Wednesday 14 May 2014

தக்வாவின் மறுபெயர் பேனுதல்



இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தை போதனை செய்கிறது.ஆதாபுகள் எனும் ஒழுக்க பண்புகளையே வணக்கங்களின் பிரதான மானதாக எடுத்துரைக்கிறது.கடமைகளை செய்யச்சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச்சொல்கிறது.கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவற காரணமாகிவிடும்.கடமைகளை அலட்சியம் செய்பவர்கள் அதை ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை.

இப்லீஸ் ஒரு முஸ்லிமிடம் பாவத்தை நன்மையாக ஒருபோதும் காட்டி ஏமாற்ற முடியாது, ஆனால் நன்மையை அலட்சியமாகவும், பாவத்தை பொழுதுபோக்காகவும் காட்டிட முடியும்.வழிபாடுகளில் அலட்சியமும் பாவம் செய்வதில்பொடுபோக்குத்தனமும்  இப்லீஸின் மிகப்பெரும் ஆயுதம்.ஆகையால்தான் பெருமக்கள் இவ்வாறு சொல்வார்கள்

إنّ آدم عليه السلام خرج من الجنّة بذنبٍ واحد

وإبليس صار خالداً في النار بذنبٍ واحد

فما يُأمِّنُكَ أن تُأخذ بالذنب الواحد ؟
!
لا تحقِرنّ ذنباً تفعله ولا تحقِرنّ معروفاً تفعله

أنت تحتاج كل شئ وانت لا تدري الموازين كيف هي

ஆதம் அலை அவர்கள் ஒரு பாவத்தால் சுவனத்திலிருந்து வெளியானார்கள்.   இப்லீஸ் ஒரு பாவத்தால் நிரந்தர நரகவாதியாகிவிட்டான்.எனவே ஒரு பாவம்தானே என்று அலட்சியத்துடன் துணிந்துவிடாதே.நீ செய்யும் எந்த பாவத்தையும் சாதாரணமாக கருதி செய்துவிடாதே.நீ செய்யும் எந்த நன்மையையும் சாதாரணமாக கருதி விட்டுவிடாதே.
நாளை உன் மீஸானுக்கு எதுவும் தேவையாக இருக்கலாம்.
ஒழுக்கங்களே முஸ்தஹப்புக்களை பாதுகாக்கிறது.முஸ்தஹப்புக்கள் சுன்னத்துக்களை பாதுகாக்கிறது.சுன்னத்துக்கள் பர்ழான கடமைகளை பாதுகாக்கிறது.

visit

No comments:

Post a Comment