Thursday 2 October 2014

இன்பத்தை கொடுக்கும் பெரு நாள்


உலக முஸ்லிம்கள் ஆண்டுக்கு இரு நாட்களை பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். ஒன்று ஈகை திருநாளாக திகழும் நோன்பு பெருநாள்.  இரண்டாவது தியாகத் திருநாளாக இருக்கும் பக்ரீத் பெருநாள்.  இந்த இரு பெரு நாட்களின் பின்னணியாக நோக்கமாக பல்வேறு அம்சங்கள் இருக்கின்றது. அவற்றில் ஒரு சிறந்த நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது  போன்று,பிற முஸ்லிம்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.

இந்த பிரதான நோக்கத்தை தான் 'பித்ரா' என்ற பெயரால் ஈகை திருநாள் அன்று ஏழைக்கு வழங்கப்படும் அன்பளிப்பு

குர்பானி என்ற பெயரால் தியாகத் திருநாளிள் அவர்களுக்கு செய்யப்படும் உபகாரமும் உணர்த்துகிறது

1. இறை நெருக்கமும் கொடை தன்மையும்.

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " السخي قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار . والبخيل بعيد من الله بعيد من الجنة بعيد من الناس قريب من النار . ولجاهل سخي أحب إلى الله من عابد بخيل " . رواه الترمذي


நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கொடையாளி அல்லாஹ்விற்கும், சுவனத்திற்கும்,மக்களுக்கும் நெருக்கமானவனாக இருக்கின்றான். நரகத்தை விட்டும் தூரமானவன் நரகத்திற்கு நெருக்கமானவன் கருமித்தனம் செய்கிற வணக்கசாளியை விடவும் கொடையாளியான ஒரு முட்டாள் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவன்   

(நூல் : திர்மிதி )

ابن المنذر عن ابن أبزى قال : دخل إبراهيم عليه السلام منزله ، فجاءه ملك الموت في صورة شاب لا يعرفه ، فقال له إبراهيم : بإذن من دخلت؟ قال : بإذن رب المنزل . فعرفه إبراهيم فقال له ملك الموت : إن ربك اتخذ من عباده خليلاً . قال إبراهيم : ونحن ذلك! قال : وما تصنع به؟ قال : أكون خادماً له حتى أموت . قال : فإنه أنت . وبأي شيء اتخذني خليلاً؟ قال : بأنك تحب أن تعطي ولا تأخذ .


2. நபி இபுறாஹீம்  (அலை) அவர்கள் மக்களுக்கு விருந்து அளிப்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் தன்னுடன் விருந்து சாப்பிடுவதற்காக பார்த்தார்கள். ஒரு மனிதர் கூட  அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே வீட்டுக்கு  திரும்பினார்கள். அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார் அவரிடம் நபி இபுறாஹீம்  (அலை) அவர்கள் என் வீட்டில் என் அனுமதி இல்லாமல் உம்மை உள்ளே நுழைய விட்டது யார்?  என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் நான் வீட்டு எஜமானின் அனுமதி பெற்றுதான் உள்ளே வந்தேன் என்று கூறினார் உடனே  நபி இபுறாஹீம்  (அலை) அவர்கள் நீங்கள் யார் ? என்று கேட்டார்கள் அவர் சொன்னார் நான் வேறு யாருமல்ல மலக்குல் மவ்த்து தான் அல்லாஹ் ஒருவரை நண்பராக தேர்வு செய்துள்ளான். அந்த சுபச்செய்தியை அந்த அடியாருக்கு சொல்வதற்காக என்னை அனுப்பி வைத்தான் என்றார். அப்போது நபி இபுறாகீம் (அலை) மலக்கிடம்அந்த அடியாரை எனக்கு காட்டுங்கள் அவர் ஊரின் கடைசியில் வாழ்ந்தாலும் கூட நான் அவரை சந்தித்து மரணம் எங்களை பிரிக்கப்போகும் வரை நான் அவருடைய அண்டை வீட்டாராக வாழப் போகின்றேன் என்றார். அப்போது 'மலக்' சொன்னார் நீங்கள் தான் அந்த அடியார். ஆச்சரியத்துடன் நபி இபுறாகீம் (அலை) அவர்கள் மலக்கிடம் அல்லாஹ் எந்த அம்சத்தை கொண்டு என்னை தனது நண்பனாக தேர்வு செய்தான் என்று கேட்ட போது 'மலக்' சொன்னார் நீங்கள் எல்லா மக்களுக்கும் உதவி செய்து வாழ்கின்றீர்கள் நீங்கள் யாரிடமிருந்தும் எதையும் கேட்டு பெறுவதில்லை இது தான் காரணம் என்றார்கள் ( நூல் : தப்சீர் இப்னு அபீ ஹாதம்)

3. தர்மம் தலை காக்கும்

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் கொடையாளிக்கு தீங்கு செய்வதை விட்டும் விலகி கொள்ளுங்கள். ஏனெனில் அவன் கீழே விழும் போதெல்லாம் அல்லாஹ் தாங்கி பிடித்து காப்பாற்றுகிறான் என்றார்கள்.   

 ( நூல் :   தப்ரானி. பாகம்6. பக்கம். 33                 ) 


وأخرج الزبير بن بكار في الموفقيات عن عبدالله بن أبي عبيدة بن محمد بن عمار بن ياسر قال : « قدم خالد بن الوليد من ناحية أرض الروم على النبي صلى الله عليه وسلم بأسرى ، فعرض عليهم الإِسلام فأبوا ، فأمر أن تضرب أعناقهم ، حتى إذا جاء إلى آخرهم قال النبي صلى الله عليه وسلم : » يا خالد كف عن الرجل « قال : يا رسول الله ما كان في القوم أشد عليّ منه . قال : » هذا جبريل يخبرني عن الله أنه كان سخيّاً في قومه فكف عنه « وأسلم الرومي » .

4. ரோமார்களை எதிர்த்து போர் செய்வதற்கு சென்ற ஹாலித் (ரலி) அவர்கள் அங்கிருந்து சில எதிரிகளை கைதிகளாக நாயகம் (ஸல்) அவர்கள் இடம் கொண்டு வந்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொன்னார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க மறுத்தார்கள். எனவே நாயகம் (ஸல்) அவர்கள்  அவர்கள் அந்த கைதிகளின் பல்வேறு குற்றங்கள் முன் வைத்து அவர்கள் அனைவரையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அவர்கள் அனைவருக் கொல்லப்பட்டார்கள். அந்த கைதிகளிடம் கடைசி நபரை ஹாலித் அவர்கள் கொல்வதற்காக முற்பட்டபோது நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதரை விட்டு விடுங்கள் என்றார்கள். அப்போது ஹாலித் நாயகம் (ஸல்) அவர்கள்  இடம் நாயகமே அந்த கூட்டத்தில் மிகவும் கொடியவர் இவர்தான் என்று கூறியபோது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவரை பற்றி இப்போது தான் ஜிப்ரீல் (அலை) எனக்கு தகவல் தந்தார்கள். இவர் அந்த கூட்டத்தில் மிகப்பெரிய கொடை வல்லாளாக இருகின்றார் எனவே இவரை விட்டு விடுங்கள் என்று சொன்னார். இந்த தகவலை கேட்டவுடன் ஹாலித் (ரலி) அவரை விட்டு விட்டார்கள். உடனே அந்த ரோம் நாட்டு கைதி முஸ்லிமாகி விட்டார் .

நூல்: (துர்ருல் மன்சூர்)

சுமையை அகற்றுங்கள் சுவனம் பெறுங்கள்.

إن في الجنة دارا يقال لها دار الفرح لا يدخلها إلا من فرح يتامى المؤمنين.



5. நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
சொர்க்கத்தில் ஒரு வீடு உண்டு. அவ்வீட்டின் பெயர் சந்தோஷத்தின் வீடு என்பதாகும். அனாதையான முஃமீன்களை யார் சந்தோஷப்படுதினார்களோ. அவர்கள் தவிர வேறு யாரும் அதில் நுழைய முடியாது.

நூல்: (கன்சூல் உம்மால்)

علي بن حجر عن إسحاق عن أبي نجيح عن عطاء، قال: كان لرجل من الأنصار نخلة وكان له جار يسقط من بلحها في دار جاره، وكان صبيانه يتناولون منه، فشكا ذلك إلى النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم: "بعنيها بنخلة في الجنة" فأبى، فخرج فلقيه أبو الدحداح، فقال له: هل لك أن تبيعها بحَشِ [البستان] (4) ، يعني حائطا له، فقال له: هي لك، فأتى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله أتشتريها مني بنخلة في الجنة؟ قال: "نعم" قال: هي لك، فدعا النبي صلى الله عليه وسلم جار الأنصاري
فقال: "خذها". فأنزل الله تعالى: "والليل إذا يغشى" إلى قوله: "إن سعيكم لشتى"


6. ஒரு அன்சாரி தோழனுக்கு ஒரு பேரீத்த மர தோட்டம் இருந்தது. அதில்  ஒரு மரம் அந்த மரத்தின் ஒரு கிளை அந்த தோட்டத்திற்கு அருகில் இருந்த ஒரு ஏழை சஹாபியின் வீட்டின் பக்கம் சாய்ந்திருந்தது. எனவே அதனுடைய பழங்கள் அந்த ஏழை தோழரில் வீட்டில் விழுந்தது.அவருடைய பிள்ளைகள் பசியின் காரணமாக எடுத்து சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். ஆனால் இந்த சிறுவர்கள் அவ்வாறு சாப்பிடுவதை அந்த தோட்டத்தின் உரிமையாளர் தடுப்பவராக இருந்தார்.இதனால் வேதனைப்பட்ட அந்த ஏழை சஹாபி நாயகம் (ஸல்) அவர்கள்   இடம் இதை முறையிட்டார்கள் உடனே நாயகம் அந்த தோட்டத்தின் உரிமையாளரை அழைத்து நான் சுவர்க்கத்தில் உங்களுக்கு ஒரு மரம் வாங்கி நடுகின்றேன். அதற்கு பகரமாக அந்த ஏழை சஹாபியின் வீட்டில் சந்திக்கும் மரத்தை தந்து விடுங்கள் என்றார்கள். ஆனால் அவர் அவ்வாறு தர மாட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டார். இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அபூதஹ்தாஹ் (ரலி) என்ற சஹாபி அந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் சென்று நான் என்னுடைய ஒரு தோட்டத்தை உமக்கு தந்து விடுகின்றேன் அதற்கு பகரமாக நீங்கள் எனக்கு அந்த மரத்தை தருவீர்களா? என்று கேட்டப்போது அதை அவர் ஏற்றுக்கொண்டார். இதற்கு பின் நபியை சந்தித்த அபூதஹ்தாஹ் (ரலி) அந்த ஒரு மரத்திற்கு பகரமாக எனக்கு சுவனத்தின் மரத்தை தருவீர்களா?என்று கேட்டார் நாயகம் (ஸல்) அவர்கள்  அவ்வாறு தருவதாக சொன்னார்கள். உடனே அபூ தஹ்தாஹ் (ஸல்) அவர்கள் இடம் நாயகனே நான் அந்த தோட்டத்தை வாங்கி விட்டேன். எனவே அந்த மரத்தை தங்களுக்கு தந்து விட்டேன்.

என்று கூறினார். உடனே நபி அலி ஏழை சஹாபியை அழைத்து அந்த தோட்டத்தை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதன் மூலம் அபூதஹ்தாஹ் சுவனத்தின் மரத்தை பெற்றுக்கொண்டார். இப்போது சூரத்துல் லைல் இறங்கியது.

நூல் : (தப்ஸீருல் பஹவி)

7. கொடுங்கள் கொடுக்கப்படுவீர்கள்

وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما : اللهم أطع منفقا خلفا ويقول الآخر : اللهم أعط ممسكا تلفا "
  

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் தினமும் இரு வானவர்கள் இந்த பூமிக்கு வருகிறார்கள்.அவ்விருவரில் ஒருவர் சொல்கின்றார் இறைவா உன்னுடைய பாதையில் செலவு செய்பவனுக்கு அதற்கான பகரத்தை கொடு யார் வாங்காமல் தடுத்து கொள்வார்களோ அவர்களின் செல்வத்திற்கு அழிவை கொடு என்று சொல்கின்றார்.

நூல் : மிஷ்காத்

وعن مولى لعثمان رضي الله عنه قال : أهدي لأم سلمة بضعة من لحم وكان النبي صلى الله عليه وسلم يعجبه اللحم فقالت للخادم : ضعيه في البيت لعل النبي صلى الله عليه وسلم يأكله فوضعته في كوة البيت . وجاء سائل فقام على الباب فقال : تصدقوا بارك الله فيكم . فقالوا : بارك الله فيك . فذهب السائل فدخل النبي صلى الله عليه وسلم فقال : " يا أم سلمة هل عندكم شيء أطعمه ؟ " . فقالت : نعم . قالت للخادم : اذهبي فأتي رسول الله صلى الله عليه وسلم بذلك اللحم . فذهبت فلم تجد في الكوة إلا قطعة مروة فقال النبي صلى الله عليه وسلم : " فإن ذلك اللحم عاد مروة لما لم تعطوه السائل " . رواه البيهقي في دلائل النبوة


8. அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு ஒரு வீட்டில் இருந்து கொஞ்சம் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி விருப்பமானதாக இருந்தது.எனவே உம்மு ஸலமா தன் அடிமையிடம் வீட்டில் ஒரு இடத்தில பாதுகாப்பாக வைத்து விடு நாயகம் (ஸல்) அவர்கள் வந்தால் அதை சாப்பிடுவார்கள் என்றார்கள். அந்த அடிமை அதை வீட்டின் சுவரில் குழி போன்ற அமைப்பில் இருந்த ஒன்றில் வைத்தார். அந்த நேரத்தில் ஒரு யாசகர் உம்மு ஸலமா- வின் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு தர்மம் செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான் என்றார். அப்போது உம்மு ஸலமா (ரலி) வேறு இடம் செல்லுங்கள் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான் என்றார்கள். அந்த யாசகர் சென்று விட்டார். இதற்கு பின் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள் உம்மு ஸலமா (ரலி) இடம் சாப்பிட ஏதேனும் இருகின்றதா என்று கேட்டார்கள். உம்மு ஸலமா (ரலி) உணவு இருப்பதாக சொல்லி விட்டு தன் அடிமையிடம் அந்த இறைச்சியை கொண்டு வா என்றார்கள் அவள் சென்று வைத்த இடத்தில் இறைச்சியை கண்டார்   அங்கு இறைச்சி இல்லை அது ஒரு வெள்ளை கல்லாக மாற்றப்பட்டிருந்தது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் உங்கள் வீட்டுக்கு வந்த யாசகருக்கு ஒன்றும் கொடுக்காத காரணத்தால் தான் அது கல்லாக மாறியது என்று சொன்னார்கள்.

நூல்: மிஸ்காத்

1. அரபா நோன்பின் அருமைகள் :

أنس ، قال : « كان يقال في أيام العشر بكل يوم ألف ، ويوم عرفة عشرة آلاف يوم » . يعني في الفضل




ஆயிஷா  (ரலி) சொன்னார்கள்.

அரபா நாளின் நோன்பு 1000 ஆண்டுகளின் நோன்பை போன்றது என்று நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கூடியவர்களாக இருந்தார்கள்.

நூல்:பைஹகீ

عن الفضل بن عباس ، عن النبي صلى الله عليه وسلم قال : « من حفظ لسانه وسمعه وبصره يوم عرفة غفر له من عرفة إلى عرفة » . « وروينا في هذا المعنى من وجه آخر موصولا في كتاب الحج »


2. பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எந்த மனிதன் அரபா நாள் அன்று தனது நாவு,செவிபுலன், பார்வை இவைகளை விட்டு பாதுகாக்கின்றானோ அல்லாஹ் அந்த மனிதனின் இந்த அரபவிலிருந்து  அடுத்த ஆண்டு அரபா வரை அவன் செய்யும் பாவங்களை மன்னிகின்றான்.

நூல் : பைஹகி


குர்பானியின் அவசியமும் சட்டமும்

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
 :


1. நாயகம் ( ஸல் ) சொன்னார்கள் யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம் தொழும் இடத்தை நெருங்க வேண்டாம்.

நூல் இப்னு   மாஜா   46


عَنْ عَائِشَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ ابْنُ آدَمَ يَوْمَ النَّحْرِ عَمَلًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ هِرَاقَةِ دَمٍ وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَظْلَافِهَا وَأَشْعَارِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ عَزَّ وَجَلَّ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا

2. நாயகம் ( ஸல் ) சொன்னார்கள் பக்ரீத் பெருநாள் அன்று குர்பானி பிராணியை அறுத்து ரத்தம்ஓட்டுவதை விடவும் அல்லாவுக்கு  மிகப்பிரியமான எந்த அமலையும் மனிதன் செய்வது  இல்லை. நிச்சயமாக  அந்த பிராணியை கியாமத்தில் கொம்புகளோடும் இறைப்பையோடும் முடிகளோடும்   வரும் பிராணியின் ரத்தம் அருந்த இடத்தில விழுவதற்கு முன்பே அல்லாவிடம் போய் சேர்ந்து விடுகிறது.

நூல்:  இப்னு   மாஜா   


3. நாயகம் ( ஸல் ) சொன்னார்கள் துல்ஹஜ்ஜின் ஆரம்ப BATHU நாள்களை விடவும் அமலுக்கு மிகச்சிறந்த நாள் வேறு எதுவும் இல்லை . அந்த நாட்களில் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டுக்கு சமமாகும், ஒவ்வொரு இரவும் லைலத்துல் கத்ருக்கு சமமாகும். எனவே அந்த நாட்களில் தஸ்பீகை  திக்ரை அதிகபடுதுங்கள்.

நூல் : தர்ஹீப்.தர்கீப்











4 comments:

  1. طلحة مصباحي2 October 2014 at 15:57

    جزاك الله خيرا كثيرا

    ReplyDelete
  2. جزاك الله خيرا كثيرا في الدارين

    ReplyDelete
  3. Alhamthu lilla. Nalla pathivu. 7 th hadees thavaraga tarjuma saiyappattu ullathu. (Vanggamal alla kodukkamal)

    ReplyDelete