Thursday 23 October 2014

உள்ளங்களை கவரும் இஸ்லாம்


அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமான இஸ்லாம். இன்று உலகில் மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாக பல்வேறு நாடுகளை சார்ந்த பிரபலமான சில மனிதர்கள் இஸ்லாத்தை ஏற்றுருக்கின்றார்கள். இஸ்லாத்தின் அதிவேகமான இந்த வளர்ச்சி அதனுடைய எதிரிகளுக்கு மிகப்பெரிய கலக்கத்தையும் அச்சத்தையும் வயிற்று எரிச்சலையும் தந்துருக்கின்றது. எனவே அந்த எதிரிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுபடுத்துவதற்காகவும் அதனுடைய மாண்பை சீர்குலைப்பதற்காகவும்   பல்வேறு சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள் . அவைகளில் மிக முக்கியமான ஒன்று என்னவெனில் இஸ்லாத்திற்கும் அதனுடைய அடிப்படை கொள்கைகளுக்கு கடுகளவு கூட சம்பந்தமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை இஸ்லாத்தின் மீது சுமத்துவதாகும். அந்த குற்றச்சாட்டுகள் கீழே வரிசைப்படுத்தப்படுகிறது. 

இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம். 

மதரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது. இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகிறது. இஸ்லாமிய வாலிபர்கள் மாற்றுமத பெண்களை காதலித்து மதமாற்றம் செய்து இஸ்லாத்தை வளர்க்கின்றார்கள். இன்னும் பல ;

நாம் என்ன செய்ய வேண்டும் 

எதிரிகளின் இந்த பொய் பிரசாரத்தை முறியடிப்பதற்கும் இஸ்லாத்தின் கண்ணியத்தை காப்பதற்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இரண்டு காரியங்கள் செய்ய கடமைபட்டிருக்கின்றான்.

1. இஸ்லாத்தை நமக்குள்  மாத்திரம் நாம் பிரசாரம் செய்தால் மட்டும் போதாது . மாறாக மாற்று சமய மக்களுக்கும் போதிக்க வேண்டும் . அத்துடன் இஸ்லாத்தின் சிறப்புகளையும் அதனுடைய உன்னத குணங்களையும் பிறசமய மக்களுக்கு இஸ்லாம் தந்திருக்கும் உரிமைகளையும் மரியாதைகளையும் அவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.

2. இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் அனைத்து நற்பண்புகளையும் நமது  வாழ்க்கையில்  கொண்டு  முன்மாதிரி மனிதனாக நாம் வாழ வேண்டும் .அதிலும் குறிப்பாக மாற்று சமய மக்களிடம் பழகும்போது நம்மிடம் தீயகுணங்கள், தீயசெயல்கள் வெளிப்பட்டு விடாமல் பார்த்து கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்கள் குரானையோ ஹதீஸையோ வரலாறுகளையோ பார்த்து இஸ்லாத்தை விளங்குவதில்லை மாறாக நமது வாழ்க்கையை பார்த்து தான் இஸ்லாத்தை எடை போட்டு பார்க்கின்றார்கள். 

சஹாபாக்களின்  வாழ்க்கையும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் 
நபித்தோழர்களின் ஒவ்வொரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு வளர்ச்சியை தந்தது. இன்னும் சில சஹாபாக்களின் மரணமும் கூட அவர்களின் இழப்பை ஈடு செய்யும் அளவிற்கு முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.

روى ثمامة بن عبد الله بن أنس أن حرام بن ملحان، وهو خال أنس: لما طعن يوم بئر معونة أخذ من دمه، فنضحه على وجهه ورأسه، وقال: فزت ورب الكعبة.
وأخبار عامر بن الطفيل انه رفع إلى السماء وذكر أن الذي قتله جبار بن
سلمى الكلابي قال: ولما طعنه بالرمح قال فزت ورب الكعبة ثم سأل جبار بعد ذلك: ما معنى قوله فزت قالوا: يعني بالجنة، فقال: صدق والله ثم أسلم جبار بعد ذلك لذلك


            ஹிஜ்ரி 4ம் ஆண்டு சபர் மதம் நடைபெற்ற பிஹ்ரு மஊனா என்ற போரில் ஹராம்பின் மில்ஹான் (ரலி) அவர்கள் குத்தி கொல்லப்பட்ட நேரத்தில் தன் மீது வடிந்த இரத்தத்தை தனது கையால் எடுத்து அதை மகிழ்ச்சியுடன் தனது முகத்திலும் தலையிலும் தெளித்தார்.                       ஜப்பார் பின் அல்மா என்பவர் தான் ஹராம் (ரலி) அவர்களை கொலை செய்தார். அவ்வாறு ஈட்டியால் அவரை கொன்ற நேரத்தில் ஹராம் (ரலி) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது  சத்தியமாக நான் வென்று விட்டேன் என்று சொன்னார். இதனுடைய பொருள் முஸ்லிம்களிடத்தில் ஜப்பார் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள் அவருக்கு அதன்மூலம் சுவர்க்கம் கிடைத்தது. எனவே தான் அவர் சொன்னார் என்றார்கள் . இதற்கு பிறகு ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன வார்த்தையை ஜப்பார் நன்றாக சிந்தித்தார். கொலை செய்த நாம் தான் வென்றதாக எண்ணினோம் ஆனால் கொல்லப்பட்ட அவர் வென்றதாக சொன்னார் என்றால் ஒருவர் தன் உயிரை விடவும் மேலாக மதிக்கும் ஒரு மார்க்கம் சத்திமானதாகத்தான்  இருக்க வேண்டும்  என்று யோசித்து ஹராம் (ரலி) அவர்கள் சொன்ன அந்த வார்த்தையின் காரணமாக ஜப்பார் முஸ்லிமாக ஆனார்.

நூல். பிதாயா வன்னிஹாயா

எனவே கொல்லப்பட்ட அந்த சஹாபி தன் இடத்தில் இருந்து தனக்கு பிறகு இஸ்லாத்திற்கு சேவையாற்ற ஒருவரை உருவாக்கிவிட்டு தான் மரணமானார். 


சகோதர சமுதாய மக்களும் சர்தார் நபியின் உதவியும்.

عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنَمًا بَيْنَ جَبَلَيْنِ فَأَتَى الرَّجُلُ قَوْمَهُ فَقَالَ أَيْ قَوْمِي أَسْلِمُوا فَوَاللَّهِ إِنَّ مُحَمَّدًا لَيُعْطِي عَطِيَّةَ رَجُلٍ مَا يَخَافُ الْفَاقَةَ أَوْ قَالَ الْفَقْرَ


பிற சமயத்தை சார்ந்த ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் உதவி கேட்டார். அப்போது நபி(ஸல்)  அவர்கள் இரு மனைகளுக்கு இடையில் நிரப்பமாக நின்று கொண்டிருந்த ஆட்டு மந்தையையே அவருக்கு கொடுத்து உதவினார்கள்.  அதை பெற்று கொண்டு தன் கூட்டத்தாரிடம் வந்த அவர் சொன்னார் என் கூட்டமே நீங்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள். ஏனெனில் 'முஹம்மது' தனது வறுமையை பயப்படாதவனை  போன்று மிகச்சிறப்பான உதவியை செய்துவிட்டார் என்று சொன்னதுடன் அவர் முஸ்லிமாகி விட்டார்.

நூல் : அஹமது


ஊனப்படுத்தியவரை  ஊக்கப்படுத்திய  உத்தம நபிகள்

فَأَخْبَرَنِي أَنَّ أَبَا مَحْذُورَةَ قَالَ لَهُ نَعَمْ خَرَجْتُ فِي نَفَرٍ فَكُنَّا بِبَعْضِ طَرِيقِ حُنَيْنٍ فَقَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُنَيْنٍ فَلَقِيَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ الطَّرِيقِ فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ مُتَنَكِّبُونَ فَصَرَخْنَا نَحْكِيهِ وَنَسْتَهْزِئُ بِهِ فَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّوْتَ فَأَرْسَلَ إِلَيْنَا إِلَى أَنْ وَقَفْنَا بَيْنَ يَدَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّكُمْ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدْ ارْتَفَعَ فَأَشَارَ الْقَوْمُ كُلُّهُمْ إِلَيَّ وَصَدَقُوا فَأَرْسَلَ كُلَّهُمْ وَحَبَسَنِي فَقَالَ قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ فَقُمْتُ وَلَا شَيْءَ أَكْرَهُ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا مِمَّا يَأْمُرُنِي بِهِ فَقُمْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَلْقَى إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ نَفْسُهُ فَقَالَ قُلْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ لِي ارْجِعْ فَامْدُدْ مِنْ صَوْتِكَ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى نَاصِيَةِ أَبِي مَحْذُورَةَ ثُمَّ أَمَارَّهَا عَلَى وَجْهِهِ مَرَّتَيْنِ ثُمَّ مَرَّتَيْنِ عَلَى يَدَيْهِ ثُمَّ عَلَى كَبِدِهِ ثُمَّ بَلَغَتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُرَّةَ أَبِي مَحْذُورَةَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللَّهُ فِيكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ فَقَالَ قَدْ أَمَرْتُكَ بِهِ وَذَهَبَ كُلُّ شَيْءٍ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ كَرَاهِيَةٍ وَعَادَ ذَلِكَ مَحَبَّةً لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أُسَيْدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَأَذَّنْتُ مَعَهُ بِالصَّلَاةِ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَخْبَرَنِي ذَلِكَ مَنْ أَدْرَكْتُ مِنْ أَهْلِي مِمَّنْ أَدْرَكَ أَبَا مَحْذُورَةَ عَلَى نَحْوِ مَا أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَيْرِيزٍ

அபூ மஹ்தூரா (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் நபி(ஸல்) அவர்கள் உனைன் போருக்கு சென்ற போது நாங்கள் பத்து வாலிபர்கள் நபி(ஸல்)  அவர்களுடன் புறப்பட்டோம். எங்களுக்கு மிகவும் வெறுப்பானவராக  இருந்தார். (அந்த நேரத்தில் அவர் முஸ்லிமாக இல்லை) அப்போது பயணத்தின் இடையில் தொழுவதற்காக முஸ்லிம்கள் பாங்கு சொன்னார்கள். அதை கேட்டுவிட்டு நாங்கள் கேலியாக அதே போன்று பாங்கு சொன்னோம். அதை கவனித்து கொண்டிருந்த நாயகம் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்து வரும்படி சொன்னார்கள். பிறகு எல்லோரையும் தனித்தனியாக பாங்கு சொல்லும்படி சொன்னார்கள். எல்லோருமே பாங்கு சொன்னோம். நான் கடைசியாக பாங்கு சொன்னேன். அதை கேட்டு நபி (ஸல்) அவர்கள்  நான் நன்றாக கவனித்து ரசித்து கேட்ட சப்தம் இதுதான் என்று என்னை பார்த்து சொன்னார்கள்.

நாயகம் எனக்கு பாங்கை கற்று கொடுத்தார்கள். பிறகு ஒரு சிறிய பையை கொடுத்தார்கள். அதில் கொஞ்சம் வெள்ளி இருந்தது. பிறகு நன்கு கையை எனது முன்நெற்றியில் வைத்தார்கள். அப்படியே அந்த கையை எனது முகத்திற்கும் நெஞ்சிற்கும் இரைப்பைக்கும் கொண்டு சென்றார்கள். பிறகு அவர்களின் கரம் என் தொப்புள் பகுதி வரை வந்தது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய பரக்கத்திற்காக துஆ செய்தார்கள்.      

நூல் : அஹ்மத்


அபூ மஹ்தூரா (ரலி) அவர்கள் அந்த இடத்தில் முஸ்லிம் ஆனார்கள் என்றும் நபியவர்கள் அவரை பாங்கு கூறும் பொறுப்புதாரியாக நியமித்திருந்தார்கள்  என்றும்                               எந்த குரலை கொண்டு அபூ மஹ்தூரா (ரலி) இஸ்லாத்தை ஊனப்படுத்த நினைத்தாரோ அதே குரலை கொண்டு இஸ்லாத்தை அவர் ஊக்கப்படுத்தும் அளவிற்கு அவரை மாற்றிய நபியின் பொற்குணத்தையும்  சாணக்கிய  தன்மையையும் உலக முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.


நெருப்பை வணங்கியவரை ரப்பை வணங்க வைத்த வள்ளல் இமாம்  அபூ ஹனிபா 

روى ان ابا حنيفة كان له على بعض المجوس مال فذهب الى داره ليطالبه به فلما وصل الى باب داره وقع نعله على نجاسة فنفض نعله فانقلعت النجاسة عن نعله ووقعت على حائط دار المجوسى فتحير ابو حنيفة رحمه الله وقال ان تركتها كان ذلك شيأ يقبح جدار ذلك المجوسى وان حككتها احفر التراب من الحائط فدق الباب فخرجت الجارية فقال لها قولى لمولاك ان ابا حنيفة بالباب فخرج اليه وظن انه يطالبه بالمال واخذ يعتذر فقال ابو حنيفة رحمه الله ههنا ما هو اولى بالاعتذار وذكر قصة الجدار وانه كيف السبيل الى التطهير فقال المجوسى فانا ابدأ بتطهير نفسى فأسلم فى الحال

இமாம்  அபூ ஹனிபா (ரஹ்)  அவர்கள் ஒரு நெருப்பு வணங்கிக்கு  கடன் கொடுத்திருந்தார்கள். அதை வாங்குவதற்காக அவன் வீட்டுக்கு சென்றார்கள். அப்போது அவன் வீட்டுவாசலில்  கிடந்த நஜீசில் அவர்களின் செருப்பு பட்டு  விட்டது .அதை உதறினார்கள். அந்த நஜீஸ் மஜிசியின் வீட்டு சுவற்றில் பட்டுவிட்டது . இதனால் அந்த அசிங்கத்தை எப்படி நீக்குவது என்று தெரியாமல் இமாம் தடுமாறினார்கள். அதை அப்படியே விட்டுவிட்டால் அது அவனுடைய சுவற்றை அசுத்தம் செய்ததாக அமைந்துவிடும் . அதை நீக்குவதற்காக அந்த  மண் சுவற்றை சுரண்டினால் மண்  கொஞ்சம்  கீழே சிதறும். அதுவும்  அவனுக்கு செய்த அநீதியாகிவிடும். எனவே  அதற்காக  அவனிடம் மன்னிப்பு  கேட்பதை  தவிர  வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து  வனுடைய வாசலை தட்டினார்கள். அவனுடைய அடிமைப்பெண் வந்தாள். அவள்மூலம் அவனை அழைத்தார்கள்.   அவர் வந்து  கடன்  அடைக்க பரிவுடன் அவகாசம் கேட்க முன்வந்த போது இமாம் சொன்னார்கள் இப்போது அது முக்கியம் இல்லை என்று கூறியதுடன் நஜீஸ் தொடர்பான அந்த  நிகழ்வை   அவனிடம் எடுத்து சொல்லி சுத்தம்  செய்ய வழி செய்  அல்லது  என்னை மன்னித்துவிடு   என்று  கூறியபோது  அவர்களின் குணத்தால் ஈர்க்கப்பட்ட அவன் அந்த இடத்திலேயே   நான் உள்ளத்தில் உள்ள  நஜீசை  சுத்தம்  செய்ய போகிறேன் என்று கூறி   அந்த இடத்திலேயே முஸ்லிமாகி விட்டார்.
      
 நூல் :  தப்சீர்  ரூஹுல் பயான் 

எனவே இஸ்லாம்  தீவிரவாத மார்க்கம்   என்ற   எதிரிகளின்   பொய் பிரசாரத்தை ஓய்க்க வேண்டுமானால் குர்ஆனையும் நபியின் வழிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக மாற்று சமுதாய மக்களுடன் எல்லா நற்குணங்களையும் நேர்மையான செயல்களையும்   பயன்படுத்தியே  ஆகவேண்டும் . குறிப்பாக  எந்த  மீடியாக்களை கருவியாக  பயன்படுத்தி இஸ்லாத்தைப்பற்றி நச்சுகருத்துகளை பரப்புகின்றார்களோ அதே மீடியாவை இஸ்லாத்தை பற்றிய சத்திய நிலைபாட்டையும்  அதனுடைய அற்புதமான குணங்களையும் உலக அமைதிக்கு அது கூறும்  நல்வழிகளையும் எடுத்து சொல்வதற்க்காகவும்  பயன்படுத்துவது   காலத்தின்    கட்டாயம்  என்பதையும்  நாம்  கவனத்தில்  கொண்டு  வாழ  வேண்டும் .


No comments:

Post a Comment