Wednesday 31 July 2013

நரக விடுதலை வேண்டும்


அல்லாஹ்வின் அளவிலா கருணையினால் ரமலான் மாதத்தின் பிந்திய பகுதியை அடைந்திருக்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ்!இனி எஞ்சியுள்ள நாட்களையும் பூரண உடல் சுகத்துடனும்,நிறைவான அமலுடனும் கழிக்க அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் தவ்பீக் செய்வானாக!ஆமீன்.

ரமலானின் பிந்திய நாட்கள் நரக விடுதலையின் நாட்களாகும்.

நரகம்

திருக்குர்ஆனில் நரகம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்ட அளவிற்கு வேறு எது குறித்தும் எச்சரிக்கைப்படவில்லை.

நரகத்தின் அத்துனை நிலைகளையும்,தன்மைக
ளையும் கண்ணுக்கு முன் கொண்டுவரும் காட்சிகள் திருக்குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

திருக்குர்ஆனில்   نار   என்ற வார்த்தை 121 வசனங்களில் இடம் பெறுகிறது.
جهنم  என்ற வார்த்தை 77 வசனங்களில் இடம்பெறுகிறது.அதை போல سعير  வார்த்தை 26 வசனங்களில் இடம்பெறுகிறது.
இவ்வாறு நரகம் குறித்த வார்த்தைகள் அதிகமாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருப்பதின் மூலம் அதன் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ள முடியும்.

பாவத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட கண்மணி முஹம்மது ஸல் அவர்கள் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடாத நாட்கள் இல்லை.அப்படியானால் நம் போன்றவர்களின் நிலை குறித்து என்ன சொல்வது?

நரகம் அச்சத்தின் மொத்த உருவம்.மரணத்தையே மரணமாக்கிவிடும். பார்ப்பவர்களின் பார்வைகளையும் இதயங்களையும் குழை நடுங்கச்செய்து விடும்.
அல்லாஹ்வின் கோபத்தின் மொத்த காட்சிகள்.நெருப்பே நெருப்பிலிருந்து பாதுகாப்பு தேடும் விந்தை!

ஒவ்வொரு மனிதனுக்கும் சுவர்க்கம் மற்றும் நரகத்தின் முன் காட்சிகள் (டிரைலர்) மரணத்திலும் மண்ணரையிலும் காட்டப்படும்.

நரகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழையும் அந்த நாள் உண்மையில் வெற்றிக்குறிய நாளாகும் என்று திருக்குர்ஆன் புகழ்ந்து கூறுகிறது.
பொதுவாக நரகம் குறித்து எச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு முஃமினுக்கு ஷைத்தான் ஒரு வித மோசடியான நம்பிக்கையை தருவான்.அது என்னவென்றால் என்றாவது ஒரு நாள் சுவனம் சென்று விடலாம் தானே!
ஆம்! முஃமினான யாவரும் இன்ஷா அல்லாஹ் சுவனம் செல்வோம்.ஆனால் நரகத்தின் குறைந்த பட்ச நாள் என்பது ஒரு ஹுக்ப்.حقب
ஒரு حقب என்பது நாற்பது ஆண்டுகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்அப்படியானால் நரகத்தில் கால்வைத்துவிட்ட ஒருவர் அதிலிருந்து வெளியேர குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகள் ஆகும்.(அந்த கொடிய நரகை விட்டும் அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.)

لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியி
ருக்கும் நிலையில்
இதனால் தான் ஸஹாபாக்களும் ஸாலிஹீன்களும் நரகத்தை நினைக்கும் போதெல்லாம் அழுது கண்ணீர் வடிப்பார்கள்.

     நல்லவர்களும் பயந்தார்கள்

ومر الحسن البصري رحمه الله بشاب وهو مستغرق في ضحكه جالس مع قوم، فقال له الحسن: "يا فتى هل مررت بالصراط؟ قال: لا، قال: فهل تدري إلى الجنة تصير أم إلى النار؟ قال: فما هذا الضحك؟ فلم ير الشاب ضحكًا مرة أخرى

ஹழ்ரத் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த ஒரு வாலிபரை கடந்து சென்றபோது அந்த வாலிபரை நோக்கி, இளைஞனே! ஸிராத் பாலத்தை நீ கடந்து விட்டாயா?என்று கேட்டார்.
அதற்கு அந்த வாலிபர்- இல்லை என்று பதில் கூறினார்.
நீ சுவனம் செல்வாயா?நரகம் செல்வாயா?என்பதை நீ அறிந்துவிட்டாயா? என்று மீண்டும் ஹஸன் ரஹ் அவர்கள் கேட்க, அவ்வாலிபர் இல்லை என கூறினார்.
அப்படியானால் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது?என்று கண்டித்தார்கள்.

وكان ميسرة يقول إذا أوى إلى فراشه: "ليت أمي لم تلدني، فقالت له أمه حين سمعته مرة من المرات: يا ميسرة! إن الله قد أحسن إليك، هداك إلى الإسلام؟ قال: أجل. ولكن الله تعالى بيَّن الله لنا أنا واردون على النار، ولم يبين لنا أنا صادرون منها"

மைஸரா ரலி அவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும்போது என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!என்று கூறினார்களாம்.
இதை பலதடவை கேட்ட அவர்களின் தாய் ஒரு தடவை,மகனே!இப்போது என்ன கெட்டுவிட்டது? அல்லாஹ் உனக்கு அழகான வாழ்வை தந்திருக்கிறான்.இஸ்லாத்தை தந்திருக்கிறான் என்று கூறியபோது,ஹழ்ரத் மைஸரா ரலி அவர்கள் தாயே!உண்மைதான்.ஆனால் அல்லாஹ் நரகத்தை கடந்து தான் சுவனம் செல்ல வேண்டும் கூறுகிறானே.அதை நினைத்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறினார்கள்

وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்

وقال معاذ بن جبل:" إن المؤمن لا يسكن روعه حتى يترك جسر جهنم وراءه

நரகத்தின் பாலத்தை கடக்கும் வரை ஒரு முஃமினின் பயம் நீங்காது என்று ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

وتفقد أحوال رعيته يوماً فمر بعجوز، فقالت:" يا هذا ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله خيراً، قال: ولمَ؟ فقالت: والله ما نالني من عطائه منذ تولى أمر المسلمين، قال عمر: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟ فقالت: سبحان الله! والله ما ظننت أن أحداً يلي على الناس ولا يدري ما بين مشرقها ومغربها، فبكى عمر وقال: واعمراه! كل أحد أفقه منك يا عمر حتى العجائز؟ ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر فإني أرحمه من النار، فقالت: لا تستهزئ بنا يرحمك الله، فقال: لست بهزاء، فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً، فبينما هو كذلك إذ أقبل علي وعبد الله بن مسعود، فقالا: سلام عليك يا أمير المؤمنين! فقالت العجوز: واسوأتاه! شتمت أمير المؤمنين في وجهه، فقال لها عمر: ما عليكِ يرحمك الله، ثم طلب رقعة من جلد، وكتب فيها: بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى به عمر من فلانة ظلامتها منذ ولي إلى يوم كذا وكذا بخمسة وعشرين ديناراً؛ فما تدعي عند وقوفه في الحشر بين يدي الله، فـعمر منه بريء، شهد على ذلك علي وابن مسعود"[سمط النجوم العوالي (3/68)]

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் தன் ஆட்சியின் நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.அப்போது வயதான மூதாட்
டியிடம் உமர் ஆட்சி எப்படி இருக்கிறது?என்று கேட்டார்கள்.
அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் அவருக்கு கைரான கூலி வழங்காமல் இருப்பானாக!என்றார்கள்.
அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்?என வினவினார்கள்.அவர் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.

உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?என்று ஜனாதிபதி கேட்டபோது,
அப்பெண்,சுப்ஹானல்லாஹ்!மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா.என்று கேட்டபோது உமர் ரலி அழுதுவிட்டு,  உமரே!உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உண்டு என்றார்கள்.
பெண்ணே!உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்றுகிறேன்.என்றார்கள்.  அதைக்கேட்ட அப்பெண்,என்னை கேலி செய்யாதீர் என்றாள்.அதற்கு உமர் ரலி, இல்லை, நான் கேலி செய்யவில்லை,உண்மையை தான் பேசுகிறேன் என்றபோது -ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக பெற்றுக்கொண்டார்கள்.
அப்போது எதார்த்தமாக அப்பக்கம் வந்த அலி ரலி,மற்றும் இப்னு மஸூத் ரலி ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.
அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களையா திட்டிவிட்டேன்.என்று பயந்து நடுங்கினாள்.
உடனே ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.அதில் எழுதப்பட்ட விஷயம்-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 15 தீனார் பெற்றுக்கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி, அலி ரலி மற்றும் இப்னு மஸ்வூத் ரலி ஆகிய இருவரையும் சாட்சியாக்கினார்கள்.

روى الإمام أحمد أن رَسُول اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِجِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ : " مَا لِي لَمْ أَرَ مِيكَائِيلَ ضَاحِكاً قَطُّ ؟ قَالَ : مَا ضَحِكَ مِيكَائِيلُ مُنْذُ خُلِقَتِ النَّارُ

மிஃராஜில் நபி ஸல் அவர்கள் கண்ட காட்சிகளில் ஒன்று:மீகாயீல் சிரிப்பதில்லை.அதைப்பற்றி நபி ஸல் அவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களி டம் கேட்டபோது,நரகம் படைக்கப்பட்டதிலிருந்து மீகாயீல் சிரிக்கவே இல்லை என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் கூறினார்கள்.

ومن حديث أبي بكر بن عياش قال [ صليت خلف فضيل بن عياض صلاة المغرب وإلى جانبي علي ابنه فقرأ الفضيل ألهاكم التكاثر فلما بلغ لترون الجحيم [ التكاثر الذي 6 ] سقط علي مغشيا عليه وبقي الفضيل لا يقدر يجاوز الآية ثم صلى بنا صلاة خائف قال ثم رابطت عليا فلما أفاق إلا في نصف الليل ]

அபூபக்கர் இப்னு இயாஷ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நான் ஒருநாள் புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களுக்கு பின்னே மஃரிப்  தொழுகையை தொழுது கொண்டிருந்தேன்.அப்போது என் பக்கத்தில் அவர்களின் மகனார் அலி ரஹ் அவர்கள் நின்றார்கள்.
புழைல் ரஹ் அவர்கள் சூரா தகாஸுர் ஆரம்பித்து ஓதினார்கள்.அதில் لترون الجحيم  நிச்சயமாக நீங்கள் நரகத்தை காண்பீர் என்ற வசனத்தை ஓதியதும் அவர்களின் மகன் அலி அவர்கள் மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்கள்.
இமாம் அவர்களோ அல்லாஹ்வின் அச்சத்தால் அந்த ஆயத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு அந்த தொழுகையை முடித்தார்கள்.
மயக்கமுற்ற அவர்களின் மகனார் நடு இரவில் தான் மயக்கம் தெளிந்தார்.

 فقال: زدنا يا كعب،
قال: قلت: «يا أمير المؤمنين، لو فتح من جهنم قدر منخر ثور بالمشرق ورجل بالمغرب لغلى دماغه حتى يسيل من حرها» فأطرق عمر مليا ثم أفاق فقال: زدنا يا كعب، قال: قلت: " يا أمير المؤمنين، إن جهنم لتزفر يوم القيامة زفرة ما يبقى ملك مقرب، ولا نبي مرسل إلا خر جاثيا على ركبتيه، حتى أن إبراهيم عليه السلام خليله ليخر جاثيا ويقول: نفسي نفسي، لا أسألك اليوم إلا نفسي " قال: فأطرق عمر مليا،
حلية الأولياء (5/368) ، الزهد والرقائق (1/75)

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கஃப் ரலி அவர்களிடம் உபதேசம் செய்யச்சொன்  னார்கள்.அப்போது கஃப் ரலி செய்த உபதேசம் இது:
கிழக்கு திசையில் இருக்கும் நரகம் இலேசாக திறக்கப்பட்டால் அதன் உஷ்னத்தால் மேற்கில் இருக்கும் மனிதனின் மூலை உருகிவிடும் என்றார்கள்
இன்னும் சொல்லுங்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறியபோது-
நரகம் நாளை மறுமையில் இலேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது, இறைவனுக்கு நெருக்கமான மலக்கும்,ரஸூல் மார்களும் மண்டியிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.அல்லாஹ்விடம் இந்த நரகத்தை விட்டும் தன்னை காப்பற்றச்சொல்லி வேண்டுவார்கள்.எந்தளவென்றால் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் கூட தனக்காக வேண்டுவார்கள்.என்று கஃப் ரலி அவர்கள் கூறியபோது உமர் ரலி தன் தலையை தொங்கவிட்டு நீண்டநேரம் இருந்தார்கள்.

அல்லாஹ்வுக்கு நெருக்கமான வானவர்களும்,நபிமார்களும்,ஸஹாபிகளும்,  ஸாலிஹீன்களும் இந்தளவிற்கு பயந்து நடுங்கினார்கள் என்றால் அப்படிப்பட்ட நரகத்தை பற்றி என்ன சொல்வது?

வாருங்கள் அதை சுற்றிப்பார்போம்....இல்லை...இல்லை...எட்டிப் பார்ப்போம். பரவசம் அடைவதற்கல்ல,பாதுகாப்பு தேடுவதற்கு.

நரகம் உருவான வரலாறு:

أُوقد على النار ألف سنة حتى احمرت، ثم أوقد عليها ألف سنة حتى ابيضت، ثم أوقد عليها ألف سنة حتى اسودت؛ فهي سوداء مظلمة

நரகம் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அப்போது அது சிகப்பு நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு தீ மூட்டப்பட்டது. அப்போது அது வெண்மை நிறத்தில் தோற்றம் தந்தது.
பின்பு மீண்டும் ஆயிரம் ஆண்டு நெருப்பு மூட்டப்பட்ட்து.அது கடும் இருளான கருப்பு நிறத்தில் மாறிவிட்டது.
மூவாயிரம் ஆண்டுகள் தீ மூட்டப்பட்ட ஒரு நெருப்புக்குண்டத்தை பற்றி எப்படி வர்ணிக்க முடியும்?

அந்த நெருப்பும் உலக நெருப்பும்:

عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال: «ناركم هذه التي يوقد ابن آدم جزء من سبعين جزءًا من حر جهنم،

ஆதம் அலை அவர்கள் பயன்படுத்திய நெருப்பு அதில் எழுபதில் ஒரு பகுதிதான்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال صلى الله عليه وسلم :" اشتكت النار على ربها, فقالت رب أكل بعضي بعضاً, فأذن لها بنفسين: نفس في الشتاء ونفس في الصيف, فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير

நெருப்பு அல்லாஹ்விடம் முறையிட்டது.ரப்பே!என்னில் சிலது சிலதை சாப்பிடுகிறது என்றபோது இரண்டு தடவை மூச்சு விட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்கினான்.குளிர் காலத்தில் ஒரு தடவையும் கோடைகாலத்தில் ஒரு தடவையும்.அதையே நீங்கள் கோடைகால கடும் வெப்பமாகவும் குளிர் கால கடும் குளிராகவும் உணர்கிறீர்கள் என்று ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال النبي صلى الله عليه وسلم : (( يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة ، فيُصبغُ في النار صبغة . ثم يقال : يا ابن آدم ! هل رأيت خيراً قط ؟ هل مرَّ بك نعيم قطُّ ؟ فيقول : لا والله يا رب

நாளை மறுமையில் உலகின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்தவனை கொண்டுவரப்பட்டு நரகில் ஒரு தடவை முக்கப்படும்.இப்போது சொல் உலகில் ஏதும் இன்பம் அனுபவித்தாயா?என்று கேட்கப்படும்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக!இல்லை என்பான்.

قَالَ صلى الله عليه وسلم : " يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا " [ رواه مسلم

நாளை மறுமையில் நரகம் எழுபதாயிரம் கடிவாளம் இடப்பட்டு,அதன் ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதாயிரம் மலக்குகள் பிடித்து இழுத்துக்கொண்டு வருவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நரகத்தின் ஆளம்:

رواه أبو هريرة رضي الله عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم , إذ سمع وجبة (أي سقطة) فقال النبي صلى الله عليه وسلم :" تدرون ما هذا؟ قلنا: الله ورسوله أعلم. قال: هذا حجر رمي به في النار منذ سبعين خريفاً, فهو يهوى في النار إلى الآن" [مسلم]
நபி ஸல் அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தபோது ஒரு கல் விழும் சப்தம் கேட்டோம்.அப்போது ஸல் அவர்கள் இது என்ன தெரிகிறதா?என கேட்டார்கள் நாங்களோ,அல்லாஹ்வும் அவனின் தூதரும் மிக அறிந்தவர்கள் என்றோம்.
அதற்கு நபி ஸல் அவர்கள் இது எழுபது ஆண்டிற்கு முன் நரகை நோக்கி வீசப்பட்ட கல்லாகும் இப்போது தான் அதை அடைந்திருக்கிறது என்றார்கள்.

يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ

நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!

நரகத்தின் வேதனைகள்:

பசி.தாகம்.பயம்.நெருக்கடி.உஷ்னம்.கடும் புகை போன்ற பல்வேறு தண்டனைக்கு உட்படுத்தப்படும்.

وروى ابن عباس موقوفًا: "إذا جاع أهل النار استغاثوا من الجوع، فأغيثوا بشجرة الزقوم فأكلوا منها ".

நரகவாசிகளுக்கு பசி வந்து கத்தும்போது அவர்களுக்கு கள்ளி மரம் உணவாக வழங்கப்படும்.

يقول الرسول صلى الله عليه وسلم عن الزقوم: «لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معايشهم؛ فكيف بمن تكون طعامه؟!».

ஒரு சொட்டு கள்ளிமரம் துன்யாவில் பட்டுவிட்டால் ஒட்டுமொத்த துன்யாவும் கெட்டுவிடும்.அதையே உணவாக சாபிட்டால் என்னாகும்?

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."

إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلْيِ الْحَمِيمِ

நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே). பாவிகளுக்குரிய உணவு. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும். வெந்நீர் கொதிப்பதைப் போல்.

مِّن وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّاءٍ صَدِيدٍ ﴿١٦﴾ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّـهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

ரமலானின் ஒவ்வொரு இரவுகளும் நரகிலிருந்து விடுதலை செய்யப்படும் இரவாகும்.
நபி ஸல் அவர்கள் ரமலான் காலத்தில் நான்கு விஷயங்கள் அதிகமாக செய்யச்சொன்னார்கள்
1.ஷஹாதத் கலிமா   இஸ்திஃபார்   3.சுவனத்தை வேண்டுதல்   4.நரகை விட்டும் பாதுகாப்பு தேடல்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثًا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ ، وَمَنِ اسْتَعَاذَ بِاللَّهِ مِنَ النَّارِ ثَلاَثاً قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ " [ رواه أحمد وابن ماجة بإسناد صحيح

யார் அல்லாஹ்விடம் மூன்று தடவை சுவனத்தை வேண்டுவாரோ, யா அல்லாஹ்! அவரை சுவனத்தில் நுழைத்துவிடு என்று சுவனம் அவருக்காக துஆச்செய்யும்.அவ்வாறு மூன்று தடவை யார் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுவாரோ யா அல்லாஹ் அவரை நரகை விட்டும் பாதுகாப்பாயாக என நரகம் அவருக்காக துஆச்செய்யும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

   


12 comments:

  1. கடுமையான கடும் உஷ்னமான அந்த நரகத்தை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் நரகத்தை பற்றி பற்றி ரொம்ப தெளிவான பயான் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

      Delete
  2. அல்ஹம்துலில்லாஹ்
    மிக அவசியமான குர்ஆன் ஹதீஸ்
    அல்லாஹ்அவற்றை விளங்கி நடக்க கூடிய பாக்கியத்தை தருவானாக! ஆமீன்

    ReplyDelete
  3. Alhamthu lillah narakam nadunga vaikum yandral
    intha thalaippil dharalamaga takavalkalai
    thanthu
    tavaru seyvadharkhe nadukkathai thanthu viteerhal

    ReplyDelete
  4. جزاك الله خيرًا...
    ربنا اصرف عنا عذاب جنهم إن عذابها كان غرامًا إنها ساءت مستقرًا ومقامًا

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லா ...நல்லபதிவு

    ReplyDelete
  6. Alhamthulillah. Super bayan

    ReplyDelete
  7. கடுமையான கடும் உஷ்னமான அந்த நரகத்தை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் நரகத்தை பற்றி பற்றி ரொம்ப தெளிவான பயான் அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  8. Masha Allah Barakallahu fika ya halarat fi ahlika va hayatika va cihhatika va towvil uomurika fi kulli makanin va ihsanin Aamen Aamen Aamen ya rabbal aalameen

    ReplyDelete
  9. அல்லாஹ் நரகத்தை விட்டு நம்மைப் பாதுகாப்பானாக

    ReplyDelete
  10. Alhamdulillah Masha Allah

    ReplyDelete