Thursday 17 April 2014

நல்லாட்சி நம்கையில்


நடைபெற்று கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதசார்ப்பற்ற நிலையான நல்லாட்சி மலர்வதே அனைத்து  தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது, நமது இந்த விருப்பம் கைகூடவேண்டுமானால் நாம் மதவெறிபிடித்த கட்சிகளையும் அவர்களுடன் இணைந்தவர்களையும் புறக்கணிக்கவேண்டும். அனைத்து மத சகோதர்களையும் அந்த மதம்சார்ந்த சட்டங்களையும் மதிப்பவர்களை தேர்வுசெய்ய வேண்டும் அத்துடன் அப்படிப்பட்ட அரசுஅமைய துஆ செய்வதுடன் நமது வாழ்க்கையை அல்லாஹ்விற்கு பொருத்தமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

وعن يحيى بن هاشم عن يونس بن أبي إسحاق عن أبيه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " كما تكونون كذلك يؤمر عليكم

நீங்கள் எப்படி வாழ்கின்றீர்களோ அப்படியே உங்களுக்கு ஆட்சியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நபி (ஸல்)  அவர்கள் சொன்னார்கள்.

நூல்.  மிஷ்காத். பைஹகி


وعن أبي الدرداء قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن الله تعالى يقول : أنا الله لا إله إلا أنا مالك الملوك وملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوبهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم ملوككم " . رواه أبو نعيم في " الحلية "

அல்லாஹ் சொன்னதாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 நான் மட்டும் தான் இறைவனாக இருக்கின்றேன் நான் அரசர்களின் அரசனாக இருக்கின்றேன் ஆள்பவர்களின் உள்ளங்கள் எனது கையில் தான் உள்ளது என் அடியார்கள் எனக்கு கட்டுபட்டு வாழ்ந்தால் நான் அந்த ஆட்சியாளர்களின் உள்ளங்களை கருணை மற்றும் இரக்கத்தைக் கொண்டு திருப்பிவிடுவேன்.  அவர்கள் எனக்கு மாறு செய்தால் நான் அவர்களின் உள்ளத்தை கோபத்தைக் கொண்டும் தண்டிக்கும் குணத்தைக் கொண்டும் திருப்பி விடுவேன் அப்பொழுது நீங்கள் அரசர்களுக்கு எதிராக சபிப்பதை கொண்டு ஈடுபடாதீர்கள். நான் உங்களை பாதுகாப்பதற்காக நீங்கள் என்னை நினைப்பதை கொண்டும் (திக்ரு) என்னிடம் பணிந்து நடப்பதை கொண்டும் ஈடுபடுங்கள்

நூல். மிஷ்காத் 323.

وأخرج أبو الشيخ ، عن مالك بن دينار - رضي الله عنه - قال : كلما أحدثتم ذنباً ، أحدث الله لكم من سلطانكم عقوبة .

மாலிகிப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வித விதமாக பாவங்கள் செய்யும் போது உங்களுடைய ஆட்சியாளர்களின் மூலமாக உங்களுக்கு வித விதமான தண்டனையை அல்லாஹ் வழங்குவான்.

நூல். தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்


ஆட்சியாளர்களை நமக்கு சாதகமாக மாற்றும் துஆ

 ولما وليَ الحجَّاجُ بن يوسف الثقفي العراقَ، وطغى في ولايته وتجبَّر، كان الحسنُ البصري أحدَ الرجال القلائل الذين تصدَّوا لطغيانه، وجهروا بين الناس بسوء أفعاله، وصدعوا بكلمة الحق في وجهه، فعَلِمَ الحجَّاجُ أن الحسن البصري يتهجَّم عليه في مجلس عام، فماذا فعل؟ دخل الحجَّاجُ إلى مجلسه، وهو يتميَّز من الغيظ، وقال لجلاَّسه: (تبًّا لكم وسحقاً، يقوم عبدٌ من عبيد أهل البصرة، ويقول فينا ما شاء أن يقول، ثم لا يجد فيكم من يردُّه، أو ينكر عليه، واللهٍ لأسقينَّكم من دمه يا معشر الجبناء، ثم أمر بالسيف والنطع, ودعا بالجلاد فمَثُل واقفا بين يديه ، ثم وجَّه إلى الحسن بعضَ جنده، وأمرهم أن يأتوا به، ويقطعوا رأسه، وانتهى الأمر . 
 
وما هو إلا قليل حتى جاء الحسنُ، فشخصتْ نحوه الأبصارُ، ووجفت عليه القلوبُ، فلما رأى الحسنُ السيفَ والنطع والجلادَ حرَّك شفتيه، ثم أقبل على الحجاج، وعليه جلالُ المؤمن، وعزة المسلم، ووقارُ الداعية إلى الله، فلما رآه الحجاجُ على حاله هذه, هابه أشدَّ الهيبة، وقال له: ها هنا يا أبا سعيد، تعالَ اجلس هنا، فما زال يوسع له, ويقول: ها هنا، والناس لا يصدَّقون ما يرون، ويقول له: تعال إلى هنا يا أبا سعيد، حتى أجلسَه على فراشه، ووضَعَه جنبه، ولما أخذ الحسنُ مجلسه, التفت إليه الحجَّاجُ، وجعل يسأله عن بعض أمور الدين، والحسنُ يجيبه عن كلِّ مسألة بجنان ثابت، وبيان ساحر، وعلم واسع، فقال له الحجاج : أنت سيدُ العلماء يا أبا سعيد، ثم دعا بغالية, وطيَّب له بها لحيته، وودَّعه، ولما خرج الحسنُ من عنده تبعه حاجبُ الحجاج، وقال له: يا أبا سعيد، لقد دعاك الحجاجُ لغير ما فعل بك، دعاك ليقتلك، والذي حدث أنه أكرمك، وإني رأيتك عندما أقبلت، ورأيتَ السيفَ والنطعَ قد حرَّكتَ شفتيك، فماذا قلت؟ فقال الحسن: لقد قلت: يا وليَ نعمتي، وملاذي عند كربتي، اجعل نقمته بردا وسلاما عليَّ، كما جعلت النارَ بردا وسلاما على إبراهيم) قال تعالى:
﴿أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ﴾


ஹ்ஜ்ஜாஜ் பின் யூஸூப் ஈராக்கின் ஆட்சியாளராக இருந்த பொழுது இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் அவனுடைய அநீதிகளையும் வரம்புத்தனத்தையும் தட்டிகேட்பவர்களாகவும் அவனுடைய தீய செயல்களை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப் படுத்துபவர்களாகவும். அவனுடைய முன்னிலையில்  சத்தியத்தை உடைத்து சொல்பவர்களாகவும் இருந்தார்கள். இதற்கு உதாரணமாக ஒரு அற்புதமான நிகழ்வு.

  ஹஜ்ஜாஜ் மக்களின் பைத்துல் மால் பொருளில் இருந்து பணம் எடுத்து கூபாவுக்கும் பசராவுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய மாளிகையை கட்டினான் அதை கட்டி முடித்த பிறகு அதை பார்க்கவும் துஆ செய்யவும் மக்களை அழைத்தான் மக்கள் பெருங்கூட்டமாக சென்றார்கள் மக்கள் ஒரு சேர சந்திக்கும் இந்த வாய்ப்பை வீணாக்க ஹஸன் பஸரி விரும்பவில்லை  எனவே அவர்கள் மக்களுக்கு உபதேசம் செய்து அவர்களுக்கு உலகப் பொருட்களின் மீது பற்றற்ற தன்மையை ஏற்படுத்தவும் அல்லாஹ்விடம் இருக்கின்ற நற்கூலியை பெறுவதின் மீது ஆசையை உண்டாக்கும் நோக்கத்தில் அந்த மாளிகையை சுற்றிப் பார்த்து பிறகு அந்த மக்கள் முன்னிலையில் அவர்கள் ஆற்றிய உரை இதோ மிகவும் தீயவன் கட்டியதை நாம் பார்த்து விட்டோம் நாம் ஏற்கனவே பிர்அவ்னின் செய்தியை பெற்றிருக்கின்றோம் அவன் இந்த ஹஜ்ஜாஜை விடவும் உயரமாக மாளிகையை அமைத்தான் இவனை விட மிகச் சிறப்பாக அதை கட்டினான் ஆனாலும் அல்லாஹ் அந்த பிர் அவ்னையும் அழித்தான் அவனுடைய மாளிகைக்கு வரவேண்டிய நாசமும் வந்தது ஹஜ்ஜாஜ் விளங்க வேண்டும் வானில் உள்ள மலக்குகள் அவனை கோபம் கொள்கின்றனர் பூமியில் உள்ள மக்களோ அவனை போளத்தனமாக புகழ்ந்து ஏமாற்றுகின்றனர் இமாமிடம் இருந்து கோபம் பாய்ந்த நிலையில் அவனுடைய அடாவடி செயல்பாடுகள் பல்வேறு கோணங்களில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள் அப்போது அந்த சபையில் இருந்த ஒருவர் இமாம் அவர்கள் ஹஜ்ஜாஜின் கோபத்திற்கு ஆளாகுவதை பயந்து சொன்னார் இத்துடன் நிறுத்துங்கள் என்றார் அவர்கள் சொன்னார்கள் முடியாது ஏனெனில் அல்லாஹ் ஆலிம்களிடம் அவர்கள் மக்களுக்கு சத்தியத்தை மறைக்காமல் தெளிவுபடுத்த வேண்டுமென்று வாக்குமானம் பெற்றிருக்கின்றேன் என்றார்கள் மறுநாள் காலையில் ஹஜ்ஜாஜ் தன்னுடைய சபைக்கு வந்தான் அவன் கோபம் பொங்கிய நிலையில் வந்தான் தனது சபையினரை பார்த்து உங்களுக்கு சாபமும் நாசமும் உண்டாகட்டும் என்றான் மேலும் சொன்னான் நேற்று பசராவின் அடிமையான ஒருவர் எழுந்து நின்று அவர் நினைத்தையெல்லாம் பேசினார். ஆனால் அவரை எதிர்த்து மறுப்பாக யாரும் எதுவும்  பேசவில்லை கோளைகளே இப்பொழுது நான் செய்கின்றேன் பாருங்கள் .இறைவன் மீது ஆணையாக உங்களுக்கு அவரின் இரத்தத்தை குடிக்க செய்வேன் என்று கூறிவிட்டு அவனுக்கு முன்னிலையில் ஒரு தோல் விரிப்பில் கூர் வாளை எடுத்து வைத்தான் பிறகு தனது அதிகாரிகளை அனுப்பி அழைத்து வரச்சொன்னான் சற்று நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள் மக்கள் எல்லோரும் நடுக்கத்துடனும் கவலையுடனும் இமாமை கண்டார்கள் இமாம் அவர்கள் வாள் விரிப்பு வாள் கொண்டு வெட்டுபவன் இவற்றை பார்த்த பொழுது வாயை அசைத்துக் கொண்டே உள்ளே வந்தார்கள் முஃமினுக்கே உரித்தான அவர்களின் தோற்றத்தை கண்ட பொழுது ஹஜ்ஜாஜிற்கு கடுமையான பயம் தொற்றி கொண்டது எனவே அவன் அவர்களை கண்ணியத்துடன் வாருங்கள் என்று அழைத்தான் அவர்களிடம் தாராள மனதுடன் பழகினான் பேசினான் தனது விரிப்பில் அவர்களை அமரச் செய்தான் அவன் அவர்களிடம் மார்க்கம் தொடர்பான சில கேள்விகளை கேட்டான் அவர்கள் எந்த நடுக்கமும் இல்லாமல் கவர்ச்சியான முறையில் விசாலமான கல்வியுடனும் பதில் சொன்னார்கள் உடனே ஹஜ்ஜாஜ் சொன்னான் நீங்கள் தான் உலமாக்களின் தலைவர் பிறகு பல்வேறு வகையான அத்தரை அவர்களின் தாடியிலும் ஆடையிலும் தடவினான் பிறகு கண்ணியமாக அவர்களை அனுப்பி வைத்தான் இமாம் வெளியேறிய போது ஹஜ்ஜாஜின் கூட்டாளி  அவரை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம்  கேட்டான்யா அபா ஸயீத்ஹஜ்ஜாஜ் உங்களை அழைத்த நோக்கம் வேறு நடந்து கொண்ட விதம் வேறு என்று கூறி விட்டு . தாங்கள் உள்ளே நுழைந்த பொழுது உதடு அசைந்ததை கண்டேண் நீங்கள் என்ன சொன்னீர்கள்.   அதற்கு அவர்கள் சொன்னார்கள் நான் சொன்ன வார்த்தை இது தான்

يا وليَ نعمتي، وملاذي عند كربتي، اجعل نقمته بردا وسلاما عليَّ، كما جعلت النارَ بردا وسلاما على

 எனது அருட்கொடைகளின் பொருப்பாளியே எனது சோதனையான நேரத்தில் ஒதுங்கும் இடமே ஹஜ்ஜாஜின் கோபத்தை நீ என் மீது அமைதியாக்கு குளிர்ச்சியாகவும் ஆக்கி விடு நபி இப்ராஹிம் அவர்களுக்கு நெருப்பை குளிர்ச்சியாகவும் அமைதி தரக்கூடியதாகவும் ஆக்கியதைப் போன்று  நான் இந்த துஆவை தான் ஓதினேன் என்றார்கள் 
.
நூல். சுவரும் மின் ஹயாதித் தாபியீன்..
 

இஸ்லாமிய அடையாள சின்னங்களான குர்ஆன். நபி. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் இவை போன்றவற்றை  இழிவு படுத்த கூடியவர்களுக்கு ஏற்படும் நாசம்.


فلما أراد صاحب اليمن أن يرى النبي صلى الله عليه وسلم ، أتاه الوليد بن المغيرة فزعم أن محمداً ساحر . وأتاه العاص بن وائل وأخبره أن محمداً يعلم أساطير الأولين ، فجاءه آخر فزعم أنه كاهن ، وجاءه آخر فزعم أنه شاعر ، وجاء آخر فزعم أنه مجنون فكفى الله محمداً أولئك الرهط في ليلة واحدة ، فأهلكهم بألوان من العذاب . . . كل رجل منهم أصابه عذاب . فأما الوليد ، فأتى على رجل من خزاعة وهو يريش نبلاً له ، فمر به وهو يتبختر فأصابه منها سهم فقطع أكحله ، فأهلكه الله وأما العاص بن وائل ، فإنه دخل في شعب فنزل في حاجة له ، فخرجت إليه حية مثل العمود فلدغته فأهلكه الله : وأما الآخر ، فكان رجلاً أبيض حسن اللون ، خرج عشاء في تلك الليلة فأصابته سموم شديدة الحر ، فرجع إلى أهله وهو مثل حبشي ، فقالوا : لست بصاحبنا . فقال : أنا صاحبكم! . . فقتلوه . وأما الآخر ، فدخل في بئر له فأتاه جبريل فعمه فيها ، فقال : إني قد قتلت فأعينوني : فقالوا : والله ما نرى أحداً . فكان كذلك حتى أهلكه الله . وأما الآخر ، فذهب إلى إبله ينظر فيها ، فأتاه جبريل بشوك القتاد فضربه ، فقال : أعينوني فإني قد هلكت . قالوا : والله ما نرى أحداً . فأهلكه الله فكان لهم في ذلك عبرة

யமன் வாசி ஒருவர் நபியை காண நாடிய பொழுது வலீத் பின் முகீரா அவரிடம் சொன்னான். முஹம்மத் (ஸல்)  ஒரு சூனியக்காரர் என்றும்.
 ஆஸ் பின் வாயில் என்பவன்  முஹம்மத் (ஸல்)  முன்னோர்களின் கட்டுக் கதைகளை மக்களுக்கு போதிக்கின்றார் என்றான். மற்றோர் காபிர் முஹம்மத்(ஸல்)   குறி சொல்பவர் என்றும் இன்னொரு மனிதர் முஹம்மத் கவிஞர் என்றும் இன்னொரு நபர் முஹம்மத்(ஸல்)   பைத்தியக்காரர் என்றும் அந்த யமன் வாசியிடம் கூறி நபியை கேளி செய்தனர்.

இறைவன் 5 பேர் கொண்ட அந்த கூட்டத்தாரை விட்டும் நபியை ஒரே இரவில் பாதுகாத்தான் அவர்களை பல்வேறு வேதனைகள் கொண்டு அழித்தான் .அவர்கள் அழிக்கப்பட்ட விதம்.

வலீத் என்பவன்  குஸாஆ என்ற கோத்திரத்தை சார்ந்த ஒரு மனிதரிடம் அன்று இரவு சென்றான் அவன் அம்பு எரிந்து கொண்டிருந்தான் அதில் ஒரு அம்பு வலீதின் மீது பட்டு அவனுடைய முழங்கையின் நரம்பை துண்டித்தது அல்லாஹ் அவனை அழித்தான்

ஆஸ்பின் வாயில் என்பவன் ஒரு ஓடையில் சுயதேவை நிறைவேற்றுவதற்காக  உள்ளே நுழைந்தான். அப்போது தூண் போன்று இருந்த ஒரு பாம்பு அவனை கொட்டியது இதன் மூலம் அல்லாஹ் அவனை அழித்தான்

3 வது நபர் அவன் வெண்மையாகவும் அழகிய நிறம் உடையவனாகவும் இருந்தான் அன்று இரவு அவன் இருந்த இடத்தில் கடும் இருள் சூழ்ந்தது கடும்  உஷ்னம்கொண்ட விஷம் அவன் மீது பட்டு நீக்ரோபோல் கருப்பாக மாறிவிட்டான் அதோடு தன் குடும்பத்தார் பக்கம் திரும்பினான் நீ எங்களை சார்ந்தவன் அல்ல என்று கூறி அவர்களே அவனை கொலை செய்து விட்டார்கள்

4வது நபர் தனது சொந்தமான கிணற்றுக்கு வந்தான் அந்த இடத்திற்கு ஜிப்ரீல் (அலை) வந்து அவனை கிணற்றில் தள்ளிவிட்டு. அவனை யார் கண்ணுக்கும் படாமல் மறைந்துபோகச்செய்தார்கள்.. உடனே அவன்  எனக்கு உதவுங்கள் என்று சப்தமிட்டான் ஆனால் அவனுடைய குடும்பத்தார்கள்     அவனிடம் நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. நீ எங்கேயோ மறைந்துகொண்டு  வேண்டுமென்று கத்துகின்றாய் என்றார்கள். அல்லாஹ் அவனை கிணற்றில் தள்ளிவிட்டு அழித்தான்.

5 வது மனிதர் அவன் தனது ஒட்டகத்தின் பக்கம்சென்றான் அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூர்மையான முள்மரத்தைக்கொண்டு அவனை அடித்தார்கள் அவனும் அந்நேரத்தில் எனக்கு உதவுங்கள் என்று கத்தினான் அவனுடைய குடும்பத்தார்களும் நாங்கள் யாரையும் பார்க்கவில்லை என்றார்கள் அவனையும் அல்லாஹ் அழித்தான்

நூல். துர்ருல் மன்ஸூர்.

நம் துஆவும் நல்லாட்சியும்.

ஒரு ஊருக்கு ஒரு பெரியவர் சென்றார் அவர் மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடியவராக இருந்தார். அவரை இழிவு படுத்துவதற்காக ஒருவன் திட்டம்போட்டான்.அது என்னவெனில் நாம் ஒரு பூச்சியை எடுத்துக்கொண்டு நம்முடைய கையில் வைத்து நமது கையை மூடிக்கொள்ளவேண்டும் அவரிடம் பூச்சி உயிருடன் உள்ளதா அல்லது இறந்துவிட்டதா என்று கேட்கவேண்டும் அவர் உயிருடன் இருப்பதாக சொன்னால் நாம் கையை அமுக்கி கொன்றுவிடவேண்டும்.அது இறந்துவிட்டதாக சொன்னால் கையை திறந்து பறக்கவிடவேண்டும் என்பது அவனது திட்டமாகும்  அந்த திட்டத்துடன் அவன் பெரியவரிடம் கேட்டபோது அந்த பெரியவர் அவனுடைய மனம் அறிந்து சொன்னார் அது (பூச்சி வாழ்வதும் மரணிப்பதும்) உன் கையில் உள்ளது என்றார்கள்.    இது போன்றுதான் தேர்தலில் நல்லவர்களின் வெற்றி நம் கையில் உள்ளது. அதாவது துஆ செய்யும் நம்மிடம் உள்ளது.

தீயவர்களின் ஆட்சியிலிருந்து பாதுகாப்புபெற நபி கற்றுக்கொடுத்த துஆ.

ولا تسلط علينا من لا يرحمنا " . رواه الترمذي

யா அல்லாஹ் எங்களின் மீது கருணை காட்டாதவர்களை எங்களின் பொருப்புதாரிகளாக நீ சாட்டிவிடாதே.

நூல். மிஸ்காத். பக்கம் 219.

ரப்புல் ஆலமீன் அல்லாஹ் நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களை நல்ல ஆட்சியாளர்களாக  நம்மை அரவணைத்து செல்லக்கூடிய ஆட்சியாளர்களாக தருவானாக . ஆமீன்.

    



    



4 comments:

  1. طلحة مصباحي17 April 2014 at 07:19

    جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete
  2. Imam Hasan basaree (rah...) avarhalin sambavam miga arumai. Ulamaakkalukku energy tarakkoodiyadhu.alhamdhulillah.Jazakallah .

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete