Wednesday 3 October 2012

அமலும் அகீதாவும்


இஸ்லாத்தின் கொள்கைகள்,கோட்பாடுகள் சுத்தமானதும் தெளிவானதுமாகும்.எந்தவிதமான குழப்பத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அதில் இடமில்லை.
அகீதாக்கள் எனப்படும் கொள்கைகள் தான் இஸ்லாத்தின் அடித்தளம்.         அமல்களில் குறைவு ஏற்படலாம்.ஆனால் கொள்கையில் குழப்பம் வரக்கூடாது.
ஒரு முஃமின் எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை இழக்கக்கூடாது. 

 ஈமான் மூன்று பிரிவுகளை கொண்டது.

الإيمان اصطلاحًا: "اعتقاد بالجنان، وإقرار باللِّسان، وعمل بالأركان"؛ ينظر: "شرح الطحاوية"

அதில் முதன்மையானது கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.ஈமானின் சொல்வடிவமும் செயல்வடிவமும் நாம் ஏற்றிருக்கிற அகீதாவைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறது.அதனால் தான் அகீதாக்கள் கெட்டுப்போனால் அமல்களும் கெட்டுப்போகும் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (الكهف: 103 104)

செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முனாபிகீன்களிடம் ஈமானும் வணக்கமும் இருந்தது.ஆனால் அவர்களிடம் கொள்கை கெட்டுப்போய்விட்  டது.எனவே அவர்களின் ஈமானும் அமலும் அவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.
அதைபோலவே இறைமறுப்பளர்களின் நல்ல காரியங்கள் நாளை மறுமையில் அவர்களுக்கு எந்தபலனையும் தரப்போவதில்லை, காரணம் அடிப்படையான ஈமானிய கொள்கையில் அவர்கள் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا} [الفرقان: 23]،
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.

வணக்கமும் ஷிர்க்கும்

مر أبو بكر -رضي الله تعالى عنه- براهب يتعبد في كنيسة وقد ترك الناس وزهد في الدنيا؛ لكنه يعتقد أن الله
ثالث ثلاثة، يتقرب إلى عيسى وإلى روح القدس كما يتقرب إلى ربنا -جل وعلا- يعمل وينصب؛ لكنه على
الشرك. فلما رآه أبو بكر دمعت عيناه وقال: صدق الله! (عَامِلَةٌ نَاصِبَةٌ * تَصْلَى نَارًا حَامِي

ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கிருஸ்துவ ஆலயத்தை கடந்துசெல்கிறபோது அதில் மிகுந்த பக்தியுடன் வணக்கம் செய்யும் ஒரு பாதிரியை கண்டார்கள்.மக்களிடமிருந்து தனிமை,உலகில் பற்றின்மை.  வணக்கம்.எல்லாம் இருக்கிறது ஆனாலும் கொள்கை கெட்டுப்போய்விட்ட து.காரணம் மூன்று தெய்வ கொள்கை மூலம் ஷிர்க்கும் கலந்துவிட்டது. அவரைப்பார்த்து கண்ணீர் வடித்த அபூபக்கர் (ரலி) அவர்கள்,

“அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்”  88:3,4

என்ற அல்லாஹ்வின் வார்த்தை உணமைதான் என்று கூறினார்கள்.


உலகில் முதலாவதாக கொள்கை கெட்டவன் இப்லீஸ்தான்.அவன் அல்லாஹ்வையும்,மறுமையையும்,சுவர்க்கத்தையும்,நரகத்தையும் நம்பிக்கை கொண்டவன்.அவன் கெட்டுப்போனது கொள்கையில் தான்.

الحجر:35]،: (قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ)

என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!என்று இப்லீஸ் கூறினான்

இதில் இப்லீஸ் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டிருந்தான் என்று தெளிவாக விளங்குகிறது.

எனவே ஒரு முஸ்லிம் தன் ஈமானை பாதுகாக்க இஸ்லாத்தின் கொள்கை களை அடிப்படையாக தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.

இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

اعْلَمْ أنَّ الفِقْهَ في الدّينِ أفضَلُ مِنَ الفِقْهِ في الأحْكام

மார்க்கத்தின் கொள்கைகளை தெரிந்துகொள்வது இஸ்லாத்தின் சட்டங்களை தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது.

அதனால்தான் அகீதாக்கள் பற்றிய சரியான அறிவு யாருக்கு இல்லையோ அவர்கள் அதுபற்றி விவாதம் செய்வதோ,விமர்சனம் செய்வதோகூடாது,மாத் திரமல்ல அதுபோன்ற சபைகளை தவிர்க்கவேண்டும்.    

وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا

4:140. (முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.


             மேலும் தீர்க்கமான அறிவு பெற்றவர்கள் கூட

وَالرَّاسِخُونَ فىِ الْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِ كلُ‏ٌّ مِّنْ عِندِ رَبِّنَا

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். 3:7 என குர்ஆன் கூறுகிறது.


أقبل رجل إلى الإمام مالك رحمه الله تعالى، وقال له: يا إمام (الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) [طه: 6]، كيف استوى؟ قالوا: فتغير الإمام مالك حتى علته الرحباء يعني أخذه شعور بالهيبة والخوف والرعب من السؤال وعظمته حتى تصبب منه العرق، تغير الإمام ثم التفت إلى الرجل وقال ويحك أتدري ما تقول ؟ أنت تسأل عن أمر عظيم، الاستواء معلوم والكيف مجهول .. نحن نعلم أن الله استوى على عرشه جل وعلا لكن طريقة الاستواء لم يخبرنا بها جل وعلا فلا نتكلم بها بغير علم فإنها تختص بأمر يخص العظيم جل وعلا
قال: "الاستواء معلوم، والكيف مجهول، والسؤال عنه بدعة، والإيمان به واجب"، ثم أمر بإخراج الرجل بين يديه .
 الأسماء والصفات للبيهقي (ج2 ص305-306)،


இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,இமாம் அவர்களே!  அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.என்று அல்லாஹ் கூறுகிறான் அவன் அர்ஷில் எப்படி அமர்ந்திருக்கிறான்?என்று கேட்டார்.அப்போது அந்த கேள்வியின் பயத்தால் இமாம் அவர்களுக்கு தன்னிலைமாறி வியர்க்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த மனிதர் பக்கம் திரும்பி, நீ எதைப்பற்றி கேள்வி கேட்கிறாய் என்று தெரிகிறதா?மிகப்பெரிய விஷயம் பற்றி கேட்கிறாய். 
   அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான் என்று தெரியும் ஆனால் எப்படி அமர்ந்திருக்கிறான் என்று தெரியாது.ஏனெனில் அதைப்பற்றி அவன் கூறவில்லை.அவன் கூறாத விஷயம் பற்றி நாம் பேசமாட்டோம்.

ஆகவே இதைப்பற்றிய நம்முடைய கொள்கை இது தான்:
அவன் அர்ஷில் அமர்ந்தான் என்பது தெரியும்.எப்படி அமர்ந்தான் என்று தெரியாது.அதைப்பற்றி கேள்வி கேட்பது பித்அத்.அதை ஈமான் கொள்வது கட்டாயக்கடமையாகும்.


لما ترجم الذهبي لعمرو بن عبيد في كتابه سير أعلام النبلاءكان عمرو بن عبيد مع ضلاله وكثرة الشبهات في قلبه إلا أنه كان عابدا حتى إنه مرة التقى بالخليفة فقال له الخليفة وهم في الحرم قال: هل لك إلي حاجة؟ فقال له عمرو: هذا مقام لا يسأل فيه إلا الله. وتركه وذهب، مع أنه ضال في عقيدته ينكر أن الله في السماء، أن الله مستو على العرش، ينكر أن الله يتكلم وأنه سميع بصير، يسجد ويقول: سبحان ربي الأسفل!
لما ترجم له الذهبي قال: عمرو بن عبيد الزاهد العابد الورع الزنديق الفاجر، فكان زاهد في الدنيا، ورعا عن المحرمات، كان متعبداً، لكن لما أكثر السماع لأهل البدع ومجالستهم وأكثر الاستماع والنظر إلى شبهاتهم خلصت إلى قلبه حتى ضل ضلالا عظيما.ا.


இமாம் சஹபி (ரஹ்) அவர்கள் தங்களின் சியரு அஃலாமிந்நுபலா என்ற நூலில், அம்ர் இப்னு உபைத் என்பவர்  பற்றி விமர்சனம் செய்கிறபோது, அவர் உலக மோகம் இல்லாதவர்,மிகவும் பேனுதலுள்ளவர்,மிகச்சிறந்த வணக்கசாலி.
.ஒரு தடவை ஹறம் ஷரீபில் வைத்து அக்காலத்து கலீபா அவர்கள் அம்ரை சந்தித்து,உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்றார்.அப்போது அம்ர் அவர்கள், இது அல்லாஹ்விடம் கேட்கும் இடம்.வேறு யாரிடமும் நான் தேவையாகமாட்டேன் என்று பதில் கூறினார்கள்.
அந்தளவுக்கு பேனுதளுல்லவர் இறுதியில் கொள்கை கெட்டுப்போய் அல்லாஹ் வானத்தில் இல்லை,அவன் அர்ஷிலும் இல்லை,பூமியில் தான் இருக்கிறான்,அவன் பேசுவதில்லை,கேட்பதில்லை,   பார்ப்பதில்லை என்று உளற ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலைக்கு அவர் சென்றதற்கு காரணம் அகீதாக்கள் பற்றி அதிகம் விவாதம் செய்ததும்,அதுபோன்ற சபைகளில் பங்கெடுத்ததும்,வஹ்ஹாபிகளின் நட்புமே அவரின் வழிகேட்டிற்கு காரணம் என்று இமாம் சஹபி குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கிறது,ஆனால் அந்த சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு.
எந்த இடத்தில் அறிவு தடுமாறுமோ  அந்த இடத்தில் ஈமான் முன்னிலைப்படுத்தப்படும்.

இதுநாள்வரை முஸ்லீம்களுக்கிடையில் சட்டஙக்குழப்பங்கள் செய்துவந்த வஹ்ஹாபிகள் கொள்கை குழப்பங்களில் இறங்கியுள்ளனர்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும்,குர்ஆனில் பிழை உண்டு என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.

இது போன்று குர்ஆனில் கொள்கை குழப்பம் செய்த வஹ்ஹாபிகள் மீது உமர் ரலி அவர்கள் எடுத்த நடவடிக்கை இங்கு கவனத்தில் கொள்ளப்பட  வேண்டும்.

في عهد عمر -رضي الله تعالى عنه- أقبل رجل من العراق، رجل تخصصه طرح شبهات، لم يذهب ويجلس في مجلس لأحد أئمة العلم ويطلب العلم، لا، يبحث في القرآن عن شبهات ويطرحها للناس؛ فأقبل ودخل المدينة يعرف أين موضع عمر وأين موضع عثمان وعلي وغيرهم من الصحابة -رضي لله عنهم-، يعرف أن يسأل عن عبد الله بن عمر طالب علم، عن أبي هريرة، عن عبد الله بن عمرو، عن ابن عباس، يعرف أين يتوجه إليهم؛ لكنه لم يفعل، مضى إلى مجالس الناس ونواديهم!.
، فلما وقف إليهم قال: عندي مسألة؟ قال ما عندك؟ قال: إن الله يقول في القرآن: (فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ) [الرحمان:39]، ويقول في القرآن: (فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ * عَمَّا كَانُوا يَعْمَلُونَ) [الحجر:92-93]، هل الله يسألنا أم لا يسألنا؟! فجعل الناس يضطربون! فعلا؛ قرآن متناقض! هل يسألنا أم لا يسألنا! ثم يدعهم في حيرتهم ويذهب إلى مجموعة أخرى ويطرح عليهم سؤالا مثله أو قريبا منه، ثم يذهب إلى مجموعة ثالثة حتى بدأ الناس يتشككون في القرآن، فرفع أمره إلى عمر رضي الله -تعالى- عنه.

فدعاه عمر فجيء به إليه، وهو صبيغ بن عسل، قال له عمر: أنت من أين؟ قال: أنا من العراق، قال ما عندك؟ قال: عندي مسائل، قال هات مسائلك، فقال إن الله يقول: (فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ)، ويقول: (فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ * عَمَّا كَانُوا يَعْمَلُونَ)، نبئنا يا عمر هل يسألنا الله أم لا يسألنا؟.

فقال له عمر إن يوم القيامة يوم طويل، (يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ) [المعارج:4]، قال: إن يوم القيامة يوم طويل، ففي موطن يعنف الناس، يُقال لأحدهم: زنيت، سرقت، عققت، ولا يطلب منه أن يجيب عن ذلك؛ لأنه ثابت عليه، وفي موطن تعرض عليهم صحفهم ويُسأل، يقال له: لماذا زنيت؟ لماذا سرقت؟ لماذا فعلت؟ فهو في مواطن يعنف ليعرف جلالة شره وفجوره، وفي موطن آخر يحاسب، هل فهمت؟ قال: نعم، قال فما عندك من مسائل، فجعل يطرح شبهة تلو شبهة وعمر يجيب عليه، فلما انتهى قال له عمر: انتهت مسائلك؟ ما عندك شبهات؟ قال نعم.

قال له عمر: لماذا لم تذهب إلي؟ تأتي إلي أو تذهب إلى عثمان وعلي وإلى الصحابة العلماء إن كنت باحثاً عن الحق؟ فسكت الرجل. فقال عمر: اجلدوه. فجلدوا ظهره، ثم قال: اكشفوا عمامته، فضربه بالعصا على رأسه ضربات، ثم قال له عمر: هل بقي في رأسك شيء؟ والله يا أمير المؤمنين ما بقي في رأسي شيء

قال اذهب إلى العراق، والله لو بلغني عنك شيء لأقطعن رأسك، فذهب الرجل
!.
 تاريخ دمشق لابن عساكر

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் சபீக் இப்னு அசல் என்பவர் இராக்கிலிருந்து  மதீனா வந்தார்.
குர்ஆனைப்பற்றிய நிறைய சந்தேகங்களை கிளப்பினார்.அவருக்கு தெரியும் உமர் (ரலி),உஸ்மான் (ரலி),அலி (ரலி),இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) போன்ற பெரிய பெரிய சஹாபிளெல்லாம் இருக்கிறார்கள்.
தன் சந்தேகங்களை பெரும் சஹாபிகளிடம் கொண்டு செல்லாமல் மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்றார்.
மக்களே!குர்ஆனில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு என்றார்.
என்னவென்று மக்கள் வினவியபோது அவர், அல்லஹுத்தஆலா குர்ஆனில் 55:39 ல் நாளை மறுமையில் கேள்வி கணக்கு இல்லை என்று கூறுகிறான்.ஆனால் 15:92 ல் கேள்வி கணக்கு உண்டு என்று சொல்கிறான்.
அல்லாஹ் கேட்பானா?கேட்கமாட்டானா?மக்கள் குழம்ப ஆரம்பித்தனர்,

இன்னொரு கூட்டத்திடம் வந்து வேறொரு சந்தேகத்தை கிள்ப்பினார்.
விஷயம் உமர் ரலி அவர்களின் கவனத்திற்கு வந்தபோது அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லி விசாரித்தார்கள்.

நீ எங்கிருந்து வருகிறீர்? உன் பிரச்சனை என்ன?என்று கேட்டபோது,அவர் -நான் இராகிலிருந்து வருகிறேன்.என் சந்தேகம் இது தான் என்று கூறினார்.அப்போது உமர் ரலி அவர்கள்,
அல்குர்ஆன் 70:4 ல் மறுமையில் ஒரு நாள் என்பது 50 ஆயிரம் வருடம் என்று கூறுகிறது.எனவே நீண்ட அந்தநாளில் பல கட்டங்களாக விசாரணை நடைபெறும்.

ஒரு கட்டத்தில் -நீ திருடினாய்,நீ விபச்சாரம் செய்தாய்,நீ கொலை செய்தாய் என்றுமட்டும் கூறுவான். ஏன் செய்தாய்? என இப்போது கேட்கமாட்டான்.
இன்னொரு கட்டத்தில், ஏன் செய்தாய்? என விசாரிப்பான்.புரிந்து விட்டதா? என்று கேட்டபோது ஆம் என்று அவர் பதில் கூறினார்.

அப்போது உமர் ரலி அவர்கள்,உனக்கு உண்மையில் இந்த தீனில் சந்தேகமிருக்குமானால் என்னிடம் வந்திருக்க வேண்டும்,அல்லது பெரிய சஹாப்பாக்களிடம் சென்றிருக்க வேண்டும்,அதைவிட்டுவிட்டு மக்களின் ஈமானில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறீர் என்று கூறி, அவருக்கு சவுக்கடி கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் தலைப்பாகயை கழட்டச்சொல்லி தலையில் அடித்து இனி இது போன்ற சந்தேகத்தை உன் அறிவு கிளப்புமா என்று கேட்டு,நீ மதீனாவில் இருக்க கூடாது, இராக் செல்!உன்னை பற்றி இனியொரு செய்தி வந்தால் உன் தலையை துண்டித்து விடுவேன் என் எச்சரித்து அனுப்பினார்கள்.
அல்லஹுத்தஆலா நம்முடய அகீதாவில் தெளிவையும் உறுதியையும் தருவானாக!

No comments:

Post a Comment