதாரணமாக கருதுவர்-கட்டிடங்கள் கட்டுவதில் அதிக ஈடுபாடு காட்டுவர்-துன்யாவுக்காக தீனை விற்றுவிடுவர்-உறவுக ளை துண்டித்துவாழ்வர்-நீதி பலகீனப்படும்-பொய் உண்மையாகும்-பட்டு, ஆடையாகும்-பாவம் பகிரங்கமாகும்-தலாக் அதிகமாகும்-திடீர் மரணம்-மோசடிக்காரன் நம்பிக்கயாளனாகவும்,நம்பிக்கையாளன் மோசடிக்காரனாகவும்,பொய்யன் உண்மையாளனாகவும் உண்மையாளன் பொய்யனாகவும் பார்க்கப்படுவான். –தொடர்...... 
 
சிரிய அடையாளங்களில் இனிமேல் நடக்க இருப்பவை:

(لا تقوم الساعة حتى لا يحج البيت)

கஃபாவை ஹஜ் செய்ய யாரும் வரமாட்டார்கள் இப்படியொரு காலம் வந்தால் அது கியாமத்தின் அடையாளமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

- ثم فتح بيت المقدس

பைத்துல் முகத்தஸின் இறுதி வெற்றியும் இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்தில் நடைபெறும் அடையாளமாகும்.
இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

கியாமத்தின் பெரிய அடையாளங்கள் 10:

روى الإمام مسلم رحمه الله من حديث حذيفة بن أسيد الغفاري رضي الله عنه أنه قال: اطلع النبي  علينا ونحن نتذاكر فقال: ((ما تذاكرون؟)) قالوا: نذكر الساعة، قال: ((إنها لن تقوم حتى تروا قبلها عشر آيات))، فذكر ((الدخان، والدجال، والدابة، وطلوع الشمس من مغربها، ونزول عيسى عليه السلام، ويأجوج ومأجوج، وثلاثة خسوف: خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف بجزيرة العرب، وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم

ஹழ்ரத் ஹுதைபா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்த நபி ஸல் அவர்கள்-எதைபற்றி பேசிக்கொள்கிறீர்கள்?என வினவினார்கள்-கியாமத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பதில் கூறியபோது  அதற்கு முன்பு 10 அடையாளங்களை காண்பீர்கள்.என்று கூறினார்கள்.
1.புகை மூட்டம்   2.தஜ்ஜாலின் வருகை   3. தாப்பத் எனும் மிருகம் வெளிப்படுவது   4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுதல்  5.ஈஸா அலை அவர்களின் வருகை  6.யஃஜூஜ் மஃஜூஜ் வருகை  7.8.9.மூன்று நில நடுக்கம் (கிழக்கில் மேற்கில்.அரேபிய தீபகற்பத்தில்) ஏற்படுதல்.  10. யமன் தேசத்திலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும்.

இறுதியாக இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் இந்த உலகம் அழியத்தான் போகிறது,அந்த நாள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் அறிவுக்கு மட்டுமே சொந்தம்.இந்த மனித சமுதாயத்திற்கு சவால்:

إِنَّ اللَّـهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.













19 comments:

  1. அருமை அருமை மிக அருமை ஹஜ்ரத்!

    ReplyDelete
    Replies
    1. அல்ஹம்து லில்லாஹ் .ஜஸாகல்லாஹு கைரன் கஸீரன்.

      Delete
  2. கட்டுரை நன்றாக உள்ளது. எனினும் மாயன் காலண்டர் குறித்து மாலை மலர், மாலை முரசு போன்ற நாலாந்தர பரபரப்பு பத்திரிக்கைகள் தான் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றதே தவிர தரமான தமிழ், ஆங்கில இதழ்களில் அதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் உஸ்மான் அவர்களுக்கு,தாங்கள் கூறிய தரமான இதழ்கள் உங்களை போன்ற சில ஆலிம்களுக்கு படிக்க வாய்க்கலாம்,பெரும்பான்மை சமூகம் அந்த எல்லையை இன்னும் தொடவில்லை என்பது என் அபிப்ராயம்.

      Delete
  3. payanulla kurippu maashaa allah.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு,தொடர்ந்து பயனுள்ள தகவல்கள் தருவதற்கு துஆ செய்யுங்கள்.

      Delete
  4. மாயன் காலண்டரின் மாயை மழுங்கடித்து விட்டீர்கள்! அருமையான பதிவு. அல்லாஹ் தங்களின் கல்விஞானத்தை அதிகப்படுத்துவானாக!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் துஆவுக்கு மிக்க நன்றி.ஆமீன்.

      Delete
  5. Replies
    1. ஜஸாகல்லாஹு கைரன் கஸீரன்.

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்ம., சங்கைக்குரிய சகோதரர் மவ்லானா அபூபக்கர் உஸ்மானி அவர்களுக்கு, பயனுள்ள ஒரு உரையை வழங்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் நேரம் ஒதுக்கி, தேவையான ஆதாரங்களுடன், உதாரணங்களுடனும் மாயன் என்ற மாயையை மறையோனின் வாக்கு மூலம் மறையச் செய்யும் தரமான உரையை வழங்க வேண்டி நீங்கள் உழைத்த உழைப்பு இன்ஷா அல்லாஹ் மக்கள் உள்ளத்தை சரியாக சென்று சேர வைப்பான் அல்லாஹுத்தஆலா.. பாரக்கல்லாஹ். அருமையான ஜுமுஆ உரை.உங்களுக்கு நன்றிகளும் துஆக்களும். அறியாமையினால் பலரும் அழிவு குறித்து பயப்படுகின்றனர் என்பதே உண்மை என்பது எனது கருத்து. அதை நீக்க, உங்கள் உரை இன்ஷா அல்லாஹ் பயன்படும். மஅஸ்ஸலாமா.. அன்புடன் அபுல் ஹஸன் ஜமாலி, ஈரோடு.

    ReplyDelete
    Replies
    1. வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...மரியாதைக்குரிய நண்பர் அபுல்ஹஸன் அவர்களுக்கு,வாராந்திரம் ஜும்ஆ உரையை தயார் செய்வதில் எடுக்கப்படும் முயற்சியில் விலைமதிப்பில்லா நேரம் கொடுக்கப்படுவது உண்மையே.ஒரு செய்தியை ஒரு தனிநபருக்கு கொண்டு சேர்ப்பதும் ஒரு மவ்லவிக்கு கொண்டு சேர்ப்பதையும் சமமாக நான் கருதவில்லை,ஏனெனில் ஒவ்வொரு ஆலிமும் ஒரு மீடியா.யார் சொன்னது முஸ்லிம்கள் மீடியாவில் பலம் குன்றியவர்கள் என்று.ஒவ்வொரு ஜும்ஆ மேடையும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதை விளங்கிக்கொள்வதிலும்,அதற்காக கொஞ்சம் மெனக்கெடுவதிலும்,அதை ஒருங்கிணைப்பதிலும் நாம் கொஞ்சம் காலம் கடந்து விட்டோம் எனும் பலகீனத்தை தவிர்த்து வேறுஒன்றுமில்லை. உங்களின் துஆவின் கபூலிய்யதில் என்னையும் தங்களையும் சேர்த்துவைப்பானாக ஆமீன்

      Delete
  7. Assalamu alaikum kalathirku yatra thalaipu alhamdu lillah.quran vasanatbirku aayath,athiyayam kuripittal mihavum nandraha irukkm jasakallah...

    ReplyDelete
  8. ASSALAMU ALAIKUM HAZRATH MIGA ARPUDHAMANA MUYARCHI ALHAMDHU LILLAH

    ReplyDelete
  9. assalamu alaikkum very good and important article ,,, pls keep it up jazakallah khair

    ReplyDelete