Wednesday 27 March 2013

வட்டியின் புதிய வடிவங்கள்



ثبت في مسند الإمام أحمد رحمه الله من حديث عقبة بن عامر رضي الله عنه ’أنه سمع النبي صلى الله عليه وسلم يقول : ( لا تُخيفوا أنفسكم بعد أمنها ) قالوا : وما ذاك يارسول الله ؟ قال : ( الدين ) .

அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அச்சமில்லாத வாழ்க்கையை தந்ததற்குபின் அதை நீங்கள் கெடுத்து உங்களுக்கு நீங்களே பயமுள்ள சூழலை உருவாக்கிக்கொள்ளாதீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அது என்ன?என நபித்தோழர்கள் விளக்கம் கேட்டபோது,கடன் என்று பதில் கூறினார்கள்.

கடனுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவனின் வாழ்வு நிம்மதியில்லாத வாழ்க்கை என்று நபி ஸல் அவர்கள் உணர்த்துகிறார்கள்.

கடன் கெளரவமாக பார்க்கப்படுகிற காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் கடன் என்ற மனநிலையை மாறி ஆடம்பரமான வாழ்க்கைக்கும், அனாச்சாரமான செலவினங்களுக்கும் கடன் இன்றைக்கு அவசியமான ஒன்றாகிப்போனது.

இன்றைய இளைஞர்களின் பர்ஸை நிறப்பிக்கொண்டிருக்கும் கடன் அட்டை கூட கெளரவ அட்டையாகிப்போனது.

கடன் வாங்கி வியாபாரம் செய்யும் காலம் கடந்து கடனையே வியாபாரம் செய்யும் காலமிது.

கல்விக்கடன்,மருத்துவக்கடன்,வியாபாரக்கடன்,வாகனக்கடன்,வீட்டுகடன் என்று எங்கும் கடன் மயமாகவே காட்சியளிக்கிறது.

ஏழை,பணக்காரன் எனும் பாகுபாடின்றி எல்லோருடைய வாழ்வையும் ஆக்கிரமித்திருக்கிறது.
இஸ்லாத்தை பொருத்தவரையில் கடனை உதவியாக மட்டுமே பார்க்கிறது. அது வியாபாத்திற்கான மூலதனம் அல்ல.அதனால் தான் கஷ்டப்படும் ஒருவருக்கு கடன் கொடுப்பதை நன்மைக்குறிய காரியமாகவும், மார்க்க அடிப்படையில் அது முஸ்தஹப்பு என்ற அந்தஸ்தையும் பெறுகிறது.


وعند ابن ماجه بسند حسن أن النبي قال: (ما من مسلم يقرض مسلما قرضا مرتين إلا كان كصدقتها مرَّة

கஷ்டப்படும் முஸ்லிமான மனிதருக்கு எந்த முஸ்லிம் இரண்டு தடவை கடன் கொடுப்பாரோ அவருக்கு ஒரு தடவை ஸதகா செய்த நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


: (رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة
سنن ابن ماجة

ஸதகா செய்தால் பத்து மடங்கு நன்மையும்,கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு நன்மையும் வழங்கப்படும் என்று சுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருந்ததை நான் மிஃராஜ் இரவில் பார்த்தேன்.கடன் ஸதகாவை விட சிறந்ததா?என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள்,தர்ம்ம் கேட்பவன் தன்னிடம் இருந்தாலும் கேட்பான்.ஆனால் கடன் கேட்பவன் தனக்கு தேவையான போது மட்டும் தான் கேட்பான் என்று பதில் கூறினார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

தன் அவசியமான தேவைக்காக கடன் வாங்கிய ஒருவர் கடும் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவருக்கு கடனை நிறவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.


கடன் வழங்கியவர் அவர் கொடுக்கும் அவகாசத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஸதகாவின் நன்மையை பெறுவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு படிமேலே, அந்த கடனை பெருந்தன்மையுடன் தள்ளுபடி செய்துவிட்டால் அல்லாஹ் அவருக்கு நிழலில்லாத அந்த மறுமை நாளில் நிழல் கொடுப்பான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

கடன் கொடுப்பவர் விஷயத்தில் தாராள தன்மையுடனும்,விசாலமான மனதுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம், கடன் வாங்குபவர் விஷயத்தில் உச்ச கட்ட எச்சரிக்கை உணர்வை கடைபிடிக்கச்  சொல்கிறது.

கடன் பற்றிய விரிவான ஒழுங்குமுறைகளை கொண்ட வசனமே திருக்குர்ஆனின் மிகவும் பெரிய வசனமாகும்.

அவசியத்திற்காக கடன் வாங்கினாலும் கால தாமதம் செய்யாமல் அதை நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததாகும்.

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள்,ஆனால் இஸ்லாம் கடன் அமலை முறிக்கும் என்று கூறுகிறது.

மிகவும் சர்வசாதாரணமாகிப்போன கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கையை இஸ்லாம் கடைபிடிக்கிறது.

இறந்தவரின் சொத்தை பங்கு வைக்கும் முன் அவரின் கடனை நிறைவேற்றச் சொல்கிறது.தகப்பனின் சொத்துக்கு பங்கு கேட்கும் மகன் அவரின் கடனுக்கு முதலாவதாக பொறுப்பெடுக்கச்சொல்கிறது,காரணம் கடன் அவரை மறுமையில் சிறைபிடிக்கும்


عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَنَازَةٍ فَقَالُوا صَلِّ عَلَيْهَا فَقَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا لَا قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قِيلَ نَعَمْ قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا ثَلَاثَةَ دَنَانِيرَ فَصَلَّى عَلَيْهَا ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ فَقَالُوا صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا قَالَ فَهَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا ثَلَاثَةُ دَنَانِيرَ قَالَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ فَصَلَّى عَلَيْهِ

فجعل رسول الله إذا لقيني يسألني هل قضيت الدين عن أخيك، حتى قلت له يا رسول الله قضيتهما فقال قال أبو قتادة
الآن بردت عليه جلدته

ஹழ்ரத் ஸல்மத்திப்னு அக்வஃ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதரே!இதற்கு தொழவையுங்கள் என்றனர்  உடனே நபி ஸல் அவர்கள்,இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்றனர்.இவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா?என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்றனர். நபி ஸல் அவர்கள் அந்த மையித்துக்கு தொழ வைத்தார்கள்.
பின்பு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டு தொழவைக்கச்சொன்னபோது நபி ஸல் அவர்கள் இவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்!.என்றனர்.இவரின் கடனை நிறைவேற்ற ஏதும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று நபி ஸல் அவர்கள் கேட்டபோது,ஆம் மூன்று தீனார்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறியபோது அவருக்கும் நபி சல் அவர்கள் தொழ வைத்தார்கள்.

பின்பு மூன்றாவது ஒரு ஜனாஸா கொண்டு
வரப்பட்டது. 
  
அவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்! என்று பதில் கூறினர்.  அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் இவர் தன் கடனை நிறைவேற்ற வேறு ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்று பதில் கூறினார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழவைத்துக்  கொள்ளுங்கள்.என்றார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த அபூ கதாதா ரலி அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் தொழவையுங்கள்.இவர் கடனுக்கு நான் பொருப்பேற்றுக்கொள்கிறேன்.என்றதும் -நபி ஸல் அவர்கள் தொழவைத்தார்கள்.

புகாரி.

அபூ கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருநாள் நபி ஸல் அவர்கள் என்னை சந்தித்தபோது-அபூ கதாதாவே! நீ வாக்களித்த அந்த கடனை நிறைவேற்றிவிட்டாயா?என்று கேட்டார்கள்.    அதற்கு நான் ஆம்!நிறைவேற்றிவிட்டேன் என்றதும் இப்போது இப்போது தான் அந்த மையித்தின் தோள் குளிர்ந்தது என்றார்கள்.

கடனுடன் மரணித்த ஒருவருக்கு நபி ஸல் அவர்கள் தொழவைக்க மறுத்துள்ளார்கள்.இதன்மூலம் கடனாளிக்கு தொழ வைக்க கூடாது என்று அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
நான் தொழவைக்கமாட்டேன் என்று தான் சொன்னார்கள்,நீங்கள் தொழவையுங்கள் என்று தெளிவாகச்சொல்லியுள்ளார்கள்.


وفي جامع الترمذي بسند صحيح عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:" من فارق الروحُ الجسدَ وهو برئ من ثلاث دخل الجنة من الكبر،والغلول،والدين

உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்ட ஒருவர் பெருமை,மோசடி,கடன் இந்த மூன்றை விட்டும் நீங்கியிருந்தால் மட்டுமே சுவனம் நுழைவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وفي رواية الحاكم ( إن صاحبكم حُبس على باب الجنة بدين كان عليه

கடனுக்காக சுவனத்தின் வாசலில் உங்கள் தோழர் ஒருவர் தடுக்கப்பட்டிருக்கி  றார் என்று நபியின் சொல் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

روى النسائي في سننه بسند حسن، عن محمد بن عبدالله بن جحش رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم قاعداً حيث توضع الجنائز فرفع رأسه قبل السماء ، ثم خفض بصره ، فوضع يده على جبهته.
فقال : سبحان الله ‍‍‍!‍ سبحان الله ما أنزل من التشديد‍
قال : ففرقنا وسكتنا ’ حتى إذا كان الغد سألت رسول الله صلى الله عليه وسلم فقلت : ما التشديد الذي أنزل ؟
قال : في الدين، والذي نفسي بيده لو قتل رجل في سبيل الله ثم عاش، ثم قتل ثم عاش،ثم قتل وعليه دين ما أدخل الجنة حتى يُقضى دينه  .

நபி ஸல் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது பல ஜனாஸாக்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.அப்போது தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி, பின்பு தாழ்த்திவிட்டு, தங்களின் கையை நெற்றியில் வைத்து-
சுப்ஹானல்லாஹ்!என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கிவிட்டது! என்றார்கள்.
மறுநாள் நபி ஸல் அவர்களை சந்தித்து அதற்கான விளக்கம் கேட்டபோது-  அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஒருவர்,மீண்டும் உயிர் பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு,மீண்டும் உயிர்பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, இப்படி மூன்று தடவை அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரை தியாகம் செய்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைக்கமாட்டான் என்று வஹி இறங்கியது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் ரலி
இதற்காகத்தான் நபி ஸல் அவர்கள் கடனை விட்டும் அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடியுள்ளார்கள்.
அதைப்பற்றி காரணம் கேட்டபோது இப்படி சொன்னார்கள்


روى الشيخان من حديث عائشة رضي الله عنها أن رسول الله كان يدعو في الصلاة:
" اللهم أني أعوذ بك من المغرم والمأثم " فقال له قائل:ما أكثر ما تستعيذ من المغرم ؟ فقال:" إن الرجل إذا غرم حدث فكذب ووعد فأخلف

கடன் வாங்கியவன் பொய்பேசுவான்.வாக்குறுதிக்கு மாற்றம் செய்வான் என்றார்கள்.

இரவில் கவலையை பகலில் கேவலத்தை பெற்றுத்தரும் கடனை விட்டும் எச்சரிக்கையாய் இரு என்று ஸலபீன்களான நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

கடன் இன்று உலகமயமாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களின் வாழ்வில் வட்டி நுழைவதற்கு வழியில்லை,நுழைவாசல் வழியாக நுழையமுடியாத வட்டி- கடன் என்ற கொல்லப்புறவழியாக உள்ளே நுழைந்திருக்கிறது.அதை அடையாளம் கண்டு வேரறுப்பது முஸ்லிம்களின் மீது பிரதான கடமையாகும்.

வட்டிக்கும் கடனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் மெல்லியதே!  கடன் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக பெறுகிற எதுவும் வட்டியே!

வட்டிக்கு இலக்கணம் சொல்லும்போது நபி ஸல் அவர்கள் இப்படிச்சொன்னார்கள்

كل قرض جر منفعة فهو ربا

பலன் தரும் எந்த கடனும் வட்டியாகும்.என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்
.

المطالب العالية بزوائد المسانيد المانية لابن حجر (1/411)
وقد أخرجه: البيهقي في الكبرى، كتاب البيوع

அதனால் தான் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடமிருந்து எந்த உதவியையும் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

حديث أنس بن مالك - رضي الله عنه - قال: قال رسول اللّه صلى الله عليه وسلم: «إذا أقرض أحدكم قرضاً فأهدى إليه أو حمله على الدابة فلا يركبها ولا يقبله، إلا أن يكون جرى بينه وبينه قبل ذلك
أخرجه ابن ماجة، كتاب الأحكام، باب: القرض، والبيهقي في السنن الكبرى كتاب البيوع


உங்களில் ஒருவர் மற்றவருக்கு கடன் கொடுத்திருந்து,கடன் பெற்றவர் இவருக்கு அன்பளிப்பு கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம்.மேலும் அவரின் வாகனத்தில் ஏறச்சொன்னால் ஏறவேண்டாம்.அவர்கள் இருவருக்கும் முன்னாலிலிருந்து இப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கல் இருந்தால் அப்போது அதை ஏற்பது தவறில்லை என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

இன்று வட்டி வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு பெயர்களில் வடிவம் தருகிறது.வட்டியை தவிர்த்துவிட்டு வாழ முடியாது என்று முரட்டு தைரியம் கொண்டவர்கள் அல்லாஹ்,ரசூலின் எச்சரிக்கையை பையந்து கொள்ளட்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ

ஒரு காலம் வரும் அதில் வட்டிபொருளை சாப்பிடாத யாரும் இருக்க மாட்டார்கள்.வட்டியை பேனுதலுடன் தவிர்ந்து கொண்டாலும் அதன் புழுதியா வது அவன் மீது படியும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அபூ தாவூது

அதற்கொப்ப வட்டி புதியவடிவங்கள் பெற்றிருக்கிறது.

credit card கிரிடிட் கார்ட் பற்றி இஸ்லாம்

இளைஞர்களில் அதிகமானோர் இந்த கிரிடிட் கார்டை பயன்படுத்திவருகின்றனர்.
இதில் விசா கார்ட்,மாஸ்டர் கார்ட்.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற பலபெயர்களில் பேங்க் மூலம் விணியோகிக்கப்படுகிறது.
ஷரீஅத் கண்ணோட்டத்தில் இதுவும் ஒருவகை வட்டியை சார்ந்ததாகும்.

கிரிடிட் கார்ட் என்றால் என்ன?

பேங்க் மூலம் வழங்கப்படும் இந்த கார்ட்டை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கு இவரின் கணக்கில் தொகை இருக்கவேண்டிய அவசியம் இல்லை.சுருங்கச்சொல்லவேண்டுமானால் இது பேங்க் நமக்கு வழங்கும் கடன் +வட்டி-

முப்பது நாட்கள் அல்லது நாற்பத்தி ஐந்து நாட்கள் என்று வங்கி நமக்கு வழங்கும் காலத்தவணைக்குள் நாம் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை செலுத்திவிட்டால் வட்டிகட்டத்தேவையில்லை,அதே சமயம் காலம் தாமதித்தால் நாம் வாங்கிய கடனுடன் வட்டியும் செலுத்தியாக வேண்டும்.

சுமார் 1970 முதல் இந்த கிரிடிட் கார்டை பயபடுத்துவது நடைமுறைக்கு வருகிறது.
இஸ்லாமிய பார்வையில் இதை பயன்படுத்துவது தெளிவான ஹராமாகும், காரணம் உரிய தவணைக்குள் வட்டியின்றி செலுத்தமுடியும் தானெ என்று சொல்லலாம்.

முதலில்:இந்த ஒப்பந்தம் வட்டியுடன் உள்ள ஒப்பந்தமாகும்.காலம் தவறினால் நான் வட்டி கட்டுவேன் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வதும்,அதில் கையெழுத்  திடுவதும்,அதை ஒப்பந்தம் செய்துகொள்வதும் ஹராமாகும்.

இரண்டாவது:மனிதன் தன் எதிர்காலத்தைப்பற்றி உறுதியாக சொல்ல முடியாது.ஒருவேளை இவனால் தவணைக்குள் செலுத்த முடியாமல் போனாலோ,அல்லது மரணித்து விட்டாலோ வட்டி கட்டும் நிர்பந்தத்திற்கு ஆளாகுவான்.

இதைப்பற்றி ஆய்வு செய்த சவூதியின்
مجلس مجمع الفقه الإسلامي என்ற அமைப்பு செப்டம்பர்,2000 த்தில் தனது 12 வது சுற்றில் -இது தெள்ளத்தெளி   வான ஹராமாகும் என்று தீர்ப்பு வழங்கியது.அதே சமயம் டெபிட் கார்டை பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையுமில்லை என்று கூறியது.
இதைப் போல ஒரு முறை அறியாமக்கால அன்றைய அரபுகளிடமும் இருக்கவே செய்தது.

وصورته هي عين صورة الربا في الجاهلية ربا النسيئة حيث كانت العرب في الجاهلية تقرض فإذا حل الأجل قالوا إما إن تقضي وإما أن تربي. كما قال رسول الله صلى الله عليه وسلم: (ألا إنما الربا في النسيئة). متفق عليه.

அந்த காலத்தில், ஒருவர் கடன் கொடுப்பார்.அதற்கு குறிப்பிட்ட தவணையும் கொடுப்பார்.குறிப்பிட்ட தவனைக்குள் பணத்தை திருப்பி செலுத்த முடியாத போது கடன் கொடுத்தவர் இவருக்கு இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளச்சொல்வார்.ஒன்று உடனே கடனை திருப்பிக்கொடு,அல்லது வட்டியுடன் கொடுப்பதாக வாக்கு கொடு என்பார்கள்.
இந்த முறைக்கு ரிபன்னஸீஅத் (தாமத்த்தால் விளையும் வட்டி) என்று சொல்லப்படும்.இதையும் நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள்.

ஒத்திக்கு இருக்கும் முறையும் வட்டியே

2 அல்லது 3 வருடங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு வீட்டை எந்த வாடகையும் கொடுக்காமல் பயன்படுத்துவது, அந்த தவணை முடியும் போது வீட்டுச் சொந்தக்காரர் பெற்ற தொகையை திருப்பித் தந்து விட்டால் வீட்டை காலி செய்து விடுவது  இந்த முறையை முஸ்லிம்கள் பலரும்,குறிப்பாக மார்க்கப்பற்றுள்ள சிலரும் கூட ஹலால் என்று நினைத்துக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.
பொருட்களை அடைமானமாக வைத்து உதவி பெற்றுக் கொள்வது ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அவ்வகையில் அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அடைமானமாகக் கொடுத்து, வாங்கி அதற்கு ஈடான உதவியை (பொருளாதாரமாகவோ, பண்டமாற்றாகவோ) பெறலாம், கொடுக்கலாம்.
இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அடைமானமாக ஒன்றைப் பெறுபவர். அதனைக் கொடுத்தவர் மீட்டுச் செல்லும் வரை, அதனைப் பாதுகாக்கும் உரிமையைத்தான் பெறுகிறாரே தவிர பயன்படுத்தும் உரிமையை அல்ல. இதனைப் புரிந்து கொள்ளாமல் பலர் அடைமானமாகப் பெற்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். . இது ரஸுல் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும். தவிர இதனை வட்டி என்றே ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


فانتفاع المرتهن بالسكنى في البيت أجمع أهل العلم ، لأنه من باب القرض الذي يجر نفعا ، قال ابن قدامة ( المغني : 4/431) : ( فإن أذن الراهن للمرتهن في الانتفاع بغير عوض ، وكان دين الرهن من قرض ،لم يجز ، لأنه يحصل قرضا يجر منفعة ، وذلك حرام)

அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை பயன்படுத்துவது பலனை அடிப்படையாக கொண்ட கடனாகும்.என்று மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
இருவர்களும் சம்மதித்துக்கொண்டாலும் இது ஹராமாகும் என்று இப்னு குத்தாமா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


وذكر ابن قدامة أيضا أن أحمد رحمه الله كان يقول عن الدور إذا كانت رهنا في قرض ينتفع بها المرتهن هو الربا المحض.

மேலும் அவர்கள் கூறும் போது இது மிகத்தெளிவான வட்டியாகும் என்று இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏலச்சீட்டு வட்டியாகுமா?:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
அதே சமயம் குலுக்கல் சீட்டு முறை வட்டியாகாது,காரணம், குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
இது போன்று இன்னும் பல்வேறு நவீன வட்டியை மையமாக கொண்ட கொடுக்கல் வாங்கல் சமகாலப்பிரச்சனையாக தலைதூக்கியிருக்கிறது.   இது போன்ற சட்டங்களில் மார்க்க அறிஞர்களை அனுகி தெரிந்த பிறகே செயல்படவேண்டும்.
ஹலால் தெளிவானது-ஹராம் தெளிவானது-இவ்விரண்டையும் தான்டி சில விஷயங்கள் சந்தேகத்திற்கு இடமானது,அப்படிப்பட்ட சந்தேகத்திற்கு சாத்தியமான விஷயங்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்(.நபி மொழி)

5 comments:

  1. அருமையான பயான்

    ReplyDelete
  2. அழகிய பதிவு.
    மக்களின் மறுபக்கம் வௌிக்காட்டப்பட்டுள்ளது

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. alhamthulillah kalatthin kaddaya makkappadda kadamaiyana thalaippu mika thelivana thakavalkal allah unkalin aayulilum aaruokkiyatthilum aanmeekatthilum barakkat seyvanaka aameen ya rappal aalameen

    ReplyDelete