Tuesday 6 November 2012

இஸ்லாம் உலகிற்கு அச்சமா?அபயமா? இஸ்லாமோ போபியோ ஒரு கண்ணோட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2012 ம் ஆண்டிற்கான ஹஜ் மிகவும் சிறப்பாக நிறைவு பெற்றுவிட்டது.

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ஹாஜிகள் தங்களின் தாய் நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

உள்ளூர் முஸ்லிமை உலக முஸ்லிமாக மாற்றுவதற்கான முயற்சியே ஹஜ்ஜாகும்.

சாதாரண முஸ்லிமை சர்வதேச முஸ்லிமாக ஆக்குவதற்கான திட்டம் அது.

நிறம்,மொழி,தேசம் இவை அனைத்தையும் கடந்து ஈமானிய உறவை பலப்படுத்துவதற்கான முன்னோட்டமாகும்.

சவூதி அரசு வெளியிட்ட அதிகாரபூர்வமான தகவலின் படி:

இவ்வாண்டு 107 நாடுகளிலிருந்து 31,61,573 ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்.இதில் 64% ஆண்கள்.35% பெண்கள்.
இது கடந்த ஆண்டைவிட 8% அதிகமாகும்.

இந்தியாவிலிருந்து 1,70,000 பேர்கள் ஹஜ்ஜை முடித்து திரும்பியுள் ளர்.இதில் 1,25,000 பேர்கள் ஹஜ் கமிட்டிமூலமும்,45,000 பேர் தனியார்மூலமும் சென்றுவந்துள்ளனர்.

சவூதி அரசு வருடத்தில் ஹஜ்ஜின் 5 நாட்களுக்காக வருடம் முழுவதும் வேலைசெய்பவர்கள் என்பதை நாமறிவோம்.

அவ்வாறே,இவ்வாண்டு அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிக ளை கண்ணியப்படுத்தும் சேவையில் சவூதி அரசும்,மக்களும் காட்டிய ஈடுபாடு மகத்தானது.அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு நிறைவான கூலி வழங்குவானாக.

ஹாஜிகளின் மருத்துவ சேவையில் 5000 மருத்துவர்களும்,15,000 செவிலியர்களும்,1000 மருத்துவசேவை மையங்களும் நியமிக்கப்பட துடன் ஹாஜிகளின் பாதுகாப்பு பணியில் 70,000 காவலர்கள் நியமி க்கப்பட்டனர்.

மினாவிலிருந்து அரபா செல்லும் 5 மணி நேர சிரமமான பஸ் பயணத்தை இரயில் சேவை மூலம் 15 நிமிடத்தில் இலேசாக கடக்க வசதி செய்து கொடுத்தனர்.

ஹஜ் உலக முஸ்லிம்களுக்கு சொல்லும் செய்தி:

ஹஜ் உலக முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை வெளிச்சம் தருகிறது.

முஸ்லிம்கள் அனைத்தையும் கடந்து ஒன்றுபடமுடியும் எனும் உண்மையை உரக்கச்சொல்கிறது.

ஹஜ் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான உரைக்கல்லாகும்.

இன்றய தினத்தில் இஸ்லாம் ஒரு வெள்ளப்பிரளயத்தைப்போல இரவு பகல் உதயமாகும் இடங்களிலெல்லாம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது.

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு சமீபத்திய 20 ஆண்டுளில் இஸ்லாத்தை நோக்கிய மக்களின் படையெடுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் தடுக்க முடியாத சக்தி என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது

இஸ்லாம் அதற்கு முன்னால் இருக்கும் அனைத்து தடைக்கற்களையும் தகர்த்தெரிந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.
  
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சி அங்குள்ள யூத கிருஸ்துவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் பிரான்ஸில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி:      ஐரோப்பாவில் 7 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்,இவர்களில் பெரும்பாலர் இஸ்லாத்தை விரும்பி தழுவியவர்.மேலும் ஐரோப்பா வின் 55 நாடுகளில் 11 ல் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருக்கின்ற னர்.

ஐக்கியநாடுகள் சபை வெளியிட்ட கருத்துகணிப்பின் படி:

2040 ல் ஐரோப்பாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 55% மாறும்.அப்போது ஐரோப்பாவை முஸ்லிம்கள் ஆளுவார்கள்.

ஜெர்மனி அரசு வெளியிட்ட அறிக்கையின் படி:

2006 முதல் நாள் ஒன்றுக்கு 12 பேர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.அரசு பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் மட்டும் இவ்வளவு என்றால் பதிவு செய்யாதவர்கள்?

இஸ்லாம் பற்றிய தேடல் அங்கு அதிகமாகி இருக்கிறது.
ஜெர்மன் அது ஒரு கிருஸ்துவ நாடு.50 ஆண்டுகளுக்கு முன் 20ஆயிரம் சர்ச்சுகள் இருந்தது.ஆனால் இன்று 7500 தான் உள்ளது. அதிலும் 4000 மூடப்பட்டு கிடக்கிறது.என்ன ஆனது சர்ச்சுகள்?அதில் பெரும்பாலானது பள்ளிவாசல்களாக இஸ்லாமிக் சென்டர்களாக மாற்றம் பெற்று விட்டன.

கிருஸ்துவ உலகின் தலைமை என்று கூறப்படும் இத்தாலியில் ஆண்டிற்கு 50 பள்ளிவாசல்கள் புதிதாக கட்டப்படுகிறது.

ஒருபுறத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மறுபுறத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல்களும்  உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இஸ்லாத்திற்கெதிரான மேற்குலகம் தொடுத்திருக்கும் நவீன இண்டெர்நெட் போர் இஸ்லாமோ போபியோ.

அதாவது இஸ்லாம் உலகிற்கு அச்சுறுத்தல்,அபாயம்.

முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தையும், இருப்பையும் மறுபரிசீலனை செய்யச்சொல்லும் யுத்தப்பிரகடனம்.

ஒரு இண சுத்திகரிப்புச்செய்வதற்கான முன்னோட்டம் மாத்திரமல்ல, இது ஒரு நவீன சிலுவை போருக்கான தயாரிப்பு
.
இஸ்லாம் எதிர்ப்பில் வளர்ந்தமார்க்கம் என்பதை கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இவர்களுக்கு புரியவைத்திருக்கின்றனர்.

முஸ்லிம்கள் எத்தனையோ நெருக்கடிகளையும்,சோதனைகளையும் சந்தித்ததுண்டு.அப்பொழுதெல்லாம் இனி இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லையென்றே எதிரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மீண்டும் இஸ்லாம் உற்சாகத்துடன் உயிர்பெற்றது. 
                    பலஸ்தீனில்,ஈராக்கில்,ஆப்கானிஸ்தானில்,மியான்மரில்,பர்மாவில் முஸ்லிம்கள்-வெறிநாய்களின் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதை காணும் ஒரு முஸ்லிம் நம்பிக்கை இழக்க வேண்டாம்.துவண்டு விடவேண்டாம்.ஏனெனில் முஸ்லிம்கள் இதைவிடவும் பெரிய சோதனைகளையும் வென்றுள்ளனர்.
 
இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சியை தாண்டி இஸ்லாம் வளரும் என்றும், உலகில் அனைத்து மதங்களையும் இஸ்லாம் வெற்றிகொள்ளும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.(அல்குர்ஆன் 9:32,33)

நபி ஸல் அவர்களின் தோழர்கள் இஸ்லாத்தின் சோதனைகளை கண்டு துவண்டுவிடும் போதெல்லாம் நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு இஸ்லாத்திற்கு வளமான எதிர்காலம் உண்டு என்று ஆறுதல் கூறுவார்கள்.


நற்செய்தி 1

وفي يوم الخندق  شكا الصحابة إلى رسول الله - صلى الله عليه وسلم – صخرة لم يستطيعوا كسرها، فجاء رسول الله صلى الله عليه وسلم – وأخذ الفأس وقال : ( بسم الله ) فضرب ضربة كسر منها ثلث الحجر، وقال : ( الله أكبر، أعطيت مفاتيح الشام، والله إنى لأبصر قصورها الحمر من مكاني هذا ) ، ثم قال : ( بسم الله ) ، وضرب ثانيةً فكسر ثلث الحجر، فقال : ( الله أكبر، أعطيت مفاتيح فارس، والله إنى لأبصر المدائن وأبصر قصرها الأبيض من مكاني هذا ) ، ثم قال : ( بسم الله ) وضرب ضربة كسرت بقية الحجر، فقال : ( الله أكبر، أعطيت مفاتيح اليمن، والله إنى لأبصر أبواب صنعاء من مكاني هذا ) رواه أحمد ،

முஸ்லீம்களை போர்மேகம் சூழ்ந்த காலம்.அகழ்ப்போர்களம்.குழி  தோண்டிக்கொண்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.அப்போது குறிக்கிட்டது ஒரு பாறை.அதை யாராலும் உடைக்க முடியாதபோது நபித்தோழர்கள் நாயகத்திடம் முறையிட்டனர்.

சம்மட்டியை தாங்களே எடுத்து பிஸ்மில்லாஹ் என்று கூறி ஒரு அடி அடித்தார்கள்.பாறையில் மூன்றில் ஒரு பாகம் உடைந்தது.   அல்லாஹு அக்பர்.சிரியாவின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.        அல்லாஹ்வின் மீது சத்தியம் நான் இங்கிருந்தே சிரியாவின் செந்நிற மாளிகைகளை காண்கிறேன்.என்றார்கள்.

பிஸ்மில்லாஹ் என்று கூறி இரண்டாவது ஒரு அடி அடித்தார்கள் பாறையில் இன்னொரு பகுதி உடைந்தது,அல்லாஹு அக்பர்.பாரசீக  த்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது,அல்லாஹ்வின் மீது ஆணை நான் இங்கிருந்தே பாரசீகத்தின் மதாயின் நகரத்தையும் அதன் வெள்ளை மாளிகையையும் காண்கிறேன்.

பிஸ்மில்லாஹ் என்று கூறி மூன்றாவது ஒரு அடி அடித்தபோது முழுபாறையும் உடைந்தது.அல்லாஹு அக்பர்.யமன் தேசத்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.அல்லாஹ்வின் மீது சத்தியம்.நான் இங்கிருந்தே யமனின் சன்ஆ நகரத்தின் வாசல்களை காண்கிறேன் என்றார்கள்.(அஹ்மத்)

وعده لسراقة بن مالك رضي الله عنه أن يلبس سواري كسرى،

பாரசீகம் வெற்றிக்கொள்ளப்படுகிற போது பாரசீக மன்னர் கிஸ்ராவின் காப்பை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று சுராகா என்பவருக்கு நபி ஸல் அவர்கள் வாக்கு கொடுத்தார்கள்.

وقد فتح الله تلك الممالك على يد المسلمين في عصور الخلافة، وقام عمر رضي الله عنه بإلباس سراقة رضي الله عنه سواري كسرى .

அல்லாஹுத்தஆலா அந்த நாடுகளின் பெரும்பகுதியை கலீபாக்களி ன் ஆட்சியில் முஸ்லீம்களின் ஆளுகைக்குகீழ் கொடுத்தான். அப்போது உமர் ரலி சுராகாவுக்கு நாயகம் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்கள்.

நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு இஸ்லாத்தின் எதிர்காலம் பிரகாசமானது என்று சொன்னபோது ஸஹாபாக்களின் நம்பிக்கை எப்படி இருந்தது என குர்ஆன் விவரிக்கிறது

{وَلَمَّا رَأَى المُؤْمِنُونَ الأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلاَّ إِيمَانًا وَتَسْلِيمًا} [الأحزاب: 22]..

நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்ட போது 'இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.

عن أبي قبيل قال: كنا عند عبد الله بن عمرو بن العاص، وسئل: أي المدينتين تفتح أولاً: القسطنطينية أو روميَّة؟ فدعا عبد الله بصندوق له حَلَق قال: فأخرج منه كتابًا قال: فقال عبد الله: بينما نحن حول رسول الله -صلى الله عليه وسلم- نكتب، إذ سئل رسول الله -صلى الله عليه وسلم-: أي المدينتين تفتح أولاً: قسطنطينية أو رومية؟ فقال رسول الله -صلى الله عليه وسلم-: "مدينة هرقل تفتح أولاً" يعني قسطنطينية " رواه أحمد
والقسطنطينية قد فتحها محمد الفاتح رحمه الله
قال رسول الله صلى الله عليه وسلم: "لتفتحن القسطنطينية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش" (رواه الإمام أحمد في مسنده)

கான்ஸ்டன்டினோபில்,ரோம் இரு நகரங்களில் எது முதலில் வெற்றி கொள்ளப்படும்? என ஹழ்ரத் அம்ர் இப்னு ஆஸ் ரலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது,தன்னிடம் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார்கள் அதில் ஒரு பேப்பரை எடுத்து இதே கேள்வி நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி ஸல் அவர்கள்,ஹிர்கல் நகரமான பாரசீகம் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.

நபி ஸல் அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட கான்ஸ்டன்டி னோபில் உஸ்மானிய கலீபாவான முஹம்மத் அல் பாதிஹ் அவர்களின் தலமையில் வெற்றி கொள்ளப்பட்டது.

கான்ஸ்டன்டி னோபில் வெற்றி கொள்ளப்படும்.தலபதிகளில் மிகச் சிறந்தவர் அவர், படைகளில் மிகச்சிறந்த படையும் அதுவே என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நற்செய்தி 2

அதிய் தான் இஸ்லாம் தழுவிய வரலாற்றை விவரிக்கிறார்.

فأقبلتُ فلمّا قدمتُ المدينة استشرفني الناس وقالوا: { عُدي بن حاتم ! عُدي بن حاتم }.
 فأتيته فقال لي: { يا عديّ بن حاتم أسلمْ تسلمْ }.
 فقلتُ: { إنّ لي ديناً !}.
 قال: { أنا أعلم بدينك منك }.
 قلتُ: { أنت أعلم بديني مني ؟!}.
 قال: { نعم }.
مرّتين أو ثلاثاً قال: { ألست ترأس قومك ؟}.
 قلتُ: { بلى }.
 قال: { ألستَ رُكوسيّاً -فرقة مترددة بين النصارى والصابئين- ألستَ تأكل المرباع ؟}.
 قلتُ: { بلى }.
 قال: { فإن ذلك لا يحلّ في دينَك !}.
فنضنضتُ لذلك.
 ثم قال: { يا عديّ أسلمْ تسلمْ }.
 قلتُ: { قد أرى }.
 قال رسول الله -صلى الله عليه وسلم-: { إنّه ما يمنعك أن تسلم إلا غضاضةً تراها ممّن حولي، وأنت ترى الناس علينا إلْباً واحداً ؟}.
 قال: { هل أتيتَ الحيرة ؟}.
 فقلتُ: { لم آتِها وقد علمتُ مكانها }.
 قال: { يُوشك الظعينة أن ترحل من الحيرة بغير جوار، أو حتى تطوف بالبيت، ولتفتحنّ علينا كنوز كسرى بن هرمز }.
 قلتُ: { قلتَ كسرى بن هرمز !!}.
 قال: { كسرى بن هرمز }.
مرتين أو ثلاثة.
{ وليفيضنّ المالُ حتى يهمَّ الرجل مِنْ يقبلُ صدقتَهُ }.
 قال عدي: { فرأيتُ اثنتين: الظعينة -المرأة- في الهودج تأتي حاجةً لا تحتاج إلى جوار، وقد كنتُ في أول خيل أغارت على كنوز كسرى بن هرمز، وأحلف بالله لتجيئنّ الثالثة، إنّه قاله رسول الله -صلى الله عليه وسلم-}.
سير أعلام النبلاء

قال البيهقي : قد وقعت الثالثة في زمن عمر بن عبد العزيز ، ثم أخرج عن عبد الرحمن بن زيد بن الخطاب قال : إنما ولِيَ عمر بن عبد العزيز سنتين ونصفاً ، والله ما مات عمر بن عبد العزيز حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول : اجعلوا هذا حيث ترون في الفقراء ، فما يبرح حتى يرجع بماله ، نتذكر من يضعه فيهم فلا نجد فيرجع بماله ." .
மதீனாவுக்கு அருகில் வசித்த தைய் எனும் கோத்திரத்தின் தலைவர் அதீ இப்னு ஹாதம் என்பவர் பெருமானாரை சந்திக்க மதினா வருகிறார்.இவர் வந்தபோது அதி வந்திருக்கிறார் என மதீனாவே பேசிக்கொண்டதாம்.நபி ஸல் அவர்களை இவர் சந்தித்தபோது இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு கொடுத்தார்கள்.

அதிய்:நானும் ஒரு தீனில் இருக்கிறேன்.

நபி ஸல்:உன்னை விட உன் தீனைபற்றி நான் நன்கறிவேன்.

அதிய்:என் தீனை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நபி ஸல்:ஆம்,நீ தானே உன் கூட்டத்தின் தலைவர்,நீ ரக்கூஸி என்ற மதத்தை சார்ந்தவர் தானே?

அதிய்:ஆம்!

நபி ஸல் :போரில் ஙனீமத்தாக கிடைத்தபொருளில் 4ல் ஒரு பாகத்  தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் தானே?

அதிய்:ஆம் என்றதும்,அது உங்க தீனில் ஹலால் இல்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இதைக்கேட்டதும் அதிய்யால் பதில் கூற முடியவில்லை.
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதை விட்டும் உங்களை தடுப்பது என்ன?என் சமூகத்தின் வறுமையா?அல்லது மக்கள் இஸ்லாத்திற்கு கொடுக்கும் நெருக்கடியா?

அதிய் அவர்களே!உங்களுக்கு ஹீரா என்ற ஊர் தெரியுமா?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது,தெரியும் ஆனால் சென்றதில்லை என்றார்.(ஹீரா என்பது ஈராக்)

ஈராகிலிருந்து ஒரு பெண் ஹஜ் செய்வதற்காக தனியாக மக்கா வரும் காலம் வெகு விரைவில் வரும்,பாரசீக மன்னன் கிஸ்ராவின் அரசு கஜானாக்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும்,மதீனாவில் செல்வம் பெருகும்.ஒருகட்டத்தில் ஜகாத்,சதகா வங்குவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

உடனே அதிய் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்.

நபி ஸல் அவர்கள் மூன்று வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்

1.பயமில்லாத இஸ்லாம்.2.பசியில்லாத இஸ்லாம்.3.பொருள் வளமிக்க இஸ்லாம்.

ஹழ்ரத் அதிய் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

நபி ஸல் அவர்கள் என்னிடம் சொன்ன மூன்றில் 2 விஷயங்களை என் கண்ணால் கண்டுவிட்டேன்.

இமாம் பைஹகி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

மூன்றாவது வாக்குறுதி உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களின் காலத்தில் நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

கந்தக் நிகழ்வும்,அதியின் நிகழ்வும் இஸ்லாத்தின் வளமான எதிர்காலத்தின் அடையாளமாகும்.ஏனெனில் நபி ஸல் அவர்கள் இரண்டு வல்லரசுகளான ரோமும்,பாரசீகமும் இஸ்லாத்தின் குடையின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்கள்.

பாரசீகம் விஷயத்தில் நபியின் கனவு நிறைவேறிவிட்டது.இனி அடுத்து ரோமை நோக்கி இஸ்லாம் நகர ஆரம்பித்துள்ளது.

(ரோம் இன்றய தினம் கிருஸ்துவத்தின் தலைமை பீடம்.)

அதன் தொடக்கமே ஐராப்பாவில் இஸ்லாம் கண்டு வரும் வளர்ச்சியாகும்.

இறுதியாக:

அல்லாஹுத்தஆலா முஸ்லிம்களுக்கு தந்த மூன்று வாக்குறுதி:

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم فِي الأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا

அவர்களுக்கு முன் சென்றோ ருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.. (அல் குர்ஆன் 24:55)

நபி ஸல் அவர்கள் முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதி:

ليبلغن هذا الأمر ما بلغ الليل والنهار ولا يبقين الله بيت مدر ولا وبر إلا أدخله الله هذا الدين
رواه الامام احمد

இந்த தீன் இரவு பகல் செல்லும் இடமெல்லாம் நுழையும்.மண் வீடு கல் வீடு ஆகிய அனைத்து வீட்டையும் இந்த தீன் ஆதிக்கம் செலுத்தும்.

இஸ்லாம் தடுக்க முடியா சக்தி
இஸ்லாம் தவிர்க்க முடியா சக்தி.

5 comments:

  1. அருமையான தொகுப்பு.
    நல்ல தகவல்கள்.
    இறுதி வெற்றி இஸ்லாமிற்கே! என்ற
    உயரிய தத்துவத்தை
    உரத்து முழங்கும் கட்டுரை.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு, Jazakallah

    ReplyDelete