Thursday 11 October 2012

முஸ்லீம்கள் கண்ணியமானவர்கள்


அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் கண்ணியமானது
.முஸ்லீம்கள் கண்ணியமானவர்கள்.அவர்களின் ஈமான் உயர்வானது.அல்லாஹுத்தஆலா முஸ்லீம்களை சில காலம் சோத்தித்த  துண்டு.ஆனால் இழிவுபடுத்தியதில்லை.ஒரு முஸ்லிம் இந்த உண்மையை புரிந்துகொண்டால் தன் முகவரியை தெரிந்துகொள்ளலாம்.
யூதர்களின் மீது இழிவு விதியாக்கப்பட்டது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹுத்தஆலா திருமறையில் தன்னை العزيزஎன்று வர்ணிக்கிறான்.       அல்லாஹுத்தஆலா குர்ஆனில் 90 இடங்களில் இந்த வார்த்தையை கூறுகிறான்.சில இடங்களில் العزة والرحمةம் சேர்த்து கூறுகிறான்.

முஃமின்கள் குறித்து வர்ணிக்கிறபோதும் கண்ணியத்தை அவர்களுடன் சம்பந்தப்படுத்தி பேசுகிறான்.

ولله العزة ولرسوله وللمؤمنين 
கண்ணியம் அல்லாஹ்வுக்கும்,அவனின் தூதருக்கும்,  முஃமின்களுக்கும் சொந்தமானது என்று கூறுகிறான்.

பிர்அவ்னின் சூனியக்காரர்கள் நபி மூஸா அலை அவர்களின் முன்பு சூனியம் செய்து மிரட்டியபோது,அதை கண்ட மூஸா அலை அவர்கள் பயந்து பின்வாங்கினார்கள். 
                                     قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى

 அப்போது அல்லாஹுத்தஆலா, மூஸாவே! நீ பயப்படக்கூடாது.ஏனெனில் நீ கண்ணியமானவர் என்று கூறினான்.

அதாவது உன் ஈமான் கண்ணியமானது.உன் மார்க்கம் கண்ணியமானது.நீ ஏற்றுக்கொண்டிருக்கிற உன் இறைவன் கண்ணியமானவன்.

ஒரு முஸ்லிம் எந்த சூழ்நிலையிலும் இறைமறுப்பாளர்களைப்பற்றி உயர்வாகவும்,முஸ்லீம்கள் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடாது.
நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்கள் காபிர்களின் இடைவிடாது சோத  னையில் மனம் தளர்கிறபோதும்,நம்பிக்கை இழக்கிறபோதும் அவர்களுக்கு  ஆறுதல் கூறுவதுடன் எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையையும் முஸ்லீம்களைப்பற்றிய கண்ணியத்தையும் புரியவைப்பார்கள்.

சம்பவம்:1

، يأتي إليه خباب رضي الله تعالى عنه وقد تفلت يوما من العذاب يقول:{ يا رسول الله ألا تدعو الله لنا، ألا تستنصر لنا؟؟؟} فيقوم النبي صل الله عليه وسلم ويقول له:{ يا خباب لقد كان من كان قبلكم يوضع المنشار على مفرق رأسه ويشق باثنين ما يصده ذلك عن دينه ويمشط بأمشاط الحديد ما دون عظمه من لحم أو عصب ما يصده ذلك عن دينه والله ليتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حذر موت ما يخاف إلا الله والذئب على غنمه ولكنكم تستعجلون
البخاري


ஹழ்ரத் கப்பாப் ரலி அவர்கள் எதிரிகளின் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு நாள் நபி ஸல் அவர்களை சந்தித்து யா ரசூல்ல்லாஹ்!அல்லாஹ்விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள்.     அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி தேடுங்கள் என்று வேண்டிக்கொண் டார்.அதை கேட்ட நபி ஸல் அவர்கள்,கப்பாபே!பொருமையாயிருங்கள்.    உங்களுக்கு முன்னர் உள்ள முஃமின்கள் இதைவிடவும் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள்.எந்தளவென்றால் அவர்களின் தலையில் இரும்பு அறம் கொண்டு இரண்டாக பிளக்கப்படும்.ஆனாலும் அவர் தீனை விட மாட்டார்.அவர்களின் சதையும் எழும்பும் நரம்பும் துண்டிக்கப்படும்.      ஆனாலும் அது அவர்களின் தீனில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்த    முடியாது.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!அல்லாஹ் இந்த தீனை முழுமைப்படுத் துவான்.சன்ஆ நகரத்திலிருந்து ஹழ்ரமவ்த் வரை ஒரு பயணி அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயமின்றி பயணம் செய்வார்.அப்படிப் பட்ட அமைதியான ஆட்சியை முஸ்லீம்கள் நிறுவார்கள்.ஆனாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள்.
எனவே ஸஹாபாக்கள் பொருளாதாரத்தில் பலம் குன்றியிருந்தாலும் ,எண்ணிக்கையில் பலகீனமாக இருந்தாலும் ஈமானிய உணர்வால் தங்களின் கண்ணியத்தை புரிந்து இருந்தனர்.

சம்பவம்:2

ألم ترى إلى الصحابة رضي الله تعالى عنهم لما حاصرهم الكفار في معركة الأحزاب واجتمعوا لهم من كل موطن وبلغت القلوب الحناجر وظنت بعض الناس بالله الظنون فإذا بالنبي صل الله عليه وسلم يحاول أن يقلل عدد الكفار الذين يرابطون وكانوا عشرة آلاف، يحاول أن يقلل عددهم وأن يصرف بعضهم فإذا به عليه الصلاة والسلام يدعوا رأسا من رؤوس الكفار قد جاء قومه بثلث الجيش ثلاثة آلاف مقاتل تحت يده فيقول له:{ أريدك أن ترجع بقومك على أن أعطيك ثلث ثمر المدينه إذا جاء الحصاد}، رجاءا منه عليه الصلاة والسلام أن يخفف الوطأة عن المدينه، فلما كاد أن يمضي الكتاب بينه وبين النبي عليه الصلاة والسلام قال النبي عليه الصلاة والسلام :{ إني أستشير السعدين }سعد بن معاذ وسعد بن عباده فدعاهما صل الله عليه وسلم وأخبرهما قال نعطيهم ثلث ثمار المدينه على أن يرجع بقومه فقال له السعدان وهما يشعران بما يشعر به النبي صل الله عليه وسلم من وطأت الكفار عليهم قالوا:{ يا رسول الله أهو أمر أمرك الله تعالى به فنسمع ونطيع...}دون اعتراض { أم أنه أمر تفعله لنا فلنا فيه الرأي والمشوره؟؟؟}، فقال النبي صل الله عليه وسلم:{ بل هو أمر أفعله لكم } أنا إنما أخاف على المدينه، إنما أخاف عليكم وعلى دراريكم وإنما دعوتكما لأستشيركما لو كان الأمر من الله لما استشارهم فقال سعد :{ يا رسول الله إنا كنا نحن وأولئك في الجاهليه لا يؤمل أحد أن يأكل تمرة من تمر المدينه إلا بشراء أو قرى... } إما أن يشتري بماله أو أن يدخل ضيفا عندنا ثم نقريه إطعاما وكرما وجودا وسخاءا من أنفسنا برضانا لا بإكراهنا {...أفلما أكرمنا الله بالإسلام وأعزنا الله بالإسلام ننزل عن ثمارنا رغما عنا لا والله يا رسول الله لا نعطيهم إلا السيف } ثم أخذ سعد الصحيفة وهو ينظر إلى النبي عليه الصلاة والسلام هل يمنعه أم لا ومزقها بين يدي ذلك الكافر الذي كان شاهدا للمكان وقال:{ اذهب فاجهد علينا}اذهب واجمع جهدك وقوتك وعتادك وعدتك { اذهب فاجهد علينا } حتى رابط الصحابة الكرام ونصرهم العزيز الحكيم جل في علا

(حياة محمد صلى الله عليه وسلم)

  

அகழ் யுத்தம்.எதிரிகள் மதீனாவை முற்றுக்கையிட்டபோது ஸஹாபாக்கள் தங்களை சூழ்ந்த ஆபத்தை கண்டு பயந்தனர்.ஏனெனில் களத்தில் காபிர்கள் 10 ஆயிரம்.முஸ்லீம்கள் வெறும் 3000 தான். முஸ்லீம்கள் இதுவரை எண்ணிக்கையைக்கொண்டு வெற்றிபெற்றதில்லை.ஈமானிய பலத்தைக் கொண்டே வெற்றிபெற்றனர்.ஆனாலும் இந்த போரில் மதீனாவின் பெண்கள்,மற்றும் குழந்தைகளையும் கவனத்தில் கொண்டே முஸ்லீம்கள் அச்சப்பட்டனர்.
அப்போது நபி ஸல் அவர்கள் எதிரிகளின் தலைவர்களில் ஒருவரை அழைத்து சமாதான ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்கள்.
அந்த ஒப்பந்தம் இது தான்:மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒருபகுதியை தருகிறோம்.போரை உடனடியாக நிறுத்தவேண்டும்.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமுன்னர் மதீனாவின் தலைவர்களில் முக்கியமான இருவர் சஃது இப்னு முஆத் ரலி,சஃது இப்னு உப்பாதா ரலி ஆகியோரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறி,அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள்.
அவர்கள் வந்தபோது நபி ஸல் அவர்கள் தங்களின் அபிப்ராயத்தை கூறினார்கள்.
மதீனாவின் நலன்கருதி நபி ஸல் அவர்கள் இந்தமுடிவை எடுத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்ட அவ்விருவர்,அல்லாஹ்வின் தூதரே!இது அல்லாஹ்வின் முடிவு என்றால் கட்டுப்படுகிறோம்.தங்களின் முடிவு என்றால் எங்களுக்கு அபிப்ராயம் சொல்ல அனுமதி உண்டா?என கேட்டனர்.
அதற்கு நபி ஸல் அவர்கள்,இது அல்லாஹ்வின் உத்தரவு எனில் நான் மஷ்வரா செய்யவேமாட்டேன்.இது நான் எடுத்த முடிவு எனவே ஆலோசனை கூறுங்கள் என்றார்கள்.
அப்போது அவ்விருவரும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
அறியாமை காலத்தில் எங்கள் மதீனாவின் விளைச்சளை இரு காரணங்களுக்காக மட்டுமே கொடுப்போம்.ஒன்று, விலைக்கு அல்லது விருந்தாளிக்கு,இதை தவிர்த்து நிர்பந்தப்படுத்தி யாரும் எங்கள் விளைச்சளை பறித்துவிட முடியாது.
இப்போது அல்லாஹ் இஸ்லாம் என்ற மரியாதையை வழங்கியிருக்கிறா ன்.மேலும் இஸ்லாத்தைக்கொண்டு எங்களை கண்ணியபடுத்திவிட்டான்
எனவே நாம் யாருக்கும் பணிந்துபோகவேண்டாம் போர் செய்யலாம் என்றபோது நபி ஸல் அவர்கள் அதை சரிகண்டார்கள்.
உடனே நபி ஸல் அவர்களின் முன்னிலையில் சஃது ரலி அவர்கள், அந்த ஒப்பந்த பேப்பரை கிழித்து வீசி,அந்த காபிர்களிடம் போருக்கு தயாராகுங்கள் என்று கூறினார்கள்.
இதன் மூலம் மஷ்வராவே இஸ்லாத்தின் தனித்துவம் என்றும்,சுதந்திரமாக ஆலோசனை சொல்லும் உரிமையை  நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்றும் விளங்குகிறது.மத்திரமல்ல இஸ்லாத்தின் கண்ணியம் குறித்து ஸஹாபாக்களின் எண்ணவோட்டம் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

சம்பவம்:3

ألم ترى إلى حكيم بن حزام وقد كان في الجاهليه يحب رسول الله صل الله عليه وآله وسلم وطالما أهدى إليه وقبل هديته فرأى حكيم بن حزام يوما حلة ذي يزن وهو ملك من أعظم ملوك اليمن، رأى حلة ذي يزن تباع في السوق فاشتراها حكيم بن حزام ثم مضى من لحظته إلى المدينه وكان لم يسلم بعد مضى من لحظته إلى المدينه وأهداها إلى رسول الله صل الله عليه وسلم فقال له النبي عليه الصلاة والسلام:{ إني لا أقبلها إلا بالثمن } فأبى حكيم قال إنما هو إهداء قال:{ لا آخذها منك إلا بثمنها} فأعطاه النبي صل الله عليه وسلم ثمنها وأخذ حلة ذي يزن وصعد المنبر وخطب الناس وجعل حكيم من خارج المسجد ينظر إلى النبي عليه الصلاة والسلام وهو معجب بالحلة على كتفيه الشريفتين، ثم لما نزل النبي صل الله عليه وسلم أهداها لحِبِّه وابن حِبِّه لأسامة بن زيد وكان أسامة مولى عندهم لم يكن من أنسابهم ولا من أشرافهم في النسب وفي الرفعه وفي الحسب، كان من مواليهم فأهداها النبي صل الله عليه وسلم إليه، فلما مشى أسامة في السوق رآه حكيم بن حزام وعليه الحلة فقال حكيم: "عجبا أسامة بن زيد.." محتقرا له "أسامة بن زيد يلبس حلة ذي يزن " فالتفت إليه أسامة وانظر إلى العزة قال:"نعم ومالي لا ألبسها فوالله إني خير من ذي يزن وإن أبي خير من أبي ذي يزن" أنا مسلم وهو كافر فأنا خير منه هو الذي له الشرف أن ألبسها أنا وإن أبي مسلم وأبوه كافر فأبي خير منه، فعجب حكيم بن حزام
  رواه الحاكم في مستدركه 

அறியாமை காலத்தில் ஹகீம் இப்னு ஹிசாம் என்ற நாயகத்துக்கு பிரியமான மனிதர் இருந்தார்.                                                                  இவரும் நபி ஸல் அவர்களை மிகவும் நேசித்தார்.எந்தளவென்றால் பல நேரங்களில் பெருமானாருக்கு அன்பளிப்பு கொடுப்பார்.நாயகமும் அதை பெற்றுக்கொள்வார்கள்.இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நாயகத்துடன் இவருக்கு நெருக்கமான உறவு உண்டு.
ஒரு நாள் இவர் கடைவீதியில் நடந்து சென்றபோது எமன் நாட்டு அரசர் ஸீயசின் அணியும் ஆடை விற்கப்படுவதை காண்கிறார்.உடனே அதை விலை கொடுத்துவாங்கி நாயகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தபோது, நபி ஸல் அதை வாங்க மறுத்துவிட்டார்கள்.நான் இதை வாங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதன் விலையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறி பணம் கொடுத்து அதை வாங்கிக்கொள்கிறார்கள்.
நபி ஸல் அவர்கள் அந்த ஆடையை அணிந்து கொண்டு மின்பர்மீது ஏறி பிரசங்கம் செய்வதை ஹகீம் பள்ளிக்கு வெளியிலிருந்து பார்த்து ரசித்தார்.
குத்பா பிரசங்கத்தை முடித்த நபி ஸல் அவர்கள் அந்த ஆடையை கழட்டி தன் பிரியத்திற்குறிய உஸாமா ரலி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.(உஸாமா இவர் ஒரு அடிமை).
ஹழ்ரத் உஸாமா ரலி அவர்கள், அந்த ஆடையை அணிந்து கடைவீதில் வலம் வந்தபோது,அதைபார்த்த ஹகீம் இப்னு ஹிஸாம் இழிவாக கருதி யமன் நாட்டு அரசரின் ஆடை உஸாமின் உடலிலா?என்று கூறினார்.
அதைக்கேட்ட உஸாமா ரலி அவர்கள்,ஹகீமின் பக்கம் திரும்பி,
இந்த ஆடையை அணிவதற்கு எனக்கு ஏன் தகுதியில்லை.? நீங்கள்  சொல்கிற ஸீயசினை விட நானும்,அவரின் தந்தையை விட என் தந்தையும் சிறந்தவர்களாகும்.ஏனெனில் நானும் என் தந்தையும் முஸ்லீம்கள்,ஸீயசினும் அவரின் தந்தையும் காபிர்கள்.என்று கூறினார்கள்.
இதைக்கேட்ட ஹகீம் இஸ்லாத்தின் மீது முஸ்லீம்கள் கொண்டிருக்கிற கண்ணியத்தை புரிந்து கொள்கிறார்கள்.

 وقال عليه الصلاة والسلام : " لا ينبغي للمؤمن أن يذل نفسه. قالوا: وكيف يذل نفسه؟!. قال : يتعرض من البلاء مالا يطيق

உங்களில் எவரும் தன்னை இழிவாக கருதவேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறியதுடன் அந்த உணர்விலேயே ஸஹாபாக்களை வார்த்தெடுத்தார்கள்.








No comments:

Post a Comment