Tuesday 27 November 2012

பாபர் மஸ்ஜித் முதல் பலஸ்தீனம் வரை



ஒரு வாரகாலமாக காஸாவின் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய மூர்க்கமான தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 162 பலஸ்தீனர்கள் கொல்லபட்டுள்ளனர். 1200 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளும், பெண்களும் என்று பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கிறது.

எகிப்து ஜனாதிபதி முர்ஷி துருக்கி ,மற்றும் கட்டார் துணையுடன் முன்னெடுத்த யுத்த நிறுத்த நடவடிக்கை தற்போதைக்கு வெற்றி பெற்றுள்ளது

இந்த யுத்தத்தில் காஸா மக்களுக்கு ஆயுத ரீதியிலும் பொருளாதார ரீதிலும்  பங்களிப்பை செய்த ஈரானுக்கு ஹமாஸ் அரசியல் பொறுப்பாளர் காலித் மிஷால்  தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அசுரத்தனமான  தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளில்  எகிப்துதுருக்கி,கத்தார் ஆகிய மூன்று  நாடுகள் ஒன்றிணைந்து எடுத்த உறுதியான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பேணிவரும் துருக்கி தற்போது இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் கடுமையை கடைபிடித்து வருகிறது.    துருக்கி இஸ்தான்புலில் இடம்பெற்ற ஐரோப்பிய இஸ்லாமிய கவுன்சில் மாநாட்டில் உரையாற்றிய துருக்கி பிரதமர் அர்துக்கான், இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’, ‘யார் பயங்கரவாதத்துடன் இஸ்லாத்தை தொடர்புபடுத்துகிறார்களோ அவர்கள் பெருந்தொகையான முஸ்லிம்ககள் கொல்லப்படும் போது தங்கள் கண்களை மூடிகொள்கிறார்கள். அவர்கள் காஸாவில் சிறுவர்கள் படுகொலை செய்யப்படும்போது தங்கள் தலையை மறுபக்கம் திருப்பிக்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இஸ்லாத்தின் கடந்த கால முகவரி.எதிர்கால நிலைப்பாடு.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள பலஸ்தீனம் தான் எதிர்காலத்தில் உலகத்தின் போங்கையே தீர்மாணிக்கப்போகிறது.

யூதர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய பயம் எப்போதெல்லாம் தொற்றிக்கொள்ளுமோ  அப்போதெல்லாம் இப்படி ஒரு போரை அரங்கேற்றுவது அவர்களின் வாடிக்கையாகும்.

قال عنها مؤسِّس دولة إسرائيل (ابن جوريون): "نحن لا نخشى الاشتراكيَّات ولا القوميَّات ولا الملكيَّات في العالم، وإنما نخشى الإسلام، هذا المارد الذي نام طويلاً، وبدأ يَتَمَلْمَل في المنطقة.. إنني أخشى أن يظهر محمدٌ من جديد في المنطقة"!
நாங்கள் உலகில் சோஷலிசத்தையோ.தேசியவாதத்தையோ.மன்னராட்சியையோ பயப்படமாட்டோம்.ஆனால் இஸ்லாம் என்றால் எங்களுக்கு பயம்.இந்த பூமியில் முஹம்மத் மீண்டும் எழுச்சிபெற்று விடுவாரோ என்று நாங்கள் பயப்படுகிறோம்.இதைச்சொன்னவன் சாதாரண யூதன் அல்ல.ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த டேவிட் பென் குரியன் என்பவன்.

யூதர்களின் பயமே இஸ்லாத்தின் பலம்!

பலஸ்தீன மக்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தொடர்ந்து அநீதம் இழக்கப்படும் சமுதாயமாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகில் இரண்டு பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது.1.தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப்பிரச்சனை.2.பலஸ்தீன மக்களின் சுதந்திரப்பிரச்சனை.இதில் தென்னாப்பிரிக்காவின் பிரச்சனை 1994 ல் முடிவுக்கு வந்தது.ஆனால் 1940 ல் தொடங்கிய பலஸ்தீன் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.

காஸாவின் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்புக்களை பலஸ்தீன முஜாஹிதீன்கள் சந்தித்திருந்தாலும் இது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல,கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக போர்ப்படுக்கைகளில் புரள்பவர்கள் அவர்கள்.

எனவே போர் தொடக்கமும் போர் நிறுத்தமும் பலஸ்தீன் மக்களைப் பொருத்த வரையில் அன்றய செய்திகளில் ஒன்று அவ்வளவே.
ஆனால் இந்த தடவை எகிப்து, பலஸ்தீன் மக்களுக்காக மிகுந்த உற்சாகத்துடன் களம் இறங்கியது இஸ்லாமிய உலகை ஒருங்கிணைப்பதில் ஒரு மைல் கல்லாகும்.வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய கிலாபத்தை மறுசீரமைப்புச்செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது.

அரபுலகம் ஒன்றுபடுவதற்கான இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடக்கூடாது.

கடந்த காலங்களில் நாம் செய்த அதே வரலாற்றுத் தவறை இனியொரு தடவை செய்துவிடக்கூடாது,அப்படி மட்டும் நடந்தால் நிச்சயம் அது பலஸ்தீன மக்களின் வாழ்வில் நீங்கா துயரை ஏற்படுத்திவிடும்.

நமக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் நாம் இழந்தது போதும்.பாபர் மஸ்ஜித் முதல் பலஸ்தீனம் வரை பட்டியல் நீளம்.

கருத்துவேறுபாடுகளுக்கு நாம் நிறையவே காவு கொடுத்துள்ளோம்.
இப்போது நமக்கு முன்னால் இருக்கும் பிரச்சனை கருத்துவேறுபாடுகளை கடந்து நாம் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 
                
நபி ஸல் அவர்கள் அரேபிய தீபகற்பத்தில் ஒரு விஷயம் குறித்து அதிகமாக பயந்திருக்கிறார்கள்.அந்த ஒரு விஷயம் இணைவைப்பைபற்றியோ,வறுமையைபற்றியோ அல்ல!

فَوَ الله لَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخَشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كما بُسِطَتْ على من كان قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ" رواه الشيخان

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாகஉங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாக கொடுக்கப்பட்டு அவர்கள் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட்டு,அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.

இன்னொரு ஹதீஸில்

إني لست أخشى عليكم أن تشركوا بعدي، ولكن أخشى عليكم الدنيا؛ أن تنافسوا فيها، وتقتتلوا، فتهلكوا كما هلك من كان قبلكم
صحيح مسلم

எனக்கு பின்னால் நீங்கள் இணைவைத்துவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை.துன்யாவை தான் அஞ்சுகிறேன்,என்றார்கள்.

இணைவைப்பையும்,வறுமையையும் பயப்படாத நபி ஸல் அவர்கள் இந்த அரபுலகத்தின் மீது பிரிவினைவாதத்தை அதிகமாக பயந்திருக்கிறார்கள்.

முஸ்லீம்கள் ஒன்றுபடுவதில் தடையாக இருக்கும் ஒரே பிரச்சனை நமக்குள் எழும் கருத்துவேறுபாடுகளே.அதுவே முதலும் முடிவுமான பிரச்சனை.
என்ன செய்யலாம்?  கருத்துவேறுபாடுகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது  சாத்தியமில்லை.
மூக்கிருக்கும் வரை சலி இருக்கத்தான் செய்யும் என்பார்கள்.

அல்லாஹ்வின் படைப்பில் உருவ அமைப்பின் மாற்றங்களை நாம் ஜீரணித்து  கொண்டோம்.எத்தனை வகை முகங்கள்!எத்தனை வகையான நிறங்கள்! எத்தனை மொழி பேசுபவர்கள்!

அவ்வாரே மனிதர்களின் குண மாறுதல்களையும் நாம் புரிந்து கொண்டோம்.  ஆனால் சிந்திப்பதில் மட்டும் ஒரேமாதிரியான நிலை வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எல்லோருடைய சிந்தனை திறனும் ஒரேமாதிரி அமைய வேண்டுமென்றும், என் கருத்துக்கு இன்னொருவரின் கருத்து எந்தவகையிலும் மாறுபடக்கூடாது என்று கூறுவதும் அபத்தமானதாகும்.

ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரு சகோதரர்களுக்கிடையில் எத்தனை வேறுபாடுகள்?முகத்தால்,நிறத்தால்,அளவால்,குணத்தால்,சிந்தனையால் இருவரும் வேறு வேறு தன்மை கொண்டவர்கள்.

முஸ்லீம்களுக்கிடையில் எழுந்த கருத்துமோதல்கள் பிரிவுச்சட்டங்களின் பிரதிபலிப்புக்கள் தானே தவிர அடிப்படையான ஈமானிய,கொள்கைச்சார்ந்த விஷயமல்ல.எனவே கருத்துவேறுபாடுகளை கண்ணியமாக பார்க்க பழக வேண்டும்.நிச்சயமாக அது இன்னொரு முஸ்லிமின் உணர்வுக்கும்,சிந்தனைக்கும் கொடுக்கும் மரியாதையாகும்.

நபித்தோழர்களுக்கு மத்தியில் மலைபோல் எழுந்த நூற்றுக்கணக்கணக்கான கருத்துவேறுபாடுகள் உண்டு,ஆனால் அவைகள் அவர்களின் உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்தவில்லை.

ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களுக்கும் ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கும் நூற்றுக்கணக்கான மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடு உண்டு.

கனீமத்தாக கிடைக்கும் நிலத்தை என்ன செய்ய வேண்டும்?

முஸ்லீம்களுக்கு பங்கு வைத்துவிட வேண்டும் இது அபூபக்கர் ரலி நிலைப்பாடு.இல்லை, பைத்துல் மாலில் சேர்க்க வேண்டும். இது உமர் ரலி நிலைப்பாடு.
பைத்துல்மாலிலிருந்து ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். இது அபூபக்கர் ரலி அவர்களின் அபிப்ராயம்.இல்லை, தகுதிக்கு தக்கவாறு வழங்கப்பட வேண்டும். இது உமர் ரலி அவர்களின் அபிப்ராயம்.

، فقد روى البخاري (1400) ومسلم (20) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لا إِلَهَ إِلا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا (شاة صغيرة) كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَ

நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் ஒரு கூட்டம் ஜகாத்தை மறுத்தது. இவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

உமர் ரலி:=லாயிலாக இல்லல்லாஹ் என்று சொன்னவருடன் நான் போர் செய்ய மாட்டேன்,அவர் தன் பொருளுக்கும்,உயிருக்கும் பாதுகாப்பு பெற்றார்.  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,எனவே அவர்களின் கேள்விகணக்கு அல்லாஹ்விடம் இருக்கிறது.அவர்கள் விஷயத்தில் கொஞ்சம் மிருதுவான அனுகுமுறையை கடைபிடிக்கலாம்.

அபூபக்கர் ரலி:=அல்லாஹ்வின் மீது சத்தியமாக தொழுகையையும்,ஜகாதையும் பிரித்துபார்ப்பவனுடன் நான் போர் செய்வேன்.ஏனெனில் ஜகாத், பொருளின் ஹக்காகும். நபி ஸல் அவர்களின் காலத்தில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஜகாத் கொடுத்தவர் இப்போது அதை தர மறுத்தால் நான் அவருடன் சண்டையிடுவேன்.

இது போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சட்டப்பிரச்சனைகளில் கருத்து மாறுபட்டார்கள்,ஆனால் அது அவர்களின் ஒற்றுமையில்,உறவில் அனுவளவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ويقول عمر رضي الله عنه في أبي بكر حينما قال أحد الناس : أنت خير من أبي بكر، فأجهش عمر بالبكاء وقال : والله لليلة من أبي بكر، خير من عمر وآل عمر
رواه الحاكم والبيهقي في دلائل النبوة

ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒருவர்,நீங்கள் அபூபக்கர் ரலி அவர்களை விடச் சிறந்தவர் என்று ஒரு வார்த்தை கூறியபோது தேம்பி தேம்பி அழுதார்கள்.பின்பு சொன்னார்கள்.
அபூபக்கரின் ஒரு இரவு அமல் உமரை விடவும் உமரின் குடும்பத்தினர் செய்த அமலைவிடவும் சிறந்தது.

فالصديق يقول في عمر رضي الله عنه؛ حينما استخلفه : (اللهم إني استخلفت عليهم خير أهلك

அதைப்போல,அபூபக்கர் ரலி தங்களின் வபாத் நேரத்தில் அடுத்த கலீபாவாக உமரை தேர்வு செய்ததை சிலர் விமர்சனம் செய்தபோது அபூபக்கர் ரலி அவர்கள்,யா அல்லாஹ்!இந்த மக்களுக்கு கலீபாவாக உன்னிடம் மிகச் சிறந்தவரை தேர்வு செய்துள்ளேன்.என்றார்கள்.

என்ன கண்ணியமான சிந்தனை?

ذكر ابن القيم في "إعلام الموقعين " أن المسائل الفقهية التي خالف فيها ابن مسعود عمر رضي الله عنهما بلغت مائة مسألة وذكر  منها
وكان ابن مسعود يرى في قول الرجل لامرأته: "أنت عَلَيَّ حرام " أنه يمين، وعمر يقول: هي طلقة واحدة.
وكان ابن مسعود يقول في رجل زنى بامرأة ثم تزوجها: لا يزالان زانيين ما اجتمعا، وعمر لا يرى ذلك، ويعتبر أوله سفاحاً وآخره نكاحاً

அல்லாமா இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்களுக்கும் உமர் ரலி அவர்களுக்கும் நூறு சட்டங்களில் கருத்துவேற்றுமை இருந்தது  என்று கூறி சில உதாரணங்களை முன் வைக்கிறார்கள்.
1.ஒருவன் தன் மனைவியை பார்த்து நீ எனக்கு ஹராம் என்று சொன்னால் அது சத்தியம் என்ற சட்டத்தின் கீழ் வரும் என்பது இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் நிலைப்பாடு.
இல்லை அது ஒரு தலாக்காக ஆகும் இது உமர் ரலி அவர்களின் நிலைப்பாடு.
2.ஒரு பெண்ணை விபச்சாரம் செய்த ஒருவன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்தாலும் அவர்களின் உறவு விபச்சார உறவுதான்.இது இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் அபிப்ராயம்.
இல்லை, அதன் முதல் பகுதி விபச்சாரமாக இருந்தாலும் திருமணம் செய்துவிட்டதால் பிற்பகுதி திருமண உறவாகும் இது உமர் ரலி அவர்களின் அபிப்ராயம்.

இவ்வளவு இருந்தும் இருவரின் அன்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை.

ويقبل ابن مسعود يوماً وعمر جالس فلما رآه مقبلاً قال: "كنيّف مُلئ فقهاً أوعلما
حلية الأولياء 1 \ 129 ومسند الإمام أحمد 1 \ 421 وصفة الصفوة 1 \ 401

இப்னு மஸ்வூத் ரலி அவர்களை குறித்து உமர் ரலி அவர்கள்,மார்க்க அறிவின் கனவாய் என்று புகழ்வார்கள்.

كان للإسلام حصناً حصيناً
رواه الحاكم في المستدرك

அவ்வாறு ஹழ்ரத் உமர் ரலி அவர்களை பற்றி இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் இஸ்லாத்தை பாதுகாத்த கோட்டை என்று கூறுவார்கள்.

மிஃராஜில் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை கண்ட விஷயத்திலும்,கப்ரில் உள்ளவர்கள் செவியேர்ப்பார்கள் எனும் பிரச்சனையிலும் மிகுதியான ஸஹாபாக்களின் கருத்துக்கு அன்னை ஆயிஷா ரலி அவர்கள் எதிரான கருத்தை கொண்டிருந்தார்கள்,ஆனாலும் யாரும் ஆயிஷா ரலி அவர்களை விமர்சித்ததில்லை.கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானது ஆபத்தானதல்ல.
  ஸஹாபாக்களைப்பற்றி அனஸ் ரலி அவர்கள் இப்படி கூறுகிறார்கள்.

عن أنس رضي الله عنه قال: (إنا معشر أصحاب رسول الله صلى الله عليه و سلم كنا نسافر، فمنا الصائم ومنا المفطر، ومنا المتم ومنا المقصر، فلم يعب الصائم على المفطر، ولا المفطر على الصائم، ولا المقصر على المتم، ولا المتم على المقصر) . رواه البيهقي في السنن .
நாங்கள் நாயகத்தின் தோழர்கள்.நாங்கள் பயணம் செய்வோம்.பயணத்தில் எங்களில் சிலர் நோன்பு வைப்பர்,சிலர் வைக்கமாட்டர்.சிலர் தொழுகையை கஸ்ர் செய்வர்,சிலர் முழுமையாக நிறைவேற்றுவர்.ஆனால் யாரும் யாரையும் பழித்துக்கொள்ளமாட்டோம்.

எத்தனையோ சட்டப்பிரச்சனைகளில் ஸஹாபாக்கள் மாறுபட்டார்கள்,ஆனால் அது விரோதத்தையோ,பிரிவினையையோ உருவாக்கவில்லை என ஷாதிபி கூறுகிறார்கள்.

இதே நிலையே இமாம்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது.

ويقول يونس الصدفي: ( ما رأيت أعقل من الشافعي، ناظرته يوماً في مسألة ثم افترقنا ولقيته فأخذ بيدي ثم قال: يا أبا موسى ألا يستقيم أن نكون إخواناً وإن لم نتفق في مسألة  

நாம் ஒரு மஸ்அலாவில் மாறுபட்டாலும் நாம் சகோதரர்கள் தான் இது இமாம் ஷாபி ரஹ் அவர்கள், யூனுஸ் என்ற அறிஞரைப்பர்த்து சொன்னது.

ويقول الشافعي:(الناس في الفقه عيال على أبي حنيفة ) [سير أعلام النبلاء 6/403]

மக்கள் அனைவரும் மார்க்க சட்டத்தில் அபூஹனீபாவின் குடும்பத்தினர்கள் என்று ஷாபி ரஹ் கூறுகிறார்கள்.

صلى الشافعي الصبح في مسجد أبي حنيفة ــ وكان يرى القنوات في صلاة الصبح ، ويرى الجهل بالبسملة ـــ فلم يقنت ولم يجهر ببسم الله تأدباً مع أبي حنيفة رحمهما الله . [طبقات الحنفية 1/433]

இமாம் ஷாபி ரஹ் அவர்கள் அபூஹனீபா ரஹ் அவர்களின் மஸ்ஜிதில் பஜ்ர் தொழ வைத்தபோது குனூத்தும் ஓதவில்லை,பிஸ்மியை சப்தமிட்டும் ஓதவில்லை,இதுவே அபூஹனீபா ரஹ் அவர்களின் கருத்துக்கு இமாம் ஷாபி கொடுக்கும் கண்ணியமாகும்.

எத்துனை அழகான வழிகாட்டுதல்?

எங்கே அந்த ஆரோக்கியமான சகோதரத்துவம்?

وبات -عليه الصلاة والسلام- ليلة الاثنين وقد بدأه الموت، ورأى ذلك منه عمه العباس وزوجه عائشة -رضي الله عنهما-، فلما أصبح وحضرت صلاة الفجر وجد من نفسه -عليه الصلاة والسلام- خفة ونشاطًا، فأرخى ستر حجرته ينظر إلى أصحابه -رضي الله عنهم- وهم صفوف في الصلاة، فتبسم فرحًا بما رأى من عبادتهم لربهم، واجتماع أمرهم، وتآلف قلوبهم، وفرحوا هم -رضي الله عنهم- برسول الله -صلى الله عليه وسلم-، وظنوا أنه خارج إليهم، فتأخر أبو بكر في الصف، فأومأ إليه النبي -صلى الله عليه وسلم- أن يبقى، ثم أرخى -عليه الصلاة والسلام- الستر.

நபி ஸல் அவர்கள் மரணமான திங்கள் கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு ஸஹாபாக்கள் சப்பில் அணிவகுத்து நிற்கிறார்கள்.நபி சல் அவர்கள் கொஞ்சம் தெளிச்சலடைந்தபோது தன் அறையின் திரையை நீக்கி தன் தோழர்கள் சப்பில் அணிவகுத்து உள்ளங்களால் இணக்கமாகி உடலால் ஒன்றுபட்டவர்களாக தன் ரப்பை வணங்கும்  காட்சியை  பார்த்து மகிழ்ச்சி அடைந்து புன்முறுவல் பூத்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் வரப்போகிறார்கள் என்றெண்ணி சப்பிலிருந்து அபூபக்கர் ரலி பின் வாங்கியபோது அங்கேயே நில்லுங்கள் என நாயகம் சைகை செய்துவிட்டு திரையை மூடினார்கள்.

எங்கே அந்த காட்சி?எங்கே அந்த கூட்டம்?ஓரணியில் நிற்கிறோம் ஓராயிரம் கருத்துவேறுபாடுகளுடன்.
இஸ்லாம் வேற்றுமையில் வெற்றி கண்ட மார்க்கமாகும்.ஒரு அரேபிய குரைஷியுடன் அபீஸினிய பிலாலும்,ரோமானிய சுஹைபும்,பாரசீக சல்மானும் கைகோர்க்க முடியும் என்று உலகிற்கு காட்டியது.

இஸ்லாமிய கிலாபத் சாம்ராஜ்யத்தில் யூதர்களின் சதியால் அரபியர்,துர்க்கியர் என்று இரு பிரிவு உண்டானது.அதுவே கிலாபத் வீழ்ச்சிக்கு காரணமானது.

யூதர்கள் மிகவும் சாதுர்யமாக முஸ்லீம்களை கூறுபோட்டு தங்களின் திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.
மூன்று பேர்கள் இருக்கும் ஒரு சபையில் ஒரு தலமையை தேடுகிறது இஸ்லாம்.
நம்முடைய ரப்பு ஒருவன்,நம்முடைய வேதம் ஒன்று,நம்முடய நபி ஒருவர்,நம்முடய கிப்லா ஒன்று என நம்மை இணைக்கும் பாலங்கள் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் அரசியல் பெயரால் பிரிந்தோம்,மொழியை முன்னிலப்படுத்தி பிரிந்தோம்,தேசத்தை காரணம் காட்டி பிரிந்தோம் இன்று மார்க்கத்தின் பெயரால் பிரிந்து கிடக்கிறோம்.

போதும் பிரிந்ததும் இழந்ததும்,வாருங்கள் ஒன்று படுவோம்.

தமிழகத்தில் நபி ஸல் அவர்களின் அவமதிப்பு விவகாரத்தில் கருத்து   வேறுபாடுகளை மறந்து 24 இயக்கங்கள் (யூதர்களை போல எந்த நியதிக்கும் கட்டுப்படாத தறுதல ஜமாத்தை தவிர)ஒன்றுபட்டு களம் கண்டது நம்முடைய பிரமாண்ட வெற்றி இல்லையா?

وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ

இன்னும் அல்லாஹ்வுக்கும்அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.(அல் குர்ஆன் 8:46)
ஒன்றுபடுவோம்!உலகை வெற்றிகொள்வோம்!

Wednesday 21 November 2012

ஆஷுரா தினம்-அராஜக அரசியலின் முற்றுப்புள்ளி



ஆஷுரா தினம் ஒரு அநியாயக்காரனின் அரசியல் சாம்ராஜ்யம் அஸ்தமமான நாள்.

அராஜக அரசியலுக்கான முற்றுப்புள்ளி.

உலகில் எந்த காலத்திலும் அநியாயம் நிலைக்காது எனும் உண்மையை அழுத்தமாக சொல்லும் நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆஷுரா தினம் வரும்போது முஸ்லிம்கள் பெறவேண்டிய பாடம் இது.

அலாஹ்வினால் நினைவூட்டப்பட்ட நாட்களில் ஆஷுராதினமும் ஒன்று.

                                                                وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّـهِ 

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான்.அல் குர்ஆன் 14:5


அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய பதவி,அதிகாரம்,செல்வம்,    செல்வாக்கைக்கொண்டு பலகீனமானவர்களின் மீது அநியாயங்களை கட்டவிழ்த்துவிடும் ஒவ்வொருவருக்கும் இந்த ஆஷுரா தினம் ஒரு எச்சரிக்கை தினமாகும்.ஏனெனில் உலகில் முதன்மை அநியாயக்காரனான பிர்அவ்னின் அக்கிரமத்தை,அழிச்சாட்டியத்தை அல்லாஹுத்தஆலா இன்று தான் முடிவுக்கு கொண்டுவந்தான்.


فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً 

  
உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் (அல் குர்ஆன் 10:92)


பிர்அவ்னை ஒரே இரவில் கடலில் மூழ்கடித்து விட்டு அல்லாஹ் கூறிய  வார்த்தைகள் தான் இவை.

ஆட்சி,அதிகாரம் தன்னிடம் உண்டு என்ற ஆணவத்துடன் அராஜக அரசியல் நடத்தும் அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு இந்த ஆஷுராதினம் ஒரு நல்ல பாடத்தை தரவேண்டும்.

காஸாவின் குழந்தைகளை கருவறுத்துக்கொண்டிருக்கும் இந்த சாத்தான்களின் அட்டூழியத்திற்கும் ரெளடித்தனத்திற்கும் வெகு விரைவில் அல்லாஹ் முடிவு கட்டுவான் என்று நம்புகிறோம்.


வன்முறை உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

உலகில் எந்த வரலாறுகளிலிருந்தும் பிர்அவ்னின் வரலாறு வேறுபடும்.


قال عبد الله بن مسعود رضي الله عنه: كان رسول الله صلى الله عليه وسلم عامة نهاره يحدثنا عن بني إسرائيل


நபி ஸல் அவர்கள் பனீஇஸ்ரவேலர்களின் வரலாற்றைத்தான் எங்களுக்கு அதிகமாக சொல்லுவார்கள் என்று ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.ஏனெனில் குர்ஆனில் அதிகமாக கூறப்பட்ட வரலாறு அதுவே.

27 சூராக்களில் பிர்அவ்னின் வரலாறு கூறப்படுகிறது.
இப்லீஸின் சிந்தனையான நான் சிறந்தவன் என்ற எண்ணம் எப்போதும் பிர்அவ்னுக்கு உண்டு.


أَمْ أَنَا خَيْرٌ مِّنْ هَـٰذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ


அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா? என்று மூஸா அலை அவர்களை இழிவு படுத்தி அவன் தொடுத்தவினாவாகும். (அல் குர்ஆன் 43:52)


இப்லீஸிடம் கூட இல்லாத ஒரு சிந்தனை பிர்அனிடம் உண்டு,

அது என்ன வெனில் فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன்  என்று (அவர்களிடம்) கூறினான்.

உலகில் பொய்யாக தன்னை நபி என்று வாதிட்டவர்கள் உண்டு,தன்னை இறை நேசர் என்று அடையாளப்படுத்தியவர்கள் உண்டு,ஆனால் தன்னை இறைவன் என்று சொல்லியவர்கள் பிர்அவ்னை தவிர யாருமில்லை.

அவன் தன்னை இறைவனாக அந்த மக்களுக்கு காட்டிக்கொள்ள இரண்டு அடையாளங்களை சொன்னதாக குர்ஆன் கூறுகிறது.


قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَـٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي ۖ أَفَلَا تُبْصِرُونَ


மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; "என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா? (அல் குர்ஆன் 43:51)


மிஸ்ரின் ஆட்சியும்,நைல் நதியின் ஆதிக்கமும் அவன் உச்சகட்ட அநியாயம் செய்ய காரணமானது என அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு கல்வியை,பொருளை,பதவியை ஆக்கத்திற்கு கொடுக்கிறான்.ஆனால் மனிதன் அதைக்கொண்டு அநியாயம் செய்து அழிவுக்கு காரணமாக்கி கொள்கிறான்.கல்வியால் அழிந்தவன் இப்லீஸ்,பொருளால் அழிந்தவன் காரூன்,ஆட்சி அதிகாரத்தால் அழிந்தவன் பிர்அவ்ன்.
அல்லாஹுத்தஆலா குப்ரை கூட பொருத்துக்கொள்வான் ஆனால் அநியாயத்தை ஒருபோதும் பொருத்துக்கொள்ள மாட்டான்.


أخرج أحمد بإسناد حسن من حديث أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: "دعوة المظلوم مستجابة وإن كان فاجراً، ففجوره على نفسه".


அநீதி இழக்கப்பட்டவன் பாவியாக இருந்தாலும் அவன் அழைப்புக்கும் பதில் சொல்லப்படும். அவன் பாவம் அவனுடன்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

.قيل: الدنيا تدوم مع العدل والكفر، ولا تدوم مع الظلم والإسلام
குப்ருடன் நீதம் இருந்தால் துன்யா நிலைக்கும்,இஸ்லாத்துடன் அநீதி இருந்தால் நிலைக்காது இது ஒரு அரபி கவிஞனின் வரிகள்.


وكتب بعض عمال عمر بن عبد العزيز إليه: أما بعد؛ فإن مدينتنا قد خربت، فإن رأى أمير المؤمنين أن يقطع لنا مالا نرمها به. فرد عليه: أما بعد؛ فحصنها بالعدل، ونق طرقها من الظلم؛ فإنه مَرَمَّتُها. والسلام.


حلية الأولياء لأبي نعيم الأصفهاني


ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்களின் ஆட்சியில் அதிகாரி யாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்,எங்கள் ஊர் பழுதடைந்துள்ளது.அமீருல் முஃமினினீனான தாங்கள் எங்கள் ஊரை சரிசெய்ய நிதிஒதுக்குமாறு வேண்டிக்கொண்டார்.   அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, உங்கள் ஊரை நீதத்தை கொண்டு சரிசெய்யுங்கள்.அதன் பாதைகளை அநீதியிலிருந்து சுத்தப்படுத்துங்கள். அதுவே உண்மையான மராமத்து பணியாகும்.என்றார்கள்

அல்லாஹுத்தஆலா எத்தனையோ காபிர்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறான், ஆனால் அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்.அதனால் தான் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்.

அல்லாஹ் அநீதிக்கு கால அவகாசம் தருவான்.ஆனால் நிலைக்க விடமாட்டான்.


قال -عليه الصلاة والسلام-: "إن اللهَ لَيُمْلِي للظالم، حتى إذا أخذه لم يُفْلِتْهُ"، ثم قرأ قول الله -جل وعلا-: (وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ) [هود:102](رواه البخاري ومسلم)


.நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு அவகாசம் தருவான் இறுதியில் அவன் பிடிக்க ஆரம்பித்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.என்று கூறிய நபி ஸல் அவர்கள் பின் வரும் வசனத்தை ஓதினார்கள்அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.


في دولة بني العباس يقول أحد المؤرخين، ذكره ابن كثير عن أحد مجالس الخليفة قال: طلب مني الخليفة شيئا من الغالية "طيب" فقلت عندنا شيء منه نفيس في بيت المال، قال: جئ به إليَّ، قال: فجئت به إليه، قال: بِكَم هذا؟ قلت بكذا وكذا من الدنانير، غالٍ جدا، قال: والله ما أفتحه! ما دام أنه غالٍ نحافظ عليه، قال: ثم أخذه وشمه وناولني إياه.قال: وبعد سنين تولى الخليفة الآخَر، قال: عندكم شيء من الغالي؟ قلت: نعم، قال: هات، قال : فأتيته به، قال : بكم هذا؟ قلت : بكذا وكذا من الدنانير، قال: ففتحه فانبعثت رائحته في المجلس، قال: فأخذ بطرف أصبعه من حوافه ثم مسح في ظهر يده وأطبقه، قال: احفظه. ما يريده أن ينتهي حفاظا على المال.قال : وبعدها بسنين تولى خليفة فقال: عندكم شيء من الغالي؟ قلت نعم، قال : آتني به، قال: فأتيته به نفسه، قال فقال: بكم؟ قلت : بكذا وكذا، قال: ففتحه ثم جعل يده فيه فمسح يده ثم مسح رجليه، ثم قال: يا أيها الناس، افعلوا به ما شئتم.قال: فلما رأيته يعبث به قلت: والله ليسقطنَّ ملكه! فلم تمضِ عليه سنونٌ حتى سقط الملك في عصره.


இப்னு கஸீர் ரஹ் அவர்கள் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததின் பின்னனியை குறிப்பிடுகிறார்கள்.அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சியில் அரசபையில் இடம்பிடித்திருந்த ஒருவர் கூறுகிறார்.

கலீபா என்னிடம் விலை உயர்ந்த நறுமணம் ஏதேனும் இருக்கிறதா?என கேட்டார்.ஆம்;இருக்கிறது,ஆனால் அது பைதுல் மாலுக்கு சொந்தமானது என்று கூறினேன்.

அதை கொண்டு வாருங்கள் என்றார்.

நான் கொண்டுவந்தேன்.

இதன் விலை என்ன?என்று கலீபா கேட்டார்.இதன் விலை மிகவும் அதிகம் என்று கூறி அதன் விலையை சொன்னேன்.உடனே கலீபா அவர்கள்,அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நான் திறக்கமாட்டேன்.இதை பாதுகாக்க வேண்டும்.என்றார்.அதை நுகர்ந்துவிட்டு என்னிடம் திருப்பி தந்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு பின் இன்னொரு கலீபா ஆட்சிக்கு வந்தார்.அவரும் என்னிடம் ஏதேனும் விலையுயர்ந்த அத்தர் இருக்கிறதா? என்று வினவினார்.ஆம் என்று, அதை நான் கலீபாவிடம் கொண்டுவந்து கொடுத்தேன்.அதை பெற்றுக்கொண்ட கலீபா அவர்கள் அதன் விலையை விசாரித்தார்.பின்பு அதை திறந்து அவரின் விரல் நுனிப்பகுதியை கொண்டு கொஞ்சமாக எடுத்து தன் கையின் மேல்பாகத்தில் தேய்த்தார்.பின்பு அதை மூடி என்னிடம் தந்து அதை பாதுகாக்க சொன்னார்

காலம் கடந்தது.இன்னொரு கலீபா ஆட்சிக்கு வந்தார்.அவரும் இந்த நறுமணத்தை கேட்டார்,அதை பெற்றுக்கொண்ட கலீபா, அதை திறந்தார்,உள்ளே தன் கையை முக்கினார்.அதைகொண்டு தன் கையிலும் காலிலும் தடவினார்.பின்பு அரசபையில் உள்ளவர்களிடம் கொடுத்து,மக்களே! இதை நீங்கள் விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.


அப்போது நான் சொன்னேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மக்களின் உரிமையில் இவர்கள் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்.இவர்களின் ஆட்சி கவிழும் என்றேன்.

சில ஆண்டுகளிலேயே அவரின் அரசு கவிழ்ந்தது.

அப்பாஸிய கலீபாக்களின் சாம்ராஜ்யம் அநியாயம் தலை தூக்கியபோது முடிவுக்கு கொண்டுவரப்பட்டக இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

في حديث جابر -رضي الله عنه- قال: سأل النبي -عليه الصلاة والسلام- عددا من الصحابة الذين قدموا من الحبشة، قال: حدثوني بأعجب ما رأيتم في أرض الحبشة؟ فقال فتية منهم: يا رسول الله، رأينا عجوزا تحمل جرة ماء -أو قالوا قلة ماء- فوق رأسها، فبينما هي تمشي إذ أقبل شاب منهم -يعني من الحبشة- فوضع كفه بين كتفيها ثم دفع بينهم فوقعت القلة من فوق رأسها فانكسرت، ووقعت العجوز على ركبتيها، وهم كفار غير مسلمين، وهم يقولون الله ثالث ثلاثة! ومع ذلك انظر كيف علق النبي -عليه الصلاة والسلام- على الموقف!.: فقامت العجوز والتفت إليه وقالت: ستعلم يا غدر -يعني يا أيها الغادر- الذي جئت من خلفي ولم أنتبه إليك، قالت ستعلم يا غدر إذا وضع الله كرسيه للحكم بين العباد أي شيء يكون حالي وحالك! فقال -عليه الصلاة والسلام-: "صَدَقَتْ، صدقت، صدقت؛ لا قدست أمة لا يؤخذ لضعيفهم من قويهم".
ابن ماجه في سننه
அபிஸீனியாவிலிருந்து திரும்பிவந்த ஸஹாபாக்களிடம் நபி ஸல் அவர்கள் அங்கு அவர்கள் கண்ட ஆச்சரியமான காட்சிபற்றி விசாரித்தார்கள்.

அப்போது ஸஹாபாக்கள்,யாரஸூல்லாஹ்!ஒரு மூதாட்டி தன் தலையில் தண்ணீர் பாத்திரம் சுமந்து செல்கிறாள்.ஒரு அபிஸீனிய வாலிபன் வந்தான்.அவளின் தோழ்புஜத்தில் கைவத்து தள்ளிவிட்டான். தண்ணீர் பாத்திரம் கீழேவிழுந்து உடைந்துவிட்டது.அந்த மூதாட்டியும் கீழே விழுந்து விட்டாள்.

பின்னர் எழுந்து அந்த மூதாட்டி சொன்னாள்.

அநியாயக்காரனே!அல்லாஹ் அடியார்களுக்கிடையில் நீதியை நிலைநிறுத்தும் அந்த நாளில் உன் நிலை என்ன ஆகும் என்று தெரியும்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் அவள் உண்மை சொன்னாள்.அவள் உண்மை சொன்னாள்.அவள் உண்மை சொன்னாள்.

அநியாயக்காரனிடமிருந்து அநீதி இழக்கப்பட்டவனுக்கு உரிமை பெற்றுத்தராத எந்த சமுதாயமும் அழிவிலிருந்து தப்பமுடியாது என்று கூறினார்கள்.


أوحى الله -تعالى- إلى موسى -عليه السلام-: يا موسى، حذر بني إسرائيل من مغبة الظلم؛ فإن له سوء عاقبة


மூஸாவே!பனீஇஸ்ரவேலர்களை அநியாயம் செய்வதை விட்டும் எச்சரிக்கை செய்யுங்கள்.ஏனெனில் அநியாயத்தின் முடிவு மிக மோசமானது.என்று மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான்.

உலகில் பிர்அவ்னிய அராஜகத்தின் முடிவு அநியாயம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்று ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதை நபி சல் அவர்கள் தங்களின் வழிமுறயாக்கினார்கள்.


أن محمدًا -صلى الله عليه وسلم- لما هاجر إلى المدينة ورأى اليهود يصومون يوم العاشر سألهم عن سبب صومهم فقالوا: هذا يوم أنجى الله فيه موسى وقومه وأغرق فيه فرعون وقومه، فقال -صلى الله عليه وسلم-: "نحن أحق وأولى بموسى منكم"، فصامه وأمَر بصيامهرواه البخاري


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் காரணம் என்ன என்பதை  நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக  நாங்கள் நோன்பிருக்கிறோம் என்று பதிலளித்தார்கள்'.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள்.ஆனாலும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று 

இவ்வாறு கூறினார்கள்فقال: "خالفوا اليهود، صوموا يوما قبله أو 

يوما بعده،

யூதர்களுக்கு மாற்றம் செய்து ஒரு நாளை முன்னால் அல்லது பின்னால் சேர்த்துக்கொள்ளுங்கள்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
மரணித்தவனின் உடல் தாமதமின்றி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு,ஆனால் பலநூற்றாண்டுகளை கடந்தும் பிர்அவ்னின் உடல் படிப்பினைக்காக பாதுகாக்கப்படுகிறது

இறுதியாக:سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ  அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (அல் குர்ஆன் 26:227)
இதுவே இந்த ஆஷுராநாளின் பாடமாகும்.