Wednesday 14 August 2013

இறுதி வரை ஈமான்


நாம் வாழும் காலங்கள் நம்முடைய அடையாளங்களை பதிவு செய்கிறது.  அந்த அடையாளங்கள் தான் நம் மரணத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேசப்படுவதற்கு காரணமாகிறது.

إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ) [يَس: 12].
நம்மை விடைபெற்ற ரமலான் நமிடம் சில அடையாளங்களை விட்டுச்செல் கிறது.அந்த அடையாளங்களை எடுத்துக்கொண்டு காலமெல்லாம் ரமலானாக நினைத்துக்கொண்டு அமல் செய்ய வேண்டும்.
அமலுக்கு ஓய்வு என்பது கிடையாது.அமலுக்கான ஓய்வு மரணம் மட்டும் தான்.

ஒரு அமலின் முடிவில் இன்னும் உற்சாகமாக அமல்செய்ய தயாராக வேண்டும்.
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ * وَإِلَى رَبِّكَ فَارْغَبْ) [الشَّرْحَ: 7- 8]

அல்லாஹ்விடம் தவ்பா செய்தபிறகு பாவத்தை தொடர்ந்து செய்வது எழுபது பாவங்களை விடவும் அறுவறுப்பானதாகும்
அவ்வாறு வணங்களை செய்தபிறகு பாவமான வாழ்வை துடர்வது மிகவும் துர்ப்பாக்கியமாகும்.

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ)

முஃமின்களே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்.     இன்னும் உங்களின் அமல்களை அழித்துவிடாதீர்கள்.
அமல்கள் செய்யும் பருவகாலங்கள் விடைபெற்றாலும் அமல்கள் நம்மிடமிருந்து விடைபெறாது.


قال علي -رضي الله عنه-: "كونوا لقبول العمل أشدّ اهتمامًا منكم بالعمل

அமல்கள் செய்வதைவிடவும் அது அதுகபூலாக வேண்டும் என்ற கவலையை அதிகமாக்குங்கள் என அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


قال سلمة بن دينار -رحمه الله-: "الخوف على العمل أن لا يُتقبّل أشد من العمل

அமலைவிடவும் அங்கீகரிக்கப்படும் விஷயத்தில் அதிகமாக பயப்பட வேண்டும் என சல்மா இப்னு தீனார் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.
ரமலானை மட்டும் வணக்கவழிபாடுகளால் அழங்கரித்தவர்கள் பற்றி ஸாலிஹீன்களான நல்லோர்களிடம் வினவப்பட்டபோது
அவர்கள் அல்லாஹ்வை ரமலானில் மட்டும் அறிந்துகொண்டார்கள் என்று கூறினர்.

كما قال بعضهم: ثواب الحسنة الحسنة بعدها. كما أن من عمل حسنة ثم أتبعها بسيئة كان ذلك علامة على رد الحسنة التي عملها وعدم قبولها.

ஒரு நன்மையை தொடர்ந்து நன்மை செய்வதே அந்த முதல் நன்மைக்கான கூலியாகும்.அதைப்போலவே ஒரு நன்மையை தொடர்ந்து பாவம் செய்வது அந்த நன்மை ரத்து செய்யப்பட்டுவிட்டது,மேலும் அது கபூல் இல்லை என்பதற்கான அடையாளமாகும் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ما تكلم أهل العلم عن معنى قول النبي -عليه الصلاة والسلام-: "الحج المبرور ليس له جزاء إلا الجنة"، قالوا: والحج المبرور هو الذي يكون حاله بعد الحج خيرا من حاله قبل الحج، يعني في صلاته وعبادته ولسانه وسلوكه، وهذا من علامات قَبول الحج.

மப்ரூரான ஹஜ்ஜிக்கான கூலி சுவனத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்ற ஹதீஸின் விரிவுரையில் முஹத்திஸீன்கள் கூறும்போது-
ஹஜ்ஜுக்கு பின் உள்ள வாழ்க்கை ஹஜ்ஜுக்கு முன் உள்ள வாழ்வை விடவும் வணக்க வழிபாடுகள் அதிகமானால் அதுவே ஹஜ் மப்ரூரான அடையாளமாகும் என்று கூறுகின்றனர்.

كذلك من علامات قبول الصيام أن يؤثر رمضان فيك، وإن كنت خلال رمضان امتنعت عن مشاهد أشياء محرمة فينبغي أن تستمر على ذلك بعد رمضان، وإن كنت خلال رمضان تشهد صلاة الفجر في المسجد فينبغي ان تستمر عل هذا العمل الصالح بعد رمضان.
அவ்வாறு நோன்பு கபூலான அடையாலம் என்ன வெனில் ரமலான் உன் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.உதாரணமாக ரமலானில் ஹராம் விஷயத்தில் கவனமாக பேனுதலாக இருந்தாய்.அதேநிலை ரமலான் அல்லாத காலத்திலும் தொடரவேண்டும்.
ரமலானில் பஜ்ர் தொழுகையை விடவில்லை.அதைப்போலவே ரமலான் அல்லாத காலத்திலும் பஜ்ரை தவறவிடாமல் தொடர்ந்தால் ரமலான் கபூலிய்யத்தின் அடையாளமாகும்.
ரமலான் காலத்தில் வித்ரு மற்றும் இரவுத்தொழுகையில் மிகுந்த பேனுதலை கடைபிடித்து வந்தோம்.
இன்ஷா அல்லாஹ் மற்ற காலத்திலும் தஹஜ்ஜுத் மற்றும் வித்ரில் அதே நிலையை பேணவேண்டும்.

وقال -صلى الله عليه وسلم-: "لا يحافظ على الوتر إلا مؤمن وعليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وقربة إلى ربكم وإن قيام الليل مطردة للداء عن الجسد".

ஒரு முஃமின் வித்ர் தொழுகையில் பேணுதலை கடைபிடிக்க வேண்டும். இன்னும் இரவுத்தொழுகையையும் வழமையாக்குங்கள்,ஏனெனில் அது உங்களின் முன்னோர்களான நல்லோர்களின் வழமையாகும்.உங்களின் இறைவன் பக்கம் உங்களை நெருக்கமாக்கி வைக்கும்.மேலும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்வை தரும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


قِيلَ لِلْحَسَنِ الْبَصْرِيِّ -رَحِمَهُ اللَّهُ تَعَالَى-: مَا بَالُ الْمُتَهَجِّدِينَ مِنْ أَحْسَنِ النَّاسِ وُجُوهًا؟! قَالَ: "لِأَنَّهُمْ خَلَوْا بِالرَّحْمَنِ فَأَلْبَسَهُمْ مِنْ نُورِهِ نُورًا".

தஹஜ்ஜுத் தொழுபவர்களின் முகம் பிரகாசமாக இருக்க காரணம் என்ன என இமாம் ஹஸன்பஸரி ரஹ் அவர்களிடம் கேட்டபோது-
அல்லாஹ்வை அவர்கள் இரவில் தனியாக சந்திப்பதால் அவனின் ஒளியை அவர்களுக்கு ஆடையாக அணிவிக்கிறான் என கூறினார்கள்.
உலகில் அமல் செய்தவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் அல்ல.அந்த அமலை தன் மரணம் வரை நீடிக்கச்செய்தவர்களே பாக்கியசாலிகள்.
இதோ தன் வாழ்வில் அமல் செய்யும் நஸீப் கிடைத்தும் ஈமானுடன் தன் இறுதி மூச்சை அடையும் நஸீப் கிடைக்காதவர்கள்.
அல்லாஹ் பாதுகாப்பானாக!

وعن انس رضي الله عنه أن رجلا كان نصرانيا فأسلم وكان يكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم ,فذهب إلى جمع من اليهود فارتد عن الدين وجعل يتنقص النبي عليه الصلاة والسلام ,ويتنقص كتابته الوحي ,ويقول مايعرف محمد إلا ماكتبت له ,فدعاء النبي صلى اله عليه وسلم عليه قال [ اللهم اجعله آية فلم يلبث أن مات فدفنوه فأصبحوا وقد لفضته الارض ,قالوا هذا من فعل محمد واصحابه ,ثم دفنوه واعمقوا فأصبحوا قالوا : هذا من فعل محمد واصحابه فأعمقوا اكثر ما استطاعوا في الأرض ودفنوه فلما اصبحوا وإذا قد لفظته الأرض فوقها قالوا والله هذا ماهو بفعل بشر ,فتركوه تمر به الكلاب وتفتح رجليها على وجهه وتبول على وجهه , نعم هذا جزاء من يؤذي الله ورسوله صل الله عليه وسلم

ஹழ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கிருஸ்துவராக இருந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவி,வஹியை எழுதும் காதிபுல் வஹ்யாகவும் இருந்தார்.
அவர் ஒரு யூத கூட்டத்திடம் சென்று மதம் மாறி,பெருமானாரை குறித்து இழிவாக பேசினார்.
முஹம்மதுக்கு நான் எழுதியதை தவிர வேறு எதுவும் தெரியாது என்றார்.
அதை கேள்விப்பட்ட பெருமானார், யா அல்லாஹ்!என்னை கேலி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு இவனை அடையாளமாக ஆக்குவாயாக!என பத்துஆச்செய்தார்கள்.
அவன் மரணித்தான்.மக்கள் அவன் உடலை புதைத்தபோது பூமி துப்பிவிட்டது.  இது முஹம்மத் மற்றும் அவரின் தோழர்களின் செயல் என்று மக்கள் சொன்னார்கள்.
மீண்டும் ஆழமாக குழி தோண்டி புதைத்தார்கள்.மறுநாள் காலை வந்து பார்த்தபோது அவன் உடல் பூமிக்கு மேல் கிடந்தது.
மூன்றாவது தடவையும் புதைத்தபோது அவன் உடலை பூமி ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது மக்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது மனித செயல் அல்ல.என்று கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.      அவன் உடல் மீது நாய்கள் சிறுநீர் கழித்தது.
அல்லாஹ்வின் ரஸூலை நோவினை செய்பவர்களின் உலக முடிவு கெட்டதாகும்.
إنا كفيناك المستهزئين

நபியே!உம்மை கேலி செய்பவர்களை நாம் பார்த்துக்கொள்வோம் என்று அல்லாஹ் வாக்களித்தான்.
சூரியனை பார்த்து குரைக்கும் நாய்களைப்போல் பரிசுத்தமான அந்த பூமான் மீது சேற்றை அள்ளிவீசப்பார்கின்றனர்.

وذكر الشيخ احمد شاكر رحمه الله ,عن خطيب كان بمصر وكان فصيحا متكلما مقتدرا ,فصلى معه يوما أحد امراء مصر بعدما كرموا "طه حسين " فاراد هذا الخطيب أن يمدح هذا الأمير فقال ..
جاءه الاعمى فما عبس وما تولى

.يمدح هذا الأمير ويتنقص نبينا صل الله عليه وسلم قال :فلما انتهت الخطبة والصلاة قام الشيخ محمد شاكر رحمه الله , ابو احمد شاكر , قال : ايها الناس حسبكم لا تخرجوا من المسجد ,اعيدوا صلاتكم فإنكم صليتم وراء رجل مرتد ,إذ تنقص رسول الله صل الله عليه وسلم أو عرض به ارتد عن الدين ..قد صليتم خلف مرتد ,فأعيدوا صلاتكم , قال احمد شاكر : فوالله مازالت الايام بذلك الخطيب حتى اذله الله ,ورأيت بعيني يقف عند باب جامع من جوامع مصر يستلم احذية الناس يحفظها لهم بالقرش والقرشين , صار يشتغل اقل من خادم ! يحمل احذيتهم ويحفظها لهم حتى تنتهي الصلاة بالقرش والقرشين قال والله لقد رايته بعيني


அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எகிப்தில் திறமையான கதீப் ஒருவர் இருந்தார்.அற்புதமான பேச்சாளர்.      ஒரு நாள் எகிப்தின் அதிகாரிகளுக்கு தொழுகை நடத்தினார்.தொழுகை முடிந்து அதிகாரிகளை புகழ்ந்து ஒரு பிரசங்கம் செய்தார்.அதில்  இந்த அமீர் எப்படிப்பட்டவர் என்றால் அவரிடம் பார்வை தெரியாதவர் வந்தார்.அவரை கடிந்து கொள்ளவுமில்லை,புறக்கனிக்கவுமில்லை.என்றார்.
(அதாவது நாயகத்தை குறைத்தும் அமீரை உயர்த்தியும் பேசினார்)       அப்போது தொழுகையும் குத்பாவும் முடிந்தபோது அபூ அஹ்மத் ரஹ் அவர்கள் எழுந்து மக்களே!யாரும் பள்ளியை விட்டு வெளியாக வேண்டாம்.நீங்கள் ஒரு முர்தத்துக்கு பின் தொழுதிருக்கிறீர்கள்.உங்கள் தொழுகையை திருப்பி தொழுங்கள்.நாயகத்தை அவமரியாதையாக பேசியவன் சந்தேகமின்றி மதம் மாறியவன்.என்றார்கள்.
நாட்கள் கழிந்தது.அந்த கதீப் எகிப்தின் பள்ளிவாசல்களில் ஒருசில காசுகளுக்காக மக்களின் செருப்புகளை சுத்தம்செய்து, பாதுகாக்கும் இழிவான நிலையை என் கண்ணால் கண்டேன் என அஹ்மத் ஷாகிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلأَبْتَرُ




3 comments:

  1. ஜஸாகல்லாஹூ கைர்

    ReplyDelete
  2. طلحة مصباحي15 August 2013 at 19:49

    جزاك الله خيرا. فضلا. تعين رقم الاية واسم الكتاب الحديث

    ReplyDelete