Wednesday 19 November 2014

அகப்பார்வை



அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அறிவு மிகப்பெரிய பொக்கிஷமாகும்.அதில் இருவகை உண்டு.புறம் சார்ந்த அறிவு,மற்றொன்று அகம் சார்ந்த அறிவு.அதில் இரண்டாம் வகை அறிவை பெறுவதற்கு கல்பின் ஒளியை மெருகேற்ற வேண்டும்.

எப்படி கண் குருடர்களால் வெளி உலகை காண முடியாதோ அவ்வாறே கல்புக்குருடர்களால் அக அறிவை பெற்றுக்கொள்ள முடியாது.
பஸீரத் எனப்படும் அகத்தின் அறிவை பெற்றவர்கள் அல்லாஹ்வின் நேர் வழியை சொந்தமாக்கிக்கொண்டவர்கள்.மாத்திரமல்ல எந்த விஷயத்திலும் தெளிவாகவும் குழப்பமின்றியும் அவர்களால் முடிவெடுக்க முடியும்.

யா அல்லாஹ்! என் கல்பில் ஒளியேற்றுவாயாக என நபி ஸல் அவர்கள் துஆக்கேட்டது இந்த பஸீரத் எனும் தொலைநோக்குப்பார்வையை பெறுவதற்கன்றி வேறு எதற்கு?

காய்ந்த பூமிக்கு தண்ணீர் எப்படி பசுமையை வழங்குமோ அதைப்போல இருண்ட இதயத்திற்கு பஸீரத் வெளிச்சத்தை தரும்.

அந்த உயர்வான தொலைநோக்கு சிந்தனையை பெற்றவர் உண்மையை உண்மையாகவும் நன்மையை நன்மையாகவும் பார்ப்பார்.
எந்த காரியத்தை சொல்லும்போதும் செய்யும்போதும் தொலைநோக்கான பார்வையுடன் சொல்வதும் செய்வதும் நபிமார்களின் பண்பு என அல்குர் ஆன் முன்வைக்கிறது.

قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين 


(நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.


அண்ணலாரின் தொலைநோக்குப்பார்வை

لما جاء أعرابي إلى النبي عليه الصلاة والسلام يشتكي يقول: إن امرأتي ولدت غلاماً أسود، أنا أبيض وهي بيضاء، قال: وإني أنكرته، فقال له رسول الله صلى الله عليه وسلم: (هل لك من إبل؟)، وهذا شيء يعرفه الأعراب، قال: نعم، قال: (فما ألوانها؟)قال: حمر، قال: (هل فيها من أورق؟)الذي فيه سواد ليس بصافٍ، قال: إن فيها لورقاً، فعلاً، قال: (فأنى ترى ذلك جاءها؟)قال: يا رسول الله عرق نزعها، قال:(ولعل هذا عرق نزعه).رواه البخاري ومسلم


நபி ஸல் அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து நானும் என் மனைவியும் வெள்ளைநிறத்தவர்கள்.ஆனால் எங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தை கருப்பாக உள்ளது.அது எவ்வாறு சாத்தியம்?என் மனைவி மீது எனக்கு சந்தேகம் உள்ளது, அதனால் அவளை நான் வெறுக்கின்றேன் என முறையிட்டார்.
அப்போது நபி ஸல் அவர்கள், அந்த கிராமவாசியிடம், உன்னிடம் ஒட்டகம் உள்ளதா?என வினவினார்.அதற்கு அவரோ ஆம் என்றார்.அதன் நிறம் என்னவென்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீண்டும் வினவிய போது அதன் நிறம் சிவப்பு என்றார் அவர்.

அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?" என்று நபியவர்கள் கேட்க, அவர் "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.



எதையும் தூரநோக்காக சிந்திக்க சொன்ன அண்ணலார் ஸல் அவர்கள்:


وقد بعث النبي صلى الله عليه وسلم علياً قاضياً على اليمن فماذا أوصاه؟ قال له لما سأله علي: تبعثني إلى قوم وأنا حدث السن ولا علم لي بالقضاء؟ قال له: (ثبتك الله وسددك، إذا جاءك الخصمان فلا تقضي للأول حتى تسمع من الآخر فإنه أجدر أن يبين لك القضاء).رواه أحمد وأبو داود وهو حديث صحيح


நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் அலி ரலி அவர்களை எமன் தேசத்துக்கு நீதிபதியாக்கி அனுப்பிவைத்தார்கள்.அச்சமயம் ஹழ்ரத் அலி ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னை நீதிபதியாக்கி அனுப்பிவைக்கிறீ ர்கள்.எனக்கோ சின்ன வயது,மாத்திரமல்ல தீர்ப்பு பற்றிய அவ்வளவு பெரிய அறிவுஞானம் எனக்கில்லை.என்றபோது-

அல்ல்லாஹ் உன்னை நிலையாக்குவான்.சரியாக்குவான்.நீதித்துறையில் வாதி,பிரதிவாதியின் கருத்தை முழுமையாக கேட்காமல் தீர்ப்புச்செய்து விடவேண்டாம் என நபி ஸல் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் தூரநோக்குப்பார்வை:

شهد رجل عند عمر رضي الله عنه، فقال له عمر: إني لست أعرفك ولا يضرك أني لا أعرفك، فأتني بمن يعرفك، يزكيك، فقال رجل: أنا أعرفه يا أمير المؤمنين، قال: بأي شيء تعرفه؟ قال: بالعدالة، عدل ثقة، قال: هو جارك الأدنى تعرف ليله ونهاره ومدخله ومخرجه؟ قال: لا، قال: فعاملك بالدرهم والدينار الذي يستدل بهما على الورع؟ قال: لا، ما باع ولا اشترى معي ولا استأجر، قال: فصاحَبَك في السفر الذي يستدل به على مكارم الأخلاق؟ قال: لا، قال: فلست تعرفه، ثم قال للرجل: ائتني بمن يعرفك.


ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒரு மனிதர் சாட்சியாக கொண்டுவரப்பட் டார்.அவரிடம் ஜனாதிபதி உமர் ரலி அவர்கள், நீ யார் என்று எனக்கு தெரியாது.உன்னை பற்றி தெரியாமல் உன்னை சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.அதனால் உன்னைப்பற்றி நன்கு அறிந்த ஒருவரை சாட்சியாக கொண்டு வாரும் என உத்தரவிட்டார்கள்.

அப்போது அவருக்கு சாட்சி கூறுவதற்கு இன்னொருவர் வந்தார்.அவரை பற்றி உமக்கு என்ன தெரியும்? என உமர் ரலி அவர்கள் அந்த மனிதரிடம் விசாரித்தபோது- அவர் நீதமானவர்.நம்பகமானவர் என்று கூறினார்.
அப்போது ஹழ்ரத் உமர் ரலி அவர்கள், அவர் உன் பக்கத்து வீட்டுக்காரரா? அப்படியானால் இரவு பகல் என எல்லா காலமும் அவரை நீர் காணும் வாய்ப்பு அமையலாம் என வினவினார்கள்.அதற்கு அவரோ இல்லை என மறுத்துவிட்டார்.
அப்படியானால் அவரிடம் கொடுக்கல் வாங்கள் ஏதேனும் வைத்து அவரின் பேனுதலை தெரிந்துகொண்டீரா?என வினவியபோது,அதற்கும் அம்மனிதர் இல்லை என்று கூறிவிட்டார்.
அப்படியானால் அவரின் நற்குணத்தை அறிந்துகொள்ள அவருடன் பயணம் செய்துள்ளீரா? என வினவினார்கள்.அதற்கும் அந்த மனிதர் உறுதியாக மறுத்துவிட்டார்.

அப்படியானால் அவரைப்பற்றி சாட்சி கூறுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை.ஏனெனில் அவரைப்பற்றி முழுமையாக நீ தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள்.

ஒரு மனிதரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள மூன்றுவழிகள் உண்டு.பக்கத்து வீட்டில் வசிப்பது.கொடுக்கல் வாங்கள்,அவருடன் பயணம் செய்வது ஆகியவையாகும் என்று உமர் ரலி சொன்ன வார்த்தை எத்துனை தூரநோக்கான சிந்தனைக்குச்சொந்தமானது.


يِا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إَن تَتَّقُواْ اللّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَاناً سورة الأنفال29، الفرقان هو البصيرة،

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்.அந்த நேர்வழிக்கே பஸீரத் என்று சொல்லப்படும் என தப்ஸீர் விரிவுரையா ளர்கள் கூறுகின்றனர்.
قال ابن مسعود رضي الله عنه: أفرس الناس ثلاثة: ابنة شعيب لما قالت لأبيها في موسى اسْتَأْجِرْهُ
سورة القصص26، وأبو بكر في عمر حين استخلفه، وامرأة فرعون حين قالت: قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ
سورة القصص9
மக்களில் மூன்று நபர்கள் மிகவும் அகப்பார்வை உடைவர்கள் என ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகின்றார்கள்.
முதலாவது:ஹழ்ரத் ஷுஐப் அலை அவர்களின் மகள்.அறிமுகமில்லாத நபி மூஸா அலை அவர்களை கண்டு,அவரை கூலியாளாக சேர்த்துகொள் ளாம் என தம் தந்தையிடம் கூறினாள்.
قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ ۖ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ

அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்இரண்டாவது:ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள். ஹழ்ரத் உமர் ரலி அவர்களை தனக்கு அடுத்த கலீபாக மிகவும் தூரநோக்குடன் தேர்வு செய்தார்.
فقال أبو بكر : لئن سألني الله لأقولن : استخلفت عليهم خيرهم في نفسي 
ஹழ்ரத் உமர் ரலி அவர்களை தனக்குப்பின்னர் கலீபாவாக தேர்வு செய்த போது சிலர் அதை விமர்சனம் செய்தனர்.அவர்களுக்கு பதிலாக ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறிய வார்த்தையே இவை:
அல்லாஹ் என்னிடம் அதுகுறித்துகேட்டால் எனக்கு தெரிந்தவரை மக்களில் மிகவும் சிறந்தவரிடமே கிலாபத்தை ஒப்படைத்துள்ளேன் என்று என் ரப்பிடம் கூறுவேன் என்று கூறினார்கள்
மூன்றாவது:பிர்அவ்னின் மனைவி ஆஸியா.இந்த குழந்தையை கொலை செய்ய வேண்டாம்.நாமே எடுத்து வளர்ப்போம் என்று பிர்அவ்னிடம் ஆஸியா கூறினார்கள்.
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّي وَلَكَ ۖ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ
இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.


كما جاء لمالك رحمه الله رجل قال: الوضوء مرة مرة يغني؟ فعلاً الوضوء مرة يغني، لكن السنة ثلاث، نظر مالك للرجل فرأى أنه من العامة الذين حالهم ليس من الذين يحسنون العبادات، فقال مالك: لا، لا يغني؛ لأنه خشي أن هذا الرجل إذا ذهب يعمل بها، أنه لا يسبغ الوضوء ولا يحسن الوضوء ويبقى أجزاء من الجلد ما مسها الماء، فمالك قال: لا. ليس لأنه في الأصل لا يجوز، بل يجوز، ولكن لأن هذا الرجل لا يناسبه هذا القول، حاله لا يناسب هذا القول

இமாம் மாலிக் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து ஒழுவில் உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் போதும்தானே என்று கேட்டார்.சட்டரீதியாக அது கூடும்,ஆனால் மூன்று தடவை கழுவுவது சுன்னத்தாகும்.ஆனால் இமாம் அவர்கள் அம்மனிதரிடம் அதைக்கூறாமல் உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் கூடாது என்றார்கள்.ஏனெனில் அவரோ வணக்கவழிபாடுகளில் மிகவும் பொடுபோக்கானவர்.அவரிடம் அவ்வாறு கூறினால் முழு உறுப்பிலும் தண்ணீர் படுவதில் கவனக்குறைவாக இருந்துவிடுவார்.என்ப தை அறிந்துகொண்ட இமாம் மாலிக் ரஹ் அவர்கள் தூரநோக்காக தீர்ப்பு கூறினார்கள். 


فقد ذكر الإمام الذهبي في السير ( عن أم سلمة أن أبا عبيدة لما أصيب، استخلف معاذ بن جبل، يعني في طاعون عمواس، اشتد الوجع، فصرخ الناس إلى معاذ: ادع الله أن يرفع عنا هذا الرجز، قال: إنه ليس برجز ولكن دعوة نبيكم، وموت الصالحين قبلكم، وشهادة يخص الله [ بها ] من يشاء منكم، أيها الناس ! أربع خلال من استطاع أن لا تدركه، قالوا: ما هي ؟ قال: يأتي زمان يظهر فيه الباطل. ويأتي زمان يقول الرجل: والله ما أدري ما أنا، لا يعيش على بصيرة، ولا يموت على بصيرة



ஹழ்ரத் அபூ உபைதா ரலி அவர்கள் அம்வாஸ் நகரத்தின் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டபோது ஹழ்ரத் முஆத் ரலி அவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்கிறார்கள்.நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமானபோது மக்கள் ஹழ்ரத் முஆத் ரலி அவர்களிடம் வந்து-

எங்களை விட்டும் இந்த நஜீஸை நீக்குவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள் என வேண்டிக்கொண்டனர்,அதை செவியுற்ற ஹழ்ரத் முஆத் ரலி அவர்கள் இது நஜீஸ் அல்ல மாறாக நபிமார்களின் துஆ.உங்களுக்கு முன் வாழ்ந்த ஸாலிஹீன்களின் மரணம்,உங்களில் அல்லாஹ் யாருக்கு நாடுகின்றானோ அவரை இந்த நோய்மூலம் ஷஹீதாக்குவான் என்று கூறிவிட்டு-

மக்களே!நான்கு வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

1.அசத்தியம் நிறைந்த காலம்  2:தன்னை அறியாதவன் வாழும்  காலம்  3:தூரநோக்கு சிந்தனை இல்லாமல் வாழ்வது  4:அதேநிலையில் மரணிப்பது  என்று கூறினார்கள்

No comments:

Post a Comment