Thursday 6 June 2013

அமல்களில் தூய்மை அதுதான் மேன்மை


فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.
நாம் செய்யும் வணக்கங்கள் வீணாகுவதற்கான காரணங்களில் முதன்மையானது முகஸ்துதி தான்.

முடியை விடவும் மெல்லிய தன்மை கொண்ட இந்த முகஸ்துதியால் விளையும் தீங்குகள் எண்ணிக்கையில் அடங்காது.

எனக்கு பின்னால் என் உம்மத்தினர் முகஸ்துதி மூலம் இணைவைப்பின் வாசலை திறந்துவைத்து விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

ஈமான், இஸ்லாமுக்கு பின்னால் தீனின் அடிப்படை இகலாஸ் தான்.இதை தான் நபி சல் அவர்களுக்கு இந்த தீனை கற்றுக்கொடுக்க வந்த ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு இந்த தீனை மூன்று பிரிவுகளாக சொல்லி கொடுத்தார்கள்.

1:ஈமான்   2.இஸ்லாம்   3.இஹ்ஸான்.

இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை பார்க்கும் உணர்வு அல்லது அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வு.

அதிகமான அமல்கள் செய்வதை விடவும் அல்லாஹ்வுக்காக தூய்மையாக செய்யப்படும் குறைவான அமல் அல்லாஹ்விடம் பெரும் நெருக்கத்தை பெற்றுத்தரும்.

ஸாலிஹீன்களான நல்லோர்கள் தங்களின் நற்காரியங்களில் இக்லாஸை கடைபிடித்து வந்தார்கள்.

وقف عبد الله بن عمر مع أبيه عمر على جبل الصفا، فلما رأوا كثرة الناس والحجاج رأوا كثرة الملبين والمكبرين استبشر عمر بكثرتهم وفرح في عهده رضي الله عنه وقد كثر المسلمين وامتلأ الحرم بالحجاج..فرح.. فقال عبدالله بن عمر لأبيه: يا أبتِ ما أكثر الحاج! فقال له عمر: يا بني: الركب كثير لكن الحاج قليل..
لكن الله أعلم بالقلوب والنيات "لكن الحاج قليل "

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றார்கள்.

அங்கு ஸபா மலையில் நின்று ஹாஜிகளின் பிரமாண்டமான கூட்டத்தை கண்டு அளவிலா ஆனந்தமடைந்த இப்னு உமர் ரலி அவர்கள் தம் தந்தையிடம்-
எவ்வளவு ஹாஜிகள்!  என்றார்கள்.
அதை கேட்ட உமர் ரலி அவர்கள், மகனே! ஹஜ்ஜுக்கு வந்த கூட்டம் அதிகம் தான் ஆனால் இதில் இக்லாஸாக ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் குறைவு என்றார் கள்.
பின்னொரு காலத்தில் ஹஜ்ஜின் நோக்கம் மாறிப்போகும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.



صلى أبو أمامة الباهلي رضي الله تعالى عنه صلى يومًا في المسجد، والمسجد مليء فقام رجل يصلي ركعتين فسجد واشتد بكاؤه، بكاء هذا الرجل فلما انتهى من صلاته وجعل يمسح دمعه بطرف عمامته قال له أبو أمامة رضي الله عنه: "ما أحسن بكاؤك لو كان في بيتك".

ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ஒருநாள் பள்ளியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.
பள்ளிவாசல் மக்கள் கூட்டத்தால் நிறம்பி இருந்தது.
அச்சபையில் மக்கள் பார்வையில் ஒருவர் நின்று தொழ ஆரம்பித்தார்.தன்னுடைய ஸஜ்தாவில் கடுமையாக அழுதார்.

தொழுகையை முடித்த அம்மனிதர் தன் தலைப்பாகையால் தன் கண்ணீரை துடைத்தார்கள்.
இம்மனிதரிடம் வந்த ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ,நீர் உம் வீட்டில் தொழும்போது அழுதுகொள்ளும்.அதுதான் உமக்கு நல்லது.ஏனெனில் பொது இடத்தில் இவ்வாறு செய்வது உமக்கு முகஸ்துதியை ஏற்படுத்தி
விடும்.என்று கூறினார்கள்.

தனிமையில் வணக்கம் செய்யும்போது சோம்பேரித்தனமும்,மக்களுக்கு மத்தியில் அமல்செய்யும்போது உற்சாகமும் ஏற்படுவது முனாபிக்கீன்களின் அடையாளமாகும் என அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் தன் திருமறையில் முனாபிகீன்களின் மூன்று அடையாளத்தை கூறுகிறான்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّـهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّـهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.


ابن المبارك التقي مرة بالعدو وخرج رجل من أقوى العدو بأسًا، وجعل يجول بين الصفين ويصيح بالمسلمين من يبارز؟ من يقاتل؟ فلم يخرج إليه أحد..
فوضع ابن المبارك طرف العمامة على وجهه ولبس الخوذة على رأسه، ثم استل سيفه وخرج وقاتله حتى قتله، قتل ابن المبارك ذلك الرومي، فخرج رجل من الروم إلى ابن المبارك فقتله ابن المبارك، ثم خرج ثالث فقتله ابن المبارك..
ثم أقبل إليه الناس إلى هذا الملثم -ابن المبارك- لا يدرون من هو؟ من هو هذا الرجل الذي رفع راية الله وأعلى كلمة الإسلام وأعز الدين وأذل المشركين من هو؟
فجعلوا يحاولون أن يعرفوه وهو يصد بوجهه عنهم ليدخل في غمار الناس فيختفي فأقبل إليه أبو عمر أحد أصحابه، وقد شك أنه صاحبه، أقبل إليه ووضع طرف أصبعه على عمامته ثم كشف اللثام فغطاه ابن المبارك مباشرة، وقال: "حتى أنت يا أبا عمر ممن يشنّع علينا" ممن يريد فضحنا، ممن يريد أن يظهر عملنا.. يعني لا يُظن بك، حتى أنت يا أبا عمر ممن يشنع علينا، فَعَدَّ كشف عمله فضيحة..
يقول أنا أريد العمل الذي عملته ألا يقصد قلبي أن يشكرني أحد أو يثني عليّ أحد أبدًا، أنا أريده لله، أريد الجهاد لله، ألا يعلم به أحد..

ரோமர்களை எதிர்த்து நடைபெற்ற போர்களத்தில் எதிரிகளில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி என்னுடன் உங்களின் யார் சண்டைக்கு வருகிறீர்?  என கூச்சலிட்டான்.என்னை எதிர்கொள்ள உங்களில் யாருக்கு தைரியம் இல்லையா?என கொக்கரித்தான்.
முஸ்லிம்களில் அவனை எதிர்கள்ள யாரும் தயாரில்லை.
அப்போது முஸ்லிம்களின் படையில் இருந்த அப்துல்லா இப்னு முபாரக் ரஹ் அவர்கள் தன் தைலைப்பாகையை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டு வாளுடன் களத்தில் அந்த எதிரியை எதிர்கொண்டார்கள்.
அவனுடன் சண்டையிட்டு அவனை கொலை
செய்துவிட்டார்கள்.

பின்பு இன்னொருவன் வந்தான்.அவனையும் அவர்களே எதிர்கொண்டு கொன்று விட்டார்கள்.பின்பு மூன்றாவது ஒருவன் வந்தான்.அவனையும் எதிர்கொண்டு இப்னுல்முபாரக் ரஹ் அவர்கள் அவன் கதையையும் முடித்தார்கள்.
இறுதியில் மக்கள் யார் அந்த மகா பெரிய வீரர்? என பார்க்க ஆவல் கொண்டனர்.இந்த தீனின் கண்ணியத்தை நிலைநிறுத்திய அப்போராளி யார் என மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
மக்கள் முட்டிமோதி அவரை காண முற்பட்டபோதும் முடியவில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஉமர் அவர்களுக்கு இவர் நம் நண்பர்  அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்காக இருக்குமோ என சந்தேகம் வந்து அவரை பின் தொடர்ந்து சென்றார்.
இறுதியாக வலுக்கட்டாயமாக அவரிம் முகத்திரையை நீக்கி பார்த்து விட்டார்கள்.
மக்களிடமிருந்து ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?என இமாமிடம் காரணம் கேட்டபோது,நான் அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்ய வந்தேன்.வேறு யாரும் என்னை புகழவேண்டுமென்றோ,நன்றி சொல்லவேண்டுமென்றோ வரவில்லை.  என் அமல் அல்லாஹ்வுக்காகவே ஒப்படைக்கப்படவேண்டும்.என்று பதில் கூறினார்கள்.

قال أبو إسماعيل الصائغ: كان أبي ومشيخة الحي إذا كان يوم صوم أحدهم، إذا أحدهم صاحب يوم الخميس والاثنين ادهن – دهن شفته حتى لا يظهر عليه أثر الصوم – ادهن وتطيب ثم خرج إلى الناس حتى لا يعلم الناس عليه أي أمارة تدل أنه صائم

அபூ இஸ்மாயீல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
என் தந்தையும் அவர்களின் நண்பர்களும் திங்கள்,வியாழன் ஆகிய தினங்களில் நோன்புநோற்பதை வழமையாக்கி கொண்டவர்கள்.
அவ்வாறு அவர்கள் நோன்புவைக்கும்போது தங்களின் உதட்டில் எண்ணை தேய்த்துக்கொள்வார்கள்.அவ்வாறு செய்வது அவர்களை உற்சாகமாக காட்டும்.
மற்றும் நோன்பின் அடையாளத்தை மக்காளால் உணர்ந்துகொள்ள முடியாது.


وداود بن أبي هند لبث سنين يصوم يومًا ويفطر يومًا، ولم يعلم به أحد حتى أهله لم يعلموا به، كان يخرج إلى دكانه في الصباح فيأخذ من أهله طعامًا ليكون له فطورًا، فإذا كان يوم فطره أفطر عليه، وإذا كان يوم صومه تصدق به، ثم رجع بعد المغرب إلى بيته من دكانه فأكل معه فهم يظنونه يتغدى إذا رجع أو يتعشى وهو في الحقيقة إنما يفطر لأنه كان صائمًا.

தாவூத் ரஹ் அவர்கள் தங்களின் குடும்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் பல ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
ஒரு நாள் நோன்பு வைப்பார்கள்.மறுநாள் விட்டுவிடுவார்கள்.
தன் இல்லத்திலிருந்து காலை உணவை எடுத்துக்க்ண்டு கடைக்கு புறப்பட்டு விடுவார்கள்.அன்று நோன்பு இல்லையானால் அதை சாப்பிடுவார்கள். நோன்பாக இருந்தால் அதை ஸதகா செய்து விடுவார்கள்.பின்பு மக்ரிபுக்கு தன் இல்லம் திரும்பிய பின் இரவு உணவை சாப்பிடுவார்கள்.இவ்வாறு தன் குடிம்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் நோன்பில் இக்லாஸை கடைபித்து வந்தார்கள்.

No comments:

Post a Comment