Wednesday 24 July 2013

ஸகாத் ஒரு வறுமை ஒழிப்புத்திட்டம்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் முக்கிய இடத்தை பிடிக்கிறதுஸகாத்திற்கும் ரமலான் மாதத்திற்கும் மட்டும் தொடர்பல்ல,
மாறாக அது எல்லா மாதங்களுடனும் சம்பந்தப்பட்டதாகும்.மக்கள் அதிகமான நன்மைகள் நாடி ரமலானில் ஸகாத்தை கொடுக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கொண்டனர்.

இதனடிப்படையில் ஸகாத் பற்றிய ஷரீஆ கண்ணோட்டத்தை உங்களின் கவனத்திற்கு தரப்படுகிறது.

உண்மையில் நம் சமூகத்தில் தொழுகையின் விஷயத்தில் விழிப்புணர்வு பெற்ற அளவுக்கு ஸகாத் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக பார்க்க முடிகிறது.எத்துனையோ பெரும் தொழுகையாளிகள் ஸகாத் என்றால் வெகு தூரத்தில் நிற்கின்றனர்.இதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும்

முதலாவது:பணத்தின் மீது இருக்கும் மோகம்.

இரண்டாவது:தொழுகை அளவுக்கு ஸகாத் வலியுறுத்தி கூறப்பட்ட கடமை யல்ல என்று அவர் விளங்கிக்கொண்டது.

இன்றைக்கு பணம் சம்பாதிப்பதில் மனிதன் மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறான்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் பணத்தை இருமுகத்தன்மை கொண்டதாக வர்ணிக்கிறான்.

பொருளும் பிள்ளைகளும் உலகின் அழகுப்பொருட்கள்.

பொருளும் பிள்ளைகளும் சோதனைப்பொருட்கள்.

நாம் சம்பாதிக்கும் பொருள் அழகாக ஆகுவதும்,ஆபத்தாக மாறுவதும் நாம் பயன்படுத்துவதில் உள்ளது.
அளவோடும்.முறையோடும் இருந்தால் அது நன்மை பயக்கும்.அளவுக்கு அதிகமாக இருந்தால் பூமியில் அது குழப்பம் ஏற்படுத்த காரணமாகி விடும்.

இங்கே நாம் சம்பாதிக்கும் ஹலாலான வருமானத்திற்கும் அல்லாஹ்விடம் மறுமையில் கணக்கு காட்ட வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவார்கள்.

முஸ்லிம்களுக்கு பணத்தின் மீது ஆசையும் மரணத்தின் மீது வெறுப்பும் அதிகமானால் தங்களின் ஈமானின் பலத்தை இழப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அதனால் தான் நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு முன் சமூகத்தில் பேனுதலுடன் வாழ்ந்த நல்லவர்களின் வாழ்வை உதாரணமாக எடுத்துக்கூறுவார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا  رواه البخاري ومسلم

ஒருவர் இன்னொருவரிடம் ஒரு நிலத்தை வாங்குகிறார்.நிலம் வாங்கியவர் அந்த நிலத்தின் அடியில் தங்க புதையல் இருப்பதை காண்கிறார்.உடனே அதை எடுத்துக்கொண்டு நிலம் வாங்கியவரிடம் ஓடிவருகிறார்.

உங்களிடம்  நான் நிலத்தை மட்டுமே வாங்கினேன்.அதில் தங்க புதையல் இருக்கிறது.அது எனக்கு சொந்தமானதல்
.உங்களுக்கே பாத்தியப்பட்டது.எனவே பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிலத்தை வாங்கியவர் கூறினார்.

அதற்கு நிலத்தை விற்பனை செய்தவரோ,நான் உங்களுக்கு அந்த பூமியை விற்றுவிட்டேன்.அதில் இருக்கும் அத்துனையும் உங்களுக்கே சொந்தமானது எனவே நீங்களே எடுத்துச்
செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

இறுதியில் இருவருக்கிடையில் விவாதமாகி
ப்போனது.
நீதிபதியிடம் அந்த வழக்கை கொண்டுவந்தனர்.
இரு தரப்பையும் விசாரனை செய்த நீதிபதி,உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா?என்று கேட்டார்.
அதில் ஒருவர் எனக்கு ஆண்மகன் உண்டு என்றும், மற்றவர் எனக்கு ஒரு பெண்மகள் உண்டு என்றும் கூறினர்.
அதை கேட்ட நீதிபதி அவர்கள் உங்களின் மகனுக்கு உங்கள் மகளை நிகாஹ் செய்து வையுங்கள்.நீங்கள் இருவரும் சம்பந்தியாகி விடுங்கள். அந்த தங்கத்தை அவ்விருவருக்கும் சொந்தமாக்கி விடுங்கள் என்று தீர்ப்புச்செய்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தங்களின் தோழர்களின் வாழ்வை பணம் ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வரலாறுகளை சொல்லி வளர்த்தார்கள்.
எனவே இஸ்லாமிய சமூகத்தில் ஸகாத் பின்னுக்கு தள்ளப்பட்ட்திற்கு பண மோகம் காரணமாக இருக்குமானால் அவர்கள் இந்த வரலாற்றை கொஞ்சம் சிந்திக்கட்டும்.

தொழுகையும் ஸகாத்தும்

இரண்டாவது தொழுகை பற்றி வலியுறுத்தப்பட்ட அளவிற்கு ஸகாத் வலியுறு த்தப்படவில்லை என்று யார் சொன்னது?
திருக்குர்ஆனில் சுமார் 27 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்து கூறுகிறான்.30 இடங்களில் ஸகாத்தை தனியாக கூறுகிறான்சூரா தவ்பா முழுவதும் ஸகாத் பற்றிய வலியுறுத்தல் அதிகமாக கூறப்படுகி றது, மாத்திரமல்ல ஸகாத் கடமையாக்கப்பட்ட வசனமும் அதில் தான் உள்ளது.

 وقد قال عبد الله بن عباس رضي الله عنهما: (ثلاث مقرونة بثلاث، لا تقبل واحدة منهن إلا بالأخرى: لا تقبل طاعة الله إلا بطاعة رسوله، ولا تقبل الصلاة إلا بأداء الزكاة، ولا يقبل الله شكره إلا بشكر الوالدين

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹுத்தஆலா மூன்று அமல்களை மூன்று அமல்களுடன் சேர்த்து கூறுகிறான்.எந்த அமலை எந்த அமலுடன் சேர்த்து கூறுகிறானோ அதில் ஒன்றை செய்து மற்றொன்றை விட்டுவிட்டால் அந்த செய்த அமலையும் அல்லாஹ் கபூல் செய்யமாட்டான்.

முதலாவது:

قُلْ أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள் என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் ரஸூலுக்கு கட்டுப்படவில்  லையானால் அல்லாஹ் அவரை ஏற்க மாட்டான்.

இரண்டாவது:

أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ

நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்.ஆனால் தன் பெற்றோருக்கு நன்றி செலுத்தவில்லையானால் அவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

மூன்றாவது:

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; என்று கூறுகிறான்.
ஒருவர் தொழுகையை நிறைவேற்றுகிறார்.ஆனால் ஸகாத் கொடுப்பதில்லை என்றால் அவரின் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று கூறுகிறார்கள்.
நம் ஷரீஅத்தில் தொழுகையும் ஸகாத்தும் பிரிக்கமுடியா வணக்கமாகும். அதனால் தான் நபி ஸல் அவர்கள் மரணித்த சமயம் ஏற்பட்ட குழப்பங்களில் ஸகாத் பற்றிய பிரச்சனையும் ஒன்று.அனைத்து பிரச்சனைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஸகாத்தை மறுக்கும் கூட்டத்தை என்ன செய்யலாம்? என்று உமர் ரலி அவர்களிடம் ஆலோசனை செய்கிறார்கள்.
உமர் ரலி அவர்கள், இப்போது கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்.இந்த பிரச்சனை யை பிறகு பார்க்கலாம் என்றார்கள்.
இதைக்கேட்ட அபூபக்கர் ரலி அவர்கள்,அறியாமைக்காலத்தில் வீரராக வலம் வந்த உமர் இஸ்லாத்திற்கு வந்ததும் கோழையாகி விட்டாரோ?என்றார்கள்.

தொழுகையை போல ஸகாத்தும் முக்கியமான கடமை.தொழுகையை மறுத்தவர் எப்படி காபிராகி விடுவாரோ அவ்வாறு ஸகாத்தை மறுப்பவரும் காபிரே.

والله، لأقاتلنّ من فرق بين الصلاة والزكاة. والله، لو منعوني عقالاً كانوا يؤدونه لرسول الله لقاتلتهم عليه)
 அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தொழுகையையும் ஸகாத்தையும் யார் பிரித்து பேசுவாரோ அவருடன் நான் போர் செய்வேன்.நபி ஸல் அவர்கள் ஹயாத்தாக இருந்தபோது ஒட்டகத்தின் கயிற்றுக்கு ஸகாத் கொடுத்தவர் இப்போது அதை தருவதற்கு மறுத்தால் அவரின் மீது நான் போர் தொடுப்பேன் என்றார்கள்.

قال شیخ الإسلام ابن تیمیة رحمھ لله تعالى: "وقد اتفق الصحابة والأئمة بعدھم على قتال مانعي الزكاة وإن كانوا یصلون الخمس،
ویصومون شھر رمضان

 ஸகாத்தை மறுப்பவன் தொழுகையாளியாக இருந்தாலும் நோன்பாளியாக இருந்தாலும் அவனுக்கு எதிராக போர் தொடுக்கவேண்டும் எனபது ஸஹாபாக்களின் இஜ்மாவான கருத்தாகும் என இப்னு தைமிய்யா கூறுகிறார்கள்.

 தொழுகை உடல் வணக்கம் என்றால் ஸகாத் பொருள் வணக்கம்.

ஸகாத் வறுமை ஒழிப்பு திட்டம்

ஸகாத் ஹிஜ்ரி 2 ம் ஆண்டு கடமையாக்கப்படுகிறது.சமுதாயத்தின் வறுமை ஒழிப்புக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்திய அற்புதமான திட்டம் இந்த ஸகாத்.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வறுமை ஆபத்தானது.எந்த சமூகத்தில் வறுமை தலைவிரித்தாடுமோ அந்த சமூகத்தில் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

சமுதாயத்தில் நடைபெறும் பெரும் குற்றங்களான திருட்டு,கொலை கொள்ளை அத்துனையும் வறுமைக்காகவே நடக்கிறது.
உச்சகட்டமாக வறுமை இறைமறுப்பில் சேர்க்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாம் கூறும் வழிமுறையில் ஸகாத் வசூலிக்கப்பட்டு,அதை முறையாக விணியோகம் செய்யப்பட்டால் நிச்சயமாக வறுமைக்கு முடிவு கட்டிவிட முடியும்.

أن النبي -صلى الله عليه وسلم- أرسله إلى اليمن وأمره أن يأخذ الزكاة من أغنيائهم ويردها على فقرائهم.
وكذلك نفَّذ معاذ وصية النبي -صلى الله عليه وسلم-، ففرّق زكاة أهل اليمن في المستحقين من أهل اليمن، بل فرّق زكاة كل إقليم في المحتاجين منه خاصة

நபி ஸல் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலி அவர்களை யமன் தேசத்துக்கு ஆளுனராக அனுப்பி வைக்கும்போது செய்த உபதேசங்களில் ஒன்று:
அந்நகரத்தின் செல்வந்தர்களிடமிருந்து ஸகாத் வசூல் செய்து அந்நகரத்தின் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றார் கள்.
ஹழ்ரத் முஆத் ரலி அவர்களின் அண்ணலாரின் உபதேசத்தை அவர்களின் காலத்துக்கு பின்னும் அமல்படுத்தி வந்தார்கள்.யமன் தேசத்தின் ஒவ்வொரு மாவட்ட்த்தில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு ஸகாத் பங்கு வைக்கப்படும்.

روى أبو عبيد: أن معاذ بن جبل لم يزل بالجند (الجند موضع باليمن). إذ بعثه رسول الله -صلى الله عليه وسلم- إلى اليمن حتى مات النبي -صلى الله عليه وسلم- وأبو بكر، ثم قدم على عمر، فرده على ما كان عليه، فبعث إليه معاذ بثلث صدقة الناس، فأنكر ذلك عمر، وقال: لم أبعثك جابيًا ولا آخذ جزية، ولكن بعثتك لتأخذ من أغنياء الناس فترد على فقرائهم، فقال معاذ: ما بعثت إليك بشيء وأنا أجد أحدًا يأخذه مني - فلما كان العام الثاني بعث إليه شطر الصدقة، فتراجعا بمثل ذلك، فلما كان العام الثالث بعث إليه بها كلها، فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك، فقال معاذ: ما وجدتُ أحدًا يأخذ مني شيئًا (نفس المرجع ص596،

உமர் ரலி ஆட்சியில் முஆத் ரலி அவர்கள் யமன் தேசத்தில் வசூல் செய்யப்ப ட்ட ஸகாத்தில் மூன்றில் ஒரு பகுதியை மதீனாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கு பிடிக்கவில்லை.அதனால் முஆத் ரலி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், உம்மை ஸகாத் வசூல் செய்து மதீனாவுக்கு அனுப்பவோ,அல்லது ஜிஸ்யா வரியை வசூல் செய்து அனுப்பவோ உம்மை நான் ஆளுனராக தேர்வு செய்யவில்லை.
அங்கு வசூல் செய்த ஸ்காத் நிதியை அங்குள்ள ஏழைகளுக்கு பங்கு வைப்பதே மிகவும் பொருத்தமாகும்.என்றார்கள்.
நான் இங்குள்ள ஏழைகளுக்கு கொடுக்காமல் மத்திய அரசான மதீனாவுக்கு அனுப்பி விட்டேன் என்று தாங்கள் தவறாக எண்ணிக்கொண்டீர்.ஆனால் உண்மை நிலை இங்கு ஸகாத் பெரும் ஆள் இல்லை என்றார்கள்.
மறு வருடம் ஸகாத் நிதியில் பாதியை அனுப்பினார்கள்.மூன்றாம் ஆண்டு முழு தொகையையும் மதீனாவுக்கு அனுப்பி வைத்து எமனில் ஏழைகள் இல்லை என்று கூறினார்கள்.
இஸ்லாம் கொண்டுவந்த ஸகாத் திட்டத்தை சரியாக விளங்காததும்,அதை சரியாக அமல்படுத்தாத்தும் தான் இன்னும் இஸ்லாமிய சமூகத்தில் ஏழ்மை ஒழிக்கப்படவில்லை.


 وليفيضنّ المالُ حتى يهمَّ الرجل مِنْ يقبلُ صدقتَهُ

ஸகாத் கொடுக்க ஆள் இருக்கும்.வாங்க ஆள் இருக்காது இப்படி ஒரு நிலை என் உம்மத்தில் வரும் என்று நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச்செய்ததை ஹழ்ரத் முஆத் ரலி அமல்படுத்திகாட்டினார்கள்.
இதை இன்னும் விசாலமாக அரபக முழுவதும் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் செயல்படுத்தினார்கள்.

قال البيهقي : قد وقعت الثالثة في زمن عمر بن عبد العزيز ، ثم أخرج عن عبد الرحمن بن زيد بن الخطاب قال : إنما ولِيَ عمر بن عبد العزيز سنتين ونصفاً ، والله ما مات عمر بن عبد العزيز حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول : اجعلوا هذا حيث ترون في الفقراء ، فما يبرح حتى يرجع بماله ، نتذكر من يضعه فيهم فلا نجد فيرجع بماله
இரண்டரை ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் வஃபாத்தாகும்போது எங்களில் ஒவ்வொருவரும் ஒரு பெரும் தொகைக்கு சொந்தமாக இருந்தோம்.
ஏழைகள் இல்லாத அரபுலகத்தை அன்று நாங்கள் கண்டோம்.ஒருவர் தன் வீட்டை விட்டு ஸகாத் பணத்துடன் வருவார்.அதை வாங்கும் ஆளின்றி அத்துடன் திரும்பி செல்வார் என அப்துர்ரஹ்மான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸகாத்தின் பயன்பாடுகள்:

1.அல்லாஹ் கொடுத்த பொருளுக்கு நன்றி செலுத்துவது.
திருக்குர்ஆனில் ஸகாத்தை வலியுறுத்தும்போது அல்லாஹ்வின் பொருளை கொடுங்கள் என்றும்,நாம் வழங்கியதிலிருந்து கொடுங்கள் என்றும் கூறுகிறான்.
காரூனுக்கு அல்லாஹ் ஸகாத்துக்கான கட்டளையிடும்போது அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போல நீ உபகாரம் செய் என்று கூறினான்.

2.ஸகாத் பொருளுக்கான பாதுகாப்பு.

وعَن الحسن بنِ عليّ رضي الله عنه قال: قالَ رسول الله : ((حصِّنوا أموالَكم بالزّكاةِ، وداووا مرضَاكم بالصّدقة، واستقبِلوا أمواجَ البلاءِ بالدعاء والتضرُّع)) رواه الطبرانيّ والبيهقيّ

உங்களின் பொருட்களை ஸகாத்தை கொண்டு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் நோய்களுக்கு ஸதகாவை கொந்து மருந்திடுங்கள்.
உங்களின் சோதனைகளை துஆவின் மூலம் சரி செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

عن جابر رضي الله عنه قال: قال رجل: يا رسول اللهِ، أرأيتَ إن أدَّى الرجل زكاةَ ماله، فقال رسول الله : ((مَن أدَّى زكاةَ ماله فقد ذهبَ عنه شرُّه)) رواه الحاكم والطبرانيّ في الأوسط واللفظ له وابن خزَيمة.
தன் பொருளுக்கான ஸகாத்தை நிறைவேற்றிய ஒரு மனிதர் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன?என நபி ஸல் அவர்களிடம் கேல்விகேட்டபோது- தன் பொருளின் ஸகாத்தை செலுத்தியவர் அந்த பொருளை விட்டும் தீங்கு போய்விட்டது என்றார்கள்
3.ஸகாத் பொருளை சுத்தப்படுத்துகிறது.

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

4.நாளை மறுமையில் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாக்கிறது.
ஸகாத் கொடுக்காதவரின் தண்டனை பற்றி அல்குர்ஆன்:

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّـهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ
இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).

5.ஏழைகளின் துஆவை பெற்றுத்தருகிறது.
6.மற்ற பொருட்களில் பரக்கத் செய்யப்படுகிறது

எந்த பொருட்களுக்கு ஸகாத் கடமை?

1.தங்கம்     2.வெள்ளி       3.பணம்      4.வியாபார பொருட்கள்     5.விளைச்சல்கள்   6.கால்நடைகள்.
தங்கத்தில் 85 கிராம் ஸகாத்தை நிர்ணயிக்கும்.வெள்ளியில் 595 கிராம் நிர்ணயிக்கும்.பணத்திலும் வியாபார பொருளிலும் 595 கிராம் வெள்ளியின் விலை நிர்ணயிக்கும்.
கால்நடைகளில் ஒட்டகத்தில் 5 ம்-மாட்டில் 30ம்-ஆட்டில் 40 ம் வைத்திருப்பவர் ஸகாத்திற்கான நிஸாபை அடைந்தவர்.
இங்கு கூறப்பட்ட ஸகாத்தின் அளவு என்பது ஒரு மனிதனின் தேவைகள் போக உள்ள சேமிப்புகளில் கணக்கிடப்படும்.
அதனால்தான் வசிக்கும் வீடு,வாகனம்,பயன்படுத்தும் பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்திருந்தாலும் அவைகளில் ஸகாத் கடமை இல்லை.
மேலும் ஸகாத் தொகை கடமையானதும் நிறைவேற்றத்தேவையில்லை.   மாறாக ஓராண்டு நிறைவு பெற்ற பின்னே நிறைவேற்ற வேண்டும்.
மேல்மிச்சமான வீடுகள்,நிலங்கள் இவைகளுக்கு ஸகாத் இல்லை.இவைகள் மூலம் வருமானம் வருமானால் அவைகளில் ஸகாத் கடமை.ஒருவேலை நிலங்களை வியாபார நோக்கத்தில் வாங்கிப்போட்டு இருந்தால் அவைகளில் ஸகாத் கடமை.
அடமான பொருளுக்கு ஹனபியில் ஸகாத் இல்லை.ஷாபியில் உண்டு.
அணியும் தங்கத்திற்கு ஹனபியில் ஸகாத் கடமையாகும்.ஷாபியில் அளவுக்கு அதிகமான நகைகளில் மட்டும் ஸகாத் கடமை.அந்த அளவு நடைமுறை கவனித்து மாறுபடும்.
கடனை பொருத்தவரை அதை கொடுத்தவரே அதற்கு சொந்தம் என்பதால் அவர் அதற்கும் ஸகாத் கொடுக்க வேண்டும்.ஆனால் ஒரு சலுகை பணம் கைக்கு வந்தபிறகும் கொடுக்கலாம்.
அட்வான்ஸ் பணத்திற்கு பணத்தை பெற்றவரே பொருப்புதாரி என்ற அடிப்படையில் வீடு,அல்லது கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணத்திற்கு வீடு மற்றும் கடையின் உரிமையாளர் ஸகாத் கொடுக்க வேண்டும்.
ஸகாத்தின் காலத்தை ஹிஜ்ராவை கணக்கிட வேண்டுமே தவிர சூரிய கணக்கை கொண்டல்ல.
ஸகாத் பெறுபவருக்கு ஸகாத்தை முழுமையாக சொந்தமாக்க வேண்டும்

ஸகாத் பெறத்தகுதியானவர்கள்.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّـهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.


12 comments:

  1. alhamdhu lillah! miga arumaai...

    ReplyDelete
  2. innaru katturai sirppukkal ulla sambavankal vendumalhamthu lillah pathibbu sekaritha moulavikku nanrikal pala by a.m.abdul karreem baqavi virudhunagar 9842978668

    ReplyDelete
  3. Voor Makkalai vilikka. Vaikum. Ungal toguppu. Arpudam Jazakallah Alhamdulillah

    ReplyDelete
  4. Voor Makkalai vilikka. Vaikum. Ungal toguppu. Arpudam Jazakallah Alhamdulillah

    ReplyDelete
  5. alhamdhu lillah ரமலானிலும் தங்களின் சேவைகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லா .உங்கள் சேவையை அல்லா பொருந்திக்கொள்வானாக ் ஆமீன்

    ReplyDelete
  7. அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக! உங்கள் சேவையை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

    ReplyDelete