Tuesday 22 January 2013

நபியே! அல்லாஹ் உங்களை பாதுகாப்பான்.



அல்லாஹுத்தஆலா மனித சமுதாயத்திற்கு கோடானகோடி அருட்கொடைகளை வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் பொதுவாக திருக்குர்ஆன் கூறுகிகிறது,ஆனால் நபி ஸல் அவர்களை முஃமின்களுக்கு தூதராக வழங்கிய அருட்கொடையை குறித்து தனியாக பேசுகிறது.

لَقَدْ مَنَّ اللَّـهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல் குர்ஆன் 3:164)

உண்மையில் பூமான் நபியை இந்த உம்மத் பெற்றதைகாட்டிலும் ஒரு பெரும் சந்தோஷம் வேறுஎதுவும் இருக்க முடியாது என்பதை ஈமானிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அதனால் தான் அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட சொல்கிறான்
  
قُلْ بِفَضْلِ اللَّـهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

அல்லாஹ்வின் அருட்கொடையினைக்கொண்டும் அவனுடைய பெருங்கிருபையைக்கொண்டும்  அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.  (அல் குர்ஆன் 10:58 )

எந்த அருளை அல்லாஹ் வழங்கினாலும் அதைப்பற்றி புரிந்து கொள்வதும்,அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும்,அதை பாதுகாப்பதும் நம் மீது கடமையாகும்.

திருக்குர்ஆனை இறக்கியருளிய ரப்புல் ஆலமீன் அதை தானே பாதுகாக்கப்போவதாக வாக்களித்துள்ளான்,திருமறை பாதுகாக்கப்படுவதி  ன் பின்னனியில் நபி ஸல் அவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆம்!அல்குர்ஆனையும் அருமை நாயகத்தையும் எங்கேயும் பிரித்துப்பார்க்க முடியாது.இன்னும் சொல்வதால் திருமறைக்கு ஒளியாக நாயகமே அமைகிறார்கள்.அதனால் தான் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனை நூல் என்றும் அதை படிக்கும் ஒளி பெருமானார் எனவும் புகழ்ந்து கூறுகிறான்.

قَدْ جَاءَكُم مِّنَ اللَّـهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (அல் குர்ஆன் 5:15)

அல்லாஹ்வின் வஹி இருவகைப்படும்

ஒன்று:ஓதப்படுவது-மற்றொன்று பார்க்கப்படுவது.அதாவது அல்லாஹ்வின் வஹ்யை வார்த்தையாக திருக்குர்ஆனை பார்க்கலாம்,வாழ்க்கையாக அண்ணல் நபி ஸல் அவர்களை பார்க்கலாம்.

எனவே திருநபியை தவிர்த்துவிட்டு திருக்குர்ஆனையோ,அல்குர்ஆனை தவிர்த்துவிட்டு அருமை நாயகத்தையோ பார்க்கவே முடியாது.

குர்ஆன் பாதுகாக்கப்படும்வரை நாயகத்தின் வாழ்வும் பாதுகாக்கப்படும்.

பூமானின் பிறந்த பூமியும் பாதுகாக்கப்பட்டது.

நபி ஸல் அவர்கள் பிறந்த மண்ணான மக்கா மாநகரம் வரலாற்றில் எத்தைனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறது.யாராலும் அந்த பூமியை தீய எண்ணத்துடன் நெருங்கமுடியா அளவுக்கு அதை அல்லாஹ் பாதுகாத்து வருகிறான்.

வரலாற்றில் ஒருநாள்:

கராமிதாக்கள் என்ற பயங்கரவாத கும்பல் மஸ்ஜித் ஹராமில் நுழைந்து பல முஸ்லிம்களை கொன்றுகுவித்து, கஃபாவின் திரைகளை கிழித்து, அதன் சுவர்களை இடித்து தள்ளி கஃபா உள்ளே நுழந்த அந்த வெறிப்பிடித்த கூட்டம்-

எங்கே அபாபீல் பறவை?

 எங்கே யானைப்படையை அழித்த கற்கள்?   என்று ஓலமிட்டதுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இருபது ஆண்டுகாலம் ஹஜ்ருல் அஸ்வத் இல்லாத கஃபாவை இஸ்லாமிய சமூகம் பார்த்தது.

அதுவே முடிவில்லையே!

அல்லாஹ் வரலாற்றை மாற்றினான்,மீண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் பெற்று அக்கல்லை மீட்டனர்.

நபி ஸல் அவர்களின் பிறந்த அந்த பூமியை அவன் வாக்களித்தது போலவே பாதுகாத்தான்.இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை பாதுகாப்பான்.

இறுதிநாளில் தஜ்ஜால் மக்கா உள்ளே நுழையாமல் மலக்குகளை அல்லாஹ் பாதுகாப்பிற்கு நிறுத்துவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

பூமானின் புனித உடலை சுமந்து நிற்கும் மதீனாவையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

மக்காவைப்போலவே மதீனாவும் பல்வேறு தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தது.

உச்சகட்டமாக- மஸ்ஜித் நபவியில் மூன்று தினங்கள் பாங்கு சொல்லப்படவில்லை.

தீய எண்ணத்துடன் மதீனாவில் நுழைந்தவர்களை  மதீனாவே வெளியேற்றி விடும் என பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நாயகம் ஸல் அவர்களின் உடலையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

வரலாற்றில் ஒரு நாள்:

بل وحتى بعد موته -صلى الله عليه وسلم-، أراد بعض الحاقدين أن ينالوا من عرضه وشخصه، وقام عدد من المفترين والمستشرقين بمحاولة تشويه سنته، بل هم بعض الصليبيين أن يعتدوا على جسده عدة مرات، ومن أشهر هذه الحوادث، ما تواتر عند المؤرخين والمحدثين في أحداث عام 557هـ، فبعد ضعف الدولة العباسية، وغزو النصارى، وتعدد الدول الإسلامية وتفككها، كحال الأمة اليوم، قام النصارى بإرسال رجلين خبيثين إلى المدينة المنورة، في زي أهل المغرب، ونزلا في دار قرب الحجرة الشريفة، وأظهرا التقوى والصلاح، والإنفاق على الفقراء والمساكين، وزيارة البقيع والقبر النبوي، حتى أمنهما الناس، بدءا يحفران سردابًا من الأسفل إلى الحجرة النبوية، وينقلان التراب، قليلاً قليلاً، في محافظ من جلد، ثم يلقيانه في مقابر البقيع، واستمرا على هذه الحالة فترة طويلة حتى اقتربا من القبر الشريف وأصبحا يفكران في نقل الجسد الشريف الطاهر, وهناك في الشام، يرى السلطان العادل والملك الصالح نور الدين محمود زنكي، يرى النبي -صلى الله عليه وسلم- في المنام، وهو يشير إلى رجلين أشقرين ويقول: أنجدني يا محمود، أنقذني من هذين، فاستيقظ فزعًا منزعجًا، ثم توضأ وصلى ونام، فرأى نفس الرؤيا،فلما استيقظ في الثالثة دعا وزيره الصالح جمال الدين الموصلي، وحدثه بما رأى، فقال: هذا أمر حدث بالمدينة المنورة، وما قعودك؟، اخرج فورًا إلى المدينة النبوية، واكتم ما رأيت، خرج السلطان في عشرين نفر من رجاله، ووصل المدينة ومعه مال كثير، فدخل المسجد النبوي الشريف، وصلى بالروضة الشريفة وسلم على النبي -صلى الله عليه وسلم-،وصاحبيه -رضي الله عنهما-، ثم جلس لا يدري ماذا يصنع؟ فقال له الوزير: أتعرف الشخصين إذا رأيتهما؟ قال: نعم, قال الوزير للناس: إن السلطان قد أحضر معه أموالاً كثيرة فليحضر الجميع ليأخذ نصيبه، وكان السلطان يتأمل الناس، فلم ير الرجلين، فقال: هل بقي أحد؟ قالوا: لا، فقال: تفكروا وتأملوا: فقالوا: لم يبق أحد إلا رجلان مغربيان من الصالحين، لا يأخذان من أحد شيئًا، ففرح في نفسه وقال: عليّ بهما فورًا، فلما أحضرا له فإذا هما الرجلان اللذان أشار النبي -صلى الله عليه وسلم- إليهما في نومه، فقال: من أين أنتما؟ فقالا: من بلاد المغرب جئنا حاجين فاخترنا المجاورة في هذا العام عند رسول الله -صلى الله عليه وسلم-، وشدد عليها فأصرا على قولهما، فقال: أين منزلهما؟ فأخبر بأنهما في رباط قرب الحجرة الشريفة، دخل المنزل فرأى فيه مالاً كثيرًا، ومصحفين، وكتابًا فوق الأرفف، ثم بدأ يطوف ويتجول في البيت، حتى ألهمه الله سبحانه فرفع حصيرًا في البيت، فإذا بلوح من الخشب فرفعه فرأى سردابًا محفورًا باتجاه الحجرة الشريفة، مخترقًا جدار المسجد، فارتاع الناس لذلك، فجيء بالرجلين فاعترفا أنهما نصرانيان بعثهما النصارى في زي حجاج مغاربة، وأعطوهما أموالاً كثيرة وعظيمة لسرقة الجسد الشريف، ونقله إلى بلادهم، عند ذلك بكى السلطان نور الدين بكاءًا شديدًا، ثم أمر بعد ذلك بضرب عنقهما فقتلا تحت الشباك بجوار الحجرة النبوية الشريفة، ثم أمر السلطان بإحضار رصاص عظيم، وأمر بحفر خندق عظيم حول الحجرة الشريفة كلها ثم أذاب الرصاص وملأ به هذا الخندق حماية للقبر الشريف.. رحمك الله يا محمود.

نزهة الناظرين في تاريخ مسجد سيد الأولين والآخرين

الحجرات الطاهرات بيت النبوة
عبد الرحيم محمود الخولي

ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது.

அப்போது கிருஸ்துவர்கள்- மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.

அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர்.   இவர்கள்  இறையச்சமுடையவராகவும்,சீர்திருத்தவாதிகளாகவும்,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன்,தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும்   பெருமானார் ஸல் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர்.

அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர்.

இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர்.இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர்,இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக  நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல் அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர்இது ஒரு புறமிருக்க-

மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கி ரஹ் அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல் அவர்களை கண்டார்கள்.

அதில் நபி ஸல் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக்காட்டி இவர்களிட
மிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்-
  
ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கனவை பற்றி கூறினார்கள்.

அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே!   மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.

இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர்,உமர் ரலி ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது?
எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது?

எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம்,கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா?என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.

உடனே, அரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார்.

மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை.

வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்கமக்கள் இல்லை என்று கூறினர்.

நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை.அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள்
.என்றபோது,அரசர் சந்தோஷப்பட்டார்.

உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார்.
அவ்விருவரும் வந்தபோது நபி ஸல் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான்.

நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?அரசர் கேட்டார்.

நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம்,பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.

இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது?என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர்,வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள்,இரண்டு குர்ஆன்,நிறையநூட்கள் இருந்தன.

அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது,அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது.அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
   
காரணம், பலகைக்கு கீழே நபி ஸல் அவர்களின் அறையின் பக்கமாக
ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர்.பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-

தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர்.

அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள்.

பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.

      பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர்.

அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ் அவர்களின் மண்ணரை
யை வெளிச்சமாக்கிவைப்பானாக,

நபி ஸல் அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் அவர்களை எதிர்த்த எதிரிகள் நாயகத்தை தவறான எண்ணத்துடன் நெருங்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான்.

وَاللَّـهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ

அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்   என்று அல்லாஹ் நபிக்கு வாக்களித்துள்ளான். (அல் குர்ஆன் 5:67)



كما روى ابن عباس رضي الله عنهما قال: "لما نزلت تبت يدا أبي لهب جاءت امرأة أبي لهب إلى النبي صلى الله عليه وسلم ومعه أبو بكر، فلما رآها أبو بكر قال: يا رسول الله، إنها امرأة بذيئة وأخاف أن تؤذيك فلو قمت، قال: إنها لن تراني، فجاءت فقالت: يا أبا بكر، إن صاحبك هجاني، قال: لا وما يقول الشعر قالت: أنت عندي مصدق، وانصرفت، فقلت: يا رسول الله، لم ترك؟ قال: لا، لم يزل ملك يسترني عنها بجناحه" رواه أبو يعلى وصححه ابن حبان

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்த அபூலஹபின் மனைவி  நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளைப் பார்த்த அபூபக்கர் ரலி அவர்கள்-அல்லாஹ்வின் தூதரே!தீயவள் வருகிறாள்,அவள் தங்களை வேதனை செய்துவிடுவாளோ என நான் அஞ்சுகிறேன்,எனவே நீங்கள் எழுந்து சென்றுவிடுங்கள் என்றார்.

அப்போது நபி ஸல் அவர்கள் –அவள் தன்னை பார்க்கமாட்டாள் என கூறினார்கள்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை.

அவள் அபூபக்ரிடம் வந்து அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்
என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாதுஎன்று கூறினார்கள். ஆம்!
 நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பின்னர் அபூபக்கர் ரலி அவர்கள் பெருமானாரிடம்-அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அவள் தங்களை பார்க்கவில்லையா?
என ஆச்சரியமாக கேட்க ,ஆம்! ஒரு வானவர் தன் இறக்கையால் என்னை மறைத்து  விட்டார் என்று பதில் கூறினார்கள்.



كان رأس الكفر أبو جهل أكثر الناس عداوة للنبي عليه الصلاة والسلام، وحاول قتله غير مرة، فحال الله تعالى بينه وبين نيته الخبيثة، وذات مرة قال أبو جَهْلٍ: "هل يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بين أَظْهُرِكُمْ؟ فَقِيلَ: نعم، فقال: وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذلك لَأَطَأَنَّ على رَقَبَتِهِ أو لَأُعَفِّرَنَّ وَجْهَهُ في التُّرَابِ قال فَأَتَى رَسُولَ الله صلى الله عليه وسلم وهو يُصَلِّي زَعَمَ لِيَطَأَ على رَقَبَتِهِ، قال: فما فَجِئَهُمْ منه إلا وهو يَنْكُصُ على عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ، فَقِيلَ له: مالك؟ فقال: إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا من نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً، فقال رسول الله صلى الله عليه وسلم: "لو دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا" رواه مسلم من حديث أبي هريرة رضي الله عنه.

ஒரு சமயத்தில் மடமையின் தந்தை அபூ ஜஹ்ல் கஃபாவினுள் நுழைந்தான் அங்கே கூடியிருந்த மக்களிடம் அபூ ஜஹ்ல் இவ்வாறு கேட்டான்

உங்கள் முன்னால் வைத்து முஹம்மத் அவருடைய முகத்தை இங்கே.இந்த மண்ணில் வைக்கிறாரா?''அந்த மக்கள் '' ஆம்'' என்று சொன்னார்கள்

அபூஜஹ்ல் கடுப்பாகி இவ்வாறு சொன்னான் ''லாத்தும் உஸ்ஸாவும் மட்டும்தான் உண்மையான கடவுள்கள் முஹம்மத் அப்படிச் செய்வதை நான் கண்டால் அவருடைய பிடரியில் மிதிப்பேன் அவருடைய முகத்தில் மண்ணைப் பூசுவேண்.

பெருமானார் ஸல் அவர்கள் கஃபாவில் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களை தாக்கும் எண்ணத்துடன் நெருங்கிவந்தான்.

மிகவேகமாக வந்தவன் யாரும் எதிர்பாராத விதத்தில் திடுக்கிட்டவனாக தன் கையா
ல் எதையோ தடுத்தவனாக
 பின்னோக்கி ஓடினான்.

உமக்கு என்ன நேர்ந்தது?என மக்கள் கேட்டபோது-
எனக்கும் முஹம்மதுக்கும் இடையில் ஒரு பெரிய தீக் குண்டம் இருப்பதை நான் காண்கிறேன்.திடுக்கமும் நிறைய இறக்கைகளும் இருக்கக் காண்கிறேன் என்றான்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அவன் என்னை நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனை பிடித்து கொன்றிருப்பார்கள் என கூறினார்கள்.

ஏகத்துவத்தை எடுத்துச்சொன்னக்காலத்தில் ஏந்தல் நபிக்கு யூதர்கள்,கிருஸ்துவர்கள்,நயவஞ்சகர்கள்,இறைமறுப்பாளர்கள் என்று எத்தனையோ எதிரிகள் இருந்தனர்.பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர்.

   அவையனைத்து சோதனைகளிலிருந்தும் அல்லாஹ் அவர்களையும் அவர்களின் புகழையும் பாதுகாத்தான்,இன்றும் பாதுகாக்கிறான்.

எந்த ஐரோப்பிய உலகிலிருந்து நாயகத்தப்பற்றிய விமர்சனங்கள் வருகிறதோ அதே பூமியில் அவரின் புகழும் பாதுகாக்கப்படுகிறது.

எதிரிகளின் களத்தில் தனக்கான சாதகத்தை உருவாக்கிக்கொள்வது அண்ணலாரின் தனிச்சிறப்பாகும்.

يقول مايكل هارت في كتابه الخالدون المائة: "لقد اخترت محمدًا  في أوّل هذه القائمة ـ بعد أن ذكر مائة رجل ـ لأنه هو الإنسان الوحيد في التاريخ الذي نجح نجاحًا مطلقًا على المستوى الديني والدنيوي
، دعا إلى الإسلام وأصبح قائدًا سياسيًا وعسكريًا ودينيًا

உலகில் நூறு தலைவகளை பொறுக்கியெடுத்து அதில் முதல் இடத்தை கண்மணி முஹம்மத் ஸல் அவர்களுக்கு வழங்கிய மைக்கேல் ஹார்ட் நாயகம் குறித்து இப்படிச்சொன்னார்.
முஹம்மத் வரலாற்றில் தனித்து விளங்குகிறார்,உலகம் சமயம் என அனைத்து துறைகளிலும் அவர் மகத்தான வெற்றிவாகை சூடினார்.
இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்த அவர்-அரசியல்,இராணுவம்,   சமயம் என அனைத்திற்கும் தன்னை வழிகாட்டியாக நிலைநிறுத்தினார்


". ويقول الأديب العالمي تُولُسْتْوِي: "يكفي محمدًا فخرًا أنه خلص أمة ذليلة دموية من مخالب شياطين العادات الذميمة، وفتح على وجوههم طريق الرقي والتقدم، وإن شريعة محمد ستسود العالم لانسجامها مع العقل والحكمة

உலகில் மிகச்சிறந்த எழுத்தாளரான டால்ஸ்டாய் பெருமானாரைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
அநாகரீகமான,மற்றும் ஷைத்தானிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருந்த அந்த மக்களை மகத்தான சமுதாயமாக மாற்றியதே அவரின் பெருமைக்கு போதுமானது.
அவரின் அறிவையும்,ஞான கருத்துக்களையும் பார்க்கும் போது அவரின் மார்க்கம் ஒருநாள் உலகத்திற்கு தலைமை ஏற்கும்.


ويقول الإنجليزي توماس كارليل الحائز على جائزة نوبل في كتابه الأبطال: "لقد أصبح من أكبر العار على أي فرد متحدث في هذا العصر أن يُصغي إلى ما يُقال من أن دينَ الإسلام كذب، وأن محمدا خداع مزور، وقد رأيناه طول حياته راسخَ المبدأ، صادق العزم، كريمًا برًا رؤوفًا، تقيًا فاضلاً حرًا، رجلاً شديد الجد مخلصًا

நோபல் பரிசு பெற்ற மிகச்சிறந்த சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் வள்ளல் நபியை பற்றி இப்படி வார்த்தையால் வடிக்கிறார்.

இஸ்லாம் பொய்யானது,முஹம்மத் ஒரு மோசடிக்காரர் என்று ஒரு பெரிய பொய் மக்களுக்கு பரப்படுகிறது,ஆனால் உண்மையில் முஹம்மத் நபியின் வாழ்க்கை உண்மை நிறைந்தது.இறக்க குணமும் பரிசுத்த தன்மையும் கண்ணியமும் நிறைந்தது.என்றார்.

பூமானே! எங்கள் உயிரில் கலந்த சீமானே!

மாற்றான் தோட்டத்திலும் உங்கள் மணம் கமழுகிறது.

என் வார்த்தையால் உம்மை புகழ நினைத்தேன்,அந்த அருகதை என் வார்த்தைக்கு இல்லை எனவே உம்மை புகழ்ந்து என் வார்த்தைக்கு புகழ் சேர்த்துக்கொண்டேன் என்றார் ஒரு கவிஞர்.

அத்தஹிய்யாத்தை தவிர வேறு எப்போதும் நீங்கள் لا (இல்லை) என்று சொன்னதில்லையாமே என்றார் ஒரு கவிஞர்.

உம்மை புகழ்ந்து எழுதி பேனாவின் மை தீர்ந்தது,பக்கங்கள் முடிந்தது,   என் ஆயுளும் கரைந்தது,ஆனால் உங்களின் புகழ் முற்றுப்பெறவில்லை என ஒரு கவிஞர் கூறினார்.

உங்களை என்னால் புகழத்தான் முடியும் என்று நினைத்தேன்.

மன்னித்துவிடுங்கள்.

புகழே!உம்மை புகழ்வதெப்படி? என்று நீங்களே சொல்லிக்கொடுங்கள்.

9 comments:

  1. Nabiyin paathukaappai, paathukaappu unarvodu ezhuthiya ungalai Allah ella nilaiyilum paathukaappaanaaha.. Eerulahilum uyarntha idathai thandhu arul purivaanaaha..

    ReplyDelete
    Replies
    1. ஜஸாகல்லஹு ஹைரன் கஸீரன்.தங்களின் துஆவில் தங்களையும் அல்லாஹ் இணைத்துவைப்பானாக!ஆமீன்

      Delete
  2. ஜஸாகல்லஹு ஹைரன் கஸீரன்

    ReplyDelete